Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!
+4
Aathira
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
DERAR BABU
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!
First topic message reminder :
எப்படிப்பா இந்த சிகரெட் 'குடிக்கும்' பழக்கத்தை நிறுத்துவது...உலகம் முழுவதும் இதே பிரச்சினைதான்!. எத்தனையோ உபாயங்களை பலரும் சொல்கிறார்கள், என்னென்னவோ பண்ணிப் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த அல்லது வெகுவாக குறைக்க ஒரு ஈசியான வழி உள்ளது
. புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் கூடப் பிறந்தது அல்ல, இடையில் வந்ததுதான். எனவே அதை நிறுத்துவது என்பது மலையை சாய்க்கும் காரியம் அல்ல, சற்றே மனது வைத்தால் போதும். மனக் கட்டுப்பாட்டை சற்றே உறுதியோடு கடைப்பிடித்தாலே போதும் இதை எளிதில் சமாளிக்கலாம். சரி மேட்டருக்கு வருவோம்... சிகரெட் பிடிப்பதை நிறுத்த மிக மிக ஈசியான வழி ஒன்று உள்ளது. அதுகுறித்துத்தான் இந்த கட்டுரையே...
முதலில் நீங்கள் புகை பிடிப்பதில் 'செயின்' ஜெயபாலா அல்லது 'அக்கேஷனல்' ஆரோக்கியசாமியா, இல்லை 'மிடில்கிளாஸ்' மாதவனாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் எப்படியாப்பட்ட 'கிங்ஸாக' இருந்தாலும் இந்த உபாயத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம் -
நம்பிக்கையோடு. - நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை, சிகரெட்டை நிறுத்த வேண்டும் என்று முதலில் மனதளவில் தீர்மானியுங்கள்.
முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் கண்ணை மூடிக் கொண்டு முதலில் முடிவை எடுத்து விடுங்கள். - முடிவெடுத்து விட்டாயிற்றா, அதை எந்த நாளிலிருந்து அமல்படுத்துவது என்பதையும் தீர்மானியுங்கள். இப்போது முதலே நிறுத்துகிறேன் என்று சவடாலாக முடிவெடுக்க வேண்டாம். அது சாத்தியமில்லாதது. எனவே நாளையிலிருந்து அல்லது அடுத்த வாரத்திலிருந்து என்று ஒரு தேதி குறிப்பிடுங்கள்.
- முடிவு செய்த தேதிக்கு வந்துருச்சா, நீங்கள் தம் அடிக்கும் நேரம் வந்து விட்டதா.. உடனே கடைக்குப் போங்கள். ஒரு சிகரெட்டை வாங்குங்கள். ஆனால் பற்ற வைக்காதீர்கள். அதை வெறுமனே வாயில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் தம் அடிப்பது போல உணர மட்டும் செய்யுங்கள். ஒரு சிகரெட்டை நீங்கள் எப்படியெல்லாம் அனுபவித்து பிடிப்பீர்களோ, அந்த உணர்வு வருவது போல வாயில் வைத்து எடுங்கள்.
படு கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்துங்கள். - வாங்கிய சிகரெட்டை அப்படியே வைத்துக் கொண்டு இதே போல முதல் நாள் முழுவதும் செய்து பாருங்கள். சற்று கட்டுப்படுவது போலத் தோன்றும். ஆனால் பெரும் கஷ்டமாகவும் இருக்கும். இருந்தாலும் மனம் தளர்ந்து பற்ற வைத்து விடாதீர்கள். -
அடுத்த நாள்தான் 'சத்திய சோதனை'யே ஆரம்பம். 2வது நாளில் நீங்கள் ஒரு சிகரெட்டை கூட வாங்கக் கூடாது. மாறாக கடைக்குப் போய் 50 காசு கொடுத்து கடலை மிட்டாயை வாங்குங்கள். சென்னைப் பக்கம் இதற்கு பர்பி என்று பெயர், மதுரைப் பக்கம் போனால் கடலை மிட்டாய் என்பார்கள்
. இந்தக் கடலை மிட்டாய்தாங்க உங்களின் புகைப் பழக்கத்தை அடியோடு விரட்டப் போகும் அரு மருந்து. எனவே இதை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். - 2வது நாள் முழுவதும் எப்போதெல்லாம் தம் அடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒன்று அல்லது 2 கடலை மிட்டாய்களை வாங்கி வாயில் போட்டு சாப்பிடுங்கள். இது மிகப் பெரிய 'டைவர்ஷனை' கொடுக்கும்- இது அனுபவ வார்த்தை எனவே நம்புங்கள
2வது நாள் முழுவதும் உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும், கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போலவும் இருக்கும். இருந்தாலும் மனதை கட்டுப்படுத்துங்கள், டைவர்ஷனைத் தரும் வகையிலான சிந்தனைக்கு மாறிப் பாருங்கள், நிச்சயம் புகை பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்த முடியும்
. - 3வது நாளில் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை உணர முடியும். புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வெகுவாக குறைந்திருப்பதை நீங்களே உணர முடியும். அப்படி ஒரு வேளை தவிர்க்க முடியாமல் தோன்றினாலும், உடனே கடைக்குப் போய் கடலை மிட்டாயை வாங்கி வாயில் போடுங்கள். இந்த மிக மிக எளிய முறையில் 3 நாட்களிலேயே, ஒரு வேளை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கூடுதலாக 2 நாட்களை எடுத்துக் கொள்ளலாம், உங்களது புகை பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் கட்டோடு நிறுத்தி விட முடியும் அல்லது குறைத்து விட முடியும்.
அது எப்படிய்யா கடலை மிட்டாயை வச்சு தம் அடிப்பதைக் குறைக்க முடியும், பெரிய டுபாக்கூரா இருக்கே என்று அவ நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா.. அப்படிச் சொல்லாதீங்க, நிச்சயம் முடியும். உங்களுக்கு மன உறுதியும், கட்டுப்பாடும் மட்டும்தான் இந்த சமயத்தில் மிக மிக முக்கியமாக தேவை
. இன்னொரு விஷயம், இந்த மூன்று நாட்களுமே நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதைச் செய்து பார்க்காதீர்கள், சத்தியமாக உங்களால் புகைப் பழகத்தை விடவே முடியாது. நீங்கள் எங்கு வழக்கமாக சிகரெட் வாங்குவீர்களோ அதே கடைக்குப் போய்த்தான் இந்த 'மருந்தை சாப்பிட' வேண்டும். அப்போதுதான் உங்களைப் பிடித்துள்ள இந்த 'நோய்' குணமாகும். இதுவும் கூட ஒரு வகையில் 'சைக்கலாஜிகல் அப்ரோச்'தான். அதாவது சிகரெட்டை சிகரெட்டை வைத்தே விரட்டுவது
. விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 2.50 ரூபாய்க்கு விற்ற கிங்ஸ் இன்று 6 ரூபாய்க்கு வந்து விட்டது. ஒரு நாளைக்கு நீங்கள் சராசரியாக பத்து சிகரெட்டை 'சாப்பிடுவதாக' இருந்தால் ஒரு நாளைக்கு 60 ரூபாய் வரை செலவிட வேண்டும். ஒரு மாதத்திற்கு 1800 ரூபாய் செலாவாகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 22,000 ரூபாய் செலவாகிறது. கேட்கவே படு கொடுமையாக இருக்கிறதில்லையா.. அதை விட மகா கொடுமை உங்களது வாழ்நாளை நீங்களே தினசரி தீவைத்துக் கொல்வது. ஒருசிகரெட்டானது உங்களது ஒரு நாள் ஆயுளைக் குறைக்கிறதாம். அத்தோடு உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கூட காவு வாங்கி விடுகிறது.
எனவே இனியும் கையில் 'தம்'மோடு திரியாதீர்கள்.. மனதில் தெம்போடு திரிய கடலை மிட்டாயை வாங்குங்கள், மனம் நிறைