Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி
3 posters
Page 1 of 1
சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி
பெங்களூரு: பரபரப்பான முதலாவது "டுவென்டி-20 போட்டியில் "பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி ஒவர் வரை துணிச்சலாக போராடிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது ஹபீஸ், சோயப் மாலிக் கைகொடுத்தனர்.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20 தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடந்தது.
அஷ்வின் "அவுட்: இந்திய அணியில் தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், பியுஸ் சாவ்லா, பர்விந்தர் அவானா நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோருடன் அறிமுக வீரராக இளம் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணியில் 7.1 அடி உயரம் கொண்ட முகமது இர்பான் அறிமுகமானார். "டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ், "பீல்டிங் தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு கவுதம் காம்பிர், அஜின்கியா ரகானே ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. ஆரம்பத்தில் நிதானமாக ரன் சேர்த்த இவர்கள், பின் அதிரடிக்கு மாறினர். அஜ்மல் பந்தில் ரகானே இமாலய சிக்சர் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த போது அப்ரிதி "சுழலில் ரகானே (42) அவுட்டானார்.
விக்கெட் மடமட: மறுமுனையில் பொறுப்பாக ஆடிய காம்பிர், உமர் குல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட காம்பிர் (43), தன்விரின் துல்லிய "த்ரோவில் ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என ஆடினர். பொறுப்பற்ற "ஷாட் அடித்த தோனி(1), விராத் கோஹ்லி (9) ஏமாற்றினர். அப்ரிதி பந்தில் "சிக்சர் அடித்து ரன் கணக்கை துவக்கிய யுவராஜ் (10) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. "மிடில்-ஆர்டரில் ரெய்னா (10), ரோகித் சர்மா (2), ரவிந்திர ஜடேஜா (2) சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார் (6), அசோக் டிண்டா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் உமர் குல் 3, சயீத் அஜ்மல் 2 விக்கெட் கைப்பற்றினர்.
அபார பந்துவீச்சு: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, புவனேஷ்வர் குமார் "வேகத்தில் திணறியது. இவரது பந்துவீச்சில் நசிர் ஜாம்ஷெத் (2), அகமது ஷேசாத் (5), உமர் அக்மல் (0) வெளியேறினர். பாகிஸ்தான் அணி 3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 12 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது. பின் இணைந்த சோயப் மாலிக், கேப்டன் முகமது ஹபீஸ் ஜோடி பொறுப்பாக ஆடியது. நிதானமாக ரன் சேர்த்த இவர்கள், அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
ஹபீஸ் அரைசதம்: பின், அதிரடிக்கு மாறிய ஹபீஸ் - மாலிக் ஜோடி, யுவராஜ், ஜடேஜா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டனர். ஜடேஜா பந்தில் "சூப்பர் சிக்சர் அடித்த ஹபீஸ், "டுவென்டி-20 அரங்கில் தனது 3வது அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த போது இஷாந்த் "வேகத்தில் ஹபீஸ் (61) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மாலிக், தனது 3வது "டுவென்டி-20 அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
"திரில் வெற்றி: டிண்டா வேகத்தில் கம்ரான் அக்மல் (1) அவுட்டானார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. ரவிந்திர ஜடேஜா பந்துவீசினார். முதல் மூன்று பந்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்டன. நான்காவது பந்தில் மாலிக் ஒரு "சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மாலிக் (57), அப்ரிதி (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஆட்ட நாயகன் விருதை முகமது ஹபீஸ் வென்றார்.
இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி டிச. 28ல் ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது.
புவனேஷ் அபாரம்
நேற்று, இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், 22, அறிமுக வீரராக களமிறங்கினார். உ.பி., மாநிலம் கான்பூரில் 1990ல் பிறந்த இவர், பாகிஸ்தான் அணியை திணறடித்தார். வேகத்தில் மிரட்டிய இவர், 4 ஓவரில் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து முத்திரை பதித்தார்.
முதல் வெற்றி
நேற்று, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி, "டுவென்டி-20 அரங்கில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை இவ்விரு அணிகள் 4 போட்டியில் மோதின. இதில், இந்தியா 3, பாகிஸ்தான் ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.
இஷாந்த்-கம்ரான் மோதல்
நேற்று 18வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, முதல் பந்தில் ஹபீசை அவுட்டாக்கினார். பின், 4வது பந்தை மாலிக் தூக்கி அடிக்க, அதனை ஜடேஜா அருமையாக "கேட்ச் பிடித்தார். இப்பந்து குறித்து மாலிக் சந்தேகம் கிளப்ப, 3வது அம்பயரிடம் கேட்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக அது, குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வீசப்பட்ட "நோ-பால் என அறிவிக்கப்பட, மாலிக் (47) கண்டம் தப்பினார். கடைசி இரண்டு பந்தை எதிர்கொண்ட கம்ரான் அக்மல், அதனை அடிக்க முடியாமல் திணறினார். "நோ பால் அதிர்ச்சியில் இருந்து மீளாத இஷாந்த், கம்ரான் அக்மலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக சகவீரர்கள் மற்றும் அம்பயர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின், 19வது ஓவரில் டிண்டா வீசிய பந்தை கம்ரான் அக்மல் தூக்கி அடிக்க, அதனை இஷாந்த் "கேட்ச் பிடித்து, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
சிகாகோ ரசிகர் வருத்தம்
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண, சிகாகோவில் இருந்து வந்துள்ளார் பாகிஸ்தான் ரசிகர் முகமது பஷிர். இரு அணிகள் நிறத்துடன் கூடிய "ஜெர்சி மற்றும் கொடியை மைதானத்துக்குள் கொண்டு செல்ல இவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த பஷிர் கூறுகையில்,"" போலீசாரின் நடவடிக்கை மிகவும் ஏமாற்றம் அளித்தது. பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் பலர் போட்டியை பார்க்க வந்தனர். தேசியக் கொடியுடன் வரும் அவர்களை தடுக்க வேண்டியது தானே, என்றார்.
ஏமாற்றம் அளித்த தோனி
இந்திய கேப்டன் தோனியின் உத்திகள் நேற்றும் ஏமாற்றம் அளித்தன. பிரதான சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. தவிர, புவனேஷ் குமார் 2 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய நிலையில், அவருக்கு "பிரேக் கொடுத்திருக்கலாம். ஆனால், தொடர்ந்து நான்கு ஓவர்களையும் வீசச் செய்தார். இதனால் கடைசி நேரத்தில் இவரை பயன்படுத்த முடியாமல் போனது.
இதே போல ரவிந்திர ஜடேஜாவின் முந்தைய ஓவரில் சோயப் மாலிக், ஹபீஸ் தலா ஒரு சிக்சர் அடித்தனர். மாலிக் களத்தில் இருந்த நிலையில், ஜடேஜாவிடம் கடைசி ஓவரை வீசச் சொன்னது வியப்பாக இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய மாலிக் மீண்டும் ஒரு சிக்சர் அடித்து அணிக்கு வெற்றித் தேடி தந்தார்.
நன்றி:தினமலர்
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20 தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடந்தது.
அஷ்வின் "அவுட்: இந்திய அணியில் தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், பியுஸ் சாவ்லா, பர்விந்தர் அவானா நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோருடன் அறிமுக வீரராக இளம் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணியில் 7.1 அடி உயரம் கொண்ட முகமது இர்பான் அறிமுகமானார். "டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ், "பீல்டிங் தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு கவுதம் காம்பிர், அஜின்கியா ரகானே ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. ஆரம்பத்தில் நிதானமாக ரன் சேர்த்த இவர்கள், பின் அதிரடிக்கு மாறினர். அஜ்மல் பந்தில் ரகானே இமாலய சிக்சர் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த போது அப்ரிதி "சுழலில் ரகானே (42) அவுட்டானார்.
விக்கெட் மடமட: மறுமுனையில் பொறுப்பாக ஆடிய காம்பிர், உமர் குல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட காம்பிர் (43), தன்விரின் துல்லிய "த்ரோவில் ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என ஆடினர். பொறுப்பற்ற "ஷாட் அடித்த தோனி(1), விராத் கோஹ்லி (9) ஏமாற்றினர். அப்ரிதி பந்தில் "சிக்சர் அடித்து ரன் கணக்கை துவக்கிய யுவராஜ் (10) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. "மிடில்-ஆர்டரில் ரெய்னா (10), ரோகித் சர்மா (2), ரவிந்திர ஜடேஜா (2) சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார் (6), அசோக் டிண்டா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் உமர் குல் 3, சயீத் அஜ்மல் 2 விக்கெட் கைப்பற்றினர்.
அபார பந்துவீச்சு: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, புவனேஷ்வர் குமார் "வேகத்தில் திணறியது. இவரது பந்துவீச்சில் நசிர் ஜாம்ஷெத் (2), அகமது ஷேசாத் (5), உமர் அக்மல் (0) வெளியேறினர். பாகிஸ்தான் அணி 3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 12 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது. பின் இணைந்த சோயப் மாலிக், கேப்டன் முகமது ஹபீஸ் ஜோடி பொறுப்பாக ஆடியது. நிதானமாக ரன் சேர்த்த இவர்கள், அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
ஹபீஸ் அரைசதம்: பின், அதிரடிக்கு மாறிய ஹபீஸ் - மாலிக் ஜோடி, யுவராஜ், ஜடேஜா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டனர். ஜடேஜா பந்தில் "சூப்பர் சிக்சர் அடித்த ஹபீஸ், "டுவென்டி-20 அரங்கில் தனது 3வது அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த போது இஷாந்த் "வேகத்தில் ஹபீஸ் (61) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மாலிக், தனது 3வது "டுவென்டி-20 அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
"திரில் வெற்றி: டிண்டா வேகத்தில் கம்ரான் அக்மல் (1) அவுட்டானார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. ரவிந்திர ஜடேஜா பந்துவீசினார். முதல் மூன்று பந்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்டன. நான்காவது பந்தில் மாலிக் ஒரு "சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மாலிக் (57), அப்ரிதி (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஆட்ட நாயகன் விருதை முகமது ஹபீஸ் வென்றார்.
இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி டிச. 28ல் ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது.
புவனேஷ் அபாரம்
நேற்று, இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், 22, அறிமுக வீரராக களமிறங்கினார். உ.பி., மாநிலம் கான்பூரில் 1990ல் பிறந்த இவர், பாகிஸ்தான் அணியை திணறடித்தார். வேகத்தில் மிரட்டிய இவர், 4 ஓவரில் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து முத்திரை பதித்தார்.
முதல் வெற்றி
நேற்று, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி, "டுவென்டி-20 அரங்கில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை இவ்விரு அணிகள் 4 போட்டியில் மோதின. இதில், இந்தியா 3, பாகிஸ்தான் ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.
இஷாந்த்-கம்ரான் மோதல்
நேற்று 18வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, முதல் பந்தில் ஹபீசை அவுட்டாக்கினார். பின், 4வது பந்தை மாலிக் தூக்கி அடிக்க, அதனை ஜடேஜா அருமையாக "கேட்ச் பிடித்தார். இப்பந்து குறித்து மாலிக் சந்தேகம் கிளப்ப, 3வது அம்பயரிடம் கேட்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக அது, குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வீசப்பட்ட "நோ-பால் என அறிவிக்கப்பட, மாலிக் (47) கண்டம் தப்பினார். கடைசி இரண்டு பந்தை எதிர்கொண்ட கம்ரான் அக்மல், அதனை அடிக்க முடியாமல் திணறினார். "நோ பால் அதிர்ச்சியில் இருந்து மீளாத இஷாந்த், கம்ரான் அக்மலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக சகவீரர்கள் மற்றும் அம்பயர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின், 19வது ஓவரில் டிண்டா வீசிய பந்தை கம்ரான் அக்மல் தூக்கி அடிக்க, அதனை இஷாந்த் "கேட்ச் பிடித்து, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
சிகாகோ ரசிகர் வருத்தம்
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண, சிகாகோவில் இருந்து வந்துள்ளார் பாகிஸ்தான் ரசிகர் முகமது பஷிர். இரு அணிகள் நிறத்துடன் கூடிய "ஜெர்சி மற்றும் கொடியை மைதானத்துக்குள் கொண்டு செல்ல இவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த பஷிர் கூறுகையில்,"" போலீசாரின் நடவடிக்கை மிகவும் ஏமாற்றம் அளித்தது. பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் பலர் போட்டியை பார்க்க வந்தனர். தேசியக் கொடியுடன் வரும் அவர்களை தடுக்க வேண்டியது தானே, என்றார்.
ஏமாற்றம் அளித்த தோனி
இந்திய கேப்டன் தோனியின் உத்திகள் நேற்றும் ஏமாற்றம் அளித்தன. பிரதான சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. தவிர, புவனேஷ் குமார் 2 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய நிலையில், அவருக்கு "பிரேக் கொடுத்திருக்கலாம். ஆனால், தொடர்ந்து நான்கு ஓவர்களையும் வீசச் செய்தார். இதனால் கடைசி நேரத்தில் இவரை பயன்படுத்த முடியாமல் போனது.
இதே போல ரவிந்திர ஜடேஜாவின் முந்தைய ஓவரில் சோயப் மாலிக், ஹபீஸ் தலா ஒரு சிக்சர் அடித்தனர். மாலிக் களத்தில் இருந்த நிலையில், ஜடேஜாவிடம் கடைசி ஓவரை வீசச் சொன்னது வியப்பாக இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய மாலிக் மீண்டும் ஒரு சிக்சர் அடித்து அணிக்கு வெற்றித் தேடி தந்தார்.
நன்றி:தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி
அப்போ...பாகிஸ்தான் பாக்கியஸ்தன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி
2 மே கேவலமான அணிகள் தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சறுக்கியது இந்திய அணி: பாக்., "திரில் வெற்றி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1](https://www.filepicker.io/api/file/se0wvuQbQEaINxl86Wsz+signature_1.gif)
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ‘திரில்’ வெற்றி
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
» ஐ.பி.எல் -2018 !!
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» சென்னை கிங்ஸ் "திரில்' வெற்றி *மும்பை அணி பரிதாபம்!!
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
» ஐ.பி.எல் -2018 !!
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» சென்னை கிங்ஸ் "திரில்' வெற்றி *மும்பை அணி பரிதாபம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|