Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்பல் காடு
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சாம்பல் காடு
First topic message reminder :
படித்தாலே
வீரம் சொட்டுகிற
நெஞ்சில் ஈரம்
சொட்டுகிற
வரலாற்றுப் பக்கங்கள் இது.
எழுதிய பக்கமே கூட
எரிந்து விடுமளவுக்கு
சுதந்திர இந்தியாவின்
சூடானப் பக்கங்கள்.
நாற்பத்தி நான்கு
மனித உயிர்களை
விறகாக எடுத்துவைத்து
அந்த நெருப்பிலே
கொடியவனொருவன்
தனக்கானத் தேநீரைத்
தயாரித்துக் கொண்ட வரலாறு.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த
அந்த இரண்டாம் நூற்றாண்டு
மனிதனின் பெயர்
கோபாலகிருஷ்ண நாயுடு.
*****
அன்றொருநாள்
பண்ணையார்கள்
தங்கள் கோரப்பற்களைக்காட்டிச்
சிரித்தார்கள்.
அவர்கள் அகராதியில்
சிரித்தார்கள் என்றால்
ஏழைகள் உயிரை
எரித்தார்கள் என்று பொருள்.
*****
ஒரு காட்டுமிராண்டிக்கூட்டம்
அந்தக் கிராமத்தில் நுழைந்து
அங்கே
மனிதகுலம் வாழ்ந்ததற்கான
அத்துணைச்சுவடுகளையும்
அழித்துவிட்டுப் போனது
*****
பெண்கள்
குழந்தைகளென
நாற்பத்தி நான்கு மனித உயிர்களை
உயிரோடு தீயிட்டுக்கொளுத்திய
வரலாறு காணாத
அந்த கோரமான காட்டுமிராண்டித்தனம்
அரங்கேறிய தினம்
1968 டிசம்பர் 24.
நமது பாவங்களைக் கழுவ
இயேசு கிறிஸ்து
இந்த பூமியில் அவதரித்த
அதே புண்ணிய தினத்திற்கு
முதல் நாள்தான்
இந்த பாவச்செயலும் அரங்கேறியது.
*****
பூமாதேவி
மொத்தமாய்த் தலை கவிழ்ந்த
அந்த இடத்தின் பெயர்...
பிசாசுகள்
இரண்டுமணிநேரம்
தாண்டவமாடிவிட்டுப்போன
அந்தக்கிராமத்தின் பெயர்...
நாற்பத்திநான்கு மனிதப்பூக்கள்
நெருப்பில் விழுந்து கருகிப்போன
அந்தப்புண்ணிய பூமியின் பெயர்
வெண்மணி
*****
ஏ பாரத மாதாவே!
கிழக்கே வங்கக்கடல்,
மேற்கே அரபிக்கடல்,
தெற்கே இந்துமாசமுத்திரம்,
வடக்கே இமயமலையென நீ
ஈரம்சூழ இருந்தாலும்
வெண்மணியில் எரிந்த நெருப்பு
எங்களை
வெட்கம் கொள்ளச்செய்கிறது.
*****
வியர்வை
உழைப்பின் சின்னம்
இரத்தம்
தியாகத்தின் சின்னம்
இந்த இரண்டுக்குமான ஊற்று
பாட்டாளி வர்கம்தான் என்பதை
வரலாற்றுச் சம்பவங்கள்
அடிக்கடி நிரூபித்துவிட்டுப் போகிறது.
ஆனால் ஆளும்வர்க்கம்
உழைக்கும் மக்கள்
வயிறார உண்பதை
எப்போதும் விரும்புவதில்லை
அதனால்தான்
கீழ்வெண்மணியிலே
விவசாயிகள் கூலி உயர்வு கேட்டபோது
அதைவிட
அதிகவிலை கொடுத்து
ஆளும்வர்கம்
அவர்களை அழிக்கத்தொடங்கியது.
ஆட்சியாளர்களும்
அவர்களோடு கை கோர்த்துக் கொண்டு
அந்த கோர சம்பவத்திற்கு
துணை போனார்கள்.
நிலப்பிரபுத்துவம் எனும் பூதம்
தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும்
இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கூட
தனது நச்சுக் காற்றால்
மனித சமூகத்தை
அழித்துக் கொண்டுதானிருக்கிறது.
தனக்கு
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
அது
இந்திய நாட்டின்
ஏதாவதொரு கிராமத்தில் நுழைந்து
சில உயிர்களையாவது
பிடுங்கித் தின்று விட்டுச் செல்கிறது.
இதுபோன்ற
பல சம்பவங்கள்
வரலாற்றுப் பாதை முழுக்க
குவிந்து கிடக்கிறது.
அடடா
அதனால்தான்
அந்த மாமனிதன் காரல்மார்க்ஸ்
வர்க்கப்போராட்டங்களின் தொகுப்பே
வரலாறு என்றான்.
மர்மமான
இத்தகைய மணல் மேடுகளை
நம்முடைய
சின்னஞ்சிறு பேனா முனையால்
குத்திக் கிழித்து
நிலப்பிரபுத்துவத்தின் நாற்றங்களை
அம்பலப்படுத்த வேண்டும்.
ஆனால்
ஆளும் வர்க்கம்
மிக சாதுரியமாக
சம்பவங்களை நடத்திய கையோடு
அவற்றை
அழித்துவிட்டு வந்திருக்கிறது.
இன்றைய முற்போக்கு வாதிகளுக்கு
அவைகளை
குத்திக் கிழித்துத் தோண்டி
மீண்டும் சந்தைக்கு எடுத்துவர வேண்டிய
சமூக கடமை இருக்கிறது.
அப்படியொரு
கோர சம்பவத்தை
பதிவு செய்யும் நோக்கத்தோடு
எழுதப்பட்ட வரலாறுதான் இது.
படித்தாலே
வீரம் சொட்டுகிற
நெஞ்சில் ஈரம்
சொட்டுகிற
வரலாற்றுப் பக்கங்கள் இது.
எழுதிய பக்கமே கூட
எரிந்து விடுமளவுக்கு
சுதந்திர இந்தியாவின்
சூடானப் பக்கங்கள்.
நாற்பத்தி நான்கு
மனித உயிர்களை
விறகாக எடுத்துவைத்து
அந்த நெருப்பிலே
கொடியவனொருவன்
தனக்கானத் தேநீரைத்
தயாரித்துக் கொண்ட வரலாறு.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த
அந்த இரண்டாம் நூற்றாண்டு
மனிதனின் பெயர்
கோபாலகிருஷ்ண நாயுடு.
*****
அன்றொருநாள்
பண்ணையார்கள்
தங்கள் கோரப்பற்களைக்காட்டிச்
சிரித்தார்கள்.
அவர்கள் அகராதியில்
சிரித்தார்கள் என்றால்
ஏழைகள் உயிரை
எரித்தார்கள் என்று பொருள்.
*****
ஒரு காட்டுமிராண்டிக்கூட்டம்
அந்தக் கிராமத்தில் நுழைந்து
அங்கே
மனிதகுலம் வாழ்ந்ததற்கான
அத்துணைச்சுவடுகளையும்
அழித்துவிட்டுப் போனது
*****
பெண்கள்
குழந்தைகளென
நாற்பத்தி நான்கு மனித உயிர்களை
உயிரோடு தீயிட்டுக்கொளுத்திய
வரலாறு காணாத
அந்த கோரமான காட்டுமிராண்டித்தனம்
அரங்கேறிய தினம்
1968 டிசம்பர் 24.
நமது பாவங்களைக் கழுவ
இயேசு கிறிஸ்து
இந்த பூமியில் அவதரித்த
அதே புண்ணிய தினத்திற்கு
முதல் நாள்தான்
இந்த பாவச்செயலும் அரங்கேறியது.
*****
பூமாதேவி
மொத்தமாய்த் தலை கவிழ்ந்த
அந்த இடத்தின் பெயர்...
பிசாசுகள்
இரண்டுமணிநேரம்
தாண்டவமாடிவிட்டுப்போன
அந்தக்கிராமத்தின் பெயர்...
நாற்பத்திநான்கு மனிதப்பூக்கள்
நெருப்பில் விழுந்து கருகிப்போன
அந்தப்புண்ணிய பூமியின் பெயர்
வெண்மணி
*****
ஏ பாரத மாதாவே!
கிழக்கே வங்கக்கடல்,
மேற்கே அரபிக்கடல்,
தெற்கே இந்துமாசமுத்திரம்,
வடக்கே இமயமலையென நீ
ஈரம்சூழ இருந்தாலும்
வெண்மணியில் எரிந்த நெருப்பு
எங்களை
வெட்கம் கொள்ளச்செய்கிறது.
*****
வியர்வை
உழைப்பின் சின்னம்
இரத்தம்
தியாகத்தின் சின்னம்
இந்த இரண்டுக்குமான ஊற்று
பாட்டாளி வர்கம்தான் என்பதை
வரலாற்றுச் சம்பவங்கள்
அடிக்கடி நிரூபித்துவிட்டுப் போகிறது.
ஆனால் ஆளும்வர்க்கம்
உழைக்கும் மக்கள்
வயிறார உண்பதை
எப்போதும் விரும்புவதில்லை
அதனால்தான்
கீழ்வெண்மணியிலே
விவசாயிகள் கூலி உயர்வு கேட்டபோது
அதைவிட
அதிகவிலை கொடுத்து
ஆளும்வர்கம்
அவர்களை அழிக்கத்தொடங்கியது.
ஆட்சியாளர்களும்
அவர்களோடு கை கோர்த்துக் கொண்டு
அந்த கோர சம்பவத்திற்கு
துணை போனார்கள்.
நிலப்பிரபுத்துவம் எனும் பூதம்
தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும்
இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கூட
தனது நச்சுக் காற்றால்
மனித சமூகத்தை
அழித்துக் கொண்டுதானிருக்கிறது.
தனக்கு
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
அது
இந்திய நாட்டின்
ஏதாவதொரு கிராமத்தில் நுழைந்து
சில உயிர்களையாவது
பிடுங்கித் தின்று விட்டுச் செல்கிறது.
இதுபோன்ற
பல சம்பவங்கள்
வரலாற்றுப் பாதை முழுக்க
குவிந்து கிடக்கிறது.
அடடா
அதனால்தான்
அந்த மாமனிதன் காரல்மார்க்ஸ்
வர்க்கப்போராட்டங்களின் தொகுப்பே
வரலாறு என்றான்.
மர்மமான
இத்தகைய மணல் மேடுகளை
நம்முடைய
சின்னஞ்சிறு பேனா முனையால்
குத்திக் கிழித்து
நிலப்பிரபுத்துவத்தின் நாற்றங்களை
அம்பலப்படுத்த வேண்டும்.
ஆனால்
ஆளும் வர்க்கம்
மிக சாதுரியமாக
சம்பவங்களை நடத்திய கையோடு
அவற்றை
அழித்துவிட்டு வந்திருக்கிறது.
இன்றைய முற்போக்கு வாதிகளுக்கு
அவைகளை
குத்திக் கிழித்துத் தோண்டி
மீண்டும் சந்தைக்கு எடுத்துவர வேண்டிய
சமூக கடமை இருக்கிறது.
அப்படியொரு
கோர சம்பவத்தை
பதிவு செய்யும் நோக்கத்தோடு
எழுதப்பட்ட வரலாறுதான் இது.
Last edited by சுந்தரபாண்டி on Sat Dec 29, 2012 9:16 pm; edited 1 time in total
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: சாம்பல் காடு
(10)
கடத்தப் பட்ட முத்துசாமியை
மீட்க
மக்கள் கூட்டம்
ஒன்றாய்த் திரள்கிறது.
மக்கள் சக்தியைப் பார்த்த
ஆளும் வர்க்கம்
தொடை நடுங்கத் தொடங்கியது.
அமைதியான முறையில்
முத்துசாமி
மீட்கப் படுகிறார்.
கடத்தப் பட்ட முத்துசாமியை
மீட்க
மக்கள் கூட்டம்
ஒன்றாய்த் திரள்கிறது.
மக்கள் சக்தியைப் பார்த்த
ஆளும் வர்க்கம்
தொடை நடுங்கத் தொடங்கியது.
அமைதியான முறையில்
முத்துசாமி
மீட்கப் படுகிறார்.
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: சாம்பல் காடு
(11)
அனால் ஆளும் வர்க்கம்
தன்னுடைய
அத்துணைப் பலத்தையும்
இரண்டே மணிநேரத்தில்
திரட்டிக் கொண்டு
இரத்தம் குடிக்கப் புறப்பட்டது.
மிகப்பெரிய இரைச்சலைக்
கக்கிக்கொண்டே
ஒரு போலீஸ் வேனும்
இன்னுமிரண்டு லாரிகளும்
அந்த ஹரிஜன சேரிக்குள்
நுழைந்தது.
ஒன்றுமறியாத
மக்கள்கூட்டம்
போலீஸென பயந்து
ஓடி ஒழிய ஆரம்பித்தனர்.
ஆனால்
வண்டியிலிருந்து
ஏறத்தாழ
இருநூறு ரெளடிகள்
இறங்குகிறார்கள்.
கடைசியாக
ஒரு மிருகம்
கீழே குதிக்கிறது.
அது
ஓடி வந்து
ஒரு குழந்தையின் வயிற்றில்
மிதிக்கிறது.
கண்களை மூடிக்கொண்டு
கயவர்கள்
சுற்றிலும் சுட ஆரம்பித்தனர்.
ஆண்களில்
பாதிபேர் ஓடிவிட்டனர்.
ஐந்து நிமிடத்தில்
அந்தச் சேரியே
அமைதியானது.
வீடு வீடாய்ச் சென்று
கோழிக் குஞ்சுகளை
கவ்வி வருகிறது
காட்டு மிருகங்கள்.
எல்லா மிருகங்களிடத்தும்
கூரான ஆயுதங்கள்
ஈட்டி முனையால்
ஒரு யுவதியின் தொடையைக்
குத்திக் கீறுகிறான்
ஒரு கொடியவன்.
கண்ணில் கண்டவர்களையெல்லாம்
வெட்டினார்கள்.
ஐம்பது பேரை
ஆஸ்பத்திரிக்கு
அனுப்பிவைத்தார்கள்.
பிணக்காடாய் மாறியது
அந்தச் சேரி.
கண்முன்னே விரிந்தது
கலிங்கத்துப் பரணி.
நிராதரவாய் நின்றது
தர்மம்.
ஆதரவு ஏதுமின்றி
மக்கள் கூட்டம்
ஓடுகிறது.
மறைவிடம்
ஒன்றைத் தேடுகிறது.
கடைசியாக
மனிதாபிமானி
தோழர்.ராமையாவின் வீட்டைச்
சேருகிறது.
அனால் ஆளும் வர்க்கம்
தன்னுடைய
அத்துணைப் பலத்தையும்
இரண்டே மணிநேரத்தில்
திரட்டிக் கொண்டு
இரத்தம் குடிக்கப் புறப்பட்டது.
மிகப்பெரிய இரைச்சலைக்
கக்கிக்கொண்டே
ஒரு போலீஸ் வேனும்
இன்னுமிரண்டு லாரிகளும்
அந்த ஹரிஜன சேரிக்குள்
நுழைந்தது.
ஒன்றுமறியாத
மக்கள்கூட்டம்
போலீஸென பயந்து
ஓடி ஒழிய ஆரம்பித்தனர்.
ஆனால்
வண்டியிலிருந்து
ஏறத்தாழ
இருநூறு ரெளடிகள்
இறங்குகிறார்கள்.
கடைசியாக
ஒரு மிருகம்
கீழே குதிக்கிறது.
அது
ஓடி வந்து
ஒரு குழந்தையின் வயிற்றில்
மிதிக்கிறது.
கண்களை மூடிக்கொண்டு
கயவர்கள்
சுற்றிலும் சுட ஆரம்பித்தனர்.
ஆண்களில்
பாதிபேர் ஓடிவிட்டனர்.
ஐந்து நிமிடத்தில்
அந்தச் சேரியே
அமைதியானது.
வீடு வீடாய்ச் சென்று
கோழிக் குஞ்சுகளை
கவ்வி வருகிறது
காட்டு மிருகங்கள்.
எல்லா மிருகங்களிடத்தும்
கூரான ஆயுதங்கள்
ஈட்டி முனையால்
ஒரு யுவதியின் தொடையைக்
குத்திக் கீறுகிறான்
ஒரு கொடியவன்.
கண்ணில் கண்டவர்களையெல்லாம்
வெட்டினார்கள்.
ஐம்பது பேரை
ஆஸ்பத்திரிக்கு
அனுப்பிவைத்தார்கள்.
பிணக்காடாய் மாறியது
அந்தச் சேரி.
கண்முன்னே விரிந்தது
கலிங்கத்துப் பரணி.
நிராதரவாய் நின்றது
தர்மம்.
ஆதரவு ஏதுமின்றி
மக்கள் கூட்டம்
ஓடுகிறது.
மறைவிடம்
ஒன்றைத் தேடுகிறது.
கடைசியாக
மனிதாபிமானி
தோழர்.ராமையாவின் வீட்டைச்
சேருகிறது.
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: சாம்பல் காடு
(12)
அது சின்னஞ்சிறிய வீடு.
நீளம் எட்டடி
அகலம் ஐந்தடி.
நாற்பத்தியெட்டு மனிதர்கள்
வீட்டுக்குள்ளே.
நெரிசல்...
நெரிசல்...
எங்கும் நெரிசல்.
அடுப்பு எது
அலமாரி எது
என்றுகூட
கண்டுபிடிக்க முடியவில்லை
அத்துணை நெரிசல்.
குழந்தைகளுக்கும்
சற்றுக் குள்ளமானவர்களுக்கும்
மூச்சு முட்டுகிறது.
உடம்போடு கல்லைக்கட்டி
கிணற்றில் போட்டது போல
மூச்சுத் திணறுகிறது.
அழுக்கு உடல்கள்
வியர்க்கிறது.
ஒவ்வொருவரின் உஷ்ணங்களும்
பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
அங்கே
வாழ்க்கைக்கும் மரணத்திற்கும்
இடையிலான போராட்டம்
நடைபெறுகிறது.
அத்துணை உயிரும்
மரணத்தின் வாசலைத்
தொட்டுவிட்டன
அல்லது
வாழ்வின் சூனியப்பகுதிக்குச்
சென்றுவிட்டன.
வெளியேயிருந்த மிருகங்கள்
தாழ்ப்பாள் போட்டு
கதவை
அடைத்துவிடுகின்றன.
அம்மா, அய்யோவென்று
மனிதர்கள் கத்தினார்கள்
அந்த அரக்கர்களின் செவிகளை
பணம்
அடைத்திருப்பது தெரியாமல்.
அரக்கர்கள்
தயாராய் வைத்திருந்த
பெட்ரோல்
கொண்டு வரப்படுகிறது.
நாற்பத்தியெட்டு
மனித உயிர்களின்
வாழ்க்கைக்கான போராட்டம் நடந்த
அந்த குடிசையின் மேல்
ஊற்றப் படுகிறது.
மனித உருவத்திலிருந்த
கோபால கிருஷ்ணநாயுடுயென்ற மிருகம்
தீக்குச்சியை உரசி
குடிசையின் மேல் போடுகிறான்.
குப்பென்று
பற்றிக்கொண்டது குடிசை.
கொளுந்து விட்டு எரிகிறது
நெருப்பு.
கொளுந்துவிட்டு எரியும்
நெருப்பிலே,
அந்த
ராட்சச தந்தூரி அடுப்பிலே
வைக்கோல்கள் கொண்டுவந்து போடப்படுகின்றன.
விறகுகளும் சுள்ளிகளும்
தீனியாக போடப் படுகின்றன.
தீ நாக்கு
சுவைத்து சுவைத்து
மக்களை விழுங்கியது.
மரண ஓலம்...
மரண ஒலம்...
உலகையே உலுக்கியெடுத்த
மரண ஓலம்.
வாழ்நாள் முடிந்தும் கூட
வரலாற்றைத் தாண்டி ஒலிக்கும்
மரண ஓலம்.
அந்த
பரந்த வயல் காடுகளைத் தாண்டி
மனிதகுலத்தின்
மரணக்குரல்
உலகமெங்கும் பரவுகிறது.
மனித குல வரலாற்றில்
எல்லா மக்களும்
அப்போதுதான்
சேர்ந்து அழுதார்கள்.
அரக்கர் குலம்
சுற்றி நின்று சிரிக்கிறது.
ஆறு இளைஞர்கள்
குதித்து வெளியேறுகிறார்கள்.
அரக்கர்கள் கண்களில்
மாட்டிக் கொண்டனர்.
நாலு பேர் ஒடிவிட்டனர்.
இரண்டுபேர் மாட்டிக் கொண்டனர்.
கைவேறு கால் வேறாக
வெட்டப்பட்டு
துண்டு துண்டாக
நெருப்பில்
தூக்கி எரியப்பட்டனர்.
ஒரு தாய்
தனது
இரண்டு பிள்ளைகளையும்
தூக்கி வெளியே எறிகிறாள்.
அவள்
உள்ளேயே எரிகிறாள்.
அந்த வீரப்பெண்ணின்
இரத்த சம்பந்தம் எதையும்
விட்டுவைக்க
அரக்கர்களுக்கு மனமில்லை.
