ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரவு செலவுக் கணக்கு

Go down

ஈகரை வரவு செலவுக் கணக்கு

Post by Muthumohamed Mon Dec 17, 2012 12:40 am

வரவு செலவுக் கணக்கு

இப்ப கொஞ்சம் நாட்களாக வரவு செலவையெல்லாம் நோட்டில் எழுதிவைக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். எப்படி எழுதவேண்டும் என்பதை அக்காவிடமிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை கொஞ்சம் இருக்கிறது.

அக்காவை கடைப்பிடித்து எழுதுவதில் எதோ ஒருவகை சலனம் எனக்குள் உண்டாவதை உணரமுடிகிறது. ஐம்பது பைசா ஊறுகாய் வாங்குவதைக்கூட தவறாமல் எழுதிவிடும் பழக்கம் உடையவள். அவள், இரகசியப் பொருட்களைக்கூட விலையையும் சேர்த்து எழுதி வைக்கும் பழக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதில் வேறு கடைக்காரர் கொடுக்கும் ரசீதுகளைக்கூட மயிலிறகைப்போல நடுப்பகத்தில் வைத்திடுவாள். நல்லவேலை, கொடுக்கும் வீட்டு வாடகைக்கு வீட்டுக்காரரிடம் ரசீது கேட்டு அடம்பிடிக்கும் பழக்கம் மட்டும் அவளிடம் இல்லை. அப்படியொரு பழக்கம் இருந்திருந்தால் அடிக்கடி வீட்டை காலி செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருப்பாள்.

எனது அக்கா மாதிரி வரவு செலவுக் கணக்கை எழுதுவதாக வைத்துக் கொள்வோம். சிகரெட், தண்ணிச் செலவையும் நான் எழுதியாக வேண்டுமோ..? அப்படி எழுதி வைக்க என் ஆழ்மனது இடம் கொடுக்கவில்லை. முதலில் எதையெல்லாம் எழுத வேண்டாம் என்பதில் ஒரு தீர்க்கமான முடிவு செய்தேன். பட்டியல் நீளவில்லை. சிகரெட், தண்ணியோடு நின்று விட்டது.

நான் தினம் வரவு செலவு கணக்கு எழுதுவதை என் அக்காள் கேள்விப்பட்டிருக்கிறாள். மனசுக்குள் ரசித்திருக்கிறாள். வரவு செலவு கணக்கு எழுதும் எல்லோரையும் அவளுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. அதற்கான காரணத்தை ஒரு முறைக்கு பலமுறை சொல்லி கேட்டிருக்கிறேன். "எவ்ளோ வேண்டுமானாலும் நம்பி கடன் கொடுக்கலாம் கடன் வாங்கலாம். அவங்கக்கிட்ட வரவு செலவு வச்சிக்கிறது கல்லில் எழுதின எழுத்து" நான் திரும்ப கேட்கிறேன். "எங்கள மாதிரி ஆள்களுக்கிட்ட வச்சிக்கிற வரவு செலவு?" பட்டென்று சொன்னாள். "என்னா தண்ணியில எழுதுற கணக்குதான்."

முச்சந்தி வரை மட்டுமே வரும் பெண்களைப் போல வாங்கிய சம்பளம் பதினைந்து தேதியோடு சரி. அதற்குப்பிறகு அக்காதான் எல்லாம். சம்பளத்தேதியில் அக்கா கணக்கு போகத்தான் எனக்கு. இதையும் தாண்டி நண்பர்கள் யாரும் ஊருக்கு சென்றால் அம்மாவிற்கு பணம் கொடுத்து அனுப்புவதோடு சரி.

அக்கா என்னைப் பார்க்க பெங்களூர் வரைக்கும் வந்திருக்கிறாள். ஒரு வாரப்பொழுதுகளை பெங்களுரில் கடத்த வேண்டும் என்பதுதான் அவளுடைய அவா. கூடவே ஐந்து வயதாகும் மகனையும் அழைத்து வந்திருந்தாள். ஆறு நாட்கள் நகரத்தை சுற்றிப்பார்ப்பதிலேயே கடந்து விட்டது. ஏழாம் நாள் இன்று.

"ரகு... நீ வரவு செலவு நோட் போட்டிருக்கேனு கேள்விப்பட்டேன். எங்கே காட்டுப் பார்க்கலாம்"

எனக்குள் குறுகுறுத்தது.

"அதை என்னதுக்கு நீ கேட்கிறேக்கா..?"

"சும்மா பார்க்கலாமுனுதான்"

நோட்டை எடுத்து நீட்டினேன்.

"ரொம்ப சின்ன நோட்டா போட்டிருக்கே..."

"விரலுக்கேத்த வீக்கம்"“

"எழுத்தெல்லாம் கோழி சீக்கிற மாதிரி எழுதிருக்கே"

"எனக்கு மட்டும் புரிஞ்சா போதுமுனுதான்"

"நீ நினைக்கிற மாதிரி இல்ல ரகு, வரவு செலவு கணக்கு. கிட்டத்திட்ட சுய சரிதை மாதிரி அது. ரொம்ப வெளிப்படையாகவே இருக்கணும்"

"வெளிப்படையாக இருக்கணுமுன்னா..?"

"இப்ப நீ சிகரெட்டை புகைச்சிட்டு தூக்கியெறிஞ்சியே. அந்தக்கணக்கெல்லாம் இதுல வரணும்.."

அவளுடைய வாதத்தில் குறுக்கிட்டேன்.

"நீ ஒரு ஆளுக்கா. நேற்றைக்கு ஒரு ரூபா கொடுத்து டாய்லெட்க்குள் போனேன். அதெல்லாம்மா எழுதணும்."

"பின்னே எழுதுறதில்லையா..?"

பக்கத்தை முழுவதுமாக புரட்டிவிட்டு உள்ளங்கையில் நோட்டைத் தட்டினாள். நோட்டில் ஒட்டிக் கொண்டிருந்த தூசிகள் துண்டைக் காணாம் துணியைக் காணாம் என பறந்தது.

அடுத்தச்சுற்றாக நோட்டை விரித்து வைத்துக்கொண்டு முனுமுனுத்தாள்.

"என்ன ரகு. சம்பளம் ஐய்யாயிரம் வாங்கிருக்கே அது வரவு. ஆனா.. செலவு வெறும் ரெண்டாயிரத்து எண்ணூற்று தொண்ணூறு மட்டும்தான் வருது."

"ஆமாம் மீதி எங்கே...?" மனதிற்குள் அலசினேன்.

"ரகு.. நான் கொடுத்த ஆயிரத்தில முந்நூறு ரூபாய்க்கு கணக்கை காணாம்.."

நெற்றி தசைகளை ஒரு சேர இழுத்து வந்து துலாவினேன். முந்நூறுக்கான செலவு தென்பட்டது. ஆனால் சம்பளக்கணக்கில் மீதி..?

அக்கா பெருமூச்சு விட்டப்படி சொன்னாள்.

"ம்.. ரகு. கண்டுப்பிடிச்சிட்டேன். என் பையன் பிறந்த நாளுக்கு மாமன் ட்ரெஸ் முந்நூறு ரூபாய்க்கு எடுத்து அனுப்பிருந்தியே ஞாபகமிருக்கா..?"

"..ம்" தலையாட்டினேன்.

"அடுத்து ரகு. அம்மாவிற்கு மூவாயிரம் கொடுத்து அனுப்பினியே. அதை எழுதல."

பேனாவை திறந்து எழுதத்தொடங்கினாள்.

"அக்கா நிறுத்துக்கா."

"ஏன்டா...?"

"தம்பிக்கு ட்ரெஸ் எடுத்ததையும் அம்மாவுக்கு பணம் அனுப்பி வைத்ததையும்மா எழுதி வைக்கணும்!"

"ஆமான்டா. அப்பதான் வரவு செலவு கணக்கா வரும்"

"என்ன வரவு செலவு கணக்கா வரும்...?"

"என்னடா சொல்றே..?"

"நீ நினைக்கிற மாதிரி இல்லக்கா. உழுவுறவன் கணக்குப்பார்த்தா உலைக்குகூட மிஞ்சாது. அப்பா அப்படியெல்லாம் கணக்கு பார்க்காத வரைக்கும்தான் அவரு தொடர்ந்து விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தார். நானும் நீயும் கணக்குப் பார்த்தோம். உழுத நிலத்தையெல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு நீ சென்னையிலேயும் நான் இங்கேயும் இருக்கிறோம்."

"நான் இப்ப என்ன சொல்லிட்டேன். இப்படி கொதிக்கிற"

"பின்னே என்னக்கா நீ. பெத்தவளுக்கு கொடுக்கிற பணத்தையெல்லாம் செலவுல எழுதுறது எனக்கு நல்லதா படல. நம்ம அம்மா நமக்கு கொடுத்த பாசம் நேசம் எல்லாத்தையும் கணக்குப்பார்த்தா நாம அம்மாவுக்கு கொடுக்க பூமியே பத்தாதுக்கா."

அவளுக்குள் கீறல் விழுந்ததை என்னால் உணர முடிந்தது.

"சரிடா ரகு நான் கிளம்புறேன். லீவு கிடைச்சா சென்னைக்கு வா. இந்தா செலவுக்கு பணம். முன்னூறு வச்சிக்கோ."

வழக்கமாக அக்கா என்னிடமிருந்து பிரியும் போது கொடுக்கும் சம்பிரதாயமாகிப்போன கரன்சி இது.

கையிலேயே நோட்டு வைத்திருந்ததால் வரவில் முந்நூறு வைத்தேன்.

"வாய் கிழிய பேசினே. அக்கா கொடுக்கிறத நோட்டுல எழுதுற"

"அக்கா.. உறவுக்காரங்கக்கிட்ட வாங்கியதை எழுதணும். கொடுக்கிறதை எழுதக்கூடாது"

"அய்யோ.. எனக்கு தலை சுத்துதுடா." எனச் சொல்லிக்கொண்டு அக்கா அவளுடைய நோட்டைத் வேகமாகத் தேடினாள்.

"எப்பா ரகு.. சொல்லு."

"எனக்கு முந்நூறு கொடுத்திருக்கிற" அக்கா சிடுசிடுத்தாள்.

"அட அது இல்லப்பா. கடைசியா ஒரு வசனம் பேசினியே"

"அதை வீட்ல போய் யோசிச்சு எழுதுக்கிறலாம். இப்ப வருகிற பஸ்ல சீட் பிடிக்கப்பாரு." முண்டியடித்துக்கொண்டு ஓடினாள் அக்கா.

கூடல் தளம்



வரவு செலவுக் கணக்கு Mவரவு செலவுக் கணக்கு Uவரவு செலவுக் கணக்கு Tவரவு செலவுக் கணக்கு Hவரவு செலவுக் கணக்கு Uவரவு செலவுக் கணக்கு Mவரவு செலவுக் கணக்கு Oவரவு செலவுக் கணக்கு Hவரவு செலவுக் கணக்கு Aவரவு செலவுக் கணக்கு Mவரவு செலவுக் கணக்கு Eவரவு செலவுக் கணக்கு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum