ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

+2
கா.ந.கல்யாணசுந்தரம்
அகல்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Empty சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

Post by அகல் Fri Dec 21, 2012 11:42 am

எனது வலைப்பூவில் எழுதிய சொந்த அனுபவத்தை இங்கும் பகிர்கிறேன். http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_19.html

நாம எந்த ஒரு காரியம் செஞ்சாலும் அதற்கான ஆதரவும் எதிர்ப்பும் மக்களிடையே பெரும்பாலும் இருக்கும். இது எதார்த்தம். அப்படியாக நான் செய்த ஒரு செயலுக்கு பெருத்த ஆதரவு இருந்தாலும் அதற்காக நான் வருத்தப் பட்டதும், சிலர் என்னை வருத்தப்பட வைத்ததும் கொஞ்சம் அதிகம் தான். நான் என்ன அப்படி செஞ்சேன். எதுக்காக இந்த வருத்தம். வாங்க பாப்போம்.

ரத்ததானம்

ரத்தம். இது வெறும் வார்த்தையல்ல. விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியிலும் மனிதனால் உருவாக்க இயலாத ஒன்று. இயற்கை மனிதனுக்கு விடும் சாவலில் இதன் ஆக்கமும் ஒன்று. பணம் படைக்காத சாமானியனாலும் ஒரு உயிரை காக்க முடியுமானால், அது இந்த ரத்த தானத்தில் சிலமுறை சாத்தியமாகும். இதன் ஓட்டம் நிற்கும் வேலையில் மனிதனில் ஓட்டமும் நின்று போகிறது.

இப்படியான ஒப்பற்ற தானத்தை செய்ய முன்வருவோர் என்னவோ வெகு சிலர்தான். அதனால் தேவையற்ற உயிரிழப்புகளின் எண்ணிகையும் ரத்த தானத்தின் தேவையும் மிக அதிகம். காரணம், பெரும்பாலும் எந்த ஒரு உயிரைக்காக்கும் அறுவைச் சிகிச்சையும் மிகுதியான ரத்தம் இன்றி நடப்பதில்லை. இதைப் பலரும் அறிவர். நானும் நன்கு அறிவேன். ஆகையால் BHARATMATRIMONY யின் சமூக தளமான WWW.BHARATBLOODBANK.COM லும்,சில மருத்துவமனைகளிலும் 2008 முதல் என்னை இணைத்துக் கொண்டுஇந்த தானத்தை தேவைப்படும் போதெல்லாம் செய்து கொண்டு வருகிறேன்.

மிகவும் படித்து பண்புற்றவர்கள் ஆனாலும், பலருக்கு இன்னும் இந்த ரத்த தானத்தைப் பற்றிய பயம் இருக்கத்தான் செய்கிறது. அதில் சிலர், அவர்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறந்து தானம் செய்ய மனமின்றி சுயநலமாக வாழ்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது ஒருபுறம் இருக்க, மறு புறம் இதற்கான விழிப்புணர்ச்சியும் சற்று குறைவாக இருப்பது ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு மற்றும் ஒரு காரணம். அதோடு தங்களுடைய ரத்தம் சற்று இலகுவாக கிடைக்காத பிரிவாக இருக்கும் பட்சத்தில் பலர் அதை தானம் செய்ய முன்வருவதில்லை.

எனது ரத்தம் O நெகடிவ். நெகடிவ் வகை ரத்தம் உள்ள மனிதர்களின் எண்ணிக்கை வெகு குறைவு என்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள். தெரியாத பட்சத்தில், இந்திய மக்கள் தொகையில் குறிப்பிட்ட ரத்த பிரிவைச் சார்ந்த மக்களின் சதவீதம் கீழே.

0 பாசிடிவ் - 36.5%
A பாசிடிவ் - 22.1%,
B பாசிடிவ் - 30.9%,
AB பாசிடிவ் - 6.4%
O நெகடிவ் 2.0%
A நெகடிவ் - 0.8%
B நெகடிவ் -1.1%
AB நெகடிவ் -0.2%


விழிப்புணர்ச்சிக்காக எனது முயற்சி

ரத்த தானத்தைப் பற்றி ஒரு தனிமனிதனால் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இயலுமா ..? என்றால், ஆம் ஒரு சிலருக்காவது ஏற்படுத்த இயலும் என்ற நம்பிக்கையோடு எனது வண்டியின் பின்னே இவ்வாறு எழுதினேன்.

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Picture+about+blood+donation

என்னால் அதிகமான நண்பர்களிடம் இதைப்பற்றி பேச முடியாவிட்டாலும் இந்த வாசகம் நான் போகும் இடங்களில் பார்க்கும் ஒருவருக்காவது ரத்த தானத்தைப் பற்றி உணர்த்தும் என்ற நம்பிக்கையோடு, கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக இதை எனது வண்டியில் வைத்துள்ளேன். அதற்கான பலனையும் நேரடியாக கண்டேன்.

இணயதளங்களிலும், செய்தித் தாள்களிலும்

எனது வலைப்பூவை தொடரும், படிக்கும் நண்பர்களுக்கு நான் புகைப்படம் எடுப்பதில் அதிக நாட்டம் கொண்டவன் என்பது தெரிந்திருக்கும். அப்படியாக மேலே உள்ள எனது வண்டியை இந்த வாசகத்துடன் புகைப்படம் எடுத்து எதார்த்தமாக எனது முகநூளில் பதிவிட்டிருந்தேன். பதிவிட்ட சில மாதங்களுக்கு பிறகு, எதிர்பாராமல் முகநூளில் பல ஆயிரம் பேர் இந்த புகைப்படத்தைப் பகிரவே, தினமலர், விகடன், மற்று ஒரு தெலுங்கு செய்தித்தாளிலும் இது பிரசுரமானது எனக்கு தெரிய வந்தது. அதன் தினமலர் பதிவு கீழே.

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Blood+donation_Dinamalar

நான் பட்ட பாடு

எனது தொலைபேசி எண் இந்த படத்தில் இருப்பதால், பல பெரிய மனிதர்களும், நண்பர்களும் உலகின் பலமுனைகளில் இருந்தும், இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களில் இருந்தும் எனக்கு வாழ்த்து அழைப்புகள் செய்துகொண்டு இருந்தனர். அதில் பல இளைஞர்கள், பயனுள்ள இந்த முயற்சியை தாங்களும் தங்கள் வண்டிகளில் பயன்படுத்துகிறோம் என்று கூறியதில் மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் இந்தப் படம் இப்படி பரவும் என்றோ மக்கள் இப்படி தொலைபேசி அழைப்புகள் தருவார்கள் என்றோ நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. காரணம் நான் இதை எனது சுய விளம்பரத்திற்காக செய்யவில்லை.

ஒருபுறம் இதைப் பாராட்டி நண்பர்கள் அழைத்தாலும், மறுபுறம் நான் மிகவும் வருந்தத்தக்க செயலும் நடந்து கொண்டிருந்தது. சிலர் இந்த எண் சரியானதா என்பதை அறிய MISSED CALL களை இரவுபகல் பாராது கொடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் குடித்துவிட்டு நான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறேன் எனக்கு உனது ரத்தம் அவசரமாக வேண்டும் என்றார்கள். சிலர் தங்களது பொழுதுபோக்கிற்காக அழைத்து கேலிக்காக ரத்தம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சில விலை மாதுக்களிடம் இந்த எண் சிக்கிவிடவே அவர்களின் அழைப்பும் மிகவும் வருந்த வைத்தது.

இந்த புகைப்படம் முகநூளில் அதிகம் பரவியதால், இந்த தவறான தொலைபேசி அழைப்புகளை தவிர்க்க வேண்டி இவ்வாறு எனது முகநூல் பக்கத்தில் நான் செய்தி வெளியிடவும் நேர்ந்தது. அந்த பதிவு கீழே.

https://www.facebook.com/photo.php?fbid=505375432816262&set=a.419334081420398.91579.419268418093631&type=1&theater

இதெல்லாம் பார்க்கையில் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது ஒன்றுதான். "கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது என்பார்கள். ஆனால் எனக்கு நல்லதில் தான் சில கெட்ட விடயங்கள் நடந்தது". இருந்தாலும் இதைப் பொருட்படுத்தாது எனது பயணத்தைத் தொடர்கிறேன். நன்றி.

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Empty Re: சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 21, 2012 12:14 pm

தன்னலம் கருதாத தங்களின் சேவை மகத்தானது. வாழ்க என்றென்றும் நலமுடன்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Empty Re: சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

Post by Muthumohamed Fri Dec 21, 2012 12:14 pm

இதெல்லாம் பார்க்கையில் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது ஒன்றுதான். "கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது என்பார்கள். ஆனால் எனக்கு நல்லதில் தான் சில கெட்ட விடயங்கள் நடந்தது". இருந்தாலும் இதைப் பொருட்படுத்தாது எனது பயணத்தைத் தொடர்கிறேன். நன்றி.


கண்டிப்பாக எந்த ஒரு காரனதிர்க்காகவும் உங்களின் இந்த நல்ல சேவையை நிறுத்தி விடாதீர்கள்.

நீங்கள் நலமுடன் வாழ்ந்து மற்றவரையும் வாழ வைக்கிறீர்கள் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக மகிழ்ச்சி ஆறுதல்


Last edited by Muthumohamed on Fri Dec 21, 2012 12:16 pm; edited 1 time in total (Reason for editing : Add another matter)



சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Mசமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Uசமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Tசமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Hசமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Uசமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Mசமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Oசமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Hசமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Aசமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Mசமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Eசமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Empty Re: சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

Post by அகல் Fri Dec 21, 2012 12:53 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:தன்னலம் கருதாத தங்களின் சேவை மகத்தானது. வாழ்க என்றென்றும் நலமுடன்.
தங்களது வாழ்த்திற்கும் ஆசிர்வாததிர்க்கும் எனது நன்றிகள் ஐயா ..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Empty Re: சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

Post by யினியவன் Fri Dec 21, 2012 1:36 pm

தங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள் அகல்.

தொடருங்கள் தங்கள் பயணத்தை மகிழ்வோடு
தூற்றுவார் தூற்றினாலும் துவழாது தொடருங்கள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Empty Re: சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

Post by அகல் Fri Dec 21, 2012 2:39 pm

Muthumohamed wrote:இதெல்லாம் பார்க்கையில் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது ஒன்றுதான். "கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது என்பார்கள். ஆனால் எனக்கு நல்லதில் தான் சில கெட்ட விடயங்கள் நடந்தது". இருந்தாலும் இதைப் பொருட்படுத்தாது எனது பயணத்தைத் தொடர்கிறேன். நன்றி.


கண்டிப்பாக எந்த ஒரு காரனதிர்க்காகவும் உங்களின் இந்த நல்ல சேவையை நிறுத்தி விடாதீர்கள்.

நீங்கள் நலமுடன் வாழ்ந்து மற்றவரையும் வாழ வைக்கிறீர்கள் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக மகிழ்ச்சி ஆறுதல்
மிக்க நன்றி நண்பரே.. கண்டிப்பாக எனது சிந்தனைகளை மாற்றிக்கொள்ளமாட்டேன்..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Empty Re: சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

Post by அகல் Fri Dec 21, 2012 2:39 pm

யினியவன் wrote:தங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள் அகல்.

தொடருங்கள் தங்கள் பயணத்தை மகிழ்வோடு
தூற்றுவார் தூற்றினாலும் துவழாது தொடருங்கள்
வாழ்த்திற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் அண்ணா...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Empty Re: சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri Dec 21, 2012 4:18 pm

வாழ்த்துக்கள் சகோ.. ஒரு நல்லவிசயம் செய்யும்போது அப்படித்தான் இருக்கும்..மனம் வருந்தவேண்டாம். தங்கள் பயணம் இனிதே தொடரட்டும்.. நம் வாழ்க்கை பிறருக்கு எடுத்துக்காட்டாக இருப்பது சிறப்பு. எடுத்துக்கொள்ளாமல் கேளிசெய்பவர்களைப்பற்றி சிந்திக்காமல், தங்கள் பயணத்தில் பயணிக்க விரும்பி காத்திருக்கும் பல உயிர்களை நினைத்துப் பார்த்தால் இது ஒரு பெரிய விசயமே இல்லை எனத் தோன்றும்..தொடர்க பயணம்..இறை தங்களுக்கு உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் வழங்கட்டும். வாழ்க வளமுடன்..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Empty Re: சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

Post by அகல் Fri Dec 21, 2012 4:35 pm

ரத்த தானம் செய்து பிழைத்து கொண்ட ஒவ்வொருவரின் குடும்பத்தினரின் மகிழ்ச்சியையும் அவர்களின் குரல்களிலும் கண்களிலும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அதற்கு இணையான திருப்தி பெரிதாக எனக்கு எங்கும் கிடைத்ததில்லை. அது ஒரு தனி சுகம். விவரிக்க தெரியவில்லை. தங்களின் ஆதரவிற்கு நன்றிகள் சகோ ...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Empty Re: சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

Post by jenisiva Fri Dec 21, 2012 5:49 pm

நல்ல எண்ணம் கொண்டவரால் தான் நல்ல காரியங்கள் நிகழும்
இவ்வளவு நாட்கள் உங்கள் புகைப்பட கலையில் நல்லதை கண்டோம்
இப்பொழுது உங்கள் செயலில் காண்கிறோம் .
இனியவன் மற்றும் எல்லாரும் சொல்வது போல் எந்த ஒரு காரணத்திற்காகவும் நல்லது செய்வதை விட வேண்டாம் .

(0 பாசிடிவ் - 36.5%
A பாசிடிவ் - 22.1%,
B பாசிடிவ் - 30.9%,
AB பாசிடிவ் - 6.4%
O நெகடிவ் 2.0%
A நெகடிவ் - 0.8%
B நெகடிவ் -1.1%
AB நெகடிவ் -0.2%)
இந்த தகவல் அருமை . நான் ஒரே ஒரு முறை தான் ரத்த தானம் செய்து இருக்கிறேன் . அதுவும் பள்ளியில் நடந்த ஒரு முகாமில் . தொடர்ச்சியாக ரத்தம் கொடுக்க எங்கே தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. ரத்த தான முகாம் விளம்பரங்கள் பார்ப்பதுண்டு ஆனால் அவை நம்பகமானவையா என்பதனால் விட்டு விடுவேன் .எனக்கும் 0+ தான். ஆனால் என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் 0-. என்பதை நினைத்து வருந்துவது உண்டு. அவர்களுக்கு எந்த வித ஆபத்துகளும் நிகழ கூடாது என்று அடிக்கடி நினைத்துகொள்வேன் .
நன்றி அகல்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும் Empty Re: சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum