புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது


   
   

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 5:00 pm

First topic message reminder :

ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!



ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.

இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 7:14 pm

ஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை




ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவிட்டது.

ஹரியானாவில், ஓம்பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சவுதலா உட்பட பலர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, தில்லி நீதிமன்றம் இன்று சவுதாலா உள்ளிட்டோருக்கு தண்டனையை அறிவித்தது. அதில், சவுதாலா உட்பட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த 2000ஆவது ஆண்டில் ஹரியானாவில் 3,206 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 7:16 pm

பெற்றோர்கள் சண்டையை பார்த்து மகள் மனமுடைந்து தற்கொலை



ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலைய சரகம் ஏ.வேப்பங்குலத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துராமலிங்கம். இவர் மகள் கிருஷ்ணவேணி (17)என்பவர் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 வகுப்பு படித்து வந்தார்., கிருஷ்ணவேணியின் பெற்றோர்களுக்கிடையே அடிக்கடி குடும்பதராறு ஏற்பட்டு சண்டை போட்டு வந்தார்களாம். அப்பொது முத்துராமலிங்கம் தனது மனையியை அடித்து உதைத்து கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்து கிருஷ்ணவேணி வந்தபோது அவரது தாயாரை வழக்கம்போல் தந்தை அடித்ததை பார்த்து வேதனை அடைந்தார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி சாக முடிவு செய்து தலைக்கு தேய்க்கும் தைலம் (விஷம்)குடித்து மயங்கி கிடந்தார்.

இதை கண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்து மயங்கி கிடந்த கிருஷணவேணியை முதுகளத்தூர் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி இறந்தார். .சம்பவம் குறித்து கடலாடி காவல் நிலையத்தில் புகார் செய்யபட்டது..இன்ஸ்பெக்டர் பிச்சையா உத்தரவில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார்,பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேணி சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 22, 2013 7:47 pm

தாயாரை வழக்கம்போல் தந்தை அடித்ததை பார்த்து வேதனை அடைந்தார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி சாக முடிவு செய்து தலைக்கு தேய்க்கும் தைலம் (விஷம்)குடித்து மயங்கி கிடந்தார்.

இதை கண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்து மயங்கி கிடந்த கிருஷணவேணியை முதுகளத்தூர் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி இறந்தார். . அழுகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 10:48 pm

செய்தி பதிந்ததற்கு நன்றி பவுன்




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 22, 2013 10:56 pm

Powenraj wrote:தாயாரை வழக்கம்போல் தந்தை அடித்ததை பார்த்து வேதனை அடைந்தார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி சாக முடிவு செய்து தலைக்கு தேய்க்கும் தைலம் (விஷம்)குடித்து மயங்கி கிடந்தார்.

இதை கண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்து மயங்கி கிடந்த கிருஷணவேணியை முதுகளத்தூர் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி இறந்தார். . அழுகை
RIP

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 31, 2013 8:14 am

பத்திரிகை சுதந்திர பட்டியலில் இந்தியா ரேங்க் சரிவு!

பத்திரிகை சுதந்திரம் குறித்த 179 நாடுகளின் பட்டியலில் இந்தியா 9 இடங்கள் கீழிறங்கி 140வது இடத்தில் உள்ளது. இது, கடந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரும் வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவுக்கும் இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்றுள்ளது.

உலக அளவிலான 2013ம் வருட பத்திரிகை சுதந்திர குறியீட்டு எண் அடிப்படையில் இந்தியா 140வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 இடங்கள் வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், இணையதள கருத்துச் சுதந்திரம் பறிப்பு, கருத்துகளுக்கு தணிக்கை உள்ளிட்ட காரணிகள் கடந்த வருடம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாம்.

சீனா ஒரு இடம் மேலேறி 173வது இடத்தில் உள்ளது. பத்திரிகை சுதந்திரம் விவகாரத்தில் வேறு எந்த முன்னேற்றமும் சீனாவில் ஏற்படவில்லை.

கடந்த வருடத்தில் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த நாடுகள் மூன்றுமே ஐரோப்பிய நாடுகளே. பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

துர்க்மேனிஸ்தான், வட கொரியா, எரித்ரியா நாடுகள் தொடர்ந்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, இணையதளக் கட்டுப்பாடுகள், கருத்து தணிக்கை, காஷ்மீர் மற்றும் சட்டீஸ்கரில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், பொதுவாக பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப் படுதல் போன்றவை இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப் படும்போது கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

ஆந்தை ரீபோர்டர்




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 01, 2013 8:35 am

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே விஸ்வரூபம் படத்துக்கு தடை: ஜெயலலிதா



சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இஸ்லாமிய அமைப்புகளும், நடிகர் கமலும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட சம்மதித்தால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை விரிவாக அளித்த பேட்டி விவரம்:

உளவுத் துறை மூலம் தகவல்: ""தமிழகத்தில் மட்டும் விஸ்வரூபம் திரைப்படம் 524 தியேட்டர்களில் திரையிட முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என 24 முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த கூட்டமைப்பினரும், தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்பினரும் அரசிடம் மனு அளித்திருந்தனர். இந்தப் பிரச்னை தொடர்பாக உள்துறைச் செயலாளரையும் சந்தித்துப் பேசி, படத்தைத் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

விஸ்வரூபம் படம் வெளியாக இருந்த தியேட்டர்கள் முன்பாக இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்தப் போராட்டங்கள் வன்முறைச் சம்பவங்களாக மாற வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவித்தன.

சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது என்பது, ஒரு சம்பவத்தை அனுமதித்து விட்டு அது வன்முறையாக மாறிய பிறகு அதைத் தடுத்து அமைதியான சூழலுக்கு வழிவகுப்பது அல்ல. ஒரு இடத்தில் பிரச்னைகள் உருவாகி வன்முறைச் சம்பவம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என உளவுத் துறை அறிக்கை அளிக்கும். அப்போது, வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதும், பொது அமைதியை காப்பதும் அரசின் கடமையாகும். அந்த வகையிலேயே விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டு விஷயத்தை தமிழக அரசு அணுகுகிறது.

போஸீஸ் பாதுகாப்பு சாத்தியமில்லை: விஸ்வரூபம் திரைப்படம் வெளியானால், 524 தியேட்டர்களுக்கும் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, சட்டம்-ஒழுங்கை பேண முடியும். ஆனால், இது நடைமுறையில் சாத்தியமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏனெனில் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த போலீஸ் பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 718. அதில் காலிப் பணியிடங்கள் 21 ஆயிரத்து 911. எனவே, இப்போதுள்ள நிலவரப்படி போலீஸாரின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 807. இதில், பொருளாதார குற்றப் பிரிவு, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இந்தப் பிரிவுகளில் பணியாற்றுவோரைக் கழித்து தமிழகத்தில் பணியாற்றும் மொத்த போலீஸாரின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 226. இந்த போலீஸாரைக் கொண்டே மாநிலத்திலுள்ள 7.28 கோடி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.

ஒரு தியேட்டரில் ஒரு ஷிப்ட்டில் 20 போலீஸாரை ஈடுபடுத்தும் வேளையில், மூன்று ஷிப்ட்களில் 60 பேரை ஈடுபடுத்த வேண்டி வரும். விஸ்வரூபம் வெளியாக இருந்த 524 தியேட்டர்களில் மூன்று ஷிப்ட்களிலும் 31 ஆயிரத்து 440 போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டிய சூழல் உருவாகும். மேலும், ரோந்துக் காவல் படையினரும், பதற்றமான கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கூடுதல் போலீஸாரையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதன்படி, 524 தியேட்டர்களிலும் மூன்று ஷிப்ட்களிலும் மொத்தம் 56 ஆயிரத்து 440 போலீஸாரை பாதுகாப்புப் பணிக்காக அனுப்ப வேண்டிய நிலை உருவாகும்.இரண்டு அல்லது மூன்றாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் 524 தியேட்டர்களுக்கு 56 ஆயிரத்து 440 போலீஸாரை பாதுகாப்புப் பணியில் எவ்வாறு ஈடுபடுத்த முடியும் என்றார் அவர்.

பேச்சுவார்த்தைக்கு உதவத் தயார்:
இஸ்லாமிய அமைப்பினரும், நடிகர் கமலும் அமர்ந்து பேசி சுமுக உடன்பாட்டுக்கு வர சம்மதித்தால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முதல்வர் கூறியதாவது: ""விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டவுடன், தமிழக அரசை நடிகர் கமலஹாசன் அணுகியிருந்தால் இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், அவர் உடனடியாக நீதிமன்றத்தை நாடினார். அரசுக்கு எதிராக மனுதாக்கல் செய்தார். தமிழகத்தில் மட்டும் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படம் வெளியிடப்பட்ட ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மைசூரில் தியேட்டருக்குத் தீ வைத்த போராட்டக்காரர்கள், கருவிகளைச் சேதப்படுத்தினர். புதுச்சேரியிலும் இந்தப் படம் தடை செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் எப்படித் திரையிட முடியும்?'' என்று கேள்வி எழுப்பினார் ஜெயலலிதா.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 01, 2013 8:40 am

மு.க. அழகிரி மீது பிரதமர் அதிருப்தி ?



முக்கிய நேரங்களில் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி பங்கேற்காமல் இருக்கும் செயலுக்கு மூத்த அமைச்சர்கள் சிலரிடம் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், மாதத்தின் பெரும்பாலான நாள்களை மதுரையில் கழிப்பதை மு.க. அழகிரி வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அங்கிருந்தபடி அமைச்சகத்தின் அலுவல் பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இணை அமைச்சர் மூலம் பணிகள்: அவரது துறையில் கேபினட் அமைச்சர் மேற்கொள்ள வேண்டிய பெரும்பாலான பணிகளை மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா நிறைவேற்றி வருகிறார். இதனால், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறைகளில் கேபினட் அமைச்சராக அழகிரி பெயரளவுக்குத்தான் செயல்படுகிறார் என்று பரவலாக மத்திய அரசு வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகம் சார்ந்த சில பிரச்னைகளை மத்திய அமைச்சரவையோ, அமைச்சர்கள் குழுவோ விவாதிக்கும்போது அவற்றில் பங்கேற்பதை அழகிரி தவிர்க்கும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

அழகிரி இல்லை: தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிலர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் "காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் விவகாரம் தொடர்பாக அலுவல் பூர்வமற்ற முறையில் பேசலாம்' என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

அப்போது அவர்களிடம், ""தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நீங்கலாக, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி ஆகியோர் இல்லை. எனவே, இந்தப் பிரச்னை குறித்து பின்னர் விவாதிக்கலாம்'' என்று பிரதமர் கூறியதாகத் தெரிகிறது.

"ஹிந்து' நாளிதழ் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அதே நேரத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இதனால், அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க இயலாததைப் பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்து விட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி.கே. வாசன் கலந்து கொண்டார்.

பிரதமர் அதிருப்தி: ஆனால், மு.க. அழகிரி தலைநகரிலேயே இல்லை என்ற தகவலை பிரதமரிடம் அவரது அலுவலக அதிகாரிகள் கூறினர். இதைக் கேட்டதும், ""முக்கியமான நேரத்தில் நடைபெறும் கூட்டங்களில் மத்திய அமைச்சராக இருப்பவர் தில்லியில் இருப்பதைத் தவிர்ப்பது துரதிருஷ்டவசமானது'' என மூத்த அமைச்சர்கள் சிலரிடம் பிரதமர் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

"காவிரிப் பிரச்னை தொடர்பாக கடந்த மாதங்களில் தமிழகம், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் பேச நினைத்துள்ளார். அப்போதும் மு.க. அழகிரி தலைநகரில் இல்லாததால், அந்த முயற்சியைப் பிரதமர் கைவிட்டார். இல்லையென்றால் கடந்த சில மாதங்களாக அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை வெளியிடும் விவகாரத்தில் மத்திய அரசு இந்நேரம் ஒரு முடிவை எடுத்திருக்கும்' என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சேது திட்டம்: காவிரி விவகாரம் மட்டுமின்றி சேது சமுத்திர கால்வாய் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையைத் தெரிவிக்காமல் இருப்பதற்கும் அழகிரியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக கடந்த 2008 முதல் 2012-ஆம் ஆண்டுவரை சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே. பச்சௌரி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதன் அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், ""மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவது பொருளாதார, சுற்றுச்சூழல் ரீதியாக சாத்தியமில்லை'' என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, பச்சௌரி குழு அறிக்கை மீது முடிவு செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அப்போதே இரண்டு மாத அவகாசம் வழங்கியிருந்தது. இந்த கால கட்டத்தில், சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுடன் விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டார். ஆனால், அந்த நேரத்திலும் மு.க. அழகிரி தில்லியில் இல்லை. பல்வேறு சொந்தப் பிரச்னைகளால் அவர் தில்லி வரவில்லை என்று அப்போது கூறப்பட்டது.

இதையடுத்து, கடந்த செப்டம்பரில் சேதுத் திட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீண்டும் தனது நிலையைத் தெரிவிக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியது. இதனால், மேலும் இரண்டு மாதங்களுக்கு அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன் பிறகும் சேதுத் திட்டம் குறித்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அழகிரி இடம்பெறும்போது ஆலோசிக்கலாம் என்று பிரதமர் கருதினார். ஆனால், அவரது எண்ணம் ஈடேறவில்லை. இது போன்ற நடவடிக்கைகளால்தான் அழகிரி மீது பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 01, 2013 8:42 am

புதிய தலைமைச் செயலக கட்டடம்: அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி



தமிழக புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

"புதிய தலைமைச் செயலக கட்டடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் முடிவால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை; இது தொடர்பாக, விரிவான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது. அரசின் நடவடிக்கையை எதிர்க்கும் வாதம் ஏற்கும்படியாக இல்லை' என்று தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், நீதிபதிகள் அனில் ஆர். தவே, விக்ரம் ஜித் சென் ஆகியோர் கொண்ட அமர்வு தனது உத்தரவில் கூறியது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செயய்ப்பட்ட அந்த மனு, வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் ஆர். வீரமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா, "தற்போதைய தலைமைச் செயலகத்தில் போதிய இடமில்லை என்பதால் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று 2003-ல் கூறியது தற்போதைய முதல்வர் ஜெயலலிதாதான். பிறகு, ஆட்சிக்கு வந்த திமுக ரூ. 551 கோடி செலவில் புதிய தலைமைச் செயலக கட்டடத்தைக் கட்டியது.

அதை மருத்துவமனையாக மாற்ற ரூ. 28 கோடி செலவாகும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தை புனரமைக்கவும் ரூ. 28 கோடி செலவாகும்.

மேலும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தின் 2 கி.மீ. தொலைவில் ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனை உள்ளது.

சமச்சீர் கல்வி திட்டத்தை திமுக கொண்டு வந்த காரணத்தால் அதை தற்போதைய தமிழக அரசு கைவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து மீண்டும் அந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரத்தில், திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக, புதிய தலைமைச் செயலக கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படுகிறது. இதனால், மக்கள் பணம் விரயமாகியுள்ளது' என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "சமச்சீர் கல்வி விவகாரத்தில் ஒட்டு மொத்தமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டதால், நீதிமன்றம் தலையிட்டது. இந்த வழக்கு, அரசின் கொள்கை முடிவு குறித்தது. இந்த விவகாரங்களை, வேறு மன்றங்களில் முன்வைக்கலாம்' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 01, 2013 9:23 am

//திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக, புதிய தலைமைச் செயலக கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படுகிறது. இதனால், மக்கள் பணம் விரயமாகியுள்ளது//

இது உண்மைதானே! தலைவியின் தான்தோன்றித்தனமான முடிவுகளில் இதுவும் ஒன்று! பாதிப்பு மக்களுக்கே!



தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக