Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போதுமே இந்த விபரீதம்!
3 posters
Page 1 of 1
போதுமே இந்த விபரீதம்!
ஆஸ்திரேலிய ரேடியோ நிறுவனத்தின் ரேடியோ ஜாக்கிகள் இருவருடைய விளையாட்டு அழைப்பு வினையாகிப்போனது. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இந்திய வம்சாவளி செவிலியர் ஜெசிந்தாவின் மரணம் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
ஜெசிந்தா மர்மமான முறையில் மருத்துவமனையில் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதன் பிறகு இந்த விவகாரம் பலராலும் பேசப்படுவதாக மாறியுள்ளது. இவரது மரணம் கொலையா, தற்கொலையா என்ற விவாதங்களும் நடைபெறுகின்றன. ஆனால், இதற்குக் காரணமான ரேடியோ நிறுவனத்தின் மீதும் ரேடியோ ஜாக்கிகள் மீதும் வழக்குகள் ஏதும் இல்லை. ஒருவேளை இறந்தவர் இந்திய வம்சாவளியினர் என்பதால் அலட்சியமோ என்னவோ?
இந்த மரணம் குறித்து வெளியிட்ட வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள், இந்தச் சம்பவத்தை விவரித்தாலும் அதில் ஜெசிந்தா போலியாகப் பேசி ஏமாற்றப்பட்டார் என்பதை குற்றம் சொல்லவில்லை என்பதும், ரேடியோ ஜாக்கிகள் இருவரும் ஆஸ்திரேலிய தொனியில் (ஆக்ஸன்ட்) பேசியதாகவும் வலிந்து வலிந்து குறிப்பிடுகின்றன.
அதாவது, பேசியவர்கள் ஆஸ்திரேலிய தொனியில் பேசியபோதே அவர்கள் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினர் இல்லை என்பதை அந்த முட்டாள் ஜெசிந்தா புரிந்துகொண்டிருக்க வேண்டும்; புரிந்துகொள்ளாதது அவரது தவறு என்பதைப்போல எழுதுகின்றன. இத்தகைய இனப்பாகுபாடு ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.
லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு வானொலி பேச்சாளர்கள் ( ரேடியோ ஜாக்கி) தங்களை ராணி எலிசபெத் என்றும் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் போல பேசி, அந்த மருத்துவமனை தொலைபேசியில் பதில் அளித்த ஜெசிந்தாவை ஏமாற்றினர். கேத் மிடில்டன் உடல்நிலை மற்றும் மருத்துவ அறிக்கை குறித்து தகவல் அறிந்தனர்.
இரண்டு ரேடியோ ஜாக்கிகளின் விளையாட்டுக்குத் தான் ஆளாகிப் போனதாலும் மருத்துவமனையில் ஒரு நோயாளியின் (அவர் இளவரசியாக இருந்தாலும்) மருத்துவ நிலை குறித்த தகவல் கசியக் காரணமாகிப்போனோமே என்ற மனஉளைச்சலாலும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதற்கான எந்தத் தடயங்களும் இல்லை. இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த வலியுறுத்திக்கொண்டிருக்கின்றார் ஜெசிந்தாவின் கணவர்.
இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய வானொலி நிறுவனமாகிய சதர்ன் கிராஸ் ஆஸ்ட்ரியோ, ஜெசிந்தா குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.2.84 கோடி வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. ரேடியோ ஜாக்கிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இழப்பீடு தருவது ஒருபுறம் இருக்கட்டும், இத்தகைய நிகழ்ச்சி மூலம் ஒரு அப்பாவி மனஉளைச்சலுக்கு ஆளாகி, அதனால் அந்தப் பெண்மணி இறந்திருப்பதால் இவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டாமா? கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டமா?
இதுபோன்ற அலட்சியமான பாணியில் விளையாட்டு என்கின்ற பெயரில் டிவி எப்எம் ரேடியோ நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் ஒலி,ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன.
வானொலியில் அல்லது டிவி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பங்குகொள்ளும் நபரிடம் தொகுப்பாளர்கள் கேட்கும் கேள்விகள் முதலில் அவர் யார் எந்த ஊர் என்கின்ற முகவரியாகத்தான் இருக்கும். அடுத்த கேள்விகள் முகம் தெரியாத அந்த நபரின் அந்தரங்கம் குறித்ததாக இருக்கும்.
ஏற்கெனவே இவர் தன்னைப் பற்றிய அடையாளத்தைத் தெரிவித்துவிட்டதால், அவர் பகிர்ந்துகொள்ளும் காதலியின் பெயர், கேலி செய்யும் நண்பரின் பெயரை, அவரைச் சார்ந்தவர்கள் ஊகிப்பது மிகவும் எளிது. ஆனாலும் இத்தகைய விளையாட்டுப் பேச்சுகள் ஊடகங்களில் தொடருகின்றன.
குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில், நிகழ்ச்சியை நடத்துபவர் கேட்கிறார். "வீட்டில் உனக்கு யாரைப் பிடிக்கும், யாரைப் பிடிக்காது?' குழந்தை தனக்கே உரிய குழந்தைத்தனத்துடன் சொல்கிறது, "எனக்கு அம்மாவைப் பிடிக்கும். பாட்டியைப் பிடிக்காது'. அடுத்த கேள்வி "ஏன் பாட்டியைப் பிடிக்காது?' "பாட்டி திட்டிக்கிட்டே இருப்பாங்க'.
நினைத்துப் பாருங்கள். உலகம் முழுவதும் அந்த திட்டுகிற பாட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதை அவர் எந்த மனநிலையில் ஏற்றுக்கொள்வார். தன்னை இந்த கேலிக்கு ஆளாக்கிய குழந்தையின் மீது அவருடைய அன்பு மாறுபாடில்லாமல் தொடருமா? பின்னொரு நாளில் சொல்லிக்காட்ட மாட்டாரா? ஏன் இப்படி வேண்டுமென்றே ஒரு குடும்பத்துக்குள் விஷத்தை விதைக்க வேண்டும்.
இன்னும் சில நிகழ்ச்சிகளில் அப்பா பிள்ளை இருவரையும் எதிர் அணியில் இருத்தி சண்டை போட்டுக்கொள்ளச் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில்போய் எப்படிப் பேசிக்கொள்வார்கள். அவர்களது வாழ்க்கை பொய்யா? அல்லது இந்த டிவி நிகழ்ச்சியே ஒரு முன்திட்டமிட்டு நடிக்கப்பட்ட போலி நாடகமா? எது உண்மை?
கேன்டிட் கேமிரா போன்ற நிகழ்ச்சிகளையும் வெளிநாட்டிலிருந்து அப்படியே இறக்குமதி செய்துள்ளன நமது தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள். யாராகிலும் ஒருவர் திடீரென்று கத்தியுடன் வந்து உங்கள் முன்னால் நின்றால் நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக இருக்கும்
. இதற்காக சாலையில் வருவோர் போவோரிடமெல்லாம் ரவுடி வேடத்தில் ஒருவர் கத்தியைக் காட்டியபடி திடிரென்று முன்தோன்றுவார். இவர்களின் கேலிக்கு ஆளாகும் நபர்களில் யாரேனும் ஒருவர் அச்சத்தால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனால் அதற்கு யார் பொறுப்பு?
ஆஸ்திரேலிய ரேடியோ நிறுவனம் போல வருத்தம் தெரிவித்து சில லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்துவிட்டால் கதை முடிந்ததா? இது ஒரு கொலை ஆகாதா?
வியாபாரத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு எதையும் செய்யாமல் வாளா இருக்கிறது. விவரம் தெரிந்தவர்களும் ரசிக்கிறார்களே தவிர, முகம் சுளிக்கத் தயாராக இல்லை. அதுதான் வேதனையாக இருக்கிறது.............
தினமணி
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: போதுமே இந்த விபரீதம்!
இந்தமாதிரி வியாபார நுணுக்கங்களை கையாளும் மீடியாக்களையும் அதை நடத்துபவர்களையும் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: போதுமே இந்த விபரீதம்!
இவர்களின் வியாபார நோக்கிற்கு அப்பாவி உயிர் பலியானது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» இந்த ஜென்மம் போதுமே!
» நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க.
» ஒரே ஒரு பூ போதுமே
» இணைய கலாட்டா
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க.
» ஒரே ஒரு பூ போதுமே
» இணைய கலாட்டா
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|