ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி

3 posters

Go down

சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Empty சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி

Post by அச்சலா Wed Dec 26, 2012 10:21 pm

பெங்களூரு: பரபரப்பான முதலாவது "டுவென்டி-20 போட்டியில் "பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி ஒவர் வரை துணிச்சலாக போராடிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது ஹபீஸ், சோயப் மாலிக் கைகொடுத்தனர்.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20 தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடந்தது.
அஷ்வின் "அவுட்: இந்திய அணியில் தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், பியுஸ் சாவ்லா, பர்விந்தர் அவானா நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோருடன் அறிமுக வீரராக இளம் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணியில் 7.1 அடி உயரம் கொண்ட முகமது இர்பான் அறிமுகமானார். "டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ், "பீல்டிங் தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு கவுதம் காம்பிர், அஜின்கியா ரகானே ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. ஆரம்பத்தில் நிதானமாக ரன் சேர்த்த இவர்கள், பின் அதிரடிக்கு மாறினர். அஜ்மல் பந்தில் ரகானே இமாலய சிக்சர் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த போது அப்ரிதி "சுழலில் ரகானே (42) அவுட்டானார்.
விக்கெட் மடமட: மறுமுனையில் பொறுப்பாக ஆடிய காம்பிர், உமர் குல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட காம்பிர் (43), தன்விரின் துல்லிய "த்ரோவில் ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என ஆடினர். பொறுப்பற்ற "ஷாட் அடித்த தோனி(1), விராத் கோஹ்லி (9) ஏமாற்றினர். அப்ரிதி பந்தில் "சிக்சர் அடித்து ரன் கணக்கை துவக்கிய யுவராஜ் (10) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. "மிடில்-ஆர்டரில் ரெய்னா (10), ரோகித் சர்மா (2), ரவிந்திர ஜடேஜா (2) சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார் (6), அசோக் டிண்டா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் உமர் குல் 3, சயீத் அஜ்மல் 2 விக்கெட் கைப்பற்றினர்.
அபார பந்துவீச்சு: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, புவனேஷ்வர் குமார் "வேகத்தில் திணறியது. இவரது பந்துவீச்சில் நசிர் ஜாம்ஷெத் (2), அகமது ஷேசாத் (5), உமர் அக்மல் (0) வெளியேறினர். பாகிஸ்தான் அணி 3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 12 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது. பின் இணைந்த சோயப் மாலிக், கேப்டன் முகமது ஹபீஸ் ஜோடி பொறுப்பாக ஆடியது. நிதானமாக ரன் சேர்த்த இவர்கள், அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
ஹபீஸ் அரைசதம்: பின், அதிரடிக்கு மாறிய ஹபீஸ் - மாலிக் ஜோடி, யுவராஜ், ஜடேஜா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டனர். ஜடேஜா பந்தில் "சூப்பர் சிக்சர் அடித்த ஹபீஸ், "டுவென்டி-20 அரங்கில் தனது 3வது அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த போது இஷாந்த் "வேகத்தில் ஹபீஸ் (61) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மாலிக், தனது 3வது "டுவென்டி-20 அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
"திரில் வெற்றி: டிண்டா வேகத்தில் கம்ரான் அக்மல் (1) அவுட்டானார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. ரவிந்திர ஜடேஜா பந்துவீசினார். முதல் மூன்று பந்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்டன. நான்காவது பந்தில் மாலிக் ஒரு "சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மாலிக் (57), அப்ரிதி (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஆட்ட நாயகன் விருதை முகமது ஹபீஸ் வென்றார்.
இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி டிச. 28ல் ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது.

புவனேஷ் அபாரம்
நேற்று, இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், 22, அறிமுக வீரராக களமிறங்கினார். உ.பி., மாநிலம் கான்பூரில் 1990ல் பிறந்த இவர், பாகிஸ்தான் அணியை திணறடித்தார். வேகத்தில் மிரட்டிய இவர், 4 ஓவரில் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து முத்திரை பதித்தார்.

முதல் வெற்றி
நேற்று, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி, "டுவென்டி-20 அரங்கில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை இவ்விரு அணிகள் 4 போட்டியில் மோதின. இதில், இந்தியா 3, பாகிஸ்தான் ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

இஷாந்த்-கம்ரான் மோதல்
நேற்று 18வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, முதல் பந்தில் ஹபீசை அவுட்டாக்கினார். பின், 4வது பந்தை மாலிக் தூக்கி அடிக்க, அதனை ஜடேஜா அருமையாக "கேட்ச் பிடித்தார். இப்பந்து குறித்து மாலிக் சந்தேகம் கிளப்ப, 3வது அம்பயரிடம் கேட்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக அது, குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வீசப்பட்ட "நோ-பால் என அறிவிக்கப்பட, மாலிக் (47) கண்டம் தப்பினார். கடைசி இரண்டு பந்தை எதிர்கொண்ட கம்ரான் அக்மல், அதனை அடிக்க முடியாமல் திணறினார். "நோ பால் அதிர்ச்சியில் இருந்து மீளாத இஷாந்த், கம்ரான் அக்மலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக சகவீரர்கள் மற்றும் அம்பயர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின், 19வது ஓவரில் டிண்டா வீசிய பந்தை கம்ரான் அக்மல் தூக்கி அடிக்க, அதனை இஷாந்த் "கேட்ச் பிடித்து, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.

சிகாகோ ரசிகர் வருத்தம்
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண, சிகாகோவில் இருந்து வந்துள்ளார் பாகிஸ்தான் ரசிகர் முகமது பஷிர். இரு அணிகள் நிறத்துடன் கூடிய "ஜெர்சி மற்றும் கொடியை மைதானத்துக்குள் கொண்டு செல்ல இவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த பஷிர் கூறுகையில்,"" போலீசாரின் நடவடிக்கை மிகவும் ஏமாற்றம் அளித்தது. பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் பலர் போட்டியை பார்க்க வந்தனர். தேசியக் கொடியுடன் வரும் அவர்களை தடுக்க வேண்டியது தானே, என்றார்.

ஏமாற்றம் அளித்த தோனி
இந்திய கேப்டன் தோனியின் உத்திகள் நேற்றும் ஏமாற்றம் அளித்தன. பிரதான சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. தவிர, புவனேஷ் குமார் 2 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய நிலையில், அவருக்கு "பிரேக் கொடுத்திருக்கலாம். ஆனால், தொடர்ந்து நான்கு ஓவர்களையும் வீசச் செய்தார். இதனால் கடைசி நேரத்தில் இவரை பயன்படுத்த முடியாமல் போனது.
இதே போல ரவிந்திர ஜடேஜாவின் முந்தைய ஓவரில் சோயப் மாலிக், ஹபீஸ் தலா ஒரு சிக்சர் அடித்தனர். மாலிக் களத்தில் இருந்த நிலையில், ஜடேஜாவிடம் கடைசி ஓவரை வீசச் சொன்னது வியப்பாக இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய மாலிக் மீண்டும் ஒரு சிக்சர் அடித்து அணிக்கு வெற்றித் தேடி தந்தார்.


நன்றி:தினமலர்


சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Paard105xzசறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Paard105xzசறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Paard105xzசறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Empty Re: சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 10:54 pm

அப்போ...பாகிஸ்தான் பாக்கியஸ்தன்...


சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி 224747944

சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Rசறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Aசறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Emptyசறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Rசறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Empty Re: சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி

Post by அபிரூபன் Wed Dec 26, 2012 10:55 pm

2 மே கேவலமான அணிகள் தான்


சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Empty Re: சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ‘திரில்’ வெற்றி
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
» ஐ.பி.எல் -2018 !!
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» ஐபிஎல்: பெங்களூருவை வீழ்த்தி பஞ்சாப் 'திரில்' வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum