புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
Page 7 of 10 •
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!
ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.
இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி
ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!
ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.
இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளது: ராணுவ தளபதி பிக்ரம் சிங்
இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளது என்று ராணுவ தளபதி பிக்ரம் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்திய வீரர்கள் இரண்டு பேரை பாகிஸ்தான் கொன்றது கொடூரமானது. பாகிஸ்தான் கூறுவது போல 6-ம் தேதி இந்தியா எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டே இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
சரியான நேரத்தில் சரியான இடத்தில் பதிலடி கொடுக்க இந்தியாவுக்கும் உரிமை உண்டு. மேலும் பாகிஸ்தானின் நடவடிக்கை மன்னிக்க முடியாது என்றும் இது போர் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். துண்டிக்கப்பட்ட ஹேமராஜின் தலையை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
தினமணி
இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளது என்று ராணுவ தளபதி பிக்ரம் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்திய வீரர்கள் இரண்டு பேரை பாகிஸ்தான் கொன்றது கொடூரமானது. பாகிஸ்தான் கூறுவது போல 6-ம் தேதி இந்தியா எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டே இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
சரியான நேரத்தில் சரியான இடத்தில் பதிலடி கொடுக்க இந்தியாவுக்கும் உரிமை உண்டு. மேலும் பாகிஸ்தானின் நடவடிக்கை மன்னிக்க முடியாது என்றும் இது போர் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். துண்டிக்கப்பட்ட ஹேமராஜின் தலையை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
திருவையாறில் தமிழிசை விழா இன்று தொடக்கம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசர் கல்லூரித் திடலில் 42 ஆம் ஆண்டு தமிழிசை விழா இன்று தொடங்கவுள்ளது.
தமிழிசை மன்றம் சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த விழாவை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் தொடக்கி வைக்கிறார்.
தொடக்க நாளில் பெருவங்கியம், திருமுறை விண்ணப்பம், பாட்டு, பரதநாட்டியம், வயலின் இசை உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளும், பட்டிமன்றமும் நடைபெறவுள்ளன.
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜன. 15) மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ச.சு. பழநிமாணிக்கம் விருதுகள் வழங்கிப் பேசுகிறார். மேலும், இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதில், திரைப்படப் பாடகர் வி.ஆர். மாணிக்க விநாயகம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மூன்றாம் நாளான புதன்கிழமை (ஜன.16) சற்குரு தியாக பிர்ம சபா தலைவரும், தமிழிசை மன்றக் காப்பாளருமான ஜி.ஆர். மூப்பனார் சிறப்பு விருதுகள் வழங்கி பாராட்டுரையாற்றுகிறார்.
பின்னர், திரைப்படப் பாடகர் உன்னிகிருஷ்ணன் பாட்டும், கும்கி திரைப்படப் புகழ் வேடந்தாங்கல் மகிழினி மணிமாறன் குழுவினரின் நாட்டுப்புற இசை விருந்தும் நடைபெறவுள்ளது.
தினமணி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசர் கல்லூரித் திடலில் 42 ஆம் ஆண்டு தமிழிசை விழா இன்று தொடங்கவுள்ளது.
தமிழிசை மன்றம் சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த விழாவை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் தொடக்கி வைக்கிறார்.
தொடக்க நாளில் பெருவங்கியம், திருமுறை விண்ணப்பம், பாட்டு, பரதநாட்டியம், வயலின் இசை உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளும், பட்டிமன்றமும் நடைபெறவுள்ளன.
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜன. 15) மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ச.சு. பழநிமாணிக்கம் விருதுகள் வழங்கிப் பேசுகிறார். மேலும், இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதில், திரைப்படப் பாடகர் வி.ஆர். மாணிக்க விநாயகம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மூன்றாம் நாளான புதன்கிழமை (ஜன.16) சற்குரு தியாக பிர்ம சபா தலைவரும், தமிழிசை மன்றக் காப்பாளருமான ஜி.ஆர். மூப்பனார் சிறப்பு விருதுகள் வழங்கி பாராட்டுரையாற்றுகிறார்.
பின்னர், திரைப்படப் பாடகர் உன்னிகிருஷ்ணன் பாட்டும், கும்கி திரைப்படப் புகழ் வேடந்தாங்கல் மகிழினி மணிமாறன் குழுவினரின் நாட்டுப்புற இசை விருந்தும் நடைபெறவுள்ளது.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: ஓரிரு வாரங்களில் அனைவருக்கும் விநியோகம்
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841
தினமணி
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!
உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான். அமெரிக்காவைவிட எங்கள் நாடு சிறந்தது என பிரபல ஆக்ஷன் நடிகர் ஜாக்கிசான் கூறியுள்ளார்,
அமெரிக்க ஊடகங்கள் சமீபகாலமாக சீன அரசுக்கு எதிராகவும், சீனாவுக்கு எதிராகவும் சீன அரசியல் தலைவர்களை இகழ்ந்தும் சீனாவில் ஊழல் மலிந்து விட்டது. அந்த நாட்டின் பிரதமர் வென்ஜியாபாவோ உள்ளிட்ட தலைவர்கள் ஊழல் மூலம் சொத்துக்களை குவித்துள்ளனர் என தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்க ஊடகங்களின் இச்செய்திகள் குறித்து நடிகர் ஜாக்கிசானிடம் கருத்து கேட்கப்பட்டபோது, அவர் அமெரிக்காவுக்கு எதிராக ஆவேசத்துடன் கருத்துத் தெரிவித்தார். ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில்...
உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான், சீனா அல்ல. இங்கும் ஊழல் பிரச்சினை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவில் ஊழல் குறைவுதான். சீனர்கள் தங்களை மட்டுமே விமர்சனம் செய்து கொள்வர், வெளிநாட்டினர்களை அவர்கள் ஒருபோதும் இகழ்வதோ விமர்சனம் செய்வதோ இல்லை. அந்த வகையில் எங்கள் நாடு மிக சிறந்தது என்று அவர் கூறினார்.
சங்கை ரிதுவான்
உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான். அமெரிக்காவைவிட எங்கள் நாடு சிறந்தது என பிரபல ஆக்ஷன் நடிகர் ஜாக்கிசான் கூறியுள்ளார்,
அமெரிக்க ஊடகங்கள் சமீபகாலமாக சீன அரசுக்கு எதிராகவும், சீனாவுக்கு எதிராகவும் சீன அரசியல் தலைவர்களை இகழ்ந்தும் சீனாவில் ஊழல் மலிந்து விட்டது. அந்த நாட்டின் பிரதமர் வென்ஜியாபாவோ உள்ளிட்ட தலைவர்கள் ஊழல் மூலம் சொத்துக்களை குவித்துள்ளனர் என தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்க ஊடகங்களின் இச்செய்திகள் குறித்து நடிகர் ஜாக்கிசானிடம் கருத்து கேட்கப்பட்டபோது, அவர் அமெரிக்காவுக்கு எதிராக ஆவேசத்துடன் கருத்துத் தெரிவித்தார். ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில்...
உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான், சீனா அல்ல. இங்கும் ஊழல் பிரச்சினை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவில் ஊழல் குறைவுதான். சீனர்கள் தங்களை மட்டுமே விமர்சனம் செய்து கொள்வர், வெளிநாட்டினர்களை அவர்கள் ஒருபோதும் இகழ்வதோ விமர்சனம் செய்வதோ இல்லை. அந்த வகையில் எங்கள் நாடு மிக சிறந்தது என்று அவர் கூறினார்.
சங்கை ரிதுவான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மும்பை: குப்பைத்தொட்டியில் கிடந்த 6 மாத சிசுக்கரு
மும்பையின் புறநகர் பகுதியான மலாட் என்ற இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த பொருளை தெரு நாய்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சுவைக்க சண்டையிட்டுக்கொண்டிருந்தன. நாய்களின் தொல்லையை தாங்கமுடியாத பொதுமக்கள், அவற்றை விரட்டிவிட்டு, கவரினுள் இருந்த பொருளைப் பார்த்து திகைத்துப்போயினர்.
கவரினுள் கருச்சிதைவு செய்யப்பட்ட 6 மாத பெண் சிசுவின் உயிரற்ற உடல், ரத்த பிண்டமாக கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்வாணி பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான் பார்க்கும் உலகம்
மும்பையின் புறநகர் பகுதியான மலாட் என்ற இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த பொருளை தெரு நாய்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சுவைக்க சண்டையிட்டுக்கொண்டிருந்தன. நாய்களின் தொல்லையை தாங்கமுடியாத பொதுமக்கள், அவற்றை விரட்டிவிட்டு, கவரினுள் இருந்த பொருளைப் பார்த்து திகைத்துப்போயினர்.
கவரினுள் கருச்சிதைவு செய்யப்பட்ட 6 மாத பெண் சிசுவின் உயிரற்ற உடல், ரத்த பிண்டமாக கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்வாணி பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான் பார்க்கும் உலகம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஜன.20ல் போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம்
வரும் ஜன. 20ம் தேதி போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 40,000 -க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்/ அரசு மருத்துவமனைகள் / சத்துணவு மையங்கள்/ பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதன் முக்கிய அம்சங்கள்:
சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 20-1-2013 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு தவணையும் மீண்டும் 24-2-2013 (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.
முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இலங்கை வாழ் அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்து வாழ் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணம் மேற்கொள்ளும் மற்றும் தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு:
பல்ஸ் போலியோ நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1013 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 771 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
சொட்டு மருந்து முகாமில் ஈடுபடும் பணியாளர்கள் :
20-01-2013 அன்று போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள், ரோட்டரி இண்டர்நேஷனல் மற்றும் அரிமா சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.
தமிழ் நாடு போலியோ இல்லாத 9- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால் தமிழ் நாடு 9-வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். இத் தருணத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் முக்கியத்துவத்தை அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் விளம்பரம் செய்ய வேண்டும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி
வரும் ஜன. 20ம் தேதி போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 40,000 -க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்/ அரசு மருத்துவமனைகள் / சத்துணவு மையங்கள்/ பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதன் முக்கிய அம்சங்கள்:
சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 20-1-2013 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு தவணையும் மீண்டும் 24-2-2013 (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.
முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இலங்கை வாழ் அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்து வாழ் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணம் மேற்கொள்ளும் மற்றும் தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு:
பல்ஸ் போலியோ நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1013 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 771 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
சொட்டு மருந்து முகாமில் ஈடுபடும் பணியாளர்கள் :
20-01-2013 அன்று போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள், ரோட்டரி இண்டர்நேஷனல் மற்றும் அரிமா சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.
தமிழ் நாடு போலியோ இல்லாத 9- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால் தமிழ் நாடு 9-வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். இத் தருணத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் முக்கியத்துவத்தை அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் விளம்பரம் செய்ய வேண்டும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
குறைந்து வரும் பருவ மழை: நெருக்கடியில் விவசாயிகள்
பருவ மழை குறைந்து வருவதால் தாமிரவருணி பாசனத்தில் விவசாயம் செய்வதற்கான சூழல் மாறி வருகிறது. ஆகவே விவசாயிகள் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பருவ மழை கடந்த சில வருடங்களாக பொய்த்து வருகிறது. மேலும் பருவம் தவறி நெல் அறுவடை சமயத்தில் மழை பெய்வதனால் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 2012 ம் வருடம் தென்மேற்கு பருவ மழை பொய்த்த காரணத்தால் தாமிரவருணி பாசனத்தில் கார் பருவம் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
எதிர்பார்த்தவாறு வடகிழக்கு பருவ மழையும் கை கொடுக்காததால் இப்பாசனத்தில் விவசாயிகள் முழுமையாக சாகுபடி செய்யவில்லை. மூன்றில் ஒரு பங்கு மட்டுமே விவசாயிகள் நடவு செய்துள்ளனர். மானாவாரி குளங்கள் மூலம் பாசனம் நடைபெறவில்லை. இதனிடையே விவசாயிகள் இலை கருகல் போன்ற நோயினால் பயிரை காப்பாற்ற போராடி வருகின்றனர்.
போதிய மழை பெய்யாத காரணத்தினால் இம்மாவட்டத்தில் அணைகளில் இருந்து நேரடியாக பாசனம் பெறும் பகுதியை தவிர பிற பகுதியில் வறட்சி காணப்படுகிறது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நெற்பயிர் தவிர சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைப்பயிரை காப்பாற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 904.75 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் தினம் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது. பிசான சாகுபடிக்காக வரும் மார்ச் மாதம் இறுதி வரை அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் கோடையை சமாளிக்க குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
வெள்ளிக்கிழமை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.20 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.15 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 76.05 அடியாகவும் இருந்தது. அணைகளின் நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 374.38 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 26 கனஅடியும் நீர்வரத்து உள்ளது.
விவசாயிகள் கோரிக்கை: பருவ மழை பொய்த்து விவசாயம் குறைந்து வருவதால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையினால் விவசாயிகள் அடுத்து ஒரு வருடத்திற்கு வாழ்த்தை நடத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தி செலவினம் 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் விவசாயம் நடைபெறவில்லை. விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். விவசாயம் குறைந்து வருவதால் தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் தேடி செல்லும் உள்ளது. பிழைப்புத் தேடி வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர். ஆகவே தாமிரவருணி பாசன விவசாயிகளின் நிலையை உணர்ந்து அரசு நிவாரண உதவி அளிக்க முன் வர வேண்டும் என்றார் மாவட்ட விவசாயிகள் சங்க செயலர் ஆர். கசமுத்து.
தினமணி
பருவ மழை குறைந்து வருவதால் தாமிரவருணி பாசனத்தில் விவசாயம் செய்வதற்கான சூழல் மாறி வருகிறது. ஆகவே விவசாயிகள் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பருவ மழை கடந்த சில வருடங்களாக பொய்த்து வருகிறது. மேலும் பருவம் தவறி நெல் அறுவடை சமயத்தில் மழை பெய்வதனால் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 2012 ம் வருடம் தென்மேற்கு பருவ மழை பொய்த்த காரணத்தால் தாமிரவருணி பாசனத்தில் கார் பருவம் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
எதிர்பார்த்தவாறு வடகிழக்கு பருவ மழையும் கை கொடுக்காததால் இப்பாசனத்தில் விவசாயிகள் முழுமையாக சாகுபடி செய்யவில்லை. மூன்றில் ஒரு பங்கு மட்டுமே விவசாயிகள் நடவு செய்துள்ளனர். மானாவாரி குளங்கள் மூலம் பாசனம் நடைபெறவில்லை. இதனிடையே விவசாயிகள் இலை கருகல் போன்ற நோயினால் பயிரை காப்பாற்ற போராடி வருகின்றனர்.
போதிய மழை பெய்யாத காரணத்தினால் இம்மாவட்டத்தில் அணைகளில் இருந்து நேரடியாக பாசனம் பெறும் பகுதியை தவிர பிற பகுதியில் வறட்சி காணப்படுகிறது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நெற்பயிர் தவிர சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைப்பயிரை காப்பாற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 904.75 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் தினம் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது. பிசான சாகுபடிக்காக வரும் மார்ச் மாதம் இறுதி வரை அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் கோடையை சமாளிக்க குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
வெள்ளிக்கிழமை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.20 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.15 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 76.05 அடியாகவும் இருந்தது. அணைகளின் நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 374.38 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 26 கனஅடியும் நீர்வரத்து உள்ளது.
விவசாயிகள் கோரிக்கை: பருவ மழை பொய்த்து விவசாயம் குறைந்து வருவதால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையினால் விவசாயிகள் அடுத்து ஒரு வருடத்திற்கு வாழ்த்தை நடத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தி செலவினம் 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் விவசாயம் நடைபெறவில்லை. விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். விவசாயம் குறைந்து வருவதால் தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் தேடி செல்லும் உள்ளது. பிழைப்புத் தேடி வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர். ஆகவே தாமிரவருணி பாசன விவசாயிகளின் நிலையை உணர்ந்து அரசு நிவாரண உதவி அளிக்க முன் வர வேண்டும் என்றார் மாவட்ட விவசாயிகள் சங்க செயலர் ஆர். கசமுத்து.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தகவலுக்கு மிக்க நன்றி முஹமத்
- Sponsored content
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 10
|
|