ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேஜஸ்வினி....

+2
கரூர் கவியன்பன்
மஞ்சுபாஷிணி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தேஜஸ்வினி.... - Page 2 Empty தேஜஸ்வினி....

Post by மஞ்சுபாஷிணி Thu Dec 27, 2012 10:07 pm

First topic message reminder :

தேஜஸ்வினி.... - Page 2 Thejaswinavneeth

” என்னது இது இப்படி தலைமுடி கொட்றதே “
கொத்தாய் கையில் உதிர்ந்த முடியை கவலையுடன் பார்த்தாள் தேஜஸ்வினி...

” என்னம்மா கொஞ்ச நாளா பாத்ரூம்ல ஒரே தலைமுடியா கிடக்குதே “ என்று அங்கலாய்த்தாள் வீட்டு வேலைக்காரி ரோஜா..

” என்ன தேஜா டாக்டர் கிட்ட ஒரு முறை போய் பார்த்துட்டு வந்தால் என்ன? “ என்று கேட்டுக்கொண்டே ஷூ லேஸை இறுக்கினான் நவநீத்..

” அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா பாருங்க என் பேக் மேலேல்லாம் ஒரே முடி இங்க நின்னு தலை வாராதீங்கன்னு எத்தனை முறை சொல்றது “ என்று பிரபாஸ்,
சுஜா இரு செல்வங்களின் அலறல் சத்தம் கேட்டது....

இது எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டே காலை டிபன் தயார் செய்துக்கொண்டிருந்தாள் தேஜஸ்வினி..

அவள் மனதிலும் இதே கேள்வி தான்..

” ஏன் கொஞ்ச நாளா அதிகமா முடி கொட்றது எனக்கு? ”

எல்லோரும் காலை டிபன் முடித்து வேலைக்கும் பள்ளிக்கும் ஓடியப்பின் நிதானமாக பாத்திரங்கள் எல்லாம் வேலைக்காரி கழுவ எடுத்து போட்டுவிட்டு ஆயாசமாய் உணர்ந்து சேரில் உட்கார்ந்தாள் தேஜஸ்வினி.

கொஞ்ச நாளா முடி கொட்டுவது மட்டுமில்லாது தன் வயிறும் உப்புவதைக் கண்ணாடியில் பார்த்தாள்.

மாதவிலக்கும் தள்ளி போயிருக்கு போலிருக்கே என்றபடி வேகமாக காலண்டரை எடுத்து பார்த்தாள் தேஜஸ்வினி.

”15 நாட்கள் தள்ளி இருக்கு எப்படி கவனிக்காமல் விட்டோம் “ என்றபடி காலண்டரை மாட்டிவிட்டு இட்லி விண்டு வாயில் வைக்கும்போது பசி மரத்து போனது போலிருந்தது... தட்டை தூக்கி பாத்திரம் கழுவும் இடத்தில் போட்டுவிட்டு வந்து படுத்தாள்... தலை சுற்றுவது போலிருந்தது....

மாலை எல்லோரும் வரும் சப்தம் கேட்டது..

ஆனால் கண் திறக்க முடியாதபடி ஒரு அசதி வந்து உடலுடன் ஒட்டியது..... எழ முயன்று தோற்று அப்படியே கண்மூடி படுத்திருந்தாள்...

” என்னாச்சும்மா?” என்றபடி ஆதரவுடன் தலைமுடி கோதினான் நவநீத்.

பிள்ளைகளும் அடுத்து வந்து நின்று பார்த்தன.. அம்மாவுக்கு என்னாயிற்றோ என்று..

” நீ கிளம்புடா நாம ஹாஸ்பிடல் போகலாம் “ என்று சொன்னபடி டாக்டர் வசந்தாவுக்கு தன் மொபைலில் அழைப்பு விடுத்தான் நவநீத்..

துரிதகதியில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தேஜஸ்வினியை எழுப்பி காரை ஸ்டார்ட் செய்தான்.

இருபது நிமிடத்தில் டாக்டர் வசந்தாவின் முன்பு இருவரும்..

ஐம்பது வயது நெருக்கத்தில் டாக்டர் வசந்தா இனிமையான முகத்துடன் இருவரையும் உட்காரவைத்து எல்லா டெஸ்டும் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு..

“என்ன செய்கிறது தேஜா உனக்கு?” என்று டாக்டர் கேட்கவே

தேஜஸ்வினி தன் அவஸ்தைகளை சொல்ல சொல்ல குறிப்பெடுத்துக்கொண்ட டாக்டர், ” நாளை வெறும் வயிற்றில் காலை வந்து அட்மிட் ஆகவேண்டும் எல்லா டெஸ்டும் செய்யவேண்டும் “ என்று சொன்னதும் சரி என்று தலையாட்டிவிட்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்..

ராத்திரிக்கு ஹோட்டலில் இருந்து உணவு வரவழைத்து எல்லோரும் உண்டனர்..

தேஜஸ்வினிக்கு பால் மட்டும் காய்ச்சி கொடுத்துவிட்டு உறங்க வைத்தான் நவநீத்....

அடுத்த நாள் காலை இருவரும் மருத்தவமனை அடைந்து அட்மிட் செய்து எல்லா டெஸ்டும் செய்ய வைத்து வீட்டுக்கு கூட்டி வந்தான் நவநீத்..
இரண்டு நாள் கழித்து நவநீத் மொபைல் சிணுங்கவே எடுத்து ” ஹலோ சொல்லுங்க டாக்டர் “என்றான்..

டாக்டர் சொன்ன செய்தி கேட்டு உறைந்தான்..

” தேஜஸ்வினிக்கு யூரின் போகும் இடத்தில் புற்றுநோய் இருக்கிறது நவநீத் “ சொன்ன டாக்டரின் குரலில் சோகம் இழைந்தோடியது...

” இது கடைசி ஸ்டேஜ் என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை நவநீத்... ”

” இருக்க போகும் நாட்கள் இன்னும் மாதக்கணக்கில் மட்டுமே “

” வலி குறைய மாத்திரைகள் மருந்துகள் தரலாம் ஆனால் ஆயுளை நீட்டிக்க முடியாது “ என்று வருத்தத்துடன் சொன்னதும் அதிர்ச்சியுடன் அப்படியே சேரில் சாய்ந்தான் நவநீத்..

மாலை வீட்டுக்கு போனதும் தேஜஸ்வினி நவநீத்திடம் ” டாக்டர் கிட்ட ரிப்போர்ட் வந்துவிட்டதா கேட்டீங்களா? “ என்றாள்.

” ரிப்போர்ட் வந்திருச்சுடா “

” ஒன்னும் இல்லை நீ ரொம்ப அனிமிக்கா இருக்கேன்னு “ சொல்றாங்க என்றான் நவநீத்...

பாத்ரூமில் போய் ஷவர் திறந்து சத்தமாய் அழத்தொடங்கினான் நவநீத்
ஷவர் சத்தத்தில் அவன் கண்ணீரோடு சேர்ந்து அவன் அழுகை சத்தமும் கரைந்தது.....

”ஏங்க கோவிலுக்கு போகனும் போலிருக்கு கூட்டிப்போறீங்களா?” தேஜஸ்வினியின் குரலில் ஒரு பற்றற்றத் தன்மை இருப்பதை உணர்ந்தான் நவநீத்..

”அதுக்கென்னடா “ உடனே கிளம்பித் தயாரானான்..

கோவிலை நெருங்கியபோது உபன்யாசம் செய்யும் குரல் ஸ்பீக்கர் வழியே காதில் விழுந்தது..

தேஜஸ்வினியை அணைத்து கோவிலுக்குள் அழைத்துச்சென்றான் நவநீத்
உபன்யாசம் நடக்கும் இடத்தில் இருவரும் அமர்ந்தனர்..

கணீரென்ற குரலில் பாகவதம் உரைத்துக்கொண்டிருந்தார் உபன்யாசகர்..
”பரீக்*ஷித் மஹாராஜா செய்த தவற்றுக்கு சாபம் பெறுகிறார் இன்னும் ஏழே நாட்களில் நீ இறப்பாய் என்று..”

”உடனே பரீக்*ஷித் மஹாராஜா கேட்கிறார் ஏழு நாட்களுக்குள் நான் என் பாவங்களை தொலைக்க என்ன செய்யவேண்டுமென்று....”

க்ருஷ்ணமஹாரஜ் தொடர்கிறார் தன் கணீர் குரலில்... பாகவதம் படி ஏழு நாட்களுக்குள் என்று.....

மயக்கமாக உணர்ந்தாள் தேஜஸ்வினி.... அப்படியே மயங்கி நவநீத் மடியில் சாய்ந்தாள்.....

உடனே எல்லோரும் பதறி நீர் கொண்டு வந்து மயக்கம் தெளியவைக்க உபன்யாசகர் வந்து துளசி தீர்த்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட மெல்லக் கண் திறந்தாள்...

பகவான் கருஷ்ணரே தன் கண்முன் நிற்பது போல் உணர்ந்தாள் தேஜஸ்வினி... கைக்கூப்பினாள்.....

நவநீத் கலங்கிய கண்களை துடைக்க முயலாது கண்ணீர் மல்க கதறி உபன்யாசகர் காலில் விழுந்து அழுதான்....

உபன்யாசகர் நவநீத்தின் முதுகை ஆதரவாய் தடவிக்கொடுத்தார்......

இருவரும் வீட்டுக்கு கிளம்புமுன் மறக்காது நவநீத்திடம் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார் உபன்யாசகர்....

இரவின் இருட்டில் மாத்திரையின் உதவியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் தேஜஸ்வினி....

அப்போது மொபைல் சிணுங்கவே நவநீத் சென்று எடுத்தான்....

”என்னப்பா தேஜஸ்வினிக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று உபன்யாசகர் கேட்டதும் நவநீத் கவலையான குரலில் ”உறங்குகிறாள் மாமா” என்று சொன்னான்....

”என்ன பண்றது அவளுக்கு உடம்புக்கு?” என்று கேட்டார்....

அவன் தொண்டை அடைக்க அவளுக்கு இருக்கும் நோயைப்பற்றி சொன்னான் நவநீத்..

”கவலைப்படாதே.... நாளை நீ வந்தவாசி கிளம்பு தேஜஸ்வினியை கூட்டிண்டு.... நான் ஒரு முகவரி தருகிறேன்... அங்கேச் சென்று அவரிடம் சொல்லு நான் அனுப்பியதாக.... பகவான் இருக்கார்... நாம் மனுஷா தானே.... பகவான் தான் சூப்பிரியர் எல்லாத்துக்கும்.... அவரிடம் மன்றாடுவது என் வேலை.....”

”நீ அவளை அங்க கூட்டிண்டு போ எல்லாம் சரியாகும்” என்று நம்பிக்கைக்குரலில் சொல்லிவிட்டு போனை வைத்தார்....

நவநீத்துக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிந்தன....

மறுநாள் காலை குழந்தைகளைக் கொண்டுச் சென்று தன் தமக்கை வீட்டில் விட்டுவிட்டு கிளம்ப யத்தனித்தபோது...

”என்னடா குழந்தைகளை கூட்டிண்டு வந்தே தேஜஸ்வினிய கூட்டிட்டு வரலையா? “ என்று அன்பு ததும்பும் குரலில் கேட்ட அம்புஜத்திடம்...

”இல்ல அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதனால ட்ரீட்மெண்ட்டுக்கு போயிட்டு இருக்கேன் “

”என்னாச்சுடா?” என்று பதறினாள்..

”ஒன்னுமில்ல வயிற்றுவலி அதிகமா இருக்காம்... அல்சரா இருக்குமோ இல்ல குடல் வாலா இருக்குமோ தெரியலை அதான் கூட்டிண்டு போறேன் அதுவரை குழந்தைகளை பார்த்துக்கோ அக்கா” என்றான்...

வந்தவாசி நோக்கி வண்டி போனது....

பின்னிருக்கையில் நவநீத் மடியினில் தேஜஸ்வினியின் தலை சாய்ந்திருந்தது.....

ட்ரைவர் முருகன் வண்டியை ரோட்டைப்பார்த்து சீராக ஓட்டிக்கொண்டு இருந்தான்....

வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு தேஜஸ்வினியின் தலையை கோதினான் நவநீத்....

மனதில் திருமணம் ஆன முதல் நாள் தன்னிடம் வியர்க்க பதறி குழந்தையாய் தன்னிடம் ஆசீர்வாதம் வாங்கிய அந்த நாளை நினைத்துப்பார்த்தான்.

கல்யாணம் ஆன நாளில் இருந்து இன்றுவரை தன்னையும் குழந்தைகள் பிறந்தப்பின்பும் அன்பாய் அரவணைத்துச்செல்லும் தன் அன்புத்தங்கத்திற்கு இப்படி ஒரு சோதனை வரவேண்டுமா என்று துடித்து அழுதான் நவநீத்...

” ஏங்க எனக்கு என்னாச்சுன்னு இத்தனை பதட்டப்படறீங்க?”

”உனக்கு ஒன்னுமே இல்லடா....”

”நாம சந்தோஷமா ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வீட்டுக்கு திரும்ப போறோம்... அப்ப உனக்கு பிடிச்ச வெங்காய சருகு கலர்ல பட்டுப்புடவை எடுத்து தருவேன் நம்ம கல்யாண நாளுக்கு “ என்று அவள் பட்டுக்கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்....

சிணுங்கி வெட்கப்பட்டாள் தேஜஸ்வினி... தனக்கு ஏதோ தீர்க்க முடியாத நோய் இருக்கிறதோ என்று உள்ளூர பயம் இருந்தது அவளுக்கு...

நவநீத்தின் நம்பிக்கை வார்த்தைகளை கேட்டப்பின் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள் தேஜஸ்வினி...

வண்டி அந்த குடிலை நோக்கி நின்றது.....

மெல்ல தேஜஸ்வினியை இறக்கி உள்ளே அழைத்து சென்றான்....

உள்ளே 80 வயது உடைய பெரியவர் சிநேகபாவத்துடன் சிரித்தார்....

”வாங்கோ உட்காருங்கோ பெரியவா நேக்கு போன் பண்ணினா விவரமெல்லாம் சொன்னா...”

”ரிப்போர்ட் பேப்பரெல்லாம் கொண்டு வந்திருக்கேளா?....”

”வாம்மா தேஜஸ்வினி முகம் அலம்பிண்டு வந்து சாப்பிடுங்கோ முதல்ல...

நான் செத்த நாழில வரேன்” என்றபடி துண்டை எடுத்து போட்டபடி ரிப்போர்ட்ஸ் எடுத்துக்கொண்டு தன் ரூமிற்குள் நுழைந்தார்...

சுற்றுப்புறமும் அழகிய தோட்டங்களும் மூலிகை காற்றும் மனதுக்கு இதமாக இருந்தது....

மாதம் ஒன்றைக் கடந்தது....

முகத்தில் தெளிவும் மனதில் ஒரு நம்பிக்கையும் உடம்பில் ஒரு திடமும் தெம்பும் ஏற்படுவதும் முடி உதிர்வது குறைவதும் வயிறு உப்பசம் குறைவதையும் உணர்ந்தாள் தேஜஸ்வினி....

தினமும் போனில் பிள்ளைகளுடன் உரையாடினர் இருவரும்....

”பிள்ளைகள் சமர்த்தா இருக்காங்க.. தேஜா உடல்நலம் எப்படி இருக்கு?” என்றபடி போனில் அக்கறையாக விசாரித்தாள் அம்புஜம் நவநீத்தின் தமக்கை....

”இப்ப ரொம்ப நன்னா இருக்கா” என்று சொன்னபடி அருகில் இருக்கும் மனைவியை அன்புடன் அணைத்துக்கொண்டான்...

மூன்று மாதம் கடந்தது.....

உபன்யாசகர் போன் செய்து ”தேஜாவின் உடல்நலத்தில் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா?” என்று கேட்டார்...

”அதீத முன்னேற்றம் ” இன்னும் ஒரு மாதத்தில் இருவரும் வீட்டுக்கு கிளம்பும் விஷயத்தை சந்தோஷத்துடன் பகிர்ந்தார் பெரியவர்....

இருவரும் கிளம்பும் அந்த நன்னாளும் வந்தது.....

பெரியவர் நவநீத் கையில் மருந்துகள் அடங்கிய பையும் ரிப்போர்ட்ஸ் இருக்கும் பைலையும் கொடுத்து ”இப்ப டாக்டர் கிட்ட போய் செக்கப் செய்யுங்க.... என்ன ரிப்போர்ட் வருதுன்னு பார்த்து சொல்லுங்க ”என்று சொல்லி காலில் விழுந்த தேஜஸ்வினியை ஆதரவுடன் நிமிர்த்தி

”நீ தீர்க்காயுசா இருப்பே என்னிக்கும் ”என்று வாழ்த்தி குங்குமம் நவநீத் கையில் கொடுத்து தேஜஸ்வினியின் நெற்றி வகிட்டிலும் நெற்றியிலும் இடச்சொல்லி ஆசீர்வாதம் செய்தார் இருவரையும்....

”எனக்கு சாதாரண வயிற்று வலி தானே அதுக்கு இத்தனை மாசம் இங்க இருந்து பிள்ளைகளை பிரிந்து அவசியமா?” என்று கேட்டாள் தேஜஸ்வினி....

சிரித்துக்கொண்டே அணைத்து நெற்றியில் மெல்ல முத்தமிட்டுச்சொன்னான்.... நீ எனக்கு பொக்கிஷம்டி செல்லம்..... நீ என்னை விட்டு தொலைந்து தொலைதூரம் போய்டுவியோ என்ற பயம் வரவே தான் உன்னை தக்கவைத்துக்கொள்ள எமனுடன் போராடினேன்... இதோ இப்ப இந்த நிமிஷம் என் செல்லக்குட்டி தேஜா என்னுடனே என்றும் “ என்று மீண்டும் அணைத்துக்கொண்டான்....

திரும்ப டெஸ்ட் செய்ததில் டாக்டர் வசந்தா ஆச்சர்யம் கலந்த முகத்துடன் ” இது சாத்தியமே இல்லை எப்படி எப்படி?” என்று கேட்கவே...

நவ்நீத் முகத்தில் அமைதியான புன்னகை....

”கடவுளின் கருணை மனித ரூபத்திலும் சித்த வைத்தியமும் என் தேஜாவை என்னுடனே தக்கவைத்துவிட்டது டாக்டர் “ என்றுச் சொன்னான்....

சிலுசிலுவென காற்று தொடங்கி சிறு தூறல்கள் பன்னீர் துளிகளாய் இருவரையும் நனைக்க இருவரும் ஒட்டி அணைத்து காருக்குள் ஏறினர்...

யுகம் யுகமாய் சௌக்கியமாக வாழ இறைவன் ஆசீர்வாதமாய் மழைத்துளிகளை அனுப்பினான்....

இது கதையல்ல.... நிஜம்..... உயிர்ப்பிழைத்து அதன்பின்னும் அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்து நவநீத் உயிர்நீத்தப்பின்னர்..... தன் எண்பத்தி ஐந்தாம் வயதில் மே மாதம் 2012 ல தான் தேஜஸ்வினி உயிர் நீத்தார்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேஜஸ்வினி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


தேஜஸ்வினி.... - Page 2 Empty Re: தேஜஸ்வினி....

Post by மஞ்சுபாஷிணி Fri Dec 28, 2012 11:26 pm

V.BABU wrote:வார்த்தைகள் கிடைக்கவில்லை .. பதிவுக்கு நன்றி ........

அன்பு நன்றிகள் பாபு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேஜஸ்வினி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum