Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம்
3 posters
Page 1 of 1
1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம்
கடந்த 1999, 2004ஆம் ஆண்டுகளில் மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில், கேள்வி: காவிரி டெல்டா பகுதிக்கு முதலமைச்சர் அறிவித்த இலவச பயிர் காப்பீடு திட்டத்தில் குளறுபடி என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதே?
கருணாநிதி : ஏதாவது ஒரு அறிவிப்பு தன் பெயரில் அன்றாடம் வரவேண்டும் என்று விரும்புவதன் காரணமாக அதிகாரிகள் எதையோ எழுதிக் கொடுக்க அதை அறிவிப்பாக வெளியிட்டு, ஏடுகளும் அதைப் பெரிதாக வெளியிட்டு விடுகின்றன. காவிரி டெல்டா பகுதிகளுக்கு போதிய தண்ணீர் இல்லாமல், சம்பா பயிர்கள் கருகி வருவதால், பயிரைக் காப்பாற்ற முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். எனவே கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகளுக்கு, இலவசக் காப்பீடு திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கு சிட்டா, அடங்கலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வேளாண் அலுவலர்கள் விவசாயிகளிடம் விண்ணப்பங்களைப் பெற்று கூட்டுறவு வங்கிகளிடம் கொண்டு போய்க் கொடுத்தால், இந்தக் கடன் விவகாரம் குறித்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறி விண்ணப்பங்களைத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இதுதான் இலவசப் பயிர் காப்பீடு திட்டத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள கதி. இனியாவது அரசு இதுபற்றி கவனிக்க முன்வருமா?
கேள்வி : மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடாமல் தடுக்கத்தான் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று நீங்கள் கூறியதற்கு, 1999 முதல் 2004 வரை பா.ஜ.க. வின் மதவாதம் கருணாநிதியின் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேள்வி கேட்கிறார்களே?
கருணாநிதி : பா.ஜ.க.வுடன் தி.மு.கழகம் தோழமை கொண்டு ஆட்சியில் பங்கேற்கும் முடிவினை எடுப்பதற்கு முன்பாக, “குறைந்த பட்ச செயல் திட்டம்” ஒன்றை வகுத்து, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்குப் பிறகுதான் அந்தக் கூட்டணி அரசில் பங்கேற்றது. ஆனால் பா.ஜ.க. அந்தக் குறைந்த பட்ச செயல் திட்டத்தி லிருந்து சற்று விலக முற்பட்டபோதுதான் அந்தக் கூட்டணியிலிருந்தே தி.மு.க. விலகியது. பா.ஜ.க. தொடர்ந்து அந்தக் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதியாக இருந்திருக்கு மேயானால், அந்தக் கூட்டணியில் தி.மு.க. நீடித்திருக்கக் கூடும். அவர்கள் அதிலே உறுதியாக இல்லாமல் அவர்களது “அசல் நிறத்தை” வெளிக்காட்டிக் கொண்டதால் அதாவது பாதை மாறிச் சென்ற தால்தான் 2004ஆம் ஆண்டு அந்தக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது. அவர்களின் மதவாதம் தற்போது தெளிவாகத் தெரிந்த காரணத்தினால்தான் மீண்டும் அவர்கள் வந்து விடக் கூடாது என்பதில் தி.மு.க. உறுதியுடன் செயல்படுகிறது.
கேள்வி: யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களை சிங்கள ராணுவம் கைது செய்து சிறை வைத்திருப்பது பற்றி கழகச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லையே?
கருணாநிதி: அந்தத் தமிழ் மாணவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் (ஆசியா) பிராட் ஆடம்ஸ் அவர்கள் எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லாமல் தமிழ் மாணவர்களை இலங்கை அரசு கைது செய்து மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பியிருப்பது அபாயகரமானது என்றும், இதே பாணியில் மேலும் சிலரை கைது செய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். வெலிகண்டாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் இந்த மாணவர்கள் மட்டுமல்ல, அந்த இல்லத்தில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் 600 தமிழர்களை அடைத்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கேள்வி : ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தலித், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்கக்கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே?
கருணாநிதி: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்துவது நாடு முழுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் 1-4-2011 அன்று அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு தகவல் அனுப்பியுள்ளது. அதன்படி தகுதித் தேர்வு எழுதும் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதம் தகுதி மதிப்பெண்களில் சலுகையாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தகுதி மதிப்பெண்களில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தச் சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை. இவ்வாறு சலுகை அளிக்கப்படாமலேயே 12-7-2012 மற்றும் 14-10-2012 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசு இந்தச் சலுகையை அளித்திருந்தால், அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 ஆயிரம் ஆசிரியர்களில் இந்தப் பிரிவின் சார்பில்
குறைந்தபட்சம் 7 ஆயிரம் ஆசிரியர்களாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் தமிழக அரசு இந்தச் சலுகையை ஏன் இன்னும் வழங்கவில்லை என்று தெரிய வில்லை. இதைப் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், வழக்கறிஞர் திரு. எம். பழனிமுத்து என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் தற்போது மேற்கொள்ளப்படும் பணி நியமனம், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் அறிவித்திருக்கிறார்கள். தமிழக அரசில் எப்படிப்பட்ட குளறு படிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும் என்று பதில் அளித்துள்ளார்.
தினமணி
அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில், கேள்வி: காவிரி டெல்டா பகுதிக்கு முதலமைச்சர் அறிவித்த இலவச பயிர் காப்பீடு திட்டத்தில் குளறுபடி என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதே?
கருணாநிதி : ஏதாவது ஒரு அறிவிப்பு தன் பெயரில் அன்றாடம் வரவேண்டும் என்று விரும்புவதன் காரணமாக அதிகாரிகள் எதையோ எழுதிக் கொடுக்க அதை அறிவிப்பாக வெளியிட்டு, ஏடுகளும் அதைப் பெரிதாக வெளியிட்டு விடுகின்றன. காவிரி டெல்டா பகுதிகளுக்கு போதிய தண்ணீர் இல்லாமல், சம்பா பயிர்கள் கருகி வருவதால், பயிரைக் காப்பாற்ற முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். எனவே கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகளுக்கு, இலவசக் காப்பீடு திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கு சிட்டா, அடங்கலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வேளாண் அலுவலர்கள் விவசாயிகளிடம் விண்ணப்பங்களைப் பெற்று கூட்டுறவு வங்கிகளிடம் கொண்டு போய்க் கொடுத்தால், இந்தக் கடன் விவகாரம் குறித்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறி விண்ணப்பங்களைத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இதுதான் இலவசப் பயிர் காப்பீடு திட்டத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள கதி. இனியாவது அரசு இதுபற்றி கவனிக்க முன்வருமா?
கேள்வி : மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடாமல் தடுக்கத்தான் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று நீங்கள் கூறியதற்கு, 1999 முதல் 2004 வரை பா.ஜ.க. வின் மதவாதம் கருணாநிதியின் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேள்வி கேட்கிறார்களே?
கருணாநிதி : பா.ஜ.க.வுடன் தி.மு.கழகம் தோழமை கொண்டு ஆட்சியில் பங்கேற்கும் முடிவினை எடுப்பதற்கு முன்பாக, “குறைந்த பட்ச செயல் திட்டம்” ஒன்றை வகுத்து, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்குப் பிறகுதான் அந்தக் கூட்டணி அரசில் பங்கேற்றது. ஆனால் பா.ஜ.க. அந்தக் குறைந்த பட்ச செயல் திட்டத்தி லிருந்து சற்று விலக முற்பட்டபோதுதான் அந்தக் கூட்டணியிலிருந்தே தி.மு.க. விலகியது. பா.ஜ.க. தொடர்ந்து அந்தக் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதியாக இருந்திருக்கு மேயானால், அந்தக் கூட்டணியில் தி.மு.க. நீடித்திருக்கக் கூடும். அவர்கள் அதிலே உறுதியாக இல்லாமல் அவர்களது “அசல் நிறத்தை” வெளிக்காட்டிக் கொண்டதால் அதாவது பாதை மாறிச் சென்ற தால்தான் 2004ஆம் ஆண்டு அந்தக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது. அவர்களின் மதவாதம் தற்போது தெளிவாகத் தெரிந்த காரணத்தினால்தான் மீண்டும் அவர்கள் வந்து விடக் கூடாது என்பதில் தி.மு.க. உறுதியுடன் செயல்படுகிறது.
கேள்வி: யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களை சிங்கள ராணுவம் கைது செய்து சிறை வைத்திருப்பது பற்றி கழகச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லையே?
கருணாநிதி: அந்தத் தமிழ் மாணவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் (ஆசியா) பிராட் ஆடம்ஸ் அவர்கள் எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லாமல் தமிழ் மாணவர்களை இலங்கை அரசு கைது செய்து மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பியிருப்பது அபாயகரமானது என்றும், இதே பாணியில் மேலும் சிலரை கைது செய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். வெலிகண்டாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் இந்த மாணவர்கள் மட்டுமல்ல, அந்த இல்லத்தில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் 600 தமிழர்களை அடைத்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கேள்வி : ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தலித், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்கக்கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே?
கருணாநிதி: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்துவது நாடு முழுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் 1-4-2011 அன்று அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு தகவல் அனுப்பியுள்ளது. அதன்படி தகுதித் தேர்வு எழுதும் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதம் தகுதி மதிப்பெண்களில் சலுகையாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தகுதி மதிப்பெண்களில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தச் சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை. இவ்வாறு சலுகை அளிக்கப்படாமலேயே 12-7-2012 மற்றும் 14-10-2012 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசு இந்தச் சலுகையை அளித்திருந்தால், அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 ஆயிரம் ஆசிரியர்களில் இந்தப் பிரிவின் சார்பில்
குறைந்தபட்சம் 7 ஆயிரம் ஆசிரியர்களாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் தமிழக அரசு இந்தச் சலுகையை ஏன் இன்னும் வழங்கவில்லை என்று தெரிய வில்லை. இதைப் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், வழக்கறிஞர் திரு. எம். பழனிமுத்து என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் தற்போது மேற்கொள்ளப்படும் பணி நியமனம், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் அறிவித்திருக்கிறார்கள். தமிழக அரசில் எப்படிப்பட்ட குளறு படிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும் என்று பதில் அளித்துள்ளார்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம்
பெட்டி பெட்டியா சேர்த்ததுக்கு அப்புறம் யாரும் பேட்டி
எடுப்பதில்லைன்னு கேள்வியும் நானே பதிலும் நானே
ஸ்டைலில் தலைவர் இறங்கிட்டாரோ?
எடுப்பதில்லைன்னு கேள்வியும் நானே பதிலும் நானே
ஸ்டைலில் தலைவர் இறங்கிட்டாரோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Similar topics
» மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி
» கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி
» காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
» பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி
» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
» கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி
» காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
» பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி
» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|