ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்!

Go down

சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Empty சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்!

Post by சாமி Wed Dec 26, 2012 8:20 am

தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜபண்டிதர் இலக்கண இலக்கியப் பெரும்புலவர்களான விசாகப்பெருமாள் ஐயர், சரவணப்பெருமாள் ஐயர் ஆகியோரின் மாணாக்கர்களுள் ஒருவர். அப்பெரும்புலவர் இருவரும் சென்னை மாநிலக் கல்லூரி பள்ளிக்கூடமாக இருந்த காலத்தில் அதில் பணியாற்றியவர்கள். சந்திரசேகர கவிராஜபண்டிதர் பல்லாண்டுகள் சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரிசிரபுரம் சி. தியாகராச செட்டியார் ஓய்வுபெற்ற பின் ஆறுமாத காலம் கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியராக வேலை பார்த்துள்ளார். அவர் உ.வே.சாமிநாதையரிடம் மிகுந்த அன்பு கொண்டவர். "தமிழ்த் தாதா' தம் ஐயங்கள் சிலவற்றை அவரிடம் கேட்டறிந்தது உண்டு என்று குறித்துள்ளார் என்றால், அவர் எப்படிப் பட்ட அறிஞர் என்பதனைச் சொல்லவும் வேண்டுமா?

சந்திரசேகர கவிராஜ பண்டிதருக்குப் பழம் புலவர்களின் வரலாறுகளை அறிவதிலும் முன்னோர் பாடல்களைத் திரட்டுவதிலும் மிகுந்த ஆர்வம். பல்லாண்டுகள் உழைத்துத் "தனிப்பாடல் திரட்டு' ஒன்றை வெளியிட்டார். அத்திரட்டில் இடம்பெற்றுள்ள பாடல்களில் ஒன்று "ஊரைச் சுடுமோ' என்பது. அவர் மிகவும் முயன்று சேகரித்துப் பதிப்பித்த பாட்டு அது.

அது குறித்து உ.வே.சா. எழுதியுள்ள "பிச்சைப்பாட்டு' என்னும் கட்டுரையில் தெரிவிக்கும் செய்திகள் சுவையானவை.

"கவிராஜ பண்டிதர் வடசென்னைப் பகுதியில் வண்ணார்பேட்டையில் சஞ்சீவிராயன் தெருவில் வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் ஓரளவு தமிழ் அறிந்த இராப் பிச்சைக்காரன் ஒருவன் தெம்மாங்கு, வெண்ணிலாப் பாட்டு, பராபரக்கண்ணி முதலிய தமிழ்ப் பாட்டுகளைப் பாடிப் பிச்சை கேட்பது வழக்கம். அன்று பால்போல் நிலவொளி காய்ந்து கொண்டிருந்தது. அவன் நிலவு பற்றிய பாடல் ஒன்றை இசையோடு பாடிச் சென்றான். "ஊரைச் சுடுமோ' என்னும் தொடரையே திரும்பத் திரும்பப் பாடியபடி அடுத்தத் தெருவிற்குள் நுழைந்தான். அத்தொடரைக் கேட்டு மயங்கிய கவிராஜ பண்டிதர் அவனைத் தொடர்ந்து சென்று பாட்டு முழுவதையும் சொல்லுமாறு வேண்டினார். அவன், "உலகந் தனைச்சுடுமோ; ஆரைச் சுடுமோ அறியேனே' என்னும் அடுத்த இரண்டு தொடர்களைப் பாடினான்.

அதற்குமேல் பாட்டு நினைவுக்கு வரவில்லை. அவன் பாடியதைக் கொண்டு அப்பாட்டு ஓர் இனிய வெண்பா என்பதனை உணர்ந்தார். பாட்டு முழுவதும் கிடைக்கவில்லையே என்று அவர் உள்ளம் ஏங்கியது. எஞ்சிய பகுதி நினைவுக்கு வந்தால் தெரிவிக்குமாறு சொல்லிவிட்டு வருத்தத்துடன் திரும்பினார். அவனும் "சரி'யென்று தலையாட்டிவிட்டுச் சென்றான்.

நான்கு நாள் கழிந்திருக்கும். அவன் பாட்டு முழுவதையும் பாடியவாறு பிச்சைகேட்டு வந்தான். அவருக்குப் புதையல் கிடைத்தது போல் மகிழ்ச்சி; பரிசு கொடுத்து அவனைப் பாராட்டினார்.

ஊரைச் சுடுமோ உலகந் தனைச்சுடுமோ
ஆரைச் சுடுமோ அறியேனே - நேரே
பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீர் இந்த
நெருப்புவட்ட மான நிலா''


என்பதே அப்பாட்டு. பின்பு அதனைத் தாம் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டில் சேர்த்துக் கொண்டார். அது காதலுற்ற பெண்ணொருத்தியின் பேச்சு. "மலை போன்ற வட்டமான மார்பகங்களைக் கொண்ட மங்கையர்களே, நெருப்பை வீசும் இந்த வட்டமான நிலவு ஊர் மக்களைச் சுடுமா? உலகத்தில் உள்ளவரையே எரித்துவிடுமா? யாரைச் சுடுமோ தெரியவில்லையே?' என்று தன் தோழியைப் பார்த்து வினவுகிறாள். "இது விரகதாபத்தால் வருந்திய தலைவி ஒருத்தி நிலவொளியை வெறுத்துக் கூறியது' என்று பாட்டு எழுந்த சூழலை உ.வே.சா., குறித்துள்ளார். யார் பாடியது என்னும் குறிப்பு அப்பொழுது தெரியவில்லை போலும்!

1945-ஆம் ஆண்டையொட்டி, உலகநாத முதலியார் என்பவர் தம் "பி.நா. சிதம்பர முதலியார் அண்டு பிரதர்ஸ் வித்தியா ரத்நாகரம் பிரஸ்' வாயிலாக உரையோடு "தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலினை இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். பாடல்களுக்கு உரையினைத் திருச்சுழியல் ஆஸ்திக மத சித்தாந்த அவதானி எம். வீரவேற்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதில், ஊரைச் சுடுமோ என்னும் பாட்டு இடம்பெற்றுள்ளது.

இன்றைக்குச் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை நாட்டில் பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் வாழ்ந்தார். அவர் பாடிய தனிப்பாடல்களுள் ஒன்றே இப்பாடல். ஆசிரியர் யார் என்று தெரியாத நிலையில், அதன் சுவையில் உள்ளம் பறிகொடுத்த சந்திரசேகர கவிராஜபண்டிதர்க்குத் தம்மைச் "சொக்க வைத்த வெண்பாவை' இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பது தெரிந்திருந்தால், எப்படி ஆனந்தக் கூத்தாடியிருப்பார் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை.

(நன்றி - தினமணி - முனைவர் தெ. ஞானசுந்தரம்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum