ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

12.12.12 அதிசயங்கள் ...சில

3 posters

Go down

ஈகரை 12.12.12 அதிசயங்கள் ...சில

Post by அச்சலா Thu Dec 13, 2012 9:55 pm

அபூர்வ தினத்தில் பெண்ணுக்கு பிரசவம் : குழந்தை பிறந்ததேதி, நேரம் எல்லாம் "12'
திருச்சி: அபூர்வ நாளான நேற்று (12.12.12) மதியம், 12 மணி, 12 நிமிடம், 12 விநாடிக்கு, திருச்சி தனியார் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை, சிசேரியன் முறையில் பிரசவிக்கப்பட்டது.
பூலோக வரலாற்றில் வியத்தகு தினமாக, 12.12.12. நேற்று கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதை விசேஷ தினமாக கொண்டாடினர். காலண்டர் அடிப்படையில், 12 மாதம் மட்டுமே உள்ளதால், இனி, இப்படியொரு அபூர்வ தினம் பிறக்க வாய்ப்பில்லை.
தங்கள் வாழ்நாள் பக்கங்களை திருப்பி பார்க்கும்போது, இந்த அபூர்வ தினத்தை நினைவு கூற வேண்டும் என்பதற்காக, பலரும் தினுசு, தினுசாக ஏதாவது செய்கின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், இந்த தேதியில், குழந்தை பெற்றெடுக்க விரும்பினர். அந்த வகையில் திருச்சியில் ஒரு பெண், சிசேரியன் மூலம் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
திருச்சி உறையூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 32. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி சுஜித்ரா, 26. நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக, நேற்று முன்தினம், தில்லைநகர், பத்தாவது கிராஸ், ரஹ்மானியபுரத்தில் உள்ள, ஃபாத்திமா என்ற தனியார் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அபூர்வ நாளான நேற்று (12.12.12) மதியம், 12 மணி, 12 நிமிடம், 12 விநாடிக்கு அழகிய பெண் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தது. இதுகுறித்து சுஜித்ராவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ரொஹையா கூறியதாவது:
சுஜித்ராவுக்கு இன்று (நேற்று) சிசேரியன் மூலம் குழந்தையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 12.12.12 நாளான இன்று (நேற்று), மதியம் 12.12.12 மணி நேரத்தில் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்தால் என்ன? என்று நினைத்தேன். அதற்கு பெற்றோரும் சம்மதித்தனர். சரியாக அதே நேரத்தில் குழந்தை எடுத்ததால், பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.மேலும், இதே மருத்துவமனையில், திருச்சி கீழ முல்லைக்குடியைச் சேர்ந்த சாலமன் மனைவி அமுதா என்பவருக்கு நேற்று காலை, 6.30 மணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. நான்கு ஆண்டாக குழந்தை இல்லாமல் தவித்த இவருக்கு, அபூர்வ தினமான நேற்று பெண் குழந்தை பிறந்ததால், அவரது குடும்பத்தினர் மகழ்ச்சியடைந்தனர். ஜீயபுரம் புஷ்பலதா, 26, என்பவருக்கு, அதிகாலை, 4.30 மணிக்கு, அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அபூர்வ தலைப்பிள்ளை: திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை, 12 மணியிலிருந்து, நேற்று மாலை, 5.20 மணி வரை மொத்தம், 17 குழந்தைகள் பிறந்தது. இதில், எட்டு குழந்தைகள் குடும்பத்தின், "தலைப்பிள்ளை' எனப்படும் முதல் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

-தினமலர்


Last edited by அச்சலா on Fri Dec 14, 2012 6:57 pm; edited 1 time in total


12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 12.12.12 அதிசயங்கள் ...சில

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:57 pm

“நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்”-பெற்றோர் மகிழ்ச்சி: 12.12.12-ல் பிறந்த 18 குழந்தைகள்

12.12.12 அதிசயங்கள் ...சில 6d1a3c50-98f2-4a7a-b936-5d51fba10460_S_secvpf

100 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அதிசய தினம் 12.12.12. அதிர்ஷ்ட தினமாக கருதப்பட்ட இந்த தினத்தில் புத்தாடை வாங்குவது, புது தொழில் தொடங்குவது, குழந்தை பெற்றுக்கொள்வது என்று பலரும் பல புதிய செயல்களில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

பலர் 12.12.12 அன்று குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டினர். அதன்படி நேற்று கோவையை சேர்ந்த பெண்கள் பலர் சுக பிரசவத்திலும் வேறு பலர் அறுவை சிகிச்சை மூலமும் குழந்தை பெற்றனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை 12.01 மணி முதல் நேற்று இரவு 12 மணி வரை 24 மணி நேரத்தில் 18 குழந்தைகள் பிறந்தன. இதில் 10 ஆண் குழந்தைகளும் 8 பெண் குழந்தைகளும் அடங்கும். 13 குழந்தைகள் சுகப்பிரசவத்திலும்,5 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாகவும் பிறந்துள்ளன.

பெரும்பாலானோருக்கு இது முதல் குழந்தையாகும். இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கோவில்பாளையத்தை சேர்ந்த அருண்பிரசாத்தின் மனைவி காஞ்சனா:
எங்களுக்கு திருமணமாகி 1 வருடமாகிறது. இந்த அதிசய நாளில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதிசய நாளில் பிறந்த என் குழந்தை வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எங்கள் குழந்தையை வளர்த்து டாக்டராக்க வேண்டும். இதுவே எங்கள் லட்சியமாகும்.
அரிசிபாளையத்தை சேர்ந்த தங்கராஜின் மனைவி மகாலட்சுமி:

எனக்கும் என் கணவர் தங்கராஜூக்கும் திருமணமாகி 7 வருடங்களா கின்றன. என் கணவர் கூலித்தொழிலாளி. கடந்த 7 வருடங்களாக குழந்தை இல்லாமல் நாங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம், நஞ்சம் இல்லை.

ஊராரின் பேச்சுக்கு ஆளாகி எங்கள் மனம் வேதனையடைந்தது. அவற்றையெல்லாம் தீர்க்கும் வகையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் இந்த அதிர்ஷ்ட நாளில் பிறந்திருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டமே தேடி வந்துள்ளதுபோல் உள்ளது.

தேவன்பாளையத்தை சேர்ந்த செந்தில் மனைவி லதா:

எங்களுக்கு திருமணம் நடைபெற்று 1 1/2 வருடங்களாகின்றன. நான் கருவுற்றதும் எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். ஆனால் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது வருத்தமாக இருந்தாலும், அதிசய நாளில் எனக்கு குழந்தை பிறந்துள்ளது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. என் மகளை வளர்த்து பெரிய ஆளாக்கி அவளுக்கு ஏற்ற நல்ல வாழ்க்கையை அமைத்து தர ஆசைப்படுகிறேன்.

அரசம்பாளையத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணனின் மனைவி ராதா:

என் கணவர் கூலித் தொழிலாளி. எங்களுக்கு திருமணமாகி 6 வருடங்களா கின்றன. இந்த 6 வருடங்களாக குழந்தை இல்லாமல் நானும், என் கணவரும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானோம். சுற்றாத கோவில், குளமில்லை. இத்தனை வருடங்கள் நாங்கள் செய்த வேண்டுதலுக்கு கடவுள் கொடுத்துள்ள பலனாக இந்த அதிசய நாளில் எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் இன்று ஆண் குழந்தை பெற்றதன் மூலம் விடிவுக்கு வந்துவிட்டது. இது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

வெள்ளமடையை சேர்ந்த மதர்சாமியின் மனைவி ஸ்ரீதேவி:

எங்களுக்கு திருமணம் நடைபெற்ற 6 வருடங்கள் ஆகின்றன. குழந்தையில்லாமல் நாங்கள் பலரின் ஏச்சுக்கு ஆளானோம். என் குழந்தை அதிர்ஷ்டநாளில் பிறந்த அதிர்ஷ்டசாலி. எங்களுக்கு ஏற்பட்ட தேவையில்லாத பெயரை என் ஆண் குழந்தை தீர்த்துவிட்டான். வருங்காலத்தில் அவனுடைய வாழ்க்கை இதேபோல் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம். எங்கள் குழந்தை ஆசைப்படுவதை நாங்கள் நிறைவேற்றி தருவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

-மாலை மலர்


12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 12.12.12 அதிசயங்கள் ...சில

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 8:47 am

குழந்தை பிறந்தது என்று சொல்வதெல்லாம் இப்போது குழந்தை பிரசவிக்கப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். இயற்கையாய் பிரசவித்தல் தான் அந்த குழந்தையின் உண்மையான பிரசவ நேரம். இது கலியுகம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: 12.12.12 அதிசயங்கள் ...சில

Post by ஹிஷாலீ Fri Dec 14, 2012 10:26 am

18 குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: 12.12.12 அதிசயங்கள் ...சில

Post by அச்சலா Fri Dec 14, 2012 6:57 pm

10.10.10ல் காதல், 11.11.11ல் நிச்சயம், 12.12.12ல் திருமணம்
மும்பையை சேர்ந்த காதல் ஜோடி, இன்று, 12.12.12 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்கள் தங்கள் காதல் திருமணத்தை, 10.10.10ல் நிச்சயம் செய்துள்ளனர்; அதை, 11.11.11ல் பதிவு செய்துள்ளனர்.பாந்த்ரா பகுதியை சேர்ந்தவர், பிராண்டன் பெரெரா, 33. வளைகுடா நாடு ஒன்றில், கப்பல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர், எமிலியா டி சில்வா, 28, என்ற பெண்ணை, 12 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.இவர்களின் காதல் கதை, பள்ளிப் பருவத்திலிருந்தே துவங்கியது. இருவரும், ஒருவரை ஒருவர் மனதார விரும்பினர். காதல் பறவைகளாக வலம் வந்த இந்த ஜோடி, 2009ல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. 12 ஆண்டு காதல் திருமணத்தை, எந்த காலத்திலும் மறக்க முடியாத அளவிற்கு, பதிவு செய்ய, முடிவு செய்தது.
இருவரும் பேசி முடிவு செய்த படி, 10.10.10ல், அதாவது, 2010ம் ஆண்டின், அக்டோபர் மாதம், 10ம் தேதி, திருமணம் செய்து கொள்ள, முறைப்படி முடிவு செய்தனர். உடனே திருமணம் செய்து கொள்ள விரும்பாமல், ஜோடி நாட்களில், படிப்படியாக மேற்கொள்ள விரும்பினர்.கடந்த, 2011ம் ஆண்டு, நவம்பர் மாதம், 11ம் தேதி, 11.11.11ல் தங்கள் திருமணத்தை, திருமண பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தனர். திருமணத்தை, ஓராண்டு கழித்து, கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்துக் கொள்ள விரும்பினர்.அதன்படி இன்று, 12.12.12ல், பாந்த்ரா சர்ச்சில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.இதுபற்றி பிராண்டன் - எமிலியா ஜோடி கூறியதாவது:எங்கள் வாழ்க்கையில் இப்படியொரு ஜோடி நாட்கள் வரும் என, நினைக்கவே இல்லை. 12 ஆண்டுகளாக காதலித்தோம். இத்தனை ஆண்டுகளாக பொறுமையாக இருந்த நாங்கள், எங்கள் திருமணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும், வித்தியாசமான நாட்களில், பதிவு செய்ய விரும்பினோம். அதன்படி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததை, 10.10.10லும், திருமணத்தை முறைப்படி, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததை, 11.11.11லும் செய்தோம். 12.12.12ல் திருமணம் செய்ய காத்திருக்கிறோம்.எங்களைப் போன்ற அதிர்ஷ்டசாலியான ஜோடி, மிகக் குறைவாகவே இருப்பர். எங்கள் வாழ்வோடு இணைந்த இந்த நாட்கள், எந்த காலத்திலும் எங்களுக்கு மறக்காத நாட்களாக இருக்கும். இந்த வினோத நாட்கள், எங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் புதுமையாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

-ஆயுள்.காம்


12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 12.12.12 அதிசயங்கள் ...சில

Post by அச்சலா Fri Dec 14, 2012 6:58 pm

ஹிஷாலீ wrote:18 குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்
நன்றிகள் :வணக்கம்:


12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 12.12.12 அதிசயங்கள் ...சில

Post by அச்சலா Fri Dec 14, 2012 6:58 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:குழந்தை பிறந்தது என்று சொல்வதெல்லாம் இப்போது குழந்தை பிரசவிக்கப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். இயற்கையாய் பிரசவித்தல் தான் அந்த குழந்தையின் உண்மையான பிரசவ நேரம். இது கலியுகம்.
ஆமாம்..கலிமுற்றிவிட்டது.. என்ன?


12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz12.12.12 அதிசயங்கள் ...சில Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 12.12.12 அதிசயங்கள் ...சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum