ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்?

3 posters

Go down

இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Empty இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்?

Post by DERAR BABU Thu Dec 27, 2012 10:43 am

பூமியின் தென்துருவமான அன்டார்டிக், புவிக்கோளத்தின் 20% பரப்பை உள்ளடக்கிய பெரும்பரப்பு. உறைபனிப் போர்வையும், பல்லாயிரக்கணக்கில் மிதக்கும் பனிப்பாறைகளும் காணக்கிடக்கும் இந்தக் கடல்பகுதியில் தற்போது வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

1958-இல் இருந்த வெப்பத்தைக் காட்டிலும் தற்போது இருமடங்கு அதிகமாகிவிட்டது. 2.24 டிகிரி கூடியுள்ளது. இதனால் பனிப்போர்வைக்கு அடியில் பிளவுகள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

கடந்த ஜூலை மாதம், அன்டார்டிக் பனிப் போர்வைக்கு அடியில் மிகப்பெரிய பிளவு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதாவது 1.5 கிலோ மீட்டர் ஆழம், 10 கிலோ மீட்டர் அகலம், 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தப் பிளவு இருக்கிறது. கடலுக்குள்ளான மாற்றத்தை ராடார் உதவியுடன் ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள் இவற்றை மிகத் துல்லியமாக தெரிவித்துள்ளனர்.

இந்தப் "பெரும்பள்ளம்' அல்லது பெரும் பிளவினால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப பனிப்போர்வை கரைந்து உருகும் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், "நிச்சயமாக இதனால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படும்' என்றும், "கடல் நீர்மட்டம் உயர்ந்து பல தீவுகள் மூழ்கிப்போகலாம், சில கடலோர நகரங்களையும் கடல் விழுங்கும்' என்கிறார்கள். ஆனால், அது இப்போது நடக்காது. சில தலைமுறைகள் ஆகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பசிபிக் பெருங்கடல் மற்றும் தெற்குக் கடலில் ஏற்பட்டுள்ள வெப்பக் காற்றின் காரணமாகத்தான் அன்டார்டிக் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், இந்த நிலைமைக்குக் காரணம் மனிதர்களின் தவறுகளா? என்று கேட்டால் மழுப்புகிறார்கள். அப்படியும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்பதுதான் அவர்களது பதில்.

இங்கே ஆராய்ச்சிக்கூடங்கள் அமைத்திருப்பதும், அதிநவீனக் கருவிகள் கொண்டு ஆய்வுகள் செய்வதும் அமெரிக்கா, ரஷியா, கனடா, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள்தான். வளர்ந்த நாடுகளின் விஞ்ஞானிகள் தங்கள் நாட்டைக் காட்டிக்கொடுப்பார்களா?

புவிவெப்பம் அதிகரிக்கக் காரணம் வளர்ந்த நாடுகளின் சுயநலத்தால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள்தான். புவிவெப்பம் உயர்வதை 2 சென்டிகிரேட் அளவுக்கும் கீழாக, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், வளர்ந்த நாடுகள் தங்களது கரியமிலவாயு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், அவர்கள் அந்தச் சுமையை வளரும்நாடுகள் மேல் போட்டுவிட்டு, அன்டார்டிகாவில் ஆராய்ச்சி செய்கிறார்கள். நம்மை அச்சுறுத்துகிறார்கள்.

புவிப்போர்வையைப் பாதிக்கும் கரியமில வாயுவைக் காட்டிலும், மிக மோசமானது மீதேன் வாயு. இந்த மீதேன்வாயு வேளாண்மையில்தான் அதிகமாக வெளிப்படுகிறது. குறிப்பாக நெல் சாகுபடியில்! ஆகவே, வேளாண்மையில் சில கட்டுப்பாடுகளை விதித்து, புவிவெப்பத்தைக் குறைக்கலாம் என்று வளர்ந்த நாடுகள் கூறியதை உலகின் எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு இந்தியா உள்பட வளரும் நாடுகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும்கூட, இந்த முடிவைக் கைவிடாமல், அடுத்த கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள்.

இதற்கிடையில், அரிசி சாப்பிடும் ஆசிய நாடுகளின் உணவுத்தட்டுப்பாட்டை நீக்க ""அரிசிக்கு மாற்றாக உருளைக்கிழங்குதான் மிகநல்ல உணவு; இதற்குத் தண்ணீர் தேவை மிகவும் குறைவு'' என்று ஐரோப்பாவில் நடந்த உருளைக்கிழங்கு மாநாட்டில் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அடுத்த எட்டு ஆண்டுகளில் கரியமில வாயு குறைப்புக்கான எந்தவித சரியான திட்டமும் இல்லாமல், போதிய நிதியையும் ஒதுக்காமல், புதிய தொழில்நுட்பங்களையும் வழங்காமல் இன்னமும் பேசிக்கொண்டே இருக்கின்றன வளர்ந்த நாடுகள்.

இது ஒருபுறம் இருக்க நம்முடைய கவலையெல்லாம் கங்கை நதிக்கு மூலாதாரமாகிய கங்கோத்ரி வேகமாக உருகத் தொடங்கிவிட்டது; யமுனை நதிக்கு ஆதாரமான கோமுக் பனிச்சிகரம், தனது "பசுமுகத்தை' இழந்துவிடும் அளவுக்கு உருகிவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுதான். கடந்த பத்து ஆண்டுகளில் இவ்வாறு இருசிகரங்களும் வேகமாகக் கரைவது அதிகமாகிவிட்டது.

உலகளாவிய புவிவெப்பம் இமாலயத்தையும் பாதிக்கிறது. வளர்ந்த நாடுகளின் சுயநலத்துக்கு எங்கோ இருக்கும் கங்கோத்ரியும் கோமுக் சிகரமும் வேகமாகக் கரைகின்றன. அன்டார்டிக் பனிப் போர்வைக்கு அடியில் உறைந்த கடல் பாளம் பாளமாகப் பிளந்து நிற்கிறது. கடல்காற்று வெப்பமாகிறது. பருவமழையை பெரும் புயல் விரட்டுகிறது.

உலகத்தில் ஏதோ ஒரு நாடு, சுற்றுச்சூழலுக்கு எதிராக எதையோ செய்கிறது என்று சும்மா இருக்க முடியாது. அதனால் புவி முழுவதையும் பாதிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த இயற்கை மகத்தானது. தன்னைச் சீர்குலைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினையை முன்வைக்கிறது. "நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே' என்று சொல்லும் சக்தி படைத்த இயற்கை மனிதருக்குச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால் மனிதனோ, ""நான்'' எனும் அகந்தையை நடத்துவோனாகவே நீடிக்கிறான்.

அனுபவிப்பதுவரை அனுபவித்துவிட்டு நாம் போய்விடுவோம், வருங்கால சந்ததியினர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று நாம் வாளாவிருந்துவிட முடியாது. நமது முன்னோர்கள் நாம் சந்தோஷமாக வாழ மாசுபடாத பூமியை விட்டுச் சென்றனர். நாமும் நமது சந்ததியினருக்கு மாசுபடாத பூமியை விட்டுச் செல்வதுதானே நியாயமாக இருக்கும். நாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய இன்றியமையாத பிரச்னை இது...........

தினமணி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Empty Re: இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்?

Post by பாலாஜி Thu Dec 27, 2012 3:36 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Empty Re: இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்?

Post by கரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 7:37 pm

தகவலுக்கு நன்றி சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Empty Re: இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum