புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_m10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_m10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_m10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_m10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_m10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_m10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_m10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_m10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_m10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_m10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_m10ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி!


   
   

Page 1 of 2 1, 2  Next

GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Wed Dec 19, 2012 10:09 pm

ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி!

- வீ.ஜெ.சுரேஷ்
படங்கள்: வீ.சிவக்குமார்

தொடக்கக்கல்வி ஆசிரியர்களான எங்களுக்கு, ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் 'பிள்ளையார் சுழி!' போட்டுவிட்ட திருப்தி வாழ்க்கை முழுவதும் இருக்கும். எங்களோட மாணவர்கள் எல்லாம் எதிர்காலத்துல பெரிய ஆட்களா வரும்போது, அவங்க ஏணியோட முதல் படியா நாங்க இருந்தோம்ங்கற சந்தோஷம், ரொம்ப அற்புதமானது இல்லையா?!"

- வார்த்தைகள் மிக அழகாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கின்றன சரஸ்வதியிடமிருந்து!

திண்டுக்கல் மாவட்டம், பழநியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மானூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதி. தான் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஐந்தே வருடங்களில், மாவட்டத்தின் 'சிறந்த தொடக்கப்பள்ளி'யாக தனது பள்ளியைத் தரம் உயர்த்தியவர். அதற்கு அங்கீகாரமாக, பழனி கல்வி மாவட்டத்தின் தொடக்கல்வித் துறை, மாவட்டத்தின் '2010-11 கல்வியாண்டின் சிறந்த தொடக்கப்பள்ளி'க்கான அரசு விருதுக்காக பரிந்துரைத்துள்ளது. கூடவே, மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும், தங்களின் பயிற்சி பட்டறைக்காக இந்தப் பள்ளியையே நாடுகின்றன.

'ஏய் வாத்திம்மா... எங்களையே அடிக்க வர்றியா...' என்று குருவுக்கான மரியாதையைக்கூட கொடுக்கத் தெரியாத முரட்டு கிராமப்புற மாணவர்கள்... சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சமூக விரோத கூடாரமாகிப் போகும் பள்ளி... 'இந்த ஸ்கூலெல்லாம் லாயக்கில்ல... இங்கிலீசு மீடியத்துக்கு அனுப்புவோம்...' என்ற பெற்றோர்களின் மனநிலை... இத்தகைய சூழலில் இங்கே பொறுப்பேற்ற சரஸ்வதி, அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

"என்னோட பணிபுரியற ஆசிரியைகளும், ஆசிரியரும் இணைந்து செயல்பட்டதுக்கான பலன் இது!" என்று எல்லோருக்குமான அங்கீகாரத்தோடு ஆரம்பித்த சரஸ்வதி,

"2005-ம் வருஷம் இங்கே வந்தேன். விடுமுறை தினங்கள்ல வகுப்பறைகளை சமூகவிரோதிகள் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க. பொருட்களும் திருட்டுப் போயிக்கிட்டிருந்துது. ஆசிரியர்கள், ஊர் மக்கள், பஞ்சாயத்து தலைவர்னு எல்லாரும் ஒண்ணு சேர்ந்து அதை எல்லாம் சரி செஞ்சோம்.

அடுத்ததா, மாணவர்கள் பக்கம் கவனத்தை திருப்பினோம். 'டிரெஸ்'கூட சரியா போட்டுட்டு வராத நிலைமையில இருந்தவங்ககிட்ட, பள்ளி பத்தின மரியாதையான, ஆர்வமான பிம்பத்தை ஏற்படுத்தினோம். 'நல்லா படிக்கணும், ஆசிரியர்களை மதிக்கணும்'ங்கற அடிப்படை புரிதலை அவங்களுக்கு ஏற்படுத்தவே ரொம்ப மெனக்கெட வேண்டி இருந்தது.

அடுத்தக் கட்டமா, யூனிஃபார்ம் கலர், டிசைன் இதையெல்லாம் கல்வித்துறை ஒப்புதலோடு மாத்தினோம். ஒரு கட்டத்துல, மாணவர்கள் எங்க வட்டத்துக்குள்ள வந்தாங்க, வளர்ந்தாங்க. இப்போ அதுக்கான பலனை மனதார உணர்றோம்" என்று பூரித்த சரஸ்வதி, பள்ளியின் செயல்வழிக் கற்றல் (ஏ.பி.எல்) முறை வகுப்புகளுக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

ஒவ்வொரு வகுப்புக்கும் வெளியேயும் மாணவர்கள் வரிசைப்படுத்தி அடுக்கியிருந்த ஸ்கூல் பேக்குகளும், காலணிகளும் அவ்வளவு நேர்த்தி! பள்ளி வளாகத்தில் எங்குமே குப்பைகளைக் காணமுடியவில்லை. எல்லாவற்றையும்விட ஹைலைட்... பள்ளியில் அவர்கள் நடத்தும் 'மாதிரி அமைச்சரவை'!

"எங்க பள்ளியில ஒவ்வொரு ஆசிரியையும் ஒவ்வொரு துறைக்கு 'அமைச்சரா' பொறுப்பேற்று வேலைகளைப் பகிர்ந்துக்கறோம். துறை சார்ந்த விஷயங்களை மாணவர்களோட மனசுலயும் பசுமரத்தாணி போல பதிய வைக்கிறோம்" என்றபடியே, "சுகாதாரத்துறை 'அமைச்சர்' ரேணுகா, சுகாதாரத்துறை 'இணை அமைச்சர்' சுகன்யாதேவி, வெளியுறவுத்துறை மற்றும் மின்துறை 'அமைச்சர்' கதிரவன், உணவுத்துறை 'அமைச்சர்' விஜயராணி, நீர்வளத்துறை 'அமைச்சர்' ரஸியா பேகம், விளையாட்டு மற்றும் நூலகத் துறை 'அமைச்சர்' சுமதி, பாதுகாப்புத்துறை 'அமைச்சர்' சாரதா, தோட்டக் கலைத் துறை 'அமைச்சர்' ஈஸ்வரி" என்று 'அமைச்சர்'களை நமக்கு அறிமுகப்படுத்தினார் சரஸ்வதி.

அவரைத் தொடர்ந்த சுகாதாரத்துறை 'இணை அமைச்சர்' சுகன்யாதேவி, "தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் யூனியன்ல இருக்கற மலை கிராமமான மழையூர்ல ஈராசிரியர் பள்ளியில வேலை பார்த்தவ நான். அதனால பின் தங்கின கிராமத்துப் பள்ளிகளோட நிலைமை எனக்கு ஏற்கெனவே பரிச்சயம். 'இதை எல்லாம் எப்படி சரிசெய்யப் போறோம்?'ங்கற மலைப்பு இல்லாம, முழு மனசோட அதுக்கான வேலைகள்ல என்னையும் இணைச்சுக்கிட்டேன்.

தமிழ் எழுத்துக்களையே சரியா எழுத தெரியாத நிலையில இருந்த பிள்ளைங்க, இன்னிக்கு ஆங்கில அறிவுலயும் சிறந்து விளங்கறதப் பார்க்கும்போது, ரொம்ப பெருமையா இருக்கு. எங்க ஹெச்.எம். வேலை நாட்கள்ல தினமும் மதியம் 1 - 2 மணி மற்றும், மாலை 4.30 - 5.30 மணிக்கு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகளை எடுக்கறாங்க. அதனால்தான் ஒரு 'மெட்ரிக்' பள்ளியோட தரத்தை எங்க பள்ளியில் கொண்டுவர முடிஞ்சுது!" என்று பெருமையோடு சொன்னார்.

இங்கே படிக்கும் மாணவர்களின் படிப்பு நின்று போவதற்கு, பொருளாதாரம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக அக்கறையோடு பல ஏற்பாடுகளை செய்திருக்கிறார் சரஸ்வதி. அதில் ஒன்று... வசதி, வாய்ப்புகளோடு இருக்கும் பழைய மாணவர்களை சேர்த்துக் கொண்டது. அந்த வகையில் இன்றைய மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு, புத்தகங்கள் வழங்கி வருகிறார் பழைய மாணவர் செந்தில்.

"இருபது வருஷத்துக்கு முன்ன இந்த ஸ்கூல்ல படிச்சேன். அன்னிக்கு ஸ்கூலோட நிலைமை ரொம்பவே மோசம். இப்போ ஆசிரியர்களால அங்க மிகப் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கு. அந்த சந்தோஷத்துல நானும் பங்கெடுத்துக்க என்னால ஆன பொருளாதார உதவிகளைச் செய்றேன்..." என்றார் செந்தில் அடக்கமான வார்த்தைகளில்.

மெட்ரிக்குலேஷன் பள்ளியிலிருந்து இடம் மாறி இங்கே சேர்ந்திருப்பவர்களில் ஒருவர் சாராதஸ்ரீன். அவருடைய தந்தை சம்சுதீன் நம்மிடம், "எங்க பூர்வீகமே இந்த ஊர்தான். பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன இருந்ததைவிட இப்ப இந்த ஸ்கூல் நல்லாயிருக்கு. அதனாலதான் 'மெட்ரிக்' ஸ்கூல்ல படிச்சுட்டிருந்த எம்பொண்ண, இந்த ஸ்கூல்ல சேர்த்தோம்" என்று சொன்னார்.

மொத்தம் 345 மாணவ, மாணவியர் இங்கே படிக்கிறார்கள். "எங்க ஸ்கூல் சூப்பர் ஸ்கூல்தானே!" என்று அவர்கள் கேட்பதைப் போலவே... தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளி மாணவர்களும் கேட்க முடியாதா என்ன? என்ன, கூட்டணி பலமாக இருக்கவேண்டும்... மானூர் ஆசிரியர் கூட்டணியைப் போல!

அவள் விகடன் 28-ஜனவரி-2011




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 10:22 pm

நல்ல பதிவு

மிக்க ஆசிரியர்கள் - ஆசிரியைகள் மனது வைப்பதில்லையே.

அரசு நிறைய சலுகைகள் தந்தாலும் அவர்கள் மனது வைக்க முன்வருவதில்லையே
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Mஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Uஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Tஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Hஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Uஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Mஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Oஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Hஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Aஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Mஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Eஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 10:24 pm

Muthumohamed wrote:நல்ல பதிவு

மிக்க ஆசிரியர்கள் - ஆசிரியைகள் மனது வைப்பதில்லையே.

அரசு நிறைய சலுகைகள் தந்தாலும் அவர்கள் மனது வைக்க முன்வருவதில்லையே
புதிய கல்வித்திட்டத்தின் படி ஆசிரியர்கள் மனது வைக்காமலேயே அரசு பள்ளிகளை அரசாங்கம் இது போல மாற்றிவிடும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 10:34 pm

இங்கே ஒரு முறை பதிந்து விட்டு மீண்டும் ஏன் மறுபடியும் பதிகிறீர்கள்... இனி இரட்டை பதிவுகள் தொடர்ந்தால் எச்சரிக்கை புள்ளிகள் கிடைக்கும் நண்பரே!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 10:37 pm

அசுரன் wrote:
Muthumohamed wrote:நல்ல பதிவு

மிக்க ஆசிரியர்கள் - ஆசிரியைகள் மனது வைப்பதில்லையே.

அரசு நிறைய சலுகைகள் தந்தாலும் அவர்கள் மனது வைக்க முன்வருவதில்லையே
புதிய கல்வித்திட்டத்தின் படி ஆசிரியர்கள் மனது வைக்காமலேயே அரசு பள்ளிகளை அரசாங்கம் இது போல மாற்றிவிடும்.

மாறினால் நல்லது




ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Mஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Uஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Tஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Hஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Uஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Mஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Oஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Hஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Aஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Mஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! Eஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 20, 2012 11:40 am

நல்ல பதிவு. ஆசிரியர்களின் முயற்சிதான் பள்ளியின் வளர்ச்சி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Dec 20, 2012 12:50 pm

உண்மையிலே நெகிழ்ந்துவிட்டேன் . இப்படி எல்லா பள்ளிகளும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் . நான் கூட என் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துவிடுவேன் . இதற்கு அரசும் பள்ளி ஆசிரியர்களும் சேர்ந்து நடவடிக்கைகள் எடுத்தால் நல்லா தான் இருக்கும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 20, 2012 12:54 pm

நல்ல பதிவு .. வாழ்த்துக்கள் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 20, 2012 1:11 pm

ஆசிரியர்கள் மனது வைத்தால் முடியும் . அவங்க தான் மனசு வைக்க மாட்டாங்களே !



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 20, 2012 1:15 pm

நல்ல பதிவு புன்னகை நல்ல ஆசிரியர்கள் நல்ல பள்ளி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக