ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

3 posters

Go down

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!  Empty 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

Post by DERAR BABU Thu Jan 03, 2013 11:37 am

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடனோ, காங்கிரசுடனோ கூட்டணி அமைக்க மாட்டோம். தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் மிகவும் மிரண்டு போய் இருப்பது தா.பாண்டியன் போன்ற 'பக்க வாத்தியங்கள்' தான்.

ஆண்டுதோறும் வழக்கமாக நடக்கும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில்தான் இந்த ஆண்டும் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தது. மண்டபத்தின் நுழைவு வாயில் முகப்பில் நாடாளுமன்ற முகப்பில் அதிமுக கொடி பறப்பது மாதிரி 'செட்' போட்டிருந்தார்கள். இது, பார்த்திபன் கனவு மாதிரி ஜெயலலிதாவின் 'டெல்லிக் கனவு' குறித்து மறைமுகமாக ஜாடை செய்தது.

கடந்த ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடந்த நேரத்தில்​தான் சசிகலா அண்ட் குடும்பம் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டிருந்தது. ஆனால், இந்தமுறை அவர் வருவார் என அதிமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் காரில் தனியே வந்து இறங்கி அங்கு கூடியிருந்த அதிமுகவினரை ஆரம்பத்திலேயே குழம்ப வைத்தார் ஜெயலலிதா ........

3 நிமிடம் நடந்த செயற்குழு:

3 நிமிடம் நடந்த செயற்குழு: முதலில் செயற் குழுக் கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அது நடந்தது எவ்வளவு நேரம் தெரியுமா?. 3 நிமிடங்கள்!. இதையடுத்து பொதுக் குழு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டதும். வரிசையாக 25 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதில் 21 தீர்மானங்களில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மழை பெய்தது

ஜெயலலிதாவின் பேச்சு...
இதையடுத்து ஜெயலலிதா பேசுகையில் தான் பாஜக, காங்கிரசுடன் கூட்டணி இல்லை. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைக் காக்க நாம் தனியாகப் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் மத்தியில் நமது அதிகாரத்தைச் செலுத்த முடியும். அதற்காக நீங்கள் அயராது பாடுபடுங்கள் என்று குண்டைப் போட்டார்.

உடனே கை தட்டிவிட்டாலும் அதிமுகவினரிடையே பெரும் குழப்பமே மிஞ்சியது. அம்மா என்ன சொல்றாங்க.. தனித்துப் போட்டின்னா கடந்த சட்டமன்றத் தேர்தலில் நம்மோடு இருந்த இடதுசாரிகள், சரத்குமார், கொங்கு கட்சிகள், இஸ்லாமிய கட்சிகளுடன் கூட கூட்டணி இல்லையா?. நம்மை விட நன்றாக ஜால்ரா அடிக்கும் தா.பாண்டியனும் இல்லையா..? என்ற குழப்பத்தோடு அவர்கள் கலைந்து சென்றனர்.

வைத்திலிங்கத்தின் '292' பேச்சு:

: ஜெயலலிதாவின் திட்டம் தான் என்ன என்று யோசித்தால் பொதுக் குழுவில் பேசிய அமைச்சர் வைத்திலிங்கத்தின் பேச்சில் அதற்கு பதில் இருப்பது புரிகிறது. அவர் பேசுகையில், நாட்டில் 6 மாநிலங்கள்தான் இந்தியப் பிரதமரைத் தீர்​மானிக்கின்றன. 80 எம்பிக்கள் கொண்ட உத்தரப் பிரதேசம், 48 எம்பிக்கள் கொண்ட மகாராஷ்டிரம், 42 எம்பிக்கள் கொண்ட ஆந்திரா, 42 எம்பிக்கள் கொண்ட மேற்கு வங்கம், 40 எம்பிக்கள் கொண்ட பிகார், எம்பிக்கள் கொண்ட தமிழ்நாடு-புதுச்சேரி ஆகியவை தான் இந்த மாநிலங்கள்.

இந்த 6 மாநிலங்களில் மட்டும் 292 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளைக் கைப்பற்றுபவரோ அல்லது இங்கு வெல்பவர்களின் ஆதரவு உள்ளவரே அடுத்த ஆட்சியை அமைக்க முடியும்.

பாஜக, நிதிஷ்குமார், இடதுசாரிகள், ஜெகன் மோகன் கூட்டணி:

ஆனால், இந்த மாநிலங்களில் உள்ள உள் அரசியலை நாம் பார்க்க வேண்டும். மம்தா பானர்ஜியை இடதுசாரிகள் ஏற்க மாட்டார்கள். இடதுசாரிகளை மம்தா ஏற்க மாட்டார். நரேந்திர மோடியை நிதிஷ் குமாருக்குப் பிடிக்காது. நிதிஷ் குமாரை மோடி ஏற்க மாட்டார். மாயவதியை முலாயம் சிங் ஏற்க மாட்டார். முலாயமை மாயாவதி ஏற்க மாட்டார்.

ஆனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரே தலைவர் அம்மாதான் (பெரும் கைத்தட்டல்). அம்மாவை காங்கிரஸ் ஆதரிக்க முன் வராது. ஆனால் பாஜக, நிதிஷ்குமார், இடதுசாரிகள் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் ஆதரவோடு அம்மா தான் அடுத்த பிரதமர். இப்படி ஒரு கூட்டணிக்கு அம்மா தலைமை ஏற்பார் என்றார் வைத்தி.

வி.பி.சிங் பிரதமரானது மாதிரி: கிட்டத்தட்ட 1989ம் ஆண்டு பாஜகவும் இடதுசாரிகளும் சேர்ந்து தேசிய ஜனநயாகக் கூட்டணியின் தலைவரான வி.பி.சிங்கை பிரதமராக்கியது மாதிரி இந்த முறையும் காங்கிரஸை வீழ்த்த பாஜகவும் இடதுசாரிகளும் சேர்ந்து ஜெயலலிதாவை பிரதமராக்கப் போகிறார்கள் என்பதே அதிமுகவின் கணக்கு.

நான் தான் அடுத்த பிரதமர் என்று ஜெயலலிதாவின் நண்பரான நரேந்திர மோடி மறைமுகமாகக் கூற ஆரம்பித்திருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் வைத்திலிங்கம் நிச்சயம் இப்படிப் பேசியிருக்க முடியாது என்பதைப் பார்க்கும்போது, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தின் வெளியே நாடாளுமன்ற செட் மீது அதிமுக கொடி பறந்ததற்கான அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நான் பிரதமர் என்றால்..... அதிகபட்ச இடங்களில் போட்டியிட்டு அதிகபட்ச இடங்களை வெல்வதன் மூலம் தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நிலவப் போகும் கலங்கலான அரசியல் குட்டையில் மீன் பிடிக்க முடியும் என்று ஜெயலலிதா கருதுகிறார். காரணம், அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று அத்வானியே கூறிவிட்டார். நாம் வெல்ல மாட்டோம் என்று காங்கிரசுக்கு இதைவிட அதிகமாகவே நம்பிக்கை உள்ளது.

இதனால் மீண்டும் ஒரு 'மூன்றாவது அணி அரசு' என்ற நாடகம் நடக்கவே போகிறது என்று ஜெயலலிதா உறுதியாக நம்புகிறார். குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதை நிரூபிக்கும் சக்தியாக நாம் இருக்கலாம் என அவர் கருதுகிறார்.

அதிலும் தன்னையே பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் அதிகபட்ச இடங்களை அதிமுக பெற முடியும் என்றும் அவர் நினைக்கிறார். தேர்தலுக்கு இன்னும் ஓரு வருடத்துக்கு மேல் இருப்பதால், இடையில் முதல்வர் ஜெயலலிதாவின் நிலையில் மாற்றங்களும் ஏற்படலாம். 'கரன்ட் கட்' இருட்டில் கடுப்பில் உட்கார்ந்துள்ள மக்கள் என்ன நினைக்கிறார்களோ?!

ஒன்இந்தியா தமிழ்


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!  Empty Re: 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

Post by யினியவன் Thu Jan 03, 2013 12:00 pm

சிரிப்பு சிப்பு வருது

3 நிமிஷ பொதுக்குழு அப்புறம் 25 தீர்மானங்களில் 21 தீர்மானங்கள் அம்மா புகழ் பாடி - சூப்பர் - இதை இந்திய அளவில் அமுல்படுத்த போறாங்களா - அபாரம் - அம்மணி புகழ் ஓங்குக.

தப்பி தவறி அங்க போயாச்சுன்னா அம்மணி கூத்த பார்த்து சிரியா சிரிக்க போறாங்க மக்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!  Empty Re: 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

Post by ஹர்ஷித் Thu Jan 03, 2013 12:04 pm

இந்தியாவும் ஒளிரப்போகிறதா(ஒளியப்போகிறதா)
அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!  Empty Re: 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

Post by யினியவன் Thu Jan 03, 2013 12:06 pm

ஹர்ஷித் wrote:இந்தியாவும் ஒளிரப்போகிறதா(ஒளியப்போகிறதா)
அய்யோ, நான் இல்லை
இப்படி எல்லாம் சொல்லக் கூடாது - ப்ளீஸ் ஒத்துக்கோங்க அம்மா தான் அடுத்த பிரதமர்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!  Empty Re: 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

Post by ஹர்ஷித் Thu Jan 03, 2013 12:08 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:இந்தியாவும் ஒளிரப்போகிறதா(ஒளியப்போகிறதா)
அய்யோ, நான் இல்லை
இப்படி எல்லாம் சொல்லக் கூடாது - ப்ளீஸ் ஒத்துக்கோங்க அம்மா தான் அடுத்த பிரதமர்
:அடபாவி: கோபம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!  Empty Re: 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

Post by யினியவன் Thu Jan 03, 2013 12:10 pm

இந்திய அளவில் டாஸ்மாக் வியாபாரம் பரவும், பெருகும் ஜேன் - அது அம்மாவுக்கு பெருமை தானே!!!! புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே!!!!!

பவர் கட்டும் பரவும் நாடு பூரா!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!  Empty Re: 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

Post by ஹர்ஷித் Thu Jan 03, 2013 12:16 pm

யினியவன் wrote:இந்திய அளவில் டாஸ்மாக் வியாபாரம் பரவும், பெருகும் ஜேன் - அது அம்மாவுக்கு பெருமை தானே!!!! புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே!!!!!
பவர் கட்டும் பரவும் நாடு பூரா!!!
எல்லாம் நம்ம அப்துல் கலாம் ஐயாவோட வேலை.,
எல்லாரும் கனவு காணுறாங்க..,
அதெல்லாம் சரி காணுற கனவு மத்தவங்களையில்ல பாதிக்காம இருக்கணும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!  Empty Re: 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

Post by DERAR BABU Thu Jan 03, 2013 12:22 pm

எதையுமே பிளான் பண்ணி செய்யணும் .. (வடிவேல் கதை ஆகிட போகுது )


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!  Empty Re: 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

Post by Guest Thu Jan 03, 2013 4:29 pm

'கரன்ட் கட்' இருட்டில் கடுப்பில் உட்கார்ந்துள்ள மக்கள் என்ன நினைக்கிறார்களோ?!

முடிவே எடுத்து இருப்பாங்கள் .. சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!  Empty Re: 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum