புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
59 Posts - 50%
heezulia
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_m10சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள்


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Dec 24, 2012 4:56 pm

எனது வலைப்பூவில் இன்று நாள் எழுதிய கட்டுரை. ஈகரை உறவுகளுக்காக இங்கே.
http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_24.html

நண்பர்களே வணக்கம். இங்கே நான் எழுதியிருப்பது பெரியரைப்பற்றியல்ல. சில உண்மைச் சம்பவங்களைப்பற்றி .!

சமூக சீர்திருத்தம் செய்தல், சாதிமுறைப் பிரிவினைகளை முற்றிலுமாக ஒழித்தல், மூட நம்பிக்கைகளை களைதல், பெண்விடுதலைக்காக பாடுபடுதல் என்ற மிகபெரும் கொள்கைகளோடு வாழ்ந்து, மூட நம்பிக்கைகளின் மேல் மிகப்பெரும் புரட்சியை உலகிற்கு அறிமுகம் செய்த வைக்கம் வீரர் ஐயா ஈ. வெ. இராமசாமி அவர்களின் நினைவு நாளான இன்று (24/12/12) "சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்" என்ற தலைப்பில் நான் இந்த கட்டுரை எழுதுவது சிலருக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். பலர் இந்த தலைப்பை ஆதரிக்கவும் செய்யலாம். தலைப்பிற்குள் போகும்முன் முதலில் ஐயா ஈ.வெ.ரா மற்றும் புரட்சித்தலைவர் எம். ஜி . ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நினைவு அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள் Periyar

எதற்காக இந்த பதிவு

மதுரை மாவட்டம் சின்னப்பட்டியைச் சேர்ந்த சிதம்பரம் என்ற முடிதிருத்தும் முதியவர், தனது முதுமையின் காரணமாக அந்த தொழிலை செய்ய இயலாததால் அந்த ஊர் தலைவர் மற்றும் சிலரால் ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த செய்தியை "புதியதலைமுறை" தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. அதோடு நிற்காமல் சுமார் பத்துநாட்களுக்கு முன் அதைப்பற்றிய விவாதத்தை "நேர்பட பேசு" என்ற அவர்களின் நிகழ்ச்சியில் ஒரு விவாதமும் நடத்தினர்.
அதற்கு சிறப்பு விருந்தினராக கோயம்பத்தூர் சாதிச் சங்கத்தைச்(கட்சி) சேர்ந்த ஒருவர் கலந்துகொண்டார்.

ஆரம்பம் முதல் இறுதிவரை மேற்போக்காக சாதிக் கலவரம் கூடாது என்று அவர் கூறினாலும், மேல் சாதிக் காரர்கள் எந்த தவறையும் செய்வதில்லை, கீழ் சாதிக்காரர்களை யாரும் ஒடுக்குவதுமில்லை என்று அவரது வார்த்தைகள் யாவும் சாதியை ஆதரிப்பதாகவே இருந்தது. இதோடு நிறுத்தி இருந்தால் இந்த பதிவை நான் எழுதுவதற்கான தேவையும் வந்திருக்காது என நினைக்கிறேன்.

ஆனால் அவர் ஒரு வரியை மேற்கோள் கட்டினார் "எந்த கிராமத்திலாவது ஒரு கீழ் சாதிக்காரன் ஒடுக்கப்படுகிறான் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள், ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்". யாரும் அப்படி செய்வதில்லை என அப்பட்டமாக தனது வாதத்தை வைத்தார். எனது சொந்த ஊர் ஒரு சிறு கிராமம் என்பதால், ஏசி அறையில் அமர்ந்து கொண்டு வெறும் வாய் பேசும் இது போன்ற சாதியவாதிகளுக்கு எனது கிராமத்தில் நடந்த சில நிகழ்வுகளை மேற்கோள்காட்டி பதிலடி தரவே இந்த பதிவை எழுதுகிறேன்.

அப்படி என்ன நடந்தது ..?

எனது சொந்த ஊர் திருச்சி மாவட்டத்துல உள்ள ஒரு கிராமம். நான் பொறியியல் முடித்துவிட்டு கடைசி அஞ்சு வருசமா வெளியூர்ல வேல செய்யறதால அப்பப்ப வீட்டுக்கு போறப்ப ஊர்ல என்ன நடந்ததுன்னு என் அம்மாட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேன். அதில சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எங்க ஊர்ல ஒரு சில கீழ்சாதி குடும்பங்கள் இருந்தது(கீழ்சாதி என்று சொல்லப்படுகின்ற) அதுல சில குடும்பங்கள் காலப்போக்கில் வெளியூர்ல போயி நிரந்தரமாக தங்கிட்டாங்க. ஒரு குடும்பம் மட்டும் இருந்தது. அதுல ஒரு பையன். ரொம்ப நல்லா படிப்பான். அவனுக்கு என்ன கெட்ட காலமோ, ஒரு பொண்ணோட பழக்கம். அந்த பெண் மேல்சாதி (மேல்சாதி என்று சொல்லப்படுகின்ற) பழக்கத்தோட இருந்தா பரவாயில்ல. ரெண்டு பெரும் எல்லை மீறிட்டாங்க.

ஆனா இந்த தவறுக்கு ஏதோ அந்த பையன் மட்டும் தான் காரணம் என்கிற முறையில், அவனை அந்த பெண்ணின் சாதிக்காரர்கள் சேர்ந்து அடி பிரித்துவிட்டனர். ஊரை விட்டு விரட்டினர். அந்த பையன் குடுப்பம் காவல்நிலையம் போனதால், ஒருவழியாக ஏதோ செய்து சரிகட்டி இந்த விவகாரம் முற்றுப்பெற்றது. இப்ப அந்த குடும்பம் பக்கத்து ஊர்ல இருகாங்க.

சமீபத்தில், அதே கிராமத்துல நாங்க ஒரு வீடு கட்டி பால் காச்சினோம். அதற்கு அந்த பையனோட சித்தப்பா வந்திருந்தார். சாப்ட்டு முடிஞ்சு வாறவங்களுக்கு ஒரு தட்டில் வெத்தள பாக்கு வைத்து நான் கொடுத்துக்கொண்டு இருந்தேன். அப்போது அவர் வந்தார். அவரிடமும் தட்டை நீட்டினேன். அவர் "இல்ல தம்பி நீங்களே எடுத்து கொண்டுங்கனு" சொன்னேர். இல்ல நீங்களே எடுதுக்கங்கனு சொன்னேன். நீங்க பண்றது உங்களுக்கு வேணும்னா சரியா இருக்கலாம். இங்க யாரும் ஏத்துக்க மாட்டங்க என்றார். மனம் வருந்தினேன்.

அதேபோல் ஒருமுறை எங்க ஊர்ல இருந்து வெளியூர் போன மேல்சாதி பையன் ஒருத்தன், கீழ் சாதிப்பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்தான். அவன்ட யாரும் பேசல. அவங்க வீட்டுக்கும் யாரும் போறதுல்ல. இதனால அவன் மறுபடியும் மனைவிய கூட்டிகிட்டு வெளியூர் போயிட்டான். அவனோட அப்பா இறந்ததுக்கு அவன் வந்தான். கிராமத்து கலாச்சாரம் தெரிந்தவங்களுக்கு ஒன்னு தெரிஞ்சிருக்கும். இறந்தவங்க வீட்டின் முன், அந்த வீட்டு ஆண்கள்/பங்காளிகள் நின்று வருவோருடன் கை தழுவுதல் வழக்கம். ஆனா சொந்த அப்பா இறந்ததர்க்கே அவனை யாரும் நிற்க விடல. அத்தனை சாதி வெறி. இப்போது அவன் ஊருக்கே வருவதில்லை.

இப்படி மேல்சாதி ஆண்கள் கீழ்சாதி பொண்ண திருமணம்செஞ்சா, அதிகபட்சம் நான் மேல சொன்ன மாதிரி நடக்கும். ஆனா இதையே ஒரு மேல்சாதி பொண்ணு செஞ்சா அவ்ளோ தான். என்ன நடக்கும் தெரியுமா .? அவள எப்படியும் கண்டுபிடிச்சு கட்டின தாலிய பிடிகிட்டு மேல்சாதி பையனுக்கே கல்யாணம் பண்ணி வைப்பாங்க (இதுமாதிரி நடக்குறப்ப, ரொம்பநாளா பொண்ணே கெடைக்காத ஒருத்தனுக்கு எப்படியும் கல்யாணம் ஆகிடும்). அதே போல் எனது பள்ளி பருவத்தில், கீழ் சாதி மனிதர்களுக்காக தனியா தேனீர் கடைகளில் தேநீர் தர அலுமினிய பாத்திரம் தந்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.

அதோடு கிராமத்திற்குள் கீழ்சாதி மக்கள் வரும்போது தங்களின் காலணிகளை கலட்டி கையில் பிடித்துக்கொண்டு வெறும் காலுடன் வருவது வழக்கம். நான் பொறியியல் முடிக்கும் வரை இதை அறிவேன். அதற்கு பிறகு வேலைக்காக வெளியூர் வந்ததால் இந்த நடைமுறை இன்னும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

எங்க கிராமமும் பக்கத்து கிராமமும் சேர்ந்து மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவாங்க. கோவில் இருப்பது பக்கத்து ஊர்ல. அந்த கோவில் திருவிழா மூணு வருசமா நடக்கல. காரணம் என்ன தெரியுமா .? கோவில் பூசாரியோட பொண்ணு, மேலே சொன்ன ஒரு சாதிக்கார பையன கல்யாணம் பண்ணிகிட்டா. இதுக்கெல்லாம் கோவில் திருவிழாவ நிறுத்துவாங்கலானு நீங்க கேக்கலாம். ஆனா நிறுத்தினாங்க. சில பஞ்சாயத்துக்கப்பறம் திருவிழா நடந்தது.

இந்த உதாரணங்களை வைத்து, எனது ஊர் ஒரு அடிமட்ட கிராமம் இதைவிட கேவலமா யாரும் செய்யமாட்டங்கனு முடிவுக்கு வரவேண்டாம். ஏன்னா இதவிட பின்தங்கிய மோசமான நிகழ்வுகள் தமிழகத்தின் பல கிராமங்களில் நடந்துகொண்டு தான் இருக்கிறது. சாதிகளின் பேரில். இவற்றை வைத்து பல சாதிக்கட்சிகளும் சாதிச்சங்கங்களும் குளிர் காய்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எனக்கு ஞாபகத்தில் இருந்த சில நிகழ்வுகளை மட்டுமே இங்கே மேற்கோள் காட்டினேன்.

இத்தனை நிகழ்வுகளை நான் கூறியதால், இவன் கீழ்சாதிக்காரனாக இருப்பான் அதனால் தான் இத்தனை குறைகளைக் கூறுகிறான் என்று எனக்கு பட்டம் கொடுக்கவும் ஒரு கூட்டம் இருக்கும். ஆனால், இங்கே மேல்சாதி என்றுயாரைச் சுட்டிக் காட்டினேனோ அதே சமூகத்தில் இருந்து வந்தவன்தான் நான். "புதியதலைமுறை" தொலைக்கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த பெரியவரின் சமூகத்தைச் சேர்ந்தவன் (மனிதம் தவிர எதிலும் நம்பிக்கை இல்லாத, சாதிய முறைகளில் முற்றிலும் உடன்பாடு கொள்ளாத இளைஞன். ஆனால் சில உண்மைகளை மேற்கோள் காட்டவே இங்கு அதைக் குறிப்பிடும் படியாக ஆனது. மன்னிக்கவும்).

நான் மேலே சொன்னதுபோல், தொலைக்கட்சியில் வாதம் செய்த அந்த மேல்சாதியைச் சேர்ந்தவர், ஒரு கிராமத்தில் நடந்த ஒரே ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டச்சொன்னர். நான் பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டினேன்.

இது சாதி கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். நீங்கள் சொகுசாக வாழ "சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்" என்ற எண்ணத்தோடு தொலைக்கட்சியில் பேசுவதை காதுகொடுத்து கேட்டுவிட்டு, சரி என்று மனதில் ஏற்றிக்கொண்டு உங்கள் பின்னால் திரிய நாங்கள் மண்ணைத் தின்னும் மடையர்கள் அல்ல. இந்த தலைமுறை இளைஞர் பட்டாளாம் உங்களை நம்பும் ஈனப் பிறவியுமல்ல. காலம் கடந்து கொண்டிருக்கிறது. உங்கள் சாதியையும் சாதி வெறிகளையும் எலும்பொடித்து முடமாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. எச்சரிக்கையாக இருங்கள். எமன் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

நன்றி..!

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Dec 24, 2012 5:08 pm

ஜாதி பார்த்து பழகுவது மிகவும் கேவலமானது. பொதுவாகவே ஜாதி ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செய்வது அது எந்த ஜாதியானாலும் சரி நடை முறையில் அவர்கள் சார்ந்த சமூகத்தில் பெற்றோரின் மதிப்பு குறைந்து கேவலப்படும் சூழ்நிலை வருகிறது. நமது சமுதாயம் பக்குவபடும் வரை பெண்களோ ஆண்களோ அவரவர் இனங்களில் மனம் முடிப்பது பிரச்சனையை குறைக்கும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Dec 24, 2012 5:45 pm

திருமணத்தை விடுங்கள்.. ஆனால் மேலே கூறியவைகள் சக மனிதனுக்கு நிகழலாமா. கீழ் ஜாதி என்ற பெயரில் .?



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக