புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயா நானா கோபிக்கும், கார்பரேட் TO விவசாயி கௌதமிர்க்கும் ஒரு கண்டன மடல்
Page 1 of 1 •
நீயா நானா கோபிக்கு எனது வணக்கம்.
விஜய் தொலைக்கட்சியில் நீங்கள் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சி, வெளியுலகிற்கு சரிவர தெரியாத பல விடயங்களை மக்கள் முன் எடுத்துச் செல்கிறது என்பதை யாவரும் அறிவோம். இளைஞர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு நீங்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் விதமும், அங்கே விவாதிக்கப்படும் கருத்துக்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதற்காக உங்களுக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் பல லட்சம் இளைஞர்களில் ஒருவனாய் ஒரு கண்டன மடலை எழுதும் கட்டாயத்தில் இன்று என்னை தள்ளிவிட்டீர்கள். அதற்கான காரணங்களை விளக்கவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கார்பரேட் செக்டர் மனமகிழ்ச்சி தருகிறதா இல்லையா என்பதைப்பற்றி, நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அதில் கார்பரேட் செக்டர் பற்றிய உண்மை நிலைகளை இரு தரப்பினரும் எடுத்து வைத்தனர். விவாதம் நன்றாகப் போனது, கார்பரேட்டை விட்டு வெளியேறி தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன் என்று கௌதம் என்ற ஒருநபர் கூறும்வரை. அவரை நீங்கள் பாராட்டியபின், உலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில் நான் இப்படி குறை கூறுவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் எதார்த்தம். உண்மை.
நீயா நானா நிகழ்சிகளில் எவரேனும் ஒருவர் தவறான கருத்தை முன்வைக்கும் வேளையில், அது சமுதாயத்தில் ஒரு எதிர்மறை தாக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்பதற்காக அந்த கருத்துகளுக்கு பலமுறை உங்கள் கண்டனத்தை பதிவு செய்திருப்பதை உலகம் அறியும். அதை நானும் அறிவேன். அதை வரவேற்கவும் செய்தேன்.
ஆனால் அன்று நடந்த நீயா நானா நிகழ்ச்சியில், நீங்கள் ஒரு அடிப்படையற்ற தவறான உதாரணமான கௌதம் என்பவரை, சரியான பின்னணி மற்றும் முறையான காரணங்களை ஆராயாமல் அவரை WOW, SUPER, YOU ARE A GREAT INDIAN, YOU ARE GREAT GREAT GREAT INDIAN, YOU SET AN EXAMPLE என தேவையற்ற புகழாரம் சூட்டி, சமூகத்தில் ஒரு எதிர்மறை தாக்கத்தை உருவாக்கியதற்காக எனது கண்டனத்தை முதலில் பதிவு செய்துவிட்டு, அதற்கான காரணங்களையும் கௌதம் செய்த செயலும் அதில் முறையாக ஆராயப்படாத விடையங்களையும் இங்கு முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
அதற்கு முன், கௌதமும் நீங்களும் பேசிய அந்த காணொளியை ஒருமுறை பார்க்க வேண்டுகிறேன்.
என்னைப்பற்றி சில வரிகள்
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் எனது சொந்த ஊர். குடும்பம் விவசாய பின்னணியைக் கொண்டது. 2007 இல் திருச்சி ஜெ.ஜெ பொறியியல் கல்லூரியில் எனது பொறியியல் இளநிலை பட்டத்தை முடித்துவிட்டு தற்போது ஹைதராபாத்தில் ஒரு அமெரிக்க தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். இங்கே எனது அறிமுகம் தேவையில்லை என்றாலும் இந்த தலைப்பைப் பற்றி பேசும் முன் நானும் கார்பரேட்டில் வேலை செய்யும் கௌதமைப்போல் ஒரு பின்னணியை கொண்டவன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். அதற்காகவே சிலவரிகள்.
கௌதமின் செயலும், நீங்கள் ஆராயாத உண்மைகளும்
அன்று நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கார்பரேட்டை விட்டு வெளியே வந்தீர்கள் என்று கௌதமிடம் கேட்ட கேள்விக்கு, அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
"எனக்கும் என்னோடு சேர்ந்து வேலையைவிட்ட சிலருக்கும் நிறுவனங்கள் அதிகமாக சம்பளம் தந்தது அது எனக்குள் தேவையற்ற மாற்றத்தை கொண்டு வருகிறது. ஆளையே மாற்றுகிறது. அந்த பணத்தால் தேவையில்லாமல் என்னைச் சுற்றி பொருட்கள் சேருகிறது. ஒரு விலையுயர்ந்த மொபைல், BRAND SHIRT, BRAND GLASS என வைத்திருக்கும் பட்சத்தில் தான் என்னால் அங்கு இருக்க முடியும் என்ற சூழல் உருவாகிறது. என்று எனது வாழ்கையை ஒரு பெட்டிக்குள் சுருக்க முடிகிறதோ அன்றே எனது வாழ்க்கை முழுமை பெறுகிறது.
நமக்கு தேவை எது தேவை இல்லாதது எது என்பதை பிரித்துப் பார்க்கவே நாம் கார்பரேட் சூழலை விட்டு வெளியே வந்தால் தான் முடியும என்று மிக அழகாக அனைவரும் ரசிக்கும்படி வார்த்தைகளைக் கோர்த்துப் பேசினார். ஆனால் இது அவரின் அறியாமையையும், அவரின் மனம் அவரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அலைபாய்கிறது என்பதையுமே காட்டுகிறது. அதோடு சமூக பொறுப்புகளை உதறித்தள்ளிய அவரின் சுயநலத்தையும் சொல்கிறது.
அதற்கான காரணங்களை எனது கருத்துகளாக முன்வைக்கிறேன்.
1. எந்த அலுவலகத்தில் ஒரு விலையுயர்ந்த மொபைல், BRAND SHIRT, BRAND GLASS போடாமல் இருந்தால் நண்பர்கள் மதிப்பதில்லை அந்த அலுவலகத்தில் வேலை செய்ய முடிவதில்லை என்பது எனக்கு சற்றும் விளங்காத ஒன்றாக இருக்கிறது. அப்படி எந்த ஒரு கார்பரேட் அலுவலகமும் ஒரு விதியை கொண்டு இயங்குவதில்லை. இப்படி இருந்தால் தான் நண்பர்கள் பேசுவார்கள் என்ற அவரின் கருத்துக்களை முற்றிலும் எதிர்க்கிறேன். அதற்கு எனது அலுவலகத்தைப் பற்றிய சிறு உதாரணத்தை தருவது அவசியமாகிறது.
நான் வேலைபார்க்கும் நிறுவனம் உலகில் தொலைதொடர்பு துறையில் (WIRELESS TECHNOLOGY) மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய நிறுவனம். சாம்சுங், எல் ஜி, சோனி, நோக்கியா, ரிம், குவாவே, சில ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் என உலகின் அனைத்து முன்னணி மொபைல் நிறுவனங்களுக்கும், தங்களது சிப்செட்டை (மொபைலில் உள்ளே உள்ள பெரும்பாலான அனைத்து சிப்களும்) மென்பொருட்களோடு கொடுக்கும் நிறுவனம். உலகில் 80-85 சதவீதம் மார்க்கட்டை தன் வசம் வைத்துக் கொண்டு இயங்கும் நிறுவனம். பல அறிய கண்டிபிடுப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். உதாரணமாக CDMA தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த பெருமைக்குரியவர்கள். கல்லூரியை முடித்து வரும் IIT, NIT மாணவர்களுக்கு குறைந்த பட்சம் 12 லட்சம் சம்பளம் தருவது இவர்களின் வழக்கம்.
இப்படியான மிகப்பெரும் நிறுவனத்தில் மேலாளர் பொறுப்பில் உள்ள எனது நண்பர் வைத்திருக்கும் மொபைல் சோனி எரிக்சன். இது சோனி வெளியிட்ட 1500 ரூபாய்க்கான சாதாரண மொபைல். இவரின் சம்பளம் ~ 30 லட்சம். டைரக்டர், சீனியர் டைரக்டர் என பொறுப்பில் இருக்கும் சிலர் எவ்வளவு சாதரணமாக இருகிறார்கள் என்பதை இங்கு வந்து பார்த்தால் தெரியும். அவர்கள் வைத்திருப்பது பீ.எம்.டபிள்யூ, பென்ச் கார்கள் அல்ல. நடுத்தர மக்கள் வைத்திருக்கும் I 10 போன்ற கார்கள் தான்.
அவர்களின் மொபைல் 10-20 ஆயிரத்திற்குள் தான் இருக்கும். அவர்கள் உடைகளும் மிகச் சாதரணாமாக இருக்கும். ஆனால் இவர்களின் சம்பளம் வருடத்திற்கு குறைந்தது 70-100 லட்சம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலானோர் அனைத்து நிறுவனங்களிலும் இப்படி சாதரணமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு விலையுயர்ந்த மொபைல், BRAND SHIRT இல்லாமல் கார்பரேட்டில் இருக்க முடியவில்லை என்று இவர் சொல்வது மிகவும் பிற்போக்கான சிந்தனை. முற்றியும் நியாமற்றது.
2. எனக்கு சம்பளம் அதிகம் தரப்பட்டது அதனால் கார்பரேட்டில் இருந்து விலகினேன் என்றார்.அது மட்டுமே காரணம் எனும் பட்ச்சத்தில், ஒரு சமுதாக அக்கறை கொண்ட வாலிபனாக இருந்தால் ஒன்றை யோசித்திருக்கலாம். தனக்கு தேவையான பணம் போக மீதியை வைத்து சில ஏழை, அநாதை குழந்தைகளுக்கு கல்வி அறிவை தர முயர்ச்சித்திருக்கலாம். மற்ற சமுதாக மாற்றங்களுக்கு உதவி இருக்கலாம். இதனால் பயனடைவது அவர் மட்டுமல்ல. ஒரு நாடே பயனடைகிறது. 24 லட்சம் பணம் வாங்கும் இவர் நாட்டிற்கு பெருமளவில் வரி கட்ட வேண்டியிருக்கும். இவ்வாறு ஒவ்வொருவரும் செலுத்தும் வரிப்பணத்தில் தான் அரசு இயங்கிக் கொண்டிருப்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதை எதையுமே செய்யாமல் அவர் வெளியேறியது அவரின் சுயநலத்தைக் காட்டுகிறது.
3. என்னைச்சுற்றி என்னையறியாமல் பொருட்கள் சேருகிறது என்கிறார். இவரை அறியாமல் இவர் ஆசைபடாமல் எப்படி பொருட்கள் சேரும் என்பது எனக்கு சற்றும் விளங்கவில்லை. தேவையில்லாத பொருட்கள் சேருவதை அவரால் தடுக்க இயலவில்லை என்றால், அவரின் மனதை அவரால் ஒருங்கிணைத்து கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியவில்லை என்ற அவரின் தனிப்பட்ட இயலாமையையே காட்டுகிறதே தவிர கார்பரேட் நிறுவன சூழலால் இது நடப்பதில்லை.
4. எது வேண்டும் எது வேண்டாம் என்பதை யோசித்துப் பார்பதற்கே கார்பரேட் சூழலை விட்டு வெளியேறினால் மட்டுமே முடியும் என்று அவர் சொல்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் "அடித்துச் செல்லும் ஆற்று நீரில் நான் விழுந்துவிட்டான், எனக்கு எப்படி தப்பிப்பது என்பதை இங்கே என்னால் யோசிக்க முடியாது. நான் கரைக்குப் போனபின் தான் யோசிக்கவே முடியும்" என்பது போல் மிகவும் பிற்போக்காக உள்ளது.
5. இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு விவசாயம் செய்கிறேன் என்று சொன்னார். விவசாயத்துறை நமது நாட்டில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இளைஞர்கள் பெருவாரியாக கால்பதிக்க வேண்டிய நலிவடைந்து வரும் மிகப்பெரும் தளம் இது. மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், நலிந்துவரும் விவசாயத்தை காப்பாற்றவே நான் கார்பரேட்டை விட்டு வந்தேன் என்று இவர் சொல்லி இருக்கும் பட்சத்தில், உங்களோடு சேந்து நானும் எழுந்து கை தட்டி வாழ்த்தி இருப்பேன். எவ்வளவு சம்பளம் என்று கேட்டபோது, மாதம் 75 ஆயிரம் ரூபாய் ஈட்ட முடியும் என்றார்.
இவர் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையோடு வெளியேறவில்லை. வெளியேறியது சம்பள மிகுதியால். அதனால் இங்கே எனக்கு ஒரு கேள்வி. இப்போது 75 ஆயிரம் சம்பாதிக்கும் இவர், அதே விவசாயத்தில் சில மதங்கள் கழித்து 2 லட்சம் சம்பளம் வரும் சூழல் உருவானால், சம்பள மிகுதி என்று விவசாயத்தையும் விட்டுவிட்டுப் போய்விடுவாரா .? இல்லை என்றால் என்ன நிச்சயம் .?
6. மேலும் இவரைப்போலவே தன்னுடன் பலர் கார்பரேட்டை விட்டு இதே காரணத்திற்க்காக வெளியேறிதாக கூறினார். ஒரு உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம் இவர்கள் IIT, NIT போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள் என்று. அந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு யார் செலவு செய்கிறார் என்றால் அரசாங்கம். அது மக்களின் வரிப்பணம். சில நூறு இடங்களே ஒதுக்கப்பட்ட இது போன்ற நிறுவனங்களில், ஏழை மக்களில் பணத்தில் படித்துவிட்டு அடிப்படையற்ற காரணங்களைச் சொல்லி வெளியேறுவதை எப்படி நியாப்படுத்த முடியும் ..? இது சமூக முன்னேற்றத்திற்கு மறைமுகமான பாதிப்பைத் தராதா ..?
இப்படி தனக்கு எது வேண்டும் வேண்டாம் என்பதைப் பற்றி தன்னிலை அறியாமல், அடிப்படையற்ற காரணங்களுடன் கார்பரேட் நிறுவனங்களை குறை கூறி வெளியேறிய இவரை, பல லட்சம் மக்கள் பார்க்கும் நீயா நானா நிகழ்ச்சியில், இதைப்பற்றி சரியான புரிந்துணர்வு இல்லாமல், நீங்கள் WOW, SUPER, YOU ARE A GREAT INDIAN, YOU ARE GREAT GREAT GREAT INDIAN, YOU SET AN EXAMPLE என புகழாரம் சூட்டி இளைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தது மிகவும் வருத்ததிற்குரியது. அந்த காணொளி சமூக வலைதளங்களில் பல ஆயிரம் பகிர்வுகளோடு வளம் வருவது அதைவிட வருந்ததக்கது.
கார்பரேட் நிறுவனங்களை விட்டு வெளியேறியதற்கு மற்ற பலர்கூறிய காரணங்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இவர் கூறிய காரணங்களை அல்ல. அதோடு ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதார நிலைதான் அந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. உலக அரங்கில் நாட்டை முன் நிறுத்துகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இந்த கட்டுரையின் நோக்கம் தவறான உதாரணங்கள் இளைஞர்களை அடையக்கூடாது என்பது மட்டுமே. ஒரு பிரபலத்தை விமர்சிக்க வேண்டும் என்னும் நோக்கில் எழுதப்படவில்லை. இதை நீங்கள் படிப்பீர்களா என்று தெரியவில்லை. அப்படி உங்களை இந்த கட்டுரை அடையும் பட்ச்சத்தில், இனியேனும் இது போன்ற உதாரணங்களை முன்னிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
எனது வலைப்பூவில் http://kakkaisirakinile.blogspot.in/2012/12/to.html
நன்றி ..!
அன்புடன்,
அகல்
விஜய் தொலைக்கட்சியில் நீங்கள் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சி, வெளியுலகிற்கு சரிவர தெரியாத பல விடயங்களை மக்கள் முன் எடுத்துச் செல்கிறது என்பதை யாவரும் அறிவோம். இளைஞர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு நீங்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் விதமும், அங்கே விவாதிக்கப்படும் கருத்துக்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதற்காக உங்களுக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் பல லட்சம் இளைஞர்களில் ஒருவனாய் ஒரு கண்டன மடலை எழுதும் கட்டாயத்தில் இன்று என்னை தள்ளிவிட்டீர்கள். அதற்கான காரணங்களை விளக்கவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கார்பரேட் செக்டர் மனமகிழ்ச்சி தருகிறதா இல்லையா என்பதைப்பற்றி, நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அதில் கார்பரேட் செக்டர் பற்றிய உண்மை நிலைகளை இரு தரப்பினரும் எடுத்து வைத்தனர். விவாதம் நன்றாகப் போனது, கார்பரேட்டை விட்டு வெளியேறி தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன் என்று கௌதம் என்ற ஒருநபர் கூறும்வரை. அவரை நீங்கள் பாராட்டியபின், உலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில் நான் இப்படி குறை கூறுவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் எதார்த்தம். உண்மை.
நீயா நானா நிகழ்சிகளில் எவரேனும் ஒருவர் தவறான கருத்தை முன்வைக்கும் வேளையில், அது சமுதாயத்தில் ஒரு எதிர்மறை தாக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்பதற்காக அந்த கருத்துகளுக்கு பலமுறை உங்கள் கண்டனத்தை பதிவு செய்திருப்பதை உலகம் அறியும். அதை நானும் அறிவேன். அதை வரவேற்கவும் செய்தேன்.
ஆனால் அன்று நடந்த நீயா நானா நிகழ்ச்சியில், நீங்கள் ஒரு அடிப்படையற்ற தவறான உதாரணமான கௌதம் என்பவரை, சரியான பின்னணி மற்றும் முறையான காரணங்களை ஆராயாமல் அவரை WOW, SUPER, YOU ARE A GREAT INDIAN, YOU ARE GREAT GREAT GREAT INDIAN, YOU SET AN EXAMPLE என தேவையற்ற புகழாரம் சூட்டி, சமூகத்தில் ஒரு எதிர்மறை தாக்கத்தை உருவாக்கியதற்காக எனது கண்டனத்தை முதலில் பதிவு செய்துவிட்டு, அதற்கான காரணங்களையும் கௌதம் செய்த செயலும் அதில் முறையாக ஆராயப்படாத விடையங்களையும் இங்கு முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
அதற்கு முன், கௌதமும் நீங்களும் பேசிய அந்த காணொளியை ஒருமுறை பார்க்க வேண்டுகிறேன்.
என்னைப்பற்றி சில வரிகள்
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் எனது சொந்த ஊர். குடும்பம் விவசாய பின்னணியைக் கொண்டது. 2007 இல் திருச்சி ஜெ.ஜெ பொறியியல் கல்லூரியில் எனது பொறியியல் இளநிலை பட்டத்தை முடித்துவிட்டு தற்போது ஹைதராபாத்தில் ஒரு அமெரிக்க தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். இங்கே எனது அறிமுகம் தேவையில்லை என்றாலும் இந்த தலைப்பைப் பற்றி பேசும் முன் நானும் கார்பரேட்டில் வேலை செய்யும் கௌதமைப்போல் ஒரு பின்னணியை கொண்டவன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். அதற்காகவே சிலவரிகள்.
கௌதமின் செயலும், நீங்கள் ஆராயாத உண்மைகளும்
அன்று நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கார்பரேட்டை விட்டு வெளியே வந்தீர்கள் என்று கௌதமிடம் கேட்ட கேள்விக்கு, அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
"எனக்கும் என்னோடு சேர்ந்து வேலையைவிட்ட சிலருக்கும் நிறுவனங்கள் அதிகமாக சம்பளம் தந்தது அது எனக்குள் தேவையற்ற மாற்றத்தை கொண்டு வருகிறது. ஆளையே மாற்றுகிறது. அந்த பணத்தால் தேவையில்லாமல் என்னைச் சுற்றி பொருட்கள் சேருகிறது. ஒரு விலையுயர்ந்த மொபைல், BRAND SHIRT, BRAND GLASS என வைத்திருக்கும் பட்சத்தில் தான் என்னால் அங்கு இருக்க முடியும் என்ற சூழல் உருவாகிறது. என்று எனது வாழ்கையை ஒரு பெட்டிக்குள் சுருக்க முடிகிறதோ அன்றே எனது வாழ்க்கை முழுமை பெறுகிறது.
நமக்கு தேவை எது தேவை இல்லாதது எது என்பதை பிரித்துப் பார்க்கவே நாம் கார்பரேட் சூழலை விட்டு வெளியே வந்தால் தான் முடியும என்று மிக அழகாக அனைவரும் ரசிக்கும்படி வார்த்தைகளைக் கோர்த்துப் பேசினார். ஆனால் இது அவரின் அறியாமையையும், அவரின் மனம் அவரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அலைபாய்கிறது என்பதையுமே காட்டுகிறது. அதோடு சமூக பொறுப்புகளை உதறித்தள்ளிய அவரின் சுயநலத்தையும் சொல்கிறது.
அதற்கான காரணங்களை எனது கருத்துகளாக முன்வைக்கிறேன்.
1. எந்த அலுவலகத்தில் ஒரு விலையுயர்ந்த மொபைல், BRAND SHIRT, BRAND GLASS போடாமல் இருந்தால் நண்பர்கள் மதிப்பதில்லை அந்த அலுவலகத்தில் வேலை செய்ய முடிவதில்லை என்பது எனக்கு சற்றும் விளங்காத ஒன்றாக இருக்கிறது. அப்படி எந்த ஒரு கார்பரேட் அலுவலகமும் ஒரு விதியை கொண்டு இயங்குவதில்லை. இப்படி இருந்தால் தான் நண்பர்கள் பேசுவார்கள் என்ற அவரின் கருத்துக்களை முற்றிலும் எதிர்க்கிறேன். அதற்கு எனது அலுவலகத்தைப் பற்றிய சிறு உதாரணத்தை தருவது அவசியமாகிறது.
நான் வேலைபார்க்கும் நிறுவனம் உலகில் தொலைதொடர்பு துறையில் (WIRELESS TECHNOLOGY) மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய நிறுவனம். சாம்சுங், எல் ஜி, சோனி, நோக்கியா, ரிம், குவாவே, சில ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் என உலகின் அனைத்து முன்னணி மொபைல் நிறுவனங்களுக்கும், தங்களது சிப்செட்டை (மொபைலில் உள்ளே உள்ள பெரும்பாலான அனைத்து சிப்களும்) மென்பொருட்களோடு கொடுக்கும் நிறுவனம். உலகில் 80-85 சதவீதம் மார்க்கட்டை தன் வசம் வைத்துக் கொண்டு இயங்கும் நிறுவனம். பல அறிய கண்டிபிடுப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். உதாரணமாக CDMA தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த பெருமைக்குரியவர்கள். கல்லூரியை முடித்து வரும் IIT, NIT மாணவர்களுக்கு குறைந்த பட்சம் 12 லட்சம் சம்பளம் தருவது இவர்களின் வழக்கம்.
இப்படியான மிகப்பெரும் நிறுவனத்தில் மேலாளர் பொறுப்பில் உள்ள எனது நண்பர் வைத்திருக்கும் மொபைல் சோனி எரிக்சன். இது சோனி வெளியிட்ட 1500 ரூபாய்க்கான சாதாரண மொபைல். இவரின் சம்பளம் ~ 30 லட்சம். டைரக்டர், சீனியர் டைரக்டர் என பொறுப்பில் இருக்கும் சிலர் எவ்வளவு சாதரணமாக இருகிறார்கள் என்பதை இங்கு வந்து பார்த்தால் தெரியும். அவர்கள் வைத்திருப்பது பீ.எம்.டபிள்யூ, பென்ச் கார்கள் அல்ல. நடுத்தர மக்கள் வைத்திருக்கும் I 10 போன்ற கார்கள் தான்.
அவர்களின் மொபைல் 10-20 ஆயிரத்திற்குள் தான் இருக்கும். அவர்கள் உடைகளும் மிகச் சாதரணாமாக இருக்கும். ஆனால் இவர்களின் சம்பளம் வருடத்திற்கு குறைந்தது 70-100 லட்சம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலானோர் அனைத்து நிறுவனங்களிலும் இப்படி சாதரணமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு விலையுயர்ந்த மொபைல், BRAND SHIRT இல்லாமல் கார்பரேட்டில் இருக்க முடியவில்லை என்று இவர் சொல்வது மிகவும் பிற்போக்கான சிந்தனை. முற்றியும் நியாமற்றது.
2. எனக்கு சம்பளம் அதிகம் தரப்பட்டது அதனால் கார்பரேட்டில் இருந்து விலகினேன் என்றார்.அது மட்டுமே காரணம் எனும் பட்ச்சத்தில், ஒரு சமுதாக அக்கறை கொண்ட வாலிபனாக இருந்தால் ஒன்றை யோசித்திருக்கலாம். தனக்கு தேவையான பணம் போக மீதியை வைத்து சில ஏழை, அநாதை குழந்தைகளுக்கு கல்வி அறிவை தர முயர்ச்சித்திருக்கலாம். மற்ற சமுதாக மாற்றங்களுக்கு உதவி இருக்கலாம். இதனால் பயனடைவது அவர் மட்டுமல்ல. ஒரு நாடே பயனடைகிறது. 24 லட்சம் பணம் வாங்கும் இவர் நாட்டிற்கு பெருமளவில் வரி கட்ட வேண்டியிருக்கும். இவ்வாறு ஒவ்வொருவரும் செலுத்தும் வரிப்பணத்தில் தான் அரசு இயங்கிக் கொண்டிருப்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதை எதையுமே செய்யாமல் அவர் வெளியேறியது அவரின் சுயநலத்தைக் காட்டுகிறது.
3. என்னைச்சுற்றி என்னையறியாமல் பொருட்கள் சேருகிறது என்கிறார். இவரை அறியாமல் இவர் ஆசைபடாமல் எப்படி பொருட்கள் சேரும் என்பது எனக்கு சற்றும் விளங்கவில்லை. தேவையில்லாத பொருட்கள் சேருவதை அவரால் தடுக்க இயலவில்லை என்றால், அவரின் மனதை அவரால் ஒருங்கிணைத்து கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியவில்லை என்ற அவரின் தனிப்பட்ட இயலாமையையே காட்டுகிறதே தவிர கார்பரேட் நிறுவன சூழலால் இது நடப்பதில்லை.
4. எது வேண்டும் எது வேண்டாம் என்பதை யோசித்துப் பார்பதற்கே கார்பரேட் சூழலை விட்டு வெளியேறினால் மட்டுமே முடியும் என்று அவர் சொல்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் "அடித்துச் செல்லும் ஆற்று நீரில் நான் விழுந்துவிட்டான், எனக்கு எப்படி தப்பிப்பது என்பதை இங்கே என்னால் யோசிக்க முடியாது. நான் கரைக்குப் போனபின் தான் யோசிக்கவே முடியும்" என்பது போல் மிகவும் பிற்போக்காக உள்ளது.
5. இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு விவசாயம் செய்கிறேன் என்று சொன்னார். விவசாயத்துறை நமது நாட்டில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இளைஞர்கள் பெருவாரியாக கால்பதிக்க வேண்டிய நலிவடைந்து வரும் மிகப்பெரும் தளம் இது. மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், நலிந்துவரும் விவசாயத்தை காப்பாற்றவே நான் கார்பரேட்டை விட்டு வந்தேன் என்று இவர் சொல்லி இருக்கும் பட்சத்தில், உங்களோடு சேந்து நானும் எழுந்து கை தட்டி வாழ்த்தி இருப்பேன். எவ்வளவு சம்பளம் என்று கேட்டபோது, மாதம் 75 ஆயிரம் ரூபாய் ஈட்ட முடியும் என்றார்.
இவர் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையோடு வெளியேறவில்லை. வெளியேறியது சம்பள மிகுதியால். அதனால் இங்கே எனக்கு ஒரு கேள்வி. இப்போது 75 ஆயிரம் சம்பாதிக்கும் இவர், அதே விவசாயத்தில் சில மதங்கள் கழித்து 2 லட்சம் சம்பளம் வரும் சூழல் உருவானால், சம்பள மிகுதி என்று விவசாயத்தையும் விட்டுவிட்டுப் போய்விடுவாரா .? இல்லை என்றால் என்ன நிச்சயம் .?
6. மேலும் இவரைப்போலவே தன்னுடன் பலர் கார்பரேட்டை விட்டு இதே காரணத்திற்க்காக வெளியேறிதாக கூறினார். ஒரு உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம் இவர்கள் IIT, NIT போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள் என்று. அந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு யார் செலவு செய்கிறார் என்றால் அரசாங்கம். அது மக்களின் வரிப்பணம். சில நூறு இடங்களே ஒதுக்கப்பட்ட இது போன்ற நிறுவனங்களில், ஏழை மக்களில் பணத்தில் படித்துவிட்டு அடிப்படையற்ற காரணங்களைச் சொல்லி வெளியேறுவதை எப்படி நியாப்படுத்த முடியும் ..? இது சமூக முன்னேற்றத்திற்கு மறைமுகமான பாதிப்பைத் தராதா ..?
இப்படி தனக்கு எது வேண்டும் வேண்டாம் என்பதைப் பற்றி தன்னிலை அறியாமல், அடிப்படையற்ற காரணங்களுடன் கார்பரேட் நிறுவனங்களை குறை கூறி வெளியேறிய இவரை, பல லட்சம் மக்கள் பார்க்கும் நீயா நானா நிகழ்ச்சியில், இதைப்பற்றி சரியான புரிந்துணர்வு இல்லாமல், நீங்கள் WOW, SUPER, YOU ARE A GREAT INDIAN, YOU ARE GREAT GREAT GREAT INDIAN, YOU SET AN EXAMPLE என புகழாரம் சூட்டி இளைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தது மிகவும் வருத்ததிற்குரியது. அந்த காணொளி சமூக வலைதளங்களில் பல ஆயிரம் பகிர்வுகளோடு வளம் வருவது அதைவிட வருந்ததக்கது.
கார்பரேட் நிறுவனங்களை விட்டு வெளியேறியதற்கு மற்ற பலர்கூறிய காரணங்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இவர் கூறிய காரணங்களை அல்ல. அதோடு ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதார நிலைதான் அந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. உலக அரங்கில் நாட்டை முன் நிறுத்துகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இந்த கட்டுரையின் நோக்கம் தவறான உதாரணங்கள் இளைஞர்களை அடையக்கூடாது என்பது மட்டுமே. ஒரு பிரபலத்தை விமர்சிக்க வேண்டும் என்னும் நோக்கில் எழுதப்படவில்லை. இதை நீங்கள் படிப்பீர்களா என்று தெரியவில்லை. அப்படி உங்களை இந்த கட்டுரை அடையும் பட்ச்சத்தில், இனியேனும் இது போன்ற உதாரணங்களை முன்னிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
எனது வலைப்பூவில் http://kakkaisirakinile.blogspot.in/2012/12/to.html
நன்றி ..!
அன்புடன்,
அகல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கேள்விகளில் தர்க்க நியாயம் இருக்கிறது...
நீங்கள் குறிப்பிடும் உங்கள் நண்பர்கள் போல சிலர்-வெகு சிலர் இருக்கலாம்...
ஆனால்...பெரும்பான்மை அப்படி இல்லையே?...
சென்னையில் வீட்டு வாடகை தாறுமாறாக ஏறியதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள்
ஐ.டி.துறையைச் சேர்ந்தவர்களே என்பது மறுக்க முடியாத உண்மை...
அவர்களிடம் சேரும் அதிகப்படியான பணம் அவர்கள் தகுதிக்குக் கிடைத்த பரிசாக இருக்கட்டும்...தவறில்லை...
ஆனால் அதைக் கொண்டு சமூகச் சூழலை சுயநலத்தால் இக்கட்டில் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்?...
(இதில் பொறாமையோ ஆதங்கமோ துளியும் இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன்...)
என்னைப் பொறுத்தவரை கௌதம் அதிகப்பட்ச சம்பளம் துறந்தது அவரது துணிவு...
விவசாயம் அதிக வருமானம் தந்தாள் என்ன செய்வார் என்று இனிமேல்தான் தெரியும்...
இது குறித்து நீங்கள் எழுப்பியுள்ள கேள்வி தர்க்கத்திற்கு நியாயம் தரும்...
ஆனால் தர்மத்திற்கு?...
இந்தப் பதிவு உங்களோடு வீணாக விவகாரம் செய்ய அல்ல நண்பரே...
என் கருத்து மட்டுமே...அதுவும் நட்புடன்...
நீங்கள் குறிப்பிடும் உங்கள் நண்பர்கள் போல சிலர்-வெகு சிலர் இருக்கலாம்...
ஆனால்...பெரும்பான்மை அப்படி இல்லையே?...
சென்னையில் வீட்டு வாடகை தாறுமாறாக ஏறியதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள்
ஐ.டி.துறையைச் சேர்ந்தவர்களே என்பது மறுக்க முடியாத உண்மை...
அவர்களிடம் சேரும் அதிகப்படியான பணம் அவர்கள் தகுதிக்குக் கிடைத்த பரிசாக இருக்கட்டும்...தவறில்லை...
ஆனால் அதைக் கொண்டு சமூகச் சூழலை சுயநலத்தால் இக்கட்டில் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்?...
(இதில் பொறாமையோ ஆதங்கமோ துளியும் இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன்...)
என்னைப் பொறுத்தவரை கௌதம் அதிகப்பட்ச சம்பளம் துறந்தது அவரது துணிவு...
விவசாயம் அதிக வருமானம் தந்தாள் என்ன செய்வார் என்று இனிமேல்தான் தெரியும்...
இது குறித்து நீங்கள் எழுப்பியுள்ள கேள்வி தர்க்கத்திற்கு நியாயம் தரும்...
ஆனால் தர்மத்திற்கு?...
இந்தப் பதிவு உங்களோடு வீணாக விவகாரம் செய்ய அல்ல நண்பரே...
என் கருத்து மட்டுமே...அதுவும் நட்புடன்...
உங்களது கருத்திற்கு நன்றி அண்ணே.. உங்களுக்கு ஒன்றை மேற்கோள்காட்டுவது எனது கடமை.. இங்கே விவாதித்திருக்கும் தளம் "கார்பரேட்டை விட்டு வெளியேற அவர் சொன்ன காரணங்களைப் பற்றி மட்டுமே" தவிர கார்பரேட் நிறுவனங்களால் ஏற்படும் நிறை குறைகளை விவாதிப்பதல்ல..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
எங்க ஊர்ல ஒண்ணு சொல்லுவாங்க.....
எரிகிறதை பிடிங்கினால் ...கொதிக்கிறது அடங்கும் என்று ....
அதைபோல் அதிகமான பணத்தை வைத்து இயந்திரமாக வாழ்வதை விட ...
குறைவான பணம் இருந்தாலும் நிறைவாக வாழ்வதை விரும்பி அவர் வெளில் வந்துள்ளார் ...
எனக்கு அவர் கூற்றிலும் செயலிலும் தவறு இருப்பதாக தெரியவில்லை
எரிகிறதை பிடிங்கினால் ...கொதிக்கிறது அடங்கும் என்று ....
அதைபோல் அதிகமான பணத்தை வைத்து இயந்திரமாக வாழ்வதை விட ...
குறைவான பணம் இருந்தாலும் நிறைவாக வாழ்வதை விரும்பி அவர் வெளில் வந்துள்ளார் ...
எனக்கு அவர் கூற்றிலும் செயலிலும் தவறு இருப்பதாக தெரியவில்லை
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அகல் wrote:உங்களது கருத்திற்கு நன்றி அண்ணே.. உங்களுக்கு ஒன்றை மேற்கோள்காட்டுவது எனது கடமை.. இங்கே விவாதித்திருக்கும் தளம் "கார்பரேட்டை விட்டு வெளியேற அவர் சொன்ன காரணங்களைப் பற்றி மட்டுமே" தவிர கார்பரேட் நிறுவனங்களால் ஏற்படும் நிறை குறைகளை விவாதிப்பதல்ல..
ஆமாம்...அவர்களிடம் சேரும் அதிகப்படியான பணம் அவர்கள் மனதை எப்படி ஆக்குகிறது என்பதன் வெளிப்பாடே நான் குறிப்பிட்ட விஷயம்...
சராசரியான பணம் என்றால் அவர்கள் நின்று நிதானித்து யோசிப்பார்கள்...சரமாரியான பணமென்றால் அது கண்டபடி ஆட்டுவிக்கும் என்ற கௌதம் கருத்துக்கு வலு சேர்ப்பதே என் கருத்து அகல்...
வேறு எதுவும் இல்லை...
பாலா அண்ணா... பிடித்ததைச் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு அதனால் நான் இங்கு கௌதம் என்பவர் கார்பரேட்டை விட்டு வெளியேறியதை விமர்சிக்கவில்லை.. ஆனால் அவர் வெளியேறியதற்கு சொன்ன காரணங்களை மட்டுமே..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கண்டிப்பாக அண்ணா. உங்களின் கருத்து புரிகிறது. ஆனால் அவர் சொல்வதுபோல் விலை உயர்ந்த மொபைல், டிரஸ் இருந்தால் தான் என்னால் இருக்கமுடியும் என்ற சூழல் எந்த நிறுவனங்களிலும் இல்லை... இது கார்பரேட் நிறுவனங்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மக்களுடன் சேர்க்கிறது என்பது மட்டுமே எனது ஆதங்கம்.. நான் கூறியதுபோல் மற்ற சிலர் கார்பரேட் நிறுவனங்களை விட்டு வந்ததற்கு சொல்லிய காரணங்கள் ஞாயமானவை.. குறிப்பாக பேங்கில் வேலை செய்த பெண்மணி மற்றும் ஒரு திருமணமான ஜோடி சொன்ன காரணங்கள் உண்மை.. இவர் சொன்ன எந்த காரணமும் நியாமற்றது...ரா.ரா3275 wrote:
ஆமாம்...அவர்களிடம் சேரும் அதிகப்படியான பணம் அவர்கள் மனதை எப்படி ஆக்குகிறது என்பதன் வெளிப்பாடே நான் குறிப்பிட்ட விஷயம்...
சராசரியான பணம் என்றால் அவர்கள் நின்று நிதானித்து யோசிப்பார்கள்...இல்லையென்றால் அது கண்டபடி ஆட்டுவிக்கும் என்ற கௌதம் கருத்துக்கு வலு சேர்ப்பதே என் கருத்து அகல்...
வேறு எதுவும் இல்லை...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கே. பாலா wrote:எங்க ஊர்ல ஒண்ணு சொல்லுவாங்க.....
எரிகிறதை பிடிங்கினால் ...கொதிக்கிறது அடங்கும் என்று ....
அதைபோல் அதிகமான பணத்தை வைத்து இயந்திரமாக வாழ்வதை விட ...
குறைவான பணம் இருந்தாலும் நிறைவாக வாழ்வதை விரும்பி அவர் வெளில் வந்துள்ளார் ...
எனக்கு அவர் கூற்றிலும் செயலிலும் தவறு இருப்பதாக தெரியவில்லை
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
நான் மறுபடியும் சொல்கிறேன் // நான் இங்கு கௌதம் என்பவர் கார்பரேட்டை விட்டு வெளியேறியதை விமர்சிக்கவில்லை.. ஆனால் அவர் வெளியேறியதற்கு சொன்ன காரணங்களை மட்டுமே.. // ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அகல் wrote:நான் மறுபடியும் சொல்கிறேன் // நான் இங்கு கௌதம் என்பவர் கார்பரேட்டை விட்டு வெளியேறியதை விமர்சிக்கவில்லை.. ஆனால் அவர் வெளியேறியதற்கு சொன்ன காரணங்களை மட்டுமே.. //
அவர் மனத்தை அந்தத் துறையில் கிடைக்கும் மிக அதிகப்படியான வருவாய் வெகுவாக இயல்புக்கு மாறாக மாற்றுகிறது என்று அவர் சொன்ன காரணம் அவர் மனசாட்சிப்படி சரியே...
எனக்கும் அதில் உடன்பாடே...
உங்களுக்கு அதில் கருத்து மாறுபாடு இருப்பதிலும் தவறில்லை அகல்...
அது உங்கள் மனநிலை...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|