அந்தப்
பச்சைக் குழந்தைகளிரண்டையும்
தூக்கி
ஈவு இரக்கமின்றி
கை கால்களை பிய்த்து
மீண்டும் நெருப்பிலே
தூக்கிப் போடுகிறார்கள்.
இதயத்தை தொலைத்தவர்கள்
தங்கள் கரைப் பற்களைக்காட்டி
காடே அதிரும்படி
கடைசியாய் ஒருமுறை
சிரித்துக் கொண்டார்கள்.
மனிதகுலத்தின் மரண ஓலம்
ஒரு மணிநேரத்தில்
நிரந்தரமாய் அடங்கிவிட்டது.
உலகமே
அமைதியில் மூழ்கியது.
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
எதோவொரு வயல்காட்டில்
ஒரு நாய்
குரைத்துக் கொண்டிருப்பது மட்டும்
நன்றாக கேட்டது.
அது சின்னஞ்சிறிய வீடு.
நீளம் எட்டடி
அகலம் ஐந்தடி.
நாற்பத்தியெட்டு மனிதர்கள்
வீட்டுக்குள்ளே.
நெரிசல்...
நெரிசல்...
எங்கும் நெரிசல்.
அடுப்பு எது
அலமாரி எது
என்றுகூட
கண்டுபிடிக்க முடியவில்லை
அத்துணை நெரிசல்.
குழந்தைகளுக்கும்
சற்றுக் குள்ளமானவர்களுக்கும்
மூச்சு முட்டுகிறது.
உடம்போடு கல்லைக்கட்டி
கிணற்றில் போட்டது போல
மூச்சுத் திணறுகிறது.
அழுக்கு உடல்கள்
வியர்க்கிறது.
ஒவ்வொருவரின் உஷ்ணங்களும்
பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
அங்கே
வாழ்க்கைக்கும் மரணத்திற்கும்
இடையிலான போராட்டம்
நடைபெறுகிறது.
அத்துணை உயிரும்
மரணத்தின் வாசலைத்
தொட்டுவிட்டன
அல்லது
வாழ்வின் சூனியப்பகுதிக்குச்
சென்றுவிட்டன.
வெளியேயிருந்த மிருகங்கள்
தாழ்ப்பாள் போட்டு
கதவை
அடைத்துவிடுகின்றன.
அம்மா, அய்யோவென்று
மனிதர்கள் கத்தினார்கள்
அந்த அரக்கர்களின் செவிகளை
பணம்
அடைத்திருப்பது தெரியாமல்.
அரக்கர்கள்
தயாராய் வைத்திருந்த
பெட்ரோல்
கொண்டு வரப்படுகிறது.
நாற்பத்தியெட்டு
மனித உயிர்களின்
வாழ்க்கைக்கான போராட்டம் நடந்த
அந்த குடிசையின் மேல்
ஊற்றப் படுகிறது.
மனித உருவத்திலிருந்த
கோபால கிருஷ்ணநாயுடுயென்ற மிருகம்
தீக்குச்சியை உரசி
குடிசையின் மேல் போடுகிறான்.
குப்பென்று
பற்றிக்கொண்டது குடிசை.
கொளுந்து விட்டு எரிகிறது
நெருப்பு.
கொளுந்துவிட்டு எரியும்
நெருப்பிலே,
அந்த
ராட்சச தந்தூரி அடுப்பிலே
வைக்கோல்கள் கொண்டுவந்து போடப்படுகின்றன.
விறகுகளும் சுள்ளிகளும்
தீனியாக போடப் படுகின்றன.
தீ நாக்கு
சுவைத்து சுவைத்து
மக்களை விழுங்கியது.
மரண ஓலம்...
மரண ஒலம்...
உலகையே உலுக்கியெடுத்த
மரண ஓலம்.
வாழ்நாள் முடிந்தும் கூட
வரலாற்றைத் தாண்டி ஒலிக்கும்
மரண ஓலம்.
அந்த
பரந்த வயல் காடுகளைத் தாண்டி
மனிதகுலத்தின்
மரணக்குரல்
உலகமெங்கும் பரவுகிறது.
மனித குல வரலாற்றில்
எல்லா மக்களும்
அப்போதுதான்
சேர்ந்து அழுதார்கள்.
அரக்கர் குலம்
சுற்றி நின்று சிரிக்கிறது.
ஆறு இளைஞர்கள்
குதித்து வெளியேறுகிறார்கள்.
அரக்கர்கள் கண்களில்
மாட்டிக் கொண்டனர்.
நாலு பேர் ஒடிவிட்டனர்.
இரண்டுபேர் மாட்டிக் கொண்டனர்.
கைவேறு கால் வேறாக
வெட்டப்பட்டு
துண்டு துண்டாக
நெருப்பில்
தூக்கி எரியப்பட்டனர்.
ஒரு தாய்
தனது
இரண்டு பிள்ளைகளையும்
தூக்கி வெளியே எறிகிறாள்.
அவள்
உள்ளேயே எரிகிறாள்.
அந்த வீரப்பெண்ணின்
இரத்த சம்பந்தம் எதையும்
விட்டுவைக்க
அரக்கர்களுக்கு மனமில்லை.
அந்தப்
பச்சைக் குழந்தைகளிரண்டையும்
தூக்கி
ஈவு இரக்கமின்றி
கை கால்களை பிய்த்து
மீண்டும் நெருப்பிலே
தூக்கிப் போடுகிறார்கள்.
இதயத்தை தொலைத்தவர்கள்
தங்கள் கரைப் பற்களைக்காட்டி
காடே அதிரும்படி
கடைசியாய் ஒருமுறை
சிரித்துக் கொண்டார்கள்.
மனிதகுலத்தின் மரண ஓலம்
ஒரு மணிநேரத்தில்
நிரந்தரமாய் அடங்கிவிட்டது.
உலகமே
அமைதியில் மூழ்கியது.
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
எதோவொரு வயல்காட்டில்
ஒரு நாய்
குரைத்துக் கொண்டிருப்பது மட்டும்
நன்றாக கேட்டது.
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: சாம்பல் காடு
மனிதகுலத்தின் மரண ஓலம்
ஒரு மணிநேரத்தில்
நிரந்தரமாய் அடங்கிவிட்டது.
உலகமே
அமைதியில் மூழ்கியது.
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
எதோவொரு வயல்காட்டில்
ஒரு நாய்
குரைத்துக் கொண்டிருப்பது மட்டும்
நன்றாக கேட்டது.
--------------------------------------------------------------------
அவலமான துயர சம்பவம், மனிதம் செத்து போய் விட்டது
இன்றைய தினசரி சம்பவகளும் இதையே பறைசாற்றுகின்றன.
ஒரு மணிநேரத்தில்
நிரந்தரமாய் அடங்கிவிட்டது.
உலகமே
அமைதியில் மூழ்கியது.
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
எதோவொரு வயல்காட்டில்
ஒரு நாய்
குரைத்துக் கொண்டிருப்பது மட்டும்
நன்றாக கேட்டது.
--------------------------------------------------------------------
அவலமான துயர சம்பவம், மனிதம் செத்து போய் விட்டது
இன்றைய தினசரி சம்பவகளும் இதையே பறைசாற்றுகின்றன.
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: சாம்பல் காடு
நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: சாம்பல் காடு
உங்களது கவிதையை எதிர்பார்த்தேன் ஐயாகா.ந.கல்யாணசுந்தரம் wrote:நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள்.
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: சாம்பல் காடு
ச. சந்திரசேகரன் wrote:உள்ளத்தை உலுக்கும் உண்மைச் சம்பவம்
நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: சாம்பல் காடு
chinnavan wrote:மனிதகுலத்தின் மரண ஓலம்
ஒரு மணிநேரத்தில்
நிரந்தரமாய் அடங்கிவிட்டது.
உலகமே
அமைதியில் மூழ்கியது.
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
எதோவொரு வயல்காட்டில்
ஒரு நாய்
குரைத்துக் கொண்டிருப்பது மட்டும்
நன்றாக கேட்டது.
--------------------------------------------------------------------
அவலமான துயர சம்பவம், மனிதம் செத்து போய் விட்டது
இன்றைய தினசரி சம்பவகளும் இதையே பறைசாற்றுகின்றன.
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: சாம்பல் காடு
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள்.
ஆம் நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சாம்பல்
» நாளைய சாம்பல்
» மணிகளாக மாறும் சாம்பல்!
» சாம்பல் பூசணி ஜூஸ்
» சந்தோஷம் & சாம்பல் - கவிதைகள்
» நாளைய சாம்பல்
» மணிகளாக மாறும் சாம்பல்!
» சாம்பல் பூசணி ஜூஸ்
» சந்தோஷம் & சாம்பல் - கவிதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|