புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
25 Posts - 50%
heezulia
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஆஸ்துமா அரக்கன்! Poll_c10ஆஸ்துமா அரக்கன்! Poll_m10ஆஸ்துமா அரக்கன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்துமா அரக்கன்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 31, 2012 3:44 pm

மழையும் குளிரும் மாறி மாறிக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க, மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம்! லேசான தூறலோ, சில டிகிரி அதிகமான குளிரோ கூட ஒப்புக்கொள்ளாது பலருக்கு. சாதாரண சளி, இருமலில் ஆரம்பிக்கும். அப்படியே தொண்டையில் ‘கீச்... கீச்’ சத்தமும் சேர்ந்து கொள்ளும். அடுத்த கட்டமாக சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகி, மூச்சுத்திணறல் உண்டாகும். விசிலை விழுங்கியது போல, மூச்சு விடும் போதெல்லாம் விசில் சத்தம் சேர்ந்து ஒலிக்கும். தூக்கம் தொலையும். பசி மறக்கும். ‘எப்போ சரியாகும்’ என உடலும் மனதும் அழும். சுருக்கமாக சொல்லப் போனால், அந்த அனுபவம் நரக வேதனை... அதுதான் ஆஸ்துமா!
:-
ஆஸ்துமா என்கிற அரக்கனுக்கு வயது வித்தியாசமோ, ஆண், பெண் பேதமோ கிடையாது. பிறந்த குழந்தை முதல், தளர்ந்த பாட்டி, தாத்தா வரை சகட்டுமேனிக்கு பாதிக்கும். மழை, குளிர் காலங்களில் அதன் கோர தாண்டவம் கொஞ்சம் அதிகமிருப்பதைப் பார்க்கலாம்.
:-
ஆஸ்துமா என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறைகள், நிவாரணங்கள்... இவை எல்லாவற்றையும் விரிவாகப்பேசுகிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் லோகமூர்த்தி.
அதென்ன ஆஸ்துமா?
:-
ஆஸ்துமா என்பது சுவாசக் குழல்களைப் பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள்தான் மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள்.
இந்த சுவாசக் குழாய்களின் உள்பக்க சவ்வில் ஒருவித அழற்சி ஏற்படும். மூச்சுக்குழாய் மற்றும் அதன் கிளைகளின் சாதாரண விட்டம் குறைந்து, திடீரென சுருங்கும். சுவாசக் குழாயின் உள்சுவர் வீங்கி, ஒவ்வாமை உண்டாகும். இதன் விளைவாக சாதாரண அளவைவிட, மிகக்குறைந்த அளவு காற்றே, நுரையீரலின் காற்று பரிமாணம் நடக்கும் இடத்துக்குச் செல்லும். அதனால், உடல் திசுக்களுக்குச் செல்லும்பிராண வாயுவின் அளவும் குறைவதால், மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். அதாவது மூச்சு விட முடியாமை, விசில் சத்தத்துடன் மூச்சு விடுதல், இருமல், மார்புப்பகுதி இறுக்கமாவது, அரிதாக சில வேளைகளில் நெஞ்சுவலி போன்றவற்றை உண்டாக்கும். ஆஸ்துமாவின் பாதிப்பு நள்ளிரவு 1 மணியிலிருந்து,அதிகாலை 4 மணிக்குள் சற்றே தீவிரமாக இருக்கும்.
:-
சுற்றுப்புற மாசு, தூசு, பூக்களில் உள்ள மகரந்தத்துகள்கள், வானிலை மாற்றங்கள், மன அழுத்தம் போன்றவை ஆஸ்துமாவை தூண்டும் காரணிகள். இது பரம்பரையாகத் தொடரக்கூடியஒரு நோய். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என யாருக்காவது ஆஸ்துமா இருந்தால், அந்த வழியில் வரக்கூடிய குழந்தைகளுக்கும் ஆஸ்துமாதாக்க 25 சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு. பொதுவாக குழந்தையின் 5வது வயதுக்குள் ஆஸ்துமா ஆரம்பித்து விடும். அதில் 50 சதவிகிதக் குழந்தைகளுக்கு 3 வயதுக்குள்ளாகவும் தாக்கலாம்.
:-
எப்படிக் கண்டுபிடிப்பது?
ரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, பி.எஃப்.டி மற்றும் இசிஜி என நோயின் தீவிரத்தைப் பொறுத்தது சோதனை முறை. தேவைப்பட்டால், சருமத்துக்கான சோதனையும் பரிந்துரைக்கப்படும். பி.எஃப்.டி. (Pulmonary Function Test) எனப் படுகிற சோதனை மிக முக்கியமானது. இதில் நுரையீரலின் விரிவடையும் தன்மை கண்டுபிடிக்கப்படும். இது ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் செய்யப்படுகிற சோதனை.
:-
ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா?
சரியான மருத்துவம், வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். மற்ற நோய்களுக்கு மருத்துவம் செய்து முற்றிலும் சரியாக்கி விடுகிற மாதிரி இதில் வாய்ப்பில்லை. ஒரு முறை ஆஸ்துமாவுக்கு மருத்துவம் செய்து, சரியாகி விட்டால், அது மறுபடி வராது என நினைக்க வேண்டாம். வருடம் 2-3 முறை மருத்துவரைப் பார்த்து, மறுபடி ஆஸ்துமாவின் தீவிரம் எட்டிப்பார்க்காமல் இருக்க ஆலோசனை பெறுவது முக்கியம்.
:-
என்ன சிகிச்சை?
ஆஸ்துமா தீவிரமாக இருக்கும்போது உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். நோயின் தீவிரம் மிக அதிகமாக இருக்கும் போது, மருத்துவர்கள் ‘நெபுலைசர்’ என்கிற கருவியின் மூலம் தீவிரத்தைக் குறைப்பார்கள். மருந்துடன்ஆக்சிஜனும் சேர்த்து, நீராவி வடிவத்தில் சுவாசிக்கும்படி நோயாளிக்கு
செலுத்தப்படும்.
இதற்கும் கட்டுப்படாத ஆஸ்துமா என்றால், உடனடியாகமருத்துவமனையில் சேர்த்து, நரம்பு வழியே செலுத்தக்கூடிய மருந்துகளைக் கொடுக்கத் தொடங்க வேண்டும். இன்ஃபெக்ஷன் இருந்தால் அதற்கும் மருந்து கொடுக்கப்படும்.
:-
ஆஸ்துமாவுக்கான சிறந்த சிகிச்சை முறை என்றால் அதுஇன்ஹேலர் மட்டுமே. வாய் வழியே வைத்து உறிஞ்சக்கூடிய குழல் வடிவிலான சிறிய கருவியான இதில் ஏற்கனவே மருந்து ஏற்றப்பட்டிருக்கும். உறிஞ்சிய உடனேயே நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருந்து சென்று, சுருங்கிய காற்றுக்குழாய்களின் தசைகளைத் தளர்த்தி, நிவாரணம் அளிக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. இன்ஹேலரை சரியாக உபயோகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வாயில் வைத்து உறிஞ்சிய உடனேயே வாயைக் கொப்பளித்துத் துப்ப வேண்டும்.
:-
இன்ஹேலரிலேயே இரண்டு வகை உண்டு. ப்ரிவென்ட்டர் என்பதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆஸ்துமா இருந்தாலும்,இல்லாவிட்டாலும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். ரிலீவர் என்பதை, பிரச்னை தீவிரமாக இருக்கும்போது மட்டும் உபயோகிக்கலாம். பலருக்கும்இந்த வித்தியாசம் தெரியாமல், வருடக்கணக்கில் ரிலீவரை மட்டுமே உபயோகிக்கிறார்கள். அப்படிஉபயோகிப்பது இதய நோயை வரவழைக்கலாம்.
ஜாக்கிரதை!
இன்ஹேலர் உபயோகிக்கத் தெரியாதவர்களுக்கு மருத்துவர்கள் ‘ஸ்பேசர்’ என்கிற கருவியைப் பரிந்துரைப்பார்கள். பக்க விளைவுகள் இல்லாத இன்ஹேலர் உபயோகித்து, கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே பாதுகாப்பானது. அளவின்றி, அடிக்கடி ஊசி, மாத்திரைகள்எடுத்துக் கொள்கிறவர்களுக்கு, நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், ஆஸ்டியோ பொரோசிஸ், பருமன் போன்ற பிரச்னைகள் வரலாம்.


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 31, 2012 3:50 pm

மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கும் ஆஸ்துமா உண்டு. இப்போது குறைந்துள்ளது. பதிவுக்கு நன்றி பவுன்ராஜ் நன்றி
Ahanya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ahanya



ஆஸ்துமா அரக்கன்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 31, 2012 3:51 pm

ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்!
ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்க, நமது இருப்பிடம், உணவு, வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் கவனம் தேவை. முதல் விஷயம் சுற்றுச்சூழல் சுத்தம். தூசி, மாசு இல்லாமல் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள் போன்றவை வாரம் ஒரு முறை சுத்தப்படுத்தப்பட வேண்டும். குளியலறையும் கழிவறையும் பாசியோ, ஈர நைப்போ இல்லாமல் உலர்ந்ததாக, சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். பூக்களின் மகரந்தத்தூள், மேசை, நாற்காலி போன்றவற்றில் இருந்து கிளம்பும் தூசு, பெயின்ட், பெர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே,ஆசிட், வார்னிஷ், பஞ்சு, கொசுவர்த்திச் சுருள், வளர்ப்புப்பிராணிகள், சமையலறைப் புகை போன்றவை ஆஸ்துமாவை தூண்டக் கூடியவை என்பதால் இவற்றிடமிருந்து விலகி இருக்க வேண்டியது முக்கியம். புகைப்பிடிப்பவர்களிடம் இருந்தும் விலகியிருக்க வேண்டும். எந்த விஷயம் ஆஸ்துமாவை தூண்டுகிறது, தீவிரப்படுத்துகிறது என்பதைத் தெரிந்து கொண்டு,அதைத் தவிர்க்க வேண்டும்.
:-
ஆஸ்துமா தொற்று நோயா?
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நிச்சயம் தொற்றாது. ஆனால், மரபு வழியே குடும்பத்தில் தலைமுறைகள் தாண்டியும் வரலாம்.
:-
கர்ப்பிணிகள் கவனத்துக்கு...
கர்ப்ப காலத்தில் 2 - 3 சதவிகிதப் பெண்களுக்கு ஆஸ்துமாவின் தீவிரம் பாதிக்கலாம். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால்,எடை குறைவான குழந்தையோ, குறைப்பிரசவக் குழந்தையோ பிறக்கலாம்.
:-
குழந்தைகளைக் கவனியுங்கள்...
குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதைப் பல பெற்றோரும் தாமதமாகவே கண்டு பிடிக்கிறார்கள். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது, குழந்தையின் பேச்சுத் திறமை பாதிக்கலாம். அதாவது வாக்கியங்களாகப் பேசிக் கொண்டிருந்த குழந்தைகளின்பேச்சு, நோயின் பாதிப்பால், வார்த்தைகளாகக் குறையும்.கோபமும் பதற்றமும் அதிகரித்து, ஒருவித எரிச்சல் மனநிலையிலேயே இருப்பார்கள். சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம், ‘ஆஸ்துமா வரும் போது எப்படி ஃபீல் பண்றே’ எனக் கேட்டிருக்கிறார் மருத்துவர். வார்த்தைகளால் பதில் சொல்ல முடியாத அந்தக் குழந்தை, தன் அவஸ்தையை படமாக வரைந்து காட்டியதாம். அந்தப் படம் எப்படியிருந்தது தெரியுமா? அந்தக் குழந்தை படுத்திருக்க, அதன் நெஞ்சின் மேல் ஒரு யானை ஏறி உட்கார்ந்திருக்கிறது. அப்படியென்றால், அந்தக் குழந்தையின் வேதனையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
:-
நன்றி தேடிப்பார் தளம்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 31, 2012 3:54 pm

அட நம்ம நண்பரை பற்றிய பதிவு ................

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 31, 2012 4:28 pm

ராஜா wrote:அட நம்ம நண்பரை பற்றிய பதிவு ................
ராஜா wrote:அட நம்ம நண்பரை பற்றிய பதிவு ................
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக