புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவத்கீதா.... I_vote_lcapபகவத்கீதா.... I_voting_barபகவத்கீதா.... I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பகவத்கீதா.... I_vote_lcapபகவத்கீதா.... I_voting_barபகவத்கீதா.... I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
பகவத்கீதா.... I_vote_lcapபகவத்கீதா.... I_voting_barபகவத்கீதா.... I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
பகவத்கீதா.... I_vote_lcapபகவத்கீதா.... I_voting_barபகவத்கீதா.... I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
பகவத்கீதா.... I_vote_lcapபகவத்கீதா.... I_voting_barபகவத்கீதா.... I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவத்கீதா....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 6:11 pm

பகவத்கீதா.... Bhagavathgeethavishruth

” விஷ்ரூத்... விஷ்ரூத் கண்ணா எங்கேப்பா இருக்கே? ” அழைத்துக்கொண்டே தோட்டப்பக்கம் வந்தார் சௌடாம்பிகை.

” அம்மா நான் இங்க தான் இருக்கேன் இந்த ரோஜாச்செடி அழகா துளிர் விட்டதே இப்ப 3 மொட்டுக்கள் விட்டிருக்கு பார்த்தீங்களா ” என்றபடி காண்பித்தான் விஷ்ரூத்...

” அட ஆமாம்ல? நம்ம பகவத் கீதாவுக்கு அடர் சிகப்பு கலர்ல ரோஜாப்பூன்னா ரொம்ப பிடிக்குமே..அட பேச்சு விஷயத்துல சொல்லமறந்துட்டேன்பா....”

”என்னம்மா?” என்றபடி புல்வெளியில் சேரில் அமர்ந்து அம்மாவுக்கும் உட்கார சேரை நகர்த்திக் கொடுத்தான் விஷ்ரூத்..

”பகவத் கீதா ஆபிசுல இருந்து மாலை வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்காடா... என்னன்னு கேட்கமாட்டியா நீ? “

” அம்மா பகவத் கீதா ரொம்ப மென்மையான மனசு வைத்திருப்பது சிரமம்மா.... சரி என்னன்னு கேட்கிறேன்.... நாளை அவளுக்கு பிறந்தநாள் அதுக்குள்ள இந்த மொட்டுக்கள் பூத்துவிட்டால் இதையே பரிசாக கொடுத்துடுவேன்மா” என்று சிரித்தான் விஷ்ரூத்

” என்னடா வேற எதுவும் வாங்கி தரமாட்டியா பகவத் கீதாவுக்கு? “

” அவ ரொம்ப சிம்பிள்மா எதையும் விரும்பமாட்டா... ஆனா பூ அவளுக்கு பிடிக்கும்.. அதனால் தான்...”

” சரி சரி முதல்ல அவளை சமாதானப்படுத்து ”என்றபடி எழுந்து சென்றார் சௌடாம்பிகை....

சிரித்துக்கொண்டே எழுந்து சமையலறைப்பக்கம் வந்தான்.. முறுகலான அடை வார்க்கும் மணமும் அவியலின் மணமும் அவன் மனதை நிறைத்தது....

” என்னவாம் எங்க கண்ணாட்டிக்கு ”என்றபடி பகவத் கீதாவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் விஷ்ரூத்..

”விடுங்க “ என்றபடி விலகிச்சென்றாள்...அழுதழுது கண் வீங்கி இருந்தது பகவத் கீதாவுக்கு.

” சாப்பிட வரீங்களா ” என்றபடி அடைகளை தட்டில் அடுக்கினாள்....

” தாயேன் சாப்பிட்டு சீக்கிரம் படுக்கணும்.. நாளை ஆடிட்டிங் இருக்கு வேறு...” என்றபடி அடையை ருசித்தான் விஷ்ரூத்....

சௌடாம்பிகை இருவரின் சம்பாஷணையில் குறுக்கிடாது தனக்கு இரவு உணவாக பாலும் பழமும் எடுத்துக்கொண்டு தன் அறைக்கு நகர்ந்தார்.

பாத்திரம் எல்லாம் ஒழித்துவிட்டு தான் சாப்பிட்டேன் பேர்வழி என்று விஷ்ரூத் அடை சாப்பிட்டு மீதி வைத்திருந்த இரண்டு விள்ளலை வாயில் போட்டுக்கொண்டு முகம் கைகால் அலம்பிக்கொண்டு படுக்கச்சென்றாள்....

அங்கே விஷ்ரூத் என்னவோ ஃபைல் வைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்...

அவனிடம் ஒன்றும் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள் பகவத்கீதா...

விஷ்ரூத் திரும்பிப்பார்த்துவிட்டு ஓ இன்று மாலை அழுததற்கு என்ன ஏது என்று கேட்காததால் வருத்தமா? என்றபடி பகவத்கீதாவை எழுப்பி உட்காரவைத்தான்...

கன்னங்களில் கண்ணீரை உணர்ந்த விஷ்ரூத் பகவத்கீதாவின் கண்களை துடைத்துவிட்டான்...

அவள் அருகே உட்கார்ந்து மெல்ல பகவத்கீதாவை எழுப்பி தன் மடியில் அமர்த்திக்கொண்டான்....

அழுகை நின்றபாடில்லை....

” என்ன பிரச்சனை ”என்று மெல்லக்கேட்டான்....

”ஒன்னுமில்லங்க.... லீவுக்கு ரகுபதி சார் போயிருப்பதால் இப்ப அந்த சீட்டில் நான் இருக்கிறேன். அக்கவுண்ட்ஸ் எல்லாம் இப்ப தான் செக் பண்ணிட்டு இருக்கேன்... அதற்குள் என்னை அழைத்து....”

” யாரு மேனேஜரா?”

”ஆமாம் ” என்று மூக்குறிந்துக்கொண்டே... திட்டு திட்டுன்னு ஒரே திட்டு ஏன் ரெடி செய்து வைக்கலை நாளைக்குள் நான் ரெடி செய்து வைக்கலன்னா இன்னும் திட்டு கிடைக்குமாம்.... அழுகை இன்னும் வெடித்தது....

”அட அசமண்டு இதுக்கு போய் அழலாமா? தவறு உன்னிடம் இல்லை எனும்போது என்ன செய்யனும்? அழாம பொறுமையா விளக்கிச்சொல்லனும்...”

” பேச விட்டால் தானே? படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டு போ அப்டின்னு அனுப்பியாச்சு....” உதட்டை கடித்து அழுகையை அடக்க முயன்றாள்....

”அசடு... அழறதை முதல்ல நிறுத்து.... நாளை காலை ஒருமணி நேரம் முன்னாடி கிளம்பு ஆபிசுக்கு.. ஃபைல் எல்லாம் செக் பண்ணு எங்க தவறு இருக்குன்னு புரியவர உனக்கு ஒரு மணி நேர அவகாசம் போதாதா? “

” கண்டிப்பா போதும் ” என்றபடி அழுகையை நிறுத்தத்தொடங்கினாள் பகவத்கீதா...

”எல்லாத்தையும் மேனேஜர் வருமுன் அவர் டேபிளில் கொண்டு வெச்சிரு.... மேனேஜர் திரும்ப உன்னை அழைத்து எதுனா கேட்கும்போது உன் நிலையை விளக்கிச்சொல்லு... அழாம சொல்லு.. நீ ஒன்னும் குழந்தை இல்லை தெரியுமா? வீட்டில் நீ எனக்கும் அம்மாவுக்கும் செல்லம் தான்... ஆனா ஆபிசுல எல்லாம் போய் அழுது குழந்தைப்போல நல்லாவா இருக்கும்? குட்டி பகவத்கீதா அழுதா ரசிக்கலாம்? வளர்ந்த பகவத் கீதா அழுதா ரசிக்கமுடியுமா? ”

”போங்க நீங்க என்னை கேலி பண்றீங்க ” என்று விஷ்ரூத் நெஞ்சில் வலிக்காமல் குத்தினாள்...

” ஹப்ப்ப்ப்பா.... ”

”ஐயோ என்னப்பா? “

” வலிக்கலை... சும்மா.. ” என்றபடி சிரித்துக்கொண்டே சொன்னான் “ நம் மேல் தவறில்லாத பட்சத்தில் அது மேனேஜரா இருந்தாலும் சரி பொறுமையாக அழுத்தமாக அமைதியாக உன் கருத்தை சொல்லனும் புரிகிறதா மண்டு? அதற்கு மனோதிடமும் தைரியமும் தன்னம்பிக்கையயும் வளர்த்துக்கணும் என்ன?” என்றபடி நெற்றியோடு நெற்றியை முட்டினான் விஷ்ரூத்....

”நிறுத்திட்டேன் அழுகையை... நாளை என் வேலையை முடிச்சுட்டு அதன்பின் பேசிக்கிறேன் ”என்றபடி எழ முனைந்தாள்...

” இரு இரு... இவ்ளோ நல்ல ஐடியா கொடுத்த எனக்கு ஒன்னும் இல்லையா?? “ என்றபடி அணைக்க முற்பட்டான் விஷ்ரூத்....

” ஹூஹூம்... ”

” ஒரு முத்தம் கூடவா இல்லை?? ” என்றபடி பாவமாக முகம் வைத்தபடி கேட்டான்....

” நாளைக்கு எங்க மேனேஜர் கிட்ட நீங்க சொன்ன ஐடியா இம்ப்ளிமெண்ட் பண்ணி பார்த்து சக்ஸஸ் ஆச்சுன்னா கண்டிப்பா ஒன்னு இல்ல ரெண்டு முத்தா தரேன் ”

” அப்ப பர்த்டே பேபிக்கு நான் தரேன் பரிசு ” என்றபடி அணைத்து மென்மையாக நெற்றியில் முத்தமிட்டுச்சொன்னான் ” ஹாப்பி பர்த்டே என் செல்ல கண்ணாட்டி “

” ம்ம்ம்ம்ம்.. நாளைக்கு தான் உங்களுக்கு பர்த்டே ட்ரீட்... ” என்றபடி விளையாட்டாய் அவனை தள்ளிவிட்டு எழுந்து சென்று முகம் அலம்பிக்கொண்டு வந்து படுத்தாள்....

மறுநாள் காலை வேகமாக வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு ஆபிசுக்கு கிளம்பினாள் பகவத்கீதா...

” இரும்மா விஷ்ரூத் வரட்டும் வண்டில போகலாம்ல? ” சௌடாம்பிகை கனிவுடன் சொன்னார்....

” இல்லேம்மா இன்னைக்கு எங்க ஆபிசுல வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு... அதனால நான் பஸ்லயே கிளம்பறேன் ” என்று சௌடாம்பிகையின் காலை தொட்டு வணங்கிவிட்டு கிளம்பினாள்....

” என்னடா இப்படி ஓடுறா?”

”ஆபிசுல ஒரு சின்ன பிரச்சனையாம் அம்மா.. இன்னைக்கு சரியாகிடும்னு நினைக்கிறேன்....”

”அட மொட்டு மலர்ந்து அழகா பூத்திருக்கு பாருடா....”

” அட ஆமாம் ” என்றபடி அந்த பூவை மெல்ல வலிக்காமல் பறித்தான்.....

மணி டாண் டாண் என்று பத்து அடிக்கவும் மேனேஜர் ஆபிசுக்குள் நுழைந்து பகவத் கீதாவை சீட்டில் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் தன்னறைக்குள் நுழைந்து பெல்லடித்து ப்யூனை கூப்பிட்டு பகவத் கீதாவை கூப்பிடுப்பா என்று சொல்லுமுன்....

” மே ஐ கமின் சார்? ” என்றபடி பகவத் கீதா ஃபைல்களுடன் நின்றாள்....

” யெஸ் ப்ளீஸ்.....”

” சார் இதோ உங்க ஃபைல்கள் எல்லாம் ரெடி.... நான் சரி பார்த்துட்டேன்.... நீங்க செக் பண்ணிரலாம்....” என்றபடி ஃபைல்களை டேபிள் மீது வைத்தாள்....

” உங்களுக்கு ஏன் சிரமம் பகவத்கீதா? ப்யூன் கிட்டயே கொடுத்தனுப்பி இருக்கலாமே? ” சொன்னபடி ப்யூனை வெளியே போகச்சொன்ன மேனேஜர், ” உட்காருங்க பகவத்கீதா ” என்று சொல்லவே...

” இட்ஸ் ஓகே சார்.. என் வேலையை நானே செய்ய தான் விரும்புவேன்... ” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்...

” பகவத்கீதா நேற்று நடந்ததுக்கு....”

சென்றவள் நின்று திரும்பி... ஆரம்பித்தாள்... ” எக்ஸ்க்யூஸ்மீ சார்... நேற்று நீங்க என்னை திட்டுமுன் விஷயம் என்னவென்று கேட்டிருந்திருக்கலாம்.. வேலை தாமதததிற்கான காரணம் அறிய முயன்றிருக்கலாம்.. எதுவுமே செய்யாமல் நீங்கள் என்னை திட்ட ஆரம்பிச்சுட்டீங்க. இதெல்லாம் ரகுபதி சார் லீவுக்கு போகுமுன் முடிக்காமல் விட்ட வேலைகள்... நேற்று தான் அவர் சீட்டுக்கு வந்தபோது அறிந்தேன். எனக்கு கால அவகாசம் நீங்க தராதது மட்டுமல்லாது நீங்க என்னை கத்தி பேசினபோது எனக்கும் வருத்தம் அதிகமானது....”

” நேற்றைய சம்பவத்திற்கு சாரி பகவத்கீதா.. அண்ட் விஷ் யூ வெரி ஹாப்பி பர்த்டே ” என்றபடி பகவத்கீதாவிடம் அடர் சிகப்பு ரோஜாப்பூக்கள் மூன்றை எடுத்து நீட்டினான் மேனேஜர் விஷ்ரூத்....

பகவத்கீதா.... Vishruth



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பகவத்கீதா.... 47
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 7:29 pm

கதை மிகவும் அருமையாயிருந்தது.கதையின் பாத்திரங்களில் நானும் ஒன்றிணைந்துதான் போனேன்.இருவேறு நிலைகளில் தனித்தனியாக குறிப்பிட்டு பின் இறுதியில் இணைத்த விதம் நெஞ்சில் நின்றது.அதுவும் மூன்று ரோஜாக்களை நீட்டிய இறுதிக்காட்சி சூட்சமமாக சிந்தையை சூடேற்றியது,அற்புதக் கதை.வாழ்த்துகள் தங்களுக்கு.
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 9:13 pm

கரூர் கவியன்பன் wrote:கதை மிகவும் அருமையாயிருந்தது.கதையின் பாத்திரங்களில் நானும் ஒன்றிணைந்துதான் போனேன்.இருவேறு நிலைகளில் தனித்தனியாக குறிப்பிட்டு பின் இறுதியில் இணைத்த விதம் நெஞ்சில் நின்றது.அதுவும் மூன்று ரோஜாக்களை நீட்டிய இறுதிக்காட்சி சூட்சமமாக சிந்தையை சூடேற்றியது,அற்புதக் கதை.வாழ்த்துகள் தங்களுக்கு.

அன்பு நன்றிகள் கவியன்பன்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பகவத்கீதா.... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக