Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்றும்! இன்றும்!!!
3 posters
Page 1 of 1
அன்றும்! இன்றும்!!!
இருபதாம் நூற்றாண்டின் இறுதியும் இருபத்தொன்றாம் நூற்றாண்டும் உலகில் குறிப்பாக இந்தியாவில் கொண்டு வந்திருக்கிறக்கின்ற மாற்றங்களைச் சற்றே எண்ணிப் பார்த்தால் புருவம் உயரத் தான் செய்கிறது.
:-
உலகம் நமது கரங்களில் என கூட கூறலாம்.
"உலகில் மாற்றம் மட்டுமே மாறிக்கொண்டேயிருக்கும்" என எங்கேயோ படித்த ஞாபகம். அந்த வாக்கில் தான் எத்தனை உண்மை!
:-
வீட்டின் ஜன்னல் வழி எப்பொழுது விடியும் என தெருவீதியை நோக்கி விழித்துக் கொண்டிருந்தவனைஇன்று கணினியின் ஜன்னல் வழிஉலக வீதியை விடிய விடிய பார்க்கவும் செய்திருக்கிறது மாற்றம்
25 ஆண்டுகளுக்கு முன்னர் நாம்(ன்) இருந்த நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டால் எத்தனை வகையான மாற்றங்கள் தான் நம் வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றன.
:-
அன்று மாட்டு வண்டியிலும், கால்நடையுமான பயணங்களில் விமானத்தை நோக்கி ஆகாயம் பார்த்த என்னைப்போன்ற சாமானியனை இன்று பூகோளம் நோக்கி கீழே பார்க்கச் செய்திருக்கிறது காலத்தின்மாறுபாடு.
:-
அன்று எண்ணிப்பார்க்க முடியாத அதிசயங்களெல்லாம் இன்று நடந்தேறி வருகின்றன. உலக மயமாக்கலால் இன்று விரல் சொடுக்கும் நேரத்தில் கடல் கடந்து தகவல் பரிமாற்றம் செய்யவும், பணப் பரிமாற்றம்செய்யவும் இயல்கிறது.
:-
18 வயது இருக்கும் போது தான் தொலைபேசியையே பார்த்திருக்கிறேன்;ஆனால் இன்றைய சந்ததி பிறக்கையிலேயே அவர்கள் செவிகளில் செல்ஃபோன்கள் ரீங்காரமிடுகின்றன.எனது கையிலும் ஃபோன் தவழும் என கனவும் கண்டதில்லை.இப்படி மாறியிருக்கிறது;
பலரை மாற்றியுமிருக்கிறது இன்றைய உலகம்.
:-
கணினியும் இணையமும் உலகை இணைக்கும் மாபெரும் சக்திகளாக உருவெடுத்துள்ளன, web camera உதவியுடன் நேரலையில்பார்த்து பேசுவது 25 ஆண்டுகள் முன்பு நினைத்தே பார்க்கவியலாதது.
அன்று தட்டச்சு செய்வதே மிகப்பெரும் சாதனை, இன்றோ தட்டச்சு என்றால் என்ன என்கிறார்கள் சிறுவர்கள்.தட்டச்சுகளை தொடாத கரங்கள் இன்று கணினிகளை தீண்டுகின்றன.
:-
இருக்கின்ற இடங்களிலேயே நம் உள்ளங்கைகளில் உலக நிகழ்வுகளை செயற்கைக் கோள் உதவியுடன் GPRS, 3G,GPS தொழில்நுட்பங்களால் அறிய முடிகிறது.
தொலைக்காட்சிகளையும் அவற்றின் நேரடி ஒளிபரப்புகளைக் குறித்து சொல்லவே தேவையில்லை. எனது சிறுவயதில் கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிகளைக் காண்பதேஅரிது.கல்லூரியில் நான் நுழையும் போது தான் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியே நுழைந்தது .
இன்றோ எத்தனை வகை வண்ண தொலைக்காட்சிகள்!! flat,lcd என அவற்றில் தான் எத்தனை ரகங்கள்!
எத்தனை மாற்றங்கள்! எத்தனை ஆச்சரியங்கள்!
:-
பல மணி நேரம் வங்கிகளில் காத்திருந்த காலம் மாறி சிலநிமிடங்களில் பணமெடுக்க உதவும் ATM இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நம் பட்டணங்களில் யோசித்து கூட பார்க்கவியலாத விஷயம்.
:-
உலகை வலம் வர இருக்கவே இருக்கிறது Google Earth தொழில்நுட்பம், இப்போது சமுத்திரங்களையும் உலவ வழி செய்திருக்கிறார்கள்.
:-
வர்த்தகங்களுக்காகவும், மருத்துவத்திற்காகவும் இருக்கின்ற இடங்களிலேயே Tele Conference, Video Conference, Medical Transcription மூலம் தகவல்களை நாடு கடந்து பகிர்ந்து கொள்ளவும் இயல்கிறது.
:-
ஆயிரம் பக்கங்களுடைய 1000 புத்தங்கள் அன்றைய 5 காசு அளவிற்கும் குறைவான chip களிலும் கையடக்க pda க்களிலும் அடங்கியது மகத்தான காரியம்.
:-
அன்றைய 100 cassete களின் பலஆயிரம் பாடல்கள் இன்றைய ஒருipod உள்ளில்/cd யினுள் வைக்கவியலும் என யாரால் தான் நினைத்து பார்த்திருக்க முடியும்?
அன்று வானொலிப் பெட்டி வீடுகளில் இருந்தாலே அது வீட்டிற்கு கவுரவம்,பெரிய விஷயம், இன்றோ கரங்களில் FMரேடியோக்கள் பா(ட்)டாய் படுத்துகின்றன.
:-
ரெக்கார்டரிலும், டேப் ரெக்கார்டரிலும் பாடல்கள் கேட்பதும் வீடியோ காசெட் பிளேயரில் சினிமாக்களும் பார்ப்பதும் ஆடிக்கொன்றும்அமாவாசைக்கொன்றுமான அன்றையகாலம் போய்
இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிடி பிளேயர்களும், ஹோம் தியேட்டர்களும் வீடுகளை ஆக்கிரமித்துள்ளன.
:-
மாற்றங்கள் பல வந்தாலும் அவற்றில் நன்மையும் தீமையும் ஒரு சேர அடங்கியிருக்கின்றன. நாம் அவற்றை என்ன வழியில் உபயோகப்படுத்துகிறோமென்பதுதான் முக்கியம்.
:-
அனைத்து கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்திருக்கின்றனஎன சொல்லவும் முடிவதில்லை.
:-
தீவிரவாதிகள் இன்று GPS வரைபடங்கள் கொண்டும்,கூகுள் எர்த் கொண்டும் தங்கள் தாக்குதலை நவீனப்படுத்துகிறார்கள்!! மறுபுறம் ATM திருடர்களும்பெருகி வருகிறார்கள்;
வர்த்தக மற்றும் தனிமனித உரையாடல்கள் அநியாயமாக ஒட்டு கேட்கப்படுகின்றன.
தொலைக்காட்சிகளினால் குடும்பங்களில் உரையாடல்கள் குறைந்து வருகின்றன.
:-
அம்மிக்கல் மிக்சியாகவும்,
உரல்கல் கிரைண்டராகவும்,
துடைப்பம் வேக்கும் கிளினீராகவும்,மாறி உடலின் அசைவைக் குறைத்து வாயில் நுழையாத பெயர்களையுடைய நோய்களினால் வாழ்க்கையை அசைத்திருக்கிறது
இந்த மாற்றங்களால் உலகம் நம் கரங்களுள் வந்துவிட்டாலும்;வாழ்க்கையின் வேகம் அதிகரித்திருந்தாலும்; உலகம் ஒரே கிராமமாக பலருக்கு மாறி விட்டாலும்; வாழ்வின் தரம் உயர்ந்திருந்தாலும் இன்றும் கூட உலகில் பலர் ஒரு வேளை உணவிற்கு கூட வழியின்றி தவிக்கிறார்கள்;
தங்குமிடமும்,உடுக்க ஆடையுமின்றி இருக்கிறார்கள்.
:-
நம்மால் இயன்றவரை இல்லாதிருப்போருக்கு இரங்கி, ஈகையால் அவர்கள் வாழ்வை ஒளியேற்றுவொமென்றால், அதுவே மானிட பிறப்பின் மகத்தான சாதனையாகும்.
:-
நன்றி தமிழன் எட்வின் தளம்
:-
உலகம் நமது கரங்களில் என கூட கூறலாம்.
"உலகில் மாற்றம் மட்டுமே மாறிக்கொண்டேயிருக்கும்" என எங்கேயோ படித்த ஞாபகம். அந்த வாக்கில் தான் எத்தனை உண்மை!
:-
வீட்டின் ஜன்னல் வழி எப்பொழுது விடியும் என தெருவீதியை நோக்கி விழித்துக் கொண்டிருந்தவனைஇன்று கணினியின் ஜன்னல் வழிஉலக வீதியை விடிய விடிய பார்க்கவும் செய்திருக்கிறது மாற்றம்
25 ஆண்டுகளுக்கு முன்னர் நாம்(ன்) இருந்த நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டால் எத்தனை வகையான மாற்றங்கள் தான் நம் வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றன.
:-
அன்று மாட்டு வண்டியிலும், கால்நடையுமான பயணங்களில் விமானத்தை நோக்கி ஆகாயம் பார்த்த என்னைப்போன்ற சாமானியனை இன்று பூகோளம் நோக்கி கீழே பார்க்கச் செய்திருக்கிறது காலத்தின்மாறுபாடு.
:-
அன்று எண்ணிப்பார்க்க முடியாத அதிசயங்களெல்லாம் இன்று நடந்தேறி வருகின்றன. உலக மயமாக்கலால் இன்று விரல் சொடுக்கும் நேரத்தில் கடல் கடந்து தகவல் பரிமாற்றம் செய்யவும், பணப் பரிமாற்றம்செய்யவும் இயல்கிறது.
:-
18 வயது இருக்கும் போது தான் தொலைபேசியையே பார்த்திருக்கிறேன்;ஆனால் இன்றைய சந்ததி பிறக்கையிலேயே அவர்கள் செவிகளில் செல்ஃபோன்கள் ரீங்காரமிடுகின்றன.எனது கையிலும் ஃபோன் தவழும் என கனவும் கண்டதில்லை.இப்படி மாறியிருக்கிறது;
பலரை மாற்றியுமிருக்கிறது இன்றைய உலகம்.
:-
கணினியும் இணையமும் உலகை இணைக்கும் மாபெரும் சக்திகளாக உருவெடுத்துள்ளன, web camera உதவியுடன் நேரலையில்பார்த்து பேசுவது 25 ஆண்டுகள் முன்பு நினைத்தே பார்க்கவியலாதது.
அன்று தட்டச்சு செய்வதே மிகப்பெரும் சாதனை, இன்றோ தட்டச்சு என்றால் என்ன என்கிறார்கள் சிறுவர்கள்.தட்டச்சுகளை தொடாத கரங்கள் இன்று கணினிகளை தீண்டுகின்றன.
:-
இருக்கின்ற இடங்களிலேயே நம் உள்ளங்கைகளில் உலக நிகழ்வுகளை செயற்கைக் கோள் உதவியுடன் GPRS, 3G,GPS தொழில்நுட்பங்களால் அறிய முடிகிறது.
தொலைக்காட்சிகளையும் அவற்றின் நேரடி ஒளிபரப்புகளைக் குறித்து சொல்லவே தேவையில்லை. எனது சிறுவயதில் கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிகளைக் காண்பதேஅரிது.கல்லூரியில் நான் நுழையும் போது தான் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியே நுழைந்தது .
இன்றோ எத்தனை வகை வண்ண தொலைக்காட்சிகள்!! flat,lcd என அவற்றில் தான் எத்தனை ரகங்கள்!
எத்தனை மாற்றங்கள்! எத்தனை ஆச்சரியங்கள்!
:-
பல மணி நேரம் வங்கிகளில் காத்திருந்த காலம் மாறி சிலநிமிடங்களில் பணமெடுக்க உதவும் ATM இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நம் பட்டணங்களில் யோசித்து கூட பார்க்கவியலாத விஷயம்.
:-
உலகை வலம் வர இருக்கவே இருக்கிறது Google Earth தொழில்நுட்பம், இப்போது சமுத்திரங்களையும் உலவ வழி செய்திருக்கிறார்கள்.
:-
வர்த்தகங்களுக்காகவும், மருத்துவத்திற்காகவும் இருக்கின்ற இடங்களிலேயே Tele Conference, Video Conference, Medical Transcription மூலம் தகவல்களை நாடு கடந்து பகிர்ந்து கொள்ளவும் இயல்கிறது.
:-
ஆயிரம் பக்கங்களுடைய 1000 புத்தங்கள் அன்றைய 5 காசு அளவிற்கும் குறைவான chip களிலும் கையடக்க pda க்களிலும் அடங்கியது மகத்தான காரியம்.
:-
அன்றைய 100 cassete களின் பலஆயிரம் பாடல்கள் இன்றைய ஒருipod உள்ளில்/cd யினுள் வைக்கவியலும் என யாரால் தான் நினைத்து பார்த்திருக்க முடியும்?
அன்று வானொலிப் பெட்டி வீடுகளில் இருந்தாலே அது வீட்டிற்கு கவுரவம்,பெரிய விஷயம், இன்றோ கரங்களில் FMரேடியோக்கள் பா(ட்)டாய் படுத்துகின்றன.
:-
ரெக்கார்டரிலும், டேப் ரெக்கார்டரிலும் பாடல்கள் கேட்பதும் வீடியோ காசெட் பிளேயரில் சினிமாக்களும் பார்ப்பதும் ஆடிக்கொன்றும்அமாவாசைக்கொன்றுமான அன்றையகாலம் போய்
இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிடி பிளேயர்களும், ஹோம் தியேட்டர்களும் வீடுகளை ஆக்கிரமித்துள்ளன.
:-
மாற்றங்கள் பல வந்தாலும் அவற்றில் நன்மையும் தீமையும் ஒரு சேர அடங்கியிருக்கின்றன. நாம் அவற்றை என்ன வழியில் உபயோகப்படுத்துகிறோமென்பதுதான் முக்கியம்.
:-
அனைத்து கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்திருக்கின்றனஎன சொல்லவும் முடிவதில்லை.
:-
தீவிரவாதிகள் இன்று GPS வரைபடங்கள் கொண்டும்,கூகுள் எர்த் கொண்டும் தங்கள் தாக்குதலை நவீனப்படுத்துகிறார்கள்!! மறுபுறம் ATM திருடர்களும்பெருகி வருகிறார்கள்;
வர்த்தக மற்றும் தனிமனித உரையாடல்கள் அநியாயமாக ஒட்டு கேட்கப்படுகின்றன.
தொலைக்காட்சிகளினால் குடும்பங்களில் உரையாடல்கள் குறைந்து வருகின்றன.
:-
அம்மிக்கல் மிக்சியாகவும்,
உரல்கல் கிரைண்டராகவும்,
துடைப்பம் வேக்கும் கிளினீராகவும்,மாறி உடலின் அசைவைக் குறைத்து வாயில் நுழையாத பெயர்களையுடைய நோய்களினால் வாழ்க்கையை அசைத்திருக்கிறது
இந்த மாற்றங்களால் உலகம் நம் கரங்களுள் வந்துவிட்டாலும்;வாழ்க்கையின் வேகம் அதிகரித்திருந்தாலும்; உலகம் ஒரே கிராமமாக பலருக்கு மாறி விட்டாலும்; வாழ்வின் தரம் உயர்ந்திருந்தாலும் இன்றும் கூட உலகில் பலர் ஒரு வேளை உணவிற்கு கூட வழியின்றி தவிக்கிறார்கள்;
தங்குமிடமும்,உடுக்க ஆடையுமின்றி இருக்கிறார்கள்.
:-
நம்மால் இயன்றவரை இல்லாதிருப்போருக்கு இரங்கி, ஈகையால் அவர்கள் வாழ்வை ஒளியேற்றுவொமென்றால், அதுவே மானிட பிறப்பின் மகத்தான சாதனையாகும்.
:-
நன்றி தமிழன் எட்வின் தளம்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: அன்றும்! இன்றும்!!!
இதையும் படிங்க பிலிஸ்...
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: அன்றும்! இன்றும்!!!
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
அறிவியல் என்பது கண்டுபிடிப்பையும் தாண்டி அதனைப் பயன்படுத்தும் வழிமுறைகளில் தான் உள்ளது.அதனை இந்த மனித சமூகம் தான் சரியான வழியில் பின்பற்ற வேண்டும்
அறிவியல் என்பது கண்டுபிடிப்பையும் தாண்டி அதனைப் பயன்படுத்தும் வழிமுறைகளில் தான் உள்ளது.அதனை இந்த மனித சமூகம் தான் சரியான வழியில் பின்பற்ற வேண்டும்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அன்றும்! இன்றும்!!!
நன்றாக படித்துவிட்டேன் பவுன்ராஜ். இது போன்ற பதிவுகளை மேலும் எதிர்பார்கிறேன்.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|