புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம் Poll_c10சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம் Poll_m10சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம் Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம் Poll_c10சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம் Poll_m10சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம் Poll_c10 
2 Posts - 18%
heezulia
சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம் Poll_c10சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம் Poll_m10சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 26, 2012 11:17 am

தியேட்டரை இருட்டறையாக்கிவிட்டு சட்டம் ஒரு இருட்டறை படம் ஆரம்பித்தவுடனேயே டைம் மிஷனில் 30 வருடங்களுக்கு முன்னால் சென்று விடுவோம். அப்புறம் தாய்லாந்தில் தமன்குமார்- பியா வுக்கு இடையிலான மோதல் அதனைத் தொடந்து காதல் – அந்த காட்சிகளில் மறுபடியும் 2012 க்கு வந்து விடலாம். அந்தக் காட்சிகளில் மட்டும் இன்றைய தலைமுறை இயக்குனர் சினேஹா பிரிட்டோவின் கைவண்ணம் பளிச்சிடுகிறது. இதுவரை எந்தத் தமிழ்ப்படத்திலும் பார்க்க முடியாத அளவிற்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் தாய்லாந்தை பறந்து பறந்து சுற்றிக்காட்டியிருக்கிறார். தாய்லாந்துப் பெண்கள் கூட இன்னும் கொஞ்சம் இறக்கமாக டிரவுசர் போட்டிருப்பார்கள் போலும், அதில் பியா அவர்களை “முந்துகிறார்”.
:-
ஏற்கனவே, ஆச்சிரியங்கள் படத்தில் கேட்ட தமனின் குரல் இன்னும் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை அடங்குவதற்குள் சட்டம் ஒரு இருட்டறையிலும் மனிதர் பேச ஆரம்பித்து விடுகிறார். அவரது கணீர் குரலுக்கு ஒரு காந்த சக்தி இருக்கிறது. எதிர்காலத்தில் உடல்மொழியிலும் கவனம் செலுத்திக் கொஞ்சம் உணர்ச்சிகளையும் வெளிக்காட்டத் தெரிந்து நடித்தால் சிறந்த நடிகராக ஒரு ரவுண்டு வரலாம்.
:-
போட்டோ எடுப்பதை ஹாபியாகக் கொண்ட பியா, கூலிக்கு மாரடிக்கும் ராதாரவி அண்ட் கோ செய்யும் கொலையை, மூடினை மாற்றிக் கொண்டு அதவாது பியா மூடினை அல்ல, அவரது கேமராவின் மூடினை வீடியோ மூடுக்கு மாற்றிக் கொண்டு வீடியோ எடுத்து விட, அதனால் ராதாரவி அண்ட் கோ போலீஸில் மாட்டிக் கொள்ள சிறையில் இருந்து கொண்டே வெளியேவந்து – குற்றம் நீரூபிக்க முடியாதவாறு – பியாவைப் போட்டுத்தள்ள, அதேடெக்னிக்கைப் பயன்படுத்தி தமன் ராதாரவி அண்ட் கோவைப் போட்டுத்தள்ள – அவருக்கு என்ன ஏன் என்றே தெரியாமல் பிந்து மாதவி & ஈரோடு மகேஷ்அண்ட் கோ உதவி செய்ய, தனது தம்பியைக் குற்றவாளி என்று தெரிந்தும் கடமை தவறாத போலீஸ் அதிகாரி ரீமாசென்னால் அதனை நிரூபித்துத் தனது தம்பிக்குத் தண்டனையும் தனக்குப் புரோமோஷனும் வாங்கிக் கொள்ள முடியாமல் போக- மறுபடியும் படம் பார்ப்பவர்களை டைம் மிஷினில் 30 வருடங்களுக்கு கூட்டிச் சென்றுவிடுகிறார்கள்.
:-
கொலை செய்யும் சுரேஷ் கொல்லப்பட்டதை தொலைக்காட்சி செய்திகளில் எல்லா வீடுகளிலும் கட்டாயமாகப் பார்த்து விடுவார்களா என்ன..? சமபந்தமே இல்லாதவர்களிடம் (சுவாமி நாதன்) விசாரிக்கும் போது, சுரேஷ் கொல்லப்பட்டதை டிவியில் பார்த்தேன், கோயிலுக்குப் போய் படையல் போடப் போகிறேன்என்று சுவாமி சொல்வதெல்லாம் பழைய ஸ்டைல்,இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிமுகமான காலம் என்றால் ஓகே.
ஒரிஜினல் சட்டம் ஒரு இருட்டறையில் வரும் “மாஸான”, அக்கா- தம்பிக்கிடையே நடக்கும் உரையாடல் காட்சியினை இதிலும் பயன்படுத்தியிருக்கிறார் சினேஹா பிரிட்டோ அந்த ஒரிஜினலில் இருந்த ”மாஸ்” இதில் மிஸ்ஸிங்.
:-
அப்துல் கலாம் அக்னி ஏவுகணையைக் கண்டுபிடித்தார் என்றால் அடுத்து வரும் விஞ்ஞானி அக்னி 1, 2, 3 ….5 என்று போயிக்கிட்டே இருக்கவேண்டும். திரும்பவும் சிவகாசி ராக்கெட் வெடியில் இருந்து ஆரம்பிக்கக் கூடாது. இது குறித்து எம்.ஜி.ஆர் கூறியிருப்பதாகக் கமல்ஹாசன் சொன்னது ஞாபகத்திற்கு வருகின்றது. எம்.ஜி.ஆர்,“நான் தான் 10 படி ஏறிட்டேனே…அதே பத்து படி ஏறிவிட்டு சாதித்து விட்டேன் என்று சொல்வதில் என்ன பயன்..? எனக்குப் பின்னால் வருபவர்கள் 11வது, 12 வது என்று நான் ஏறிய படிகளைத் தாண்டி ஏறிப்போக வேண்டும்..அதுதான் அவர்களுக்கும் பெருமை..எனக்கும் பெருமை” என்று சொல்வாராம். அதுபோல சினிமா அருமையான துறை. இங்கு மட்டும்தான் ஒருவர் 10ஆம் வகுப்பு பாஸ் பண்ணிவிட்டார் என்றால் அடுத்து வருபவர் நேராக 11 ஆம் வகுப்புக்குச் சென்று விடலாம். திரும்பவும் 10 ஆம் வகுப்பு படித்து தான் 11 ஆம் வகுப்புப் படிக்க வேண்டும் என்பதில்லை.
:-
மேற்கண்ட பாரா சினேஹா பிரிட்டோவுக்கு மட்டுமல்ல சில மூத்த இயக்குனர்கள் உட்பட பெரும்பாலான இன்றைய தலைமுறை இயக்குனர்களுக்கும், இயக்குனராக ஆசைப்படுபவர்களுக்கும் பொருந்தும்.
திரைப்பட இயக்குனர் ஆவதற்கு வயதோ அனுபவமோ தேவையில்லை. அது முழுக்க முழுக்க நமக்குள்ளிருக்கும் படைப்புத்திறனைச் சார்ந்ததே. தயாரிப்பாளர் நம்மை நம்பிப் பணம் போடவேண்டும் அவ்வளவே! இதில்சினேஹா பிரிட்டோவை நம்பி அவரது தாயார் விமலாராணி பணம் போட்டிருக்கிறார். சினேஹா எப்படி படம் இயக்குவது என்றுகற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்குஇன்னும் நிறைய வயதும் வாய்ப்பும் இருக்கிறது. இன்றைய தலைமுறைக்கேற்ப திரைக்கதைகளை அமைத்துக் கொண்டு அடுத்து வரும் வருடங்களில் சிறந்த இயக்குனராக அவதாரம் எடுப்பார் என்று நம்பலாம்.
:-
மூத்த பத்திரிக்கையாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் புள்ளிவிபரப்படி 35 ஆவது பெண் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் சினேஹா பிரிட்டோவுக்கு மைசிக்ஸர்.காமின் வாழ்த்துகள்.
:-
நன்றி மைசிக்ஸர்.காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக