ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

4 posters

Go down

சென் ஸார் என்பவரைத் தெரியுமா? Empty சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Post by balakarthik Sun Jan 06, 2013 4:03 pm

இந்தியாவில் திரைப்படங்களில் ஆபாசமான வசனங்களோ, பாடல்களோ, இறையாண்மை(அப்படின்னா?)க்கெதிரான கருத்துக்களோ இடம்பெறாமல் தணிக்கை செய்வதற்காக ‘சென்சார் போர்டு’ என்கிற ஒரு அமைப்பு இருக்கிறது. அதனிடம் சான்றிதழ் பெற்ற பின்னர்தான் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்த ‘சென்சார்’ என்கிற விஷயத்தை நான் கவனித்த பழைய படங்களிலிருந்து துவங்கி தற்காலத்திற்கு வருகிறேன்.

பாவமன்னிப்பு படத்தில் ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ பாடலில் ‘‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே, அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே...’’ என்று எழுதியிருந்தார் கண்ணதாசன். சென்சார் ஆட்சேபித்ததால் இந்த வரிகள் மாற்றப்பட்டு, ‘‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே, அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே...’’ என்று இப்போது கேட்டால் ஒலிக்கும். உதட்டைசைவிற்கு ஏற்றதாக இருப்பதால் ‌அது பெரிதாகத் தெரியாது.

சென்சாரி் இந்த பருப்பு வேகாமல் போனது அபிநய மன்னரான எம்.ஜி.ஆரிடம்தான். ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் ‘சக்கரைக் கட்டி ராசாத்தி’ பாடலில் ‘‘உரிமை சொல்லி நான் வரவோ, என் உதட்டில் உள்ளதைத் தரவோ’’ என்று கண்ணதாசன் எழுதியிருந்தார். ‘உதட்டில் உள்ளதை’ என்ற வரிகளை சென்சார் ஆட்சேபித்ததால் ‘‘உரிமை சொல்லி நான் வரவோ, என் உயிரை உன்னிடம் தரவோ’’ என்று மாற்றிப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் காட்சியில் ஸ்பஷ்டமாக தன் உதட்டையும், சரோஜாதேவியின் உதடையும் சுட்டிக் காட்டி அபிநயித்திருப்பார் எம்.ஜி.ஆர். நல்ல டமாஸு!

அப்படித்தான் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’ என்ற பாடலில் ‘‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’’ என்று வரும் ஒரு வரிசை சென்சார் ஆட்சேபித்ததால் ‘‘மேடையில் முழங்கு திரு.வி.க. போல்’’ என்று மாற்றியிருப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் உதட்டசைவோ மிகத் தெளிவாக ‘அறிஞர் அண்ணா’ என்றே இருக்கும்.

கன்னாபின்ன‌ொவன்று சென்சார்‌ போர்டு இப்படி மாற்றுவதை தன் படத்திலேயே துணிச்சலாக விமர்சித்தவர் சோ! ஏதோ பெயர் நினைவில்லாத ஒரு படத்தில் கல்கத்தாவிலிருந்து வந்த சென் தம்பதியினரின் வீட்டில் அவரும் அவர் நண்பனும் குடியிருப்பார்கள். தங்கள் போர்ஷனிலிருந்து வெளிவரும் போது, ‘‘அர்ஜண்டா ஒரு போன் பண்ணனும்டா’’ என்பார் சோ. ‘‘சென் சார் கிட்ட பர்மிஷன் வாங்கிப் பண்ணேண்டா’’ என்பார் அவர் நண்பர். ‘‘சென் மேடம் நல்லவங்கடா. போன் பண்ண விடுவாங்க, சென்சார் ஒரு மடையன், முட்டாள்!’’ என்பார் சோ. அரங்கையே அதிர வைத்த வசனம் அது அந்நாளில்.

இப்படியெல்லாம் நல்ல தமிழ் வரிகளையே ஆட்சேபித்த சென்சார் என்கிற அமைப்பு பின்னாளில் அருமையாக எழுதி வரும் நம் சமகாலக் கவிஞரான வைரமுத்துவையும் விட்டு வைக்கவில்லை. உயர்ந்த உள்ளம் படத்தில் ‘‘கலசம் இங்கு கவசமாகும், காமன் அம்பு முறிந்து போகும்.’’ என்று அவர் எழுதியிருந்த வரிகளை மாற்றச் சொன்னதால், ‘‘விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம், தொடங்கு கண்ணே புதிய பாடம்’’ என்று மாற்றிப் பதிவு செய்திருந்தார்கள். வைரமுத்துவையும் விட்டு வைக்காதது இந்த சென்சார்!

இவ்வளவு விழிப்பாகச் செயல்பட்ட சென்சார் போர்டு பின்னாளில் தாராள மனம் கொண்டு ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா, இல்ல ஓடிப் போயி கல்யாணம் கட்டிக்கலாமா?’ என்பது போன்ற இலக்கியத் தரமான(?) பாடல் தொடங்கி எல்லாவற்றையும் அனுமதிக்கிறார்கள். (இன்றைய ஆபாச வரிகள் அடங்கிய பாடல்களின் உதாரணங்களை விலாவரியாக அடுக்கி இதை ஆபாசப் பதிவாக மாற்ற நான் விரும்பாததால் ஒன்றை மட்டும் சொல்லியிருக்கிறேன்.) சமூகத்தில் விரசம் என்பதன் அளவுகோல் என்பது மாறிவிட்டதா... இல்லை, தொலைக்காட்சி செய்யாத கெடுதலையா சினிமா செய்துவிடப் போகிறது என்கிற அலட்சியமா... புரியவி்ல்லை.

பாடல்களில் இப்படி என்றால் வசனங்களில்... யப்பா! வசூல்ராஜா படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் வசனம் ஒன்று சைலண்ட் செய்யப்பட்டிருக்கும். அடுத்த செகண்ட் கமல் இப்படிச் சொல்வார்: ‘‘இன்னா சார், பெத்த பொண்ணையே லோலாயி, பூட்ட கேஸ்ன்னு சொல்றீங்க?’’ என்று. அட ஞானசூன்யங்களா...! இப்படித் தெளிவாக வசனத்தைச் சொல்வதற்கு என்ன எழவுக்ககாகய்யா பி,ராஜ் பேசும் வசனத்தை வெட்டினீர்கள்? ஒருவேளை வில்லன் சொன்னால் ஆபாசம். கதாநாயகன் சொன்னால் ஆபாசமில்லை என்பது அளவுகோலா?

யதார்த்தமான மனிதர்களைக் காட்டுகிறேன் பேர்வழி என்று பாரதிராஜா தன் படம் நெடுக தக்காளிக்கான எதுகைச் சொல்லை இறைத்திருந்தார். அதுவும் ஆட்சேபிக்கப்படாமல் வெளியானது. இவையெல்லாவற்றையும் மிஞ்சி விவேக் என்கிற காமெடியர் தன் அங்க அசைவுகளாலும், வார்த்தைகளாலும் இரட்டை அர்த்தம் எதுவுமின்றி வெளிப்படையாக ஒற்றை அர்த்தத்திலேயே காமெடி(?) என்கிற பெயரில் கூத்தடித்து வருகிறார். (இவருக்கு ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டம் வேறு. கலைவாணர் இருந்திருந்தால் இதைக் கேட்டுக் கதறி அழுதிருப்பார்.)

இதையெல்லாம் கவனித்து வருகிற எனக்கு பல நாட்களாகவே மனதில் எழும் கேள்வி: ‘‘சென்சார் போர்டு என்கிற ஒன்று திரைப்படங்களுக்குத் தேவையா?’’ என்பதுதான். படத்தைத் தயாரிப்பவர் அதை நேரடியாக தியேட்டர்களிலோ, டிவிடிகளிலோ வெளியிட்டு விட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? தமிழக அரசு சந்துக்குச் சந்து டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழக மக்களைக் கெடுப்பதை விடவா அதிகமாக சினிமாக்கள் கெடுத்துவிடப் போகின்றன? பேருக்கு செயல்படுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு அமைப்பும், அதற்கு தெண்டமாக சம்பளம் வாங்கிக் கொண்டு ஏழெட்டு அதிகாரிகளும் இருந்து கண் துடைப்பாக செயல்படுவதை விட இழுத்து மூடிவிடுவது உத்தமம் என்பது என் கருத்து.

எழுதியவர் :- பாலகணேஷ்
நன்றி:- மின்னல்வரிகள்


ஈகரை தமிழ் களஞ்சியம் சென் ஸார் என்பவரைத் தெரியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென் ஸார் என்பவரைத் தெரியுமா? Empty Re: சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Post by பூவன் Sun Jan 06, 2013 4:11 pm

தமிழக அரசு சந்துக்குச் சந்து டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழக மக்களைக் கெடுப்பதை விடவா அதிகமாக சினிமாக்கள் கெடுத்துவிடப் போகின்றன? பேருக்கு செயல்படுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு அமைப்பும், அதற்கு தெண்டமாக சம்பளம் வாங்கிக் கொண்டு ஏழெட்டு அதிகாரிகளும் இருந்து கண் துடைப்பாக செயல்படுவதை விட இழுத்து மூடிவிடுவது உத்தமம் என்பது என் கருத்து.

இதில் வேற படங்களில் மது பழக்கம் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என வாசகங்கள் கீழே கண்துடைப்புக்கு .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சென் ஸார் என்பவரைத் தெரியுமா? Empty Re: சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Post by balakarthik Sun Jan 06, 2013 4:19 pm

கண்னமட்டுமா துடைக்கிறாங்க சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் சென் ஸார் என்பவரைத் தெரியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென் ஸார் என்பவரைத் தெரியுமா? Empty Re: சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Post by யினியவன் Sun Jan 06, 2013 5:17 pm

காம ரசத்தை சாராய் பிழிந்து தராத படங்களுக்கு
தடை விதிக்கப் போகுது சென்சார் போர்டு இனிமேல்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென் ஸார் என்பவரைத் தெரியுமா? Empty Re: சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Post by balakarthik Sun Jan 06, 2013 5:23 pm

கூடவே தொப்புலுல ஆம்லெட் போடுற சீன் இருந்தா வரிவிலக்கும் உண்டாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சென் ஸார் என்பவரைத் தெரியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென் ஸார் என்பவரைத் தெரியுமா? Empty Re: சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Post by Muthumohamed Mon Jan 07, 2013 12:47 am

யினியவன் wrote:காம ரசத்தை சாராய் பிழிந்து தராத படங்களுக்கு
தடை விதிக்கப் போகுது சென்சார் போர்டு இனிமேல்

தடை விதித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை அண்ணா



சென் ஸார் என்பவரைத் தெரியுமா? Mசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Uசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Tசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Hசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Uசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Mசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Oசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Hசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Aசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Mசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Eசென் ஸார் என்பவரைத் தெரியுமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென் ஸார் என்பவரைத் தெரியுமா? Empty Re: சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Post by Muthumohamed Mon Jan 07, 2013 12:48 am

balakarthik wrote:கூடவே தொப்புலுல ஆம்லெட் போடுற சீன் இருந்தா வரிவிலக்கும் உண்டாம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சென் ஸார் என்பவரைத் தெரியுமா? Mசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Uசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Tசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Hசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Uசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Mசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Oசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Hசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Aசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Mசென் ஸார் என்பவரைத் தெரியுமா? Eசென் ஸார் என்பவரைத் தெரியுமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென் ஸார் என்பவரைத் தெரியுமா? Empty Re: சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum