Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய மூளை எதற்கும் சளைத்ததல்ல-வி.பொன்ராஜ்
3 posters
Page 1 of 1
இந்திய மூளை எதற்கும் சளைத்ததல்ல-வி.பொன்ராஜ்
இந்தியாவின் ராக்கெட் விஞ்ஞானத் தந்தை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் இந்தியா 2020 கனவினை நனவாக்கும் விதமாக அரசியல், கலை, இலக்கியம், ஊடகம், சமூகசேவை மற்றும் கல்வி ஆகிய துறைகளில் தனித்து விளங்கும் இளைஞர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் விதமாகச் சமூகசேவகர் அப்துல் கனி யால் உருவாக்கப்பட்ட Youth PowerNation Building – தேசக் கட்டமைப்பில் இளைஞர்களின் சக்தி அமைப்பின் தொடக்கவிழாவும் அந்த அமைப்பின் சார்பாக இளம் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவும் சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
அப்துல் கலாமின் விஞ்ஞான ஆலோசகர் வி.பொன்ராஜ் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
:-
நிகழ்ச்சியில் டெக்கான் குரோனிகல் செய்தித்தாளின் Consultant Editor பகவான் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்-ஜானகி பெண்கள் கல்லூரியின் செயலாளர் டாக்டர் லதா ராஜேந்திரன், முதல்வர் டாக்டர் சஷாத், தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் அபிதா சபாபதி ஆகியோரும் கலந்து கொண்டார்.
:-
விழாவில் வினோத் நரசிம்மன்,கபிலன் வைரமுத்து, மாத்யூ ஜோஸ், ஜார்ஜ் விஜய் நெல்சன் , அருண் லோக நாதன், K.விஜய் ஆனந்த் , சனாபர் சுல்தானா, சைந்தவி, நரேஷ் குமார் , நிஷா தோட்டா, சிவராஜ் முத்துராமன், பிரமிளா கிருஷ்ணன், ஹரி பாலாஜி மற்றும் கே.மோகன் ஆகியோருக்குத் தாங்கள் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கியமைக்காக இளம் சாதனையாளர்கள் விருதினை வி.பொன்ராஜ் வழங்கினார்.
:-
கல்வி, கலை, சமூக சேவை ஆகியவற்றில் கடந்த பலவருடங்களாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவரும் எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி நடத்தி வருபவரும் எம்.ஜி.ஆர்-ஜானகி பெண்கள் கல்லூரியின் செயலாளருமான டாக்டர் லதா ராஜேந்திரனுக்கு அவர் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்துவருவதைக் கெளரவிக்கும் விதமாக அம்பாசிடர் விருதினையும் வி.பொன்ராஜ் வழங்கினார்.
:-
விழாவில் சிறப்புரையாற்றியஅப்துல் கலாமின் விஞ்ஞான ஆலோசகர் வி.பொன்ராஜ் உலகில்எந்த மூளைகளுக்கும் சளைத்தல்ல நமது இந்திய மாணவர்களின் மூளை என்று குறிப்பிட்டார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டுவாழ்க படத்தில் அவர் பாடும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் …. என்கிற பாடலில் இருந்துதான் திருக்குறளைத்தாம் கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட அவர்”எம்.ஜி.ஆர் தான் எனக்கு முதல் திருக்குறள் ஆசான்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “15 வயது என்பது மிகவும் முக்கியமான ஒரு பருவம்.
:-
அது வரை எனது தாய் கிறிஸ்துவ நீதிக்கதைகளையும் எனது தந்தையார் ராமயாணம் –மகாபாரதக் கதைகளை போதித்து வந்திருந்தாலும், 15 வயதிற்குப் பிறகு நான் அவர்களைச் சாராமல் இருக்கத் தொடங்கிய பிறகு நான் எந்தத் தீயபழக்கங்களுக்கும் அடிமையாகிவிடாமல் என்னை நல்வழிப்படுத்தியது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்தான், அவர் நடித்த படங்கள் தான்” என்றார். இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் தனித்துவம் மிக்கவர்களாகத் திகழ வேண்டும் என்று கேட்டக் கொண்ட வி.பொன்ராஜ் அமெரிக்க, சீன, ரஷ்ய விஞ்ஞானிகள் பலவருடம் முயன்று முடியாமல் போன நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருக்கும் உண்மையை இந்திய இளம் விஞ்ஞானிகள் தங்களுடைய முதல் முயற்சியிலேயே சந்திராயன் விண்கலம் அனுப்பியதன் மூலம் கண்டுபிடித்தனர் என்று நாசா விஞ்ஞானிகள் பெருமையுடன் சுட்டிக் காட்டியதைத் தன் பேச்சினூடே நினைவு படுத்தினார்.
:-
1970 களில் ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட்த் தளத்தை தொடங்கி வைத்து முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க 5000 கிமீ சென்று இலக்கினைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைத் தொழில் நுட்பத்தில் அப்துல் கலாம் வழியில் வந்த இளம் விஞ்ஞானிகள் மெதுவாக – நன்கு திட்டமிட்டுத் தங்கள் வெற்றிகளை ஒவ்வொரு படிகளாக அடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பெருமையோடு கூறிய வி.பொன்ராஜ், “ நமது நாட்டைச் சுற்றி 5000 கிமீ சுற்றளவுக்குள் எந்தத் திசையிலிருந்தும் எந்த மாதிரியான ஆயுதங்களைச் சுமந்து கொண்டும் வரும் ஏவுகணைகளை மிகச்சறியாக அடையாளம் கண்டு வானிலேயே அழித்து விடும் தொழில் நுட்பத்தில் இந்தியா உலகில் முன்னணியில் உள்ளது” என்றார்.
:-
தனது பேச்சினூடே அப்துல்கலாமின் கவிதைகளையும் “சிறியதாகக் கனவு காண்பது ஒரு குற்றம்” போன்ற கலாமின் சிந்தனைகளையும் எடுத்துச் சொல்லி அதனை அரங்கில் கூடியிருந்த விருது பெறவந்திருந்தவர்களையும், எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரி மாணவிகளையும் திருப்பிக் கூற வைத்து அவற்றை அவர்களதுமனதில் ஆழமாக விதைக்கவும் செய்தார் வி.பொன்ராஜ்.
:-
இந்தியா 2020 என்கிற அப்துல் கலாமின் கனவினைப் பற்றி வி.பொன்ராஜ் பேசும் போது, இந்தியா 2020 என்ற திட்டம், அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 10 சதவீகிதத்திற்கு உயர்த்தி அதை நிலையில் நிறுத்த வழிவகை செய்யும் திட்டமாகும். அப்படி செய்யப்படுமேயானால் – வறுமையில் வாடும் மக்களை, அதில் இருந்து விடுவித்து மேல் தட்டிற்குக் கொண்டு வந்து, வேலைவாய்ப்பை பெருக்கி, தனிநபர் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தை பெருக்கி, கல்விமற்றும் ஆராய்ச்சி, மருத்துவம், தண்ணீர், எரிசக்தி, நதிநீர் இணைப்பு, தொழில் வளர்ச்சி, நகர்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளித்து ஒருங்கிணைந்த நீடித்த வசதிகளை கிராமப்புறம் பெற தேவையான பன்முக பொருளாதார வளர்ச்சியை அடைந்து, சமூக பொருளாதார வேறுபாடு அற்ற ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும். இன்றைக்கு நாட்டில் தொடர்ந்து வரும் மத்திய அரசுகளும், பல்வேறு மாநிலங்களும் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகிறது.
:-
அது மட்டும் போதாது, நம் இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால் அவசியம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.
2020ல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை டாக்டர் கலாம் அவர்கள் பாராளுமன்றத்திலே உரையாற்றும் பொழுது தெரிவித்திருந்தார்.
அப்துல் கலாமின் விஞ்ஞான ஆலோசகர் வி.பொன்ராஜ் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
:-
நிகழ்ச்சியில் டெக்கான் குரோனிகல் செய்தித்தாளின் Consultant Editor பகவான் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்-ஜானகி பெண்கள் கல்லூரியின் செயலாளர் டாக்டர் லதா ராஜேந்திரன், முதல்வர் டாக்டர் சஷாத், தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் அபிதா சபாபதி ஆகியோரும் கலந்து கொண்டார்.
:-
விழாவில் வினோத் நரசிம்மன்,கபிலன் வைரமுத்து, மாத்யூ ஜோஸ், ஜார்ஜ் விஜய் நெல்சன் , அருண் லோக நாதன், K.விஜய் ஆனந்த் , சனாபர் சுல்தானா, சைந்தவி, நரேஷ் குமார் , நிஷா தோட்டா, சிவராஜ் முத்துராமன், பிரமிளா கிருஷ்ணன், ஹரி பாலாஜி மற்றும் கே.மோகன் ஆகியோருக்குத் தாங்கள் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கியமைக்காக இளம் சாதனையாளர்கள் விருதினை வி.பொன்ராஜ் வழங்கினார்.
:-
கல்வி, கலை, சமூக சேவை ஆகியவற்றில் கடந்த பலவருடங்களாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவரும் எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி நடத்தி வருபவரும் எம்.ஜி.ஆர்-ஜானகி பெண்கள் கல்லூரியின் செயலாளருமான டாக்டர் லதா ராஜேந்திரனுக்கு அவர் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்துவருவதைக் கெளரவிக்கும் விதமாக அம்பாசிடர் விருதினையும் வி.பொன்ராஜ் வழங்கினார்.
:-
விழாவில் சிறப்புரையாற்றியஅப்துல் கலாமின் விஞ்ஞான ஆலோசகர் வி.பொன்ராஜ் உலகில்எந்த மூளைகளுக்கும் சளைத்தல்ல நமது இந்திய மாணவர்களின் மூளை என்று குறிப்பிட்டார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டுவாழ்க படத்தில் அவர் பாடும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் …. என்கிற பாடலில் இருந்துதான் திருக்குறளைத்தாம் கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட அவர்”எம்.ஜி.ஆர் தான் எனக்கு முதல் திருக்குறள் ஆசான்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “15 வயது என்பது மிகவும் முக்கியமான ஒரு பருவம்.
:-
அது வரை எனது தாய் கிறிஸ்துவ நீதிக்கதைகளையும் எனது தந்தையார் ராமயாணம் –மகாபாரதக் கதைகளை போதித்து வந்திருந்தாலும், 15 வயதிற்குப் பிறகு நான் அவர்களைச் சாராமல் இருக்கத் தொடங்கிய பிறகு நான் எந்தத் தீயபழக்கங்களுக்கும் அடிமையாகிவிடாமல் என்னை நல்வழிப்படுத்தியது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்தான், அவர் நடித்த படங்கள் தான்” என்றார். இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் தனித்துவம் மிக்கவர்களாகத் திகழ வேண்டும் என்று கேட்டக் கொண்ட வி.பொன்ராஜ் அமெரிக்க, சீன, ரஷ்ய விஞ்ஞானிகள் பலவருடம் முயன்று முடியாமல் போன நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருக்கும் உண்மையை இந்திய இளம் விஞ்ஞானிகள் தங்களுடைய முதல் முயற்சியிலேயே சந்திராயன் விண்கலம் அனுப்பியதன் மூலம் கண்டுபிடித்தனர் என்று நாசா விஞ்ஞானிகள் பெருமையுடன் சுட்டிக் காட்டியதைத் தன் பேச்சினூடே நினைவு படுத்தினார்.
:-
1970 களில் ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட்த் தளத்தை தொடங்கி வைத்து முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க 5000 கிமீ சென்று இலக்கினைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைத் தொழில் நுட்பத்தில் அப்துல் கலாம் வழியில் வந்த இளம் விஞ்ஞானிகள் மெதுவாக – நன்கு திட்டமிட்டுத் தங்கள் வெற்றிகளை ஒவ்வொரு படிகளாக அடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பெருமையோடு கூறிய வி.பொன்ராஜ், “ நமது நாட்டைச் சுற்றி 5000 கிமீ சுற்றளவுக்குள் எந்தத் திசையிலிருந்தும் எந்த மாதிரியான ஆயுதங்களைச் சுமந்து கொண்டும் வரும் ஏவுகணைகளை மிகச்சறியாக அடையாளம் கண்டு வானிலேயே அழித்து விடும் தொழில் நுட்பத்தில் இந்தியா உலகில் முன்னணியில் உள்ளது” என்றார்.
:-
தனது பேச்சினூடே அப்துல்கலாமின் கவிதைகளையும் “சிறியதாகக் கனவு காண்பது ஒரு குற்றம்” போன்ற கலாமின் சிந்தனைகளையும் எடுத்துச் சொல்லி அதனை அரங்கில் கூடியிருந்த விருது பெறவந்திருந்தவர்களையும், எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரி மாணவிகளையும் திருப்பிக் கூற வைத்து அவற்றை அவர்களதுமனதில் ஆழமாக விதைக்கவும் செய்தார் வி.பொன்ராஜ்.
:-
இந்தியா 2020 என்கிற அப்துல் கலாமின் கனவினைப் பற்றி வி.பொன்ராஜ் பேசும் போது, இந்தியா 2020 என்ற திட்டம், அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 10 சதவீகிதத்திற்கு உயர்த்தி அதை நிலையில் நிறுத்த வழிவகை செய்யும் திட்டமாகும். அப்படி செய்யப்படுமேயானால் – வறுமையில் வாடும் மக்களை, அதில் இருந்து விடுவித்து மேல் தட்டிற்குக் கொண்டு வந்து, வேலைவாய்ப்பை பெருக்கி, தனிநபர் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தை பெருக்கி, கல்விமற்றும் ஆராய்ச்சி, மருத்துவம், தண்ணீர், எரிசக்தி, நதிநீர் இணைப்பு, தொழில் வளர்ச்சி, நகர்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளித்து ஒருங்கிணைந்த நீடித்த வசதிகளை கிராமப்புறம் பெற தேவையான பன்முக பொருளாதார வளர்ச்சியை அடைந்து, சமூக பொருளாதார வேறுபாடு அற்ற ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும். இன்றைக்கு நாட்டில் தொடர்ந்து வரும் மத்திய அரசுகளும், பல்வேறு மாநிலங்களும் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகிறது.
:-
அது மட்டும் போதாது, நம் இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால் அவசியம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.
2020ல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை டாக்டர் கலாம் அவர்கள் பாராளுமன்றத்திலே உரையாற்றும் பொழுது தெரிவித்திருந்தார்.
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: இந்திய மூளை எதற்கும் சளைத்ததல்ல-வி.பொன்ராஜ்
உங்கள்சிந்தனை ஒன்றுபட்டால், செயல் ஒன்றுபட்டால், 2020 இலட்சியம் நிறைவேறும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
:-
கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைத்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப்பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
பண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
:-
விஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லுநர்களும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு நாடாக, இந்தியாவை மாற்ற வேண்டும்
தரமான மருத்துவ வசதி அனைவருக்கும், வேறுபாடு இல்லாமல் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சிமுறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை கலையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைப் படுத்தப் பட்டு விட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
:-
ஒரு இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீறு நடை போடக்கூடியநாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
இப்படிப்பட்ட இந்தியாவைப் படைக்க எழுச்சிமிக்க எண்ணம் கொண்ட இளைஞர்கள் அனைத்துத் துறைகளிலும் தேவை. அந்த இளைஞர்கள் நாளைய தலைவர்களாக பரிணமித்தால் தான் இந்தியா, ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயம் கொண்ட, நீடித்த வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.
:-
ஓவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஓரு இலட்சியம் வேண்டும், அந்த இலட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்கவேண்டும், தொடர்ந்து அறிவைப்பெற, அதை தேடி சென்றடையவேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும். பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஓரு சக்தியை காட்டிலும், மனஎழுச்சி கொண்ட இளைஞன் தான் இந்தியாவின் மிகப் பெரிய சக்தி. 60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு இந்தியா எனவே இளஞர்கள் மனஉறுதியோடு முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை” என்றார்.
:-
முன்னதாக உரையாற்றிய டெக்கான் குரோனிகல் செய்தித்தாளின் Consultant Editor பகவான் சிங் பேசும் போது தனிமனித ஒழுக்கமே தேசமுன்னேற்றத்தின் முதல்படி என்று கூறினார் அத்துடன் செய்தித் தாள்களில் வரும் ஊழல் சம்பந்தமான செய்திகளை வெறும் பொழுது போக்காக படித்து விடுவதோடு நின்றுவிடாமல் அவை நமது பணம், நம் பணத்தைத் தான் அரசியல்வாதிகள் சுரண்டுகிறார்கள் என்கிற விழிப்புணர்ச்சியினை மக்கள் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
:-
நிகழ்ச்சியில் டாக்டர் அபிதா சபாபதி வரவேற்புரை வழங்க, Youth Power Nation Building – தேசக் கட்டமைப்பில் இளைஞர்களின் சக்தி அமைப்பின் நிறுவனர் சமூக சேவகர் அப்துல் கனி நன்றியுரை வழங்கினார். YPNBஅமைப்பின் உறுப்பினர் பாலாஜி நிகழ்ச்சியினை ஒருங்கிணத்தார்.
:-
For Picture gallery of Youth Achiever Awards plz go this link
:-
http://www.mysixer.com/?p=21769
:-
நன்றி Mysixer.com
:-
கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைத்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப்பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
பண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
:-
விஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லுநர்களும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு நாடாக, இந்தியாவை மாற்ற வேண்டும்
தரமான மருத்துவ வசதி அனைவருக்கும், வேறுபாடு இல்லாமல் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சிமுறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை கலையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைப் படுத்தப் பட்டு விட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
:-
ஒரு இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீறு நடை போடக்கூடியநாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
இப்படிப்பட்ட இந்தியாவைப் படைக்க எழுச்சிமிக்க எண்ணம் கொண்ட இளைஞர்கள் அனைத்துத் துறைகளிலும் தேவை. அந்த இளைஞர்கள் நாளைய தலைவர்களாக பரிணமித்தால் தான் இந்தியா, ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயம் கொண்ட, நீடித்த வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.
:-
ஓவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஓரு இலட்சியம் வேண்டும், அந்த இலட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்கவேண்டும், தொடர்ந்து அறிவைப்பெற, அதை தேடி சென்றடையவேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும். பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஓரு சக்தியை காட்டிலும், மனஎழுச்சி கொண்ட இளைஞன் தான் இந்தியாவின் மிகப் பெரிய சக்தி. 60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு இந்தியா எனவே இளஞர்கள் மனஉறுதியோடு முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை” என்றார்.
:-
முன்னதாக உரையாற்றிய டெக்கான் குரோனிகல் செய்தித்தாளின் Consultant Editor பகவான் சிங் பேசும் போது தனிமனித ஒழுக்கமே தேசமுன்னேற்றத்தின் முதல்படி என்று கூறினார் அத்துடன் செய்தித் தாள்களில் வரும் ஊழல் சம்பந்தமான செய்திகளை வெறும் பொழுது போக்காக படித்து விடுவதோடு நின்றுவிடாமல் அவை நமது பணம், நம் பணத்தைத் தான் அரசியல்வாதிகள் சுரண்டுகிறார்கள் என்கிற விழிப்புணர்ச்சியினை மக்கள் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
:-
நிகழ்ச்சியில் டாக்டர் அபிதா சபாபதி வரவேற்புரை வழங்க, Youth Power Nation Building – தேசக் கட்டமைப்பில் இளைஞர்களின் சக்தி அமைப்பின் நிறுவனர் சமூக சேவகர் அப்துல் கனி நன்றியுரை வழங்கினார். YPNBஅமைப்பின் உறுப்பினர் பாலாஜி நிகழ்ச்சியினை ஒருங்கிணத்தார்.
:-
For Picture gallery of Youth Achiever Awards plz go this link
:-
http://www.mysixer.com/?p=21769
:-
நன்றி Mysixer.com
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: இந்திய மூளை எதற்கும் சளைத்ததல்ல-வி.பொன்ராஜ்
இவர் சொல்வது கலாம் அய்யா சொல்வது எல்லாம் சரிதான் - இன்றைய உண்மை நிலை நம் பள்ளிகளின், கல்லூரிகளின் பாட திட்டத்தை பார்த்தால் தெரியும். பழைய பஞ்சாங்கம் தான் இன்னும் அதோடு கல்லூரிகளில் (சில தவிர்த்து) ஆசிரியர்களின் செயல்பாடு வெறும் கேள்விக் குறிதான்? இதில் எங்கே மாணவர்கள் படித்து தகுந்த வழி நடத்தலால் விஞ்ஞானி ஆவது?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்திய மூளை எதற்கும் சளைத்ததல்ல-வி.பொன்ராஜ்
நண்பரே இது போன்ற நேரடியான மற்ற தளங்களின் இணைப்பை கண்டிப்பாக கொடுக்கக்கூடாது.எடுத்தாளப்பட்ட தளத்திற்கு நன்றி மட்டுமே கூற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இந்திய மூளை எதற்கும் சளைத்ததல்ல-வி.பொன்ராஜ்
சரி நண்பரே,நீங்கள் சொன்னால் உங்கள் தோழன் கண்டிப்பாக கேட்டுக்கொள்கிறேன். மிகவும் நன்றி
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: இந்திய மூளை எதற்கும் சளைத்ததல்ல-வி.பொன்ராஜ்
Powenraj wrote:சரி நண்பரே,நீங்கள் சொன்னால் உங்கள் தோழன் கண்டிப்பாக கேட்டுக்கொள்கிறேன். மிகவும் நன்றி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Similar topics
» கணினி மூளை - மனித மூளை
» 'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை
» கலாமின் கனவு நூல் 3 மாதங்களில் வெளியாகும்: வி.பொன்ராஜ் தகவல்
» மூளை வேணுமா மூளை...
» எதற்கும் குனிந்தவன்!!
» 'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை
» கலாமின் கனவு நூல் 3 மாதங்களில் வெளியாகும்: வி.பொன்ராஜ் தகவல்
» மூளை வேணுமா மூளை...
» எதற்கும் குனிந்தவன்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|