ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாதிரை -28-12-2012

2 posters

Go down

திருவாதிரை -28-12-2012 Empty திருவாதிரை -28-12-2012

Post by tnkesaven Fri Dec 28, 2012 5:07 pm

இறைவனால் உருவாக்கப்பட்ட பல புண்ணிய தலங்கள் ;! அவற்றுள் சில தலங்கள் மிகவும் முக்கியமானவை. ஆம்!

காஞ்சியில் பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, சிதம்பரம் தரிசிக்க முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பர்.

தரிசிக்க முக்தி தரும் தலம் எனச் சிறப்பித்துக் கூறப்படும் சிதம்பரம் (சித் அம்பரம்) என்னும் சொல்கு ஆகாயம் (அம்பரம்) என்று பொருள்படும். பஞ்ச பூதங்களில் ஈசன் ஆகாயமாகி நின்றதனால் இத்தலம் இப்பெயர் பெற்றது.

எல்லா கோயில்களிலும் (சிவன் கோயில்களில்) மூலவர் சிவலிங்கமாய் அமைந்திருப்பார். சிதம்பரத்தில் மட்டும் மூலவரும், உற்ஸவரும் என எம்பெருமான், ஆடல்வல்லான் ஆகி ஸ்ரீநடராஜர் மூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார்.

நடராஜர் என்ற சொல்லுக்கு நடன ராஜன் அதாவது நடனத்தின் நாயகன் என்று பொருள். பெரும்பாலும் அனைத்துக் கோயில்களிலும் காணப்படும் நடராஜர் திருமேனி அமைப்பு "ஷட்கோண' வடிவில் அமைந்திருக்கும். இத்தலத்தில் மட்டும் வித்தியாசமாகவும், அதிசயமாகவும் சுவாமியின் திருமேனி ஸ்ரீசக்கரத்தில் அடங்கி உள்ளதைக் காண முடியும். பல கோயில்களில் நடராஜர் விரிந்த சடையும், கேசக் கிரீடமும் எனக் காட்சி தரக் கூடும். இங்கு மட்டும் தொங்கு சடையாக சுவாமியின் மேனியில் பரவி நிற்பதைக் காணலாம். ஆடவல்லானின் கலைகள் ஒவ்வொன்றும் எல்லா தெய்வங்களின் உருவில் மிளிர்கின்றது.

வ்வொரு நாள் இரவும் அர்த்த ஜாம பூஜை நடைபெறும் சமயம் 64 கலைகளும் சுவாமியின் திருப்பாத கமலத்தில் ஐக்கியமாகி பின்பே அந்தந்த தலங்கட்கு திரும்புகின்றன என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி எல்லா நடராஜர் சிலைகளும் ஒவ்வொரு வகையில் மிகவும் சிறப்பு பெற்றவையே. இருப்பினும் சிதம்பரத்தில் உள்ள எம்பெருமான் தானே வந்து சிலையாக அமர்ந்ததால் பெரும் சிறப்பைப் பெறுகின்றது.

ஒரு காலத்தில் நடராஜர் சிலை வடிக்க மன்னன் ஆணையிட, சிற்பிகள் சிலை வடிக்க முற்பட்டனர். ஆனால் சிலை உருவாகும் நேரத்தில் எப்படியோ தவறு நடந்துவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் இப்படியே நடந்து வந்தது. சிலை முழுமையடையவில்லை. எனவே சிற்பிகள் அரசரிடம் சென்று தங்களின் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னரோ கடும்கோபம் கொண்டார். அவர் சிற்பிகள் அனைவரையும் அழைத்து ஒருநாள் குறிப்பிட்டு "இத்தேதிக்குள் சிலை முழுமை அடைய வேண்டும். இல்லையேல் உங்களுக்கு சிரச்சேதம்தான்' என ஆணை பிறப்பித்தார். சிற்பிகள் நடுங்கினர். சிற்பிகள் அனைவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. எனவே மிகவும் கவலையுற்று நம்பியவர்களைக் காக்கும் நடராஜர் பாதத்தில் சரணடைந்து மனம் உருகி வேண்டியபடி சிலையமைக்கும் இடம் சென்றனர். அவ்விடம் ஒரு காடு என்பதால் ஜன நடமாட்டமே கிடையாது. சிற்பிகள் கலக்கத்துடன் தங்களின் வேலையைத் துவக்கினர்.

அப்போது ஒரு வயோதிகர் வந்து நின்று "ஐயா! மிகவும் பசியும், தாகமுமாக உள்ளது. ஏதேனும் உணவு கொடுங்கள்' என இரு கைகளை நீட்டி யாசிப்பவராய் நின்றார். சிற்பிகளோ பதற்றத்தின் உச்சியில் நிற்க, வயோதிகரைப் பார்த்து "ஏனய்யா சமயம் தெரியாமல் நீர் வேறு தொல்லை தருகின்றீர். இவ்விடம் உணவில்லை. உலோகக் கூழ்தான் உள்ளது. நாங்கள் என்ன செய்ய?'' என்றனர்.

கிழவரோ, ""என்னால் பசி தாங்க முடியவில்லை ஐயா. உயிர்போகும் படியாய், தலை சுற்றுகிறது, நடக்க முடியவில்லை. எனவே இந்த உலோகக் கூழையே ஊற்றுங்கள். குடித்துக் கொள்கிறேன்'' என்றார். சிற்பிகளோ ஒன்றும் புரியாது குழப்பத்துடன் நிற்க, அதில் ஒருவர் ""சரி என்னவோ நடக்கட்டும் கிழவர் கேட்கின்றார் ஊற்றுவோம்'' எனக் கூறி ஒரு குவளை எடுத்து கையில் ஊற்ற பெரியவரோ அதை அன்புடன் சுவைக்க இவர்கள் ஊற்றிக்கொண்டே வந்தனர். சிற்பிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அனைத்துக் கூழும் தீர்ந்தது. பெரியவர் சிரித்துக்கொண்டே "அப்பா என் பசி தீர்ந்தது' என்றார். அடுத்த நொடி புன்னகையுடன் குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயும், குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியும், பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்துடன் ஆடல்பிரான் சிரித்துக்கொண்டே அருட்காட்சி தந்து நின்றார். நாம் இக்கலியுகத்தில் காணும் சிதம்பர நடராஜன் தானே உகந்து வந்து நாம் உய்யும் பொருட்டு நமக்கு அருளாசி தருகின்றார். நட்சத்திரங்கள் மொத்தம் 27ல் "திரு' என்ற அடைமொழியைக் கொண்டது திருவாதிரை, திருவோணம் என்ற இரண்டுமாகும். திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்தது.

ஒருமுறை சுவாமி, அம்பாள் இருவருக்கும் நடனத்தில் சிறந்தவர் யார் என்ற போட்டி வந்தது. முடிவில் சுவாமி வெற்றி பெற்றதை பிரம்மா, விஷ்ணு, இந்திரன் கூறத் தயங்கியவர்களாய் நின்றனர். அப்போது சுவாமி, மயிலாப்பூரில் நெசவு செய்யும் திருவள்ளுவர் மூலம் கூறப் பணித்தார். திருவள்ளுவருக்கு சுவாமி தறிமேடையில் அக்காட்சியைத் தந்தருளினார். அந்நாள் திருவாதிரை நாளாகும்.

இந்நாள் மார்கழி மாதம், திருவாதிரை அன்று முன் நாளிரவு முதல் ஜாமபூஜை. சுவாமிக்கு மிகவும் அழகான முறையில் பெரிய அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் விடிய விடிய அதிகாலை 3 மணிக்கு மேல் இப்பூஜை சிறப்புடன் நடைபெறும். இது ஒரு மூலாதார பூஜை எனக் கூறப்படுகின்றது.

இத்துடன் சிவன் ஐந்தொழில்களை உலகிற்கு உணர்த்தும் தாண்டவ தரிசனம் தரும் நாளாகும். அம்பலவாணரின் நான்கு சபைகளில் பொற்சபை எனப் போற்றப்படும் சிதம்பரத்தில்தான் நந்தனார் எனும் அடியவர்க்கு தரிசனம் அளித்ததை வியந்து போற்றத் தோன்றுகிறது.

இப்படிப் பல வகையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மருதவாணரை, சிதம்பரத்தில் ஆடல்பிரான், நடராஜர், நடேசன், இரத்தின சபாபதி, அம்பலவாணன் எனப் பல திருநாமங்களில் போற்றப்படும் பிரபுவை "நமசிவாய' எனும் மந்திரத்தை ஓதி வழிபடுவோம். வளம் பல பெுவோம்.
source;dhinamani vellimani
''தென்னிந்தியாவின் காசி''
source-dhinamani vellimani

கேரளாவில் உள்ள திருநெல்லி, தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படுகிறது. நெல்லிமரத்தின் கீழ் விஷ்ணு அமர்ந்துள்ள இடம் என்பதால் முதலில் திருமால் நெல்லி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி திருநெல்லி என்று அழைக்கப்படுகிறது. மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது போன்ற அனைத்து சடங்குகளையும் இங்கு ஓடும் பாபநாசினி நதிக்கரையில் செய்கிறார்கள். கங்கை நதியும், சரஸ்வதிநதியும் இணைந்ததே பாபநாசினி நதி. பரசுராமர் தன்னுடைய தந்தைக்கு இங்குதான் கடைசி காரியங்களை செய்ததாக தல வரலாறு.
கேரளாவில் வயநாடு மாவட்டம், மானந்தவாடியிலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்
tnkesaven
tnkesaven
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

திருவாதிரை -28-12-2012 Empty Re: திருவாதிரை -28-12-2012

Post by அச்சலா Fri Dec 28, 2012 5:15 pm

பகிர்வுக்கு சூப்பருங்க


திருவாதிரை -28-12-2012 Paard105xzதிருவாதிரை -28-12-2012 Paard105xzதிருவாதிரை -28-12-2012 Paard105xzதிருவாதிரை -28-12-2012 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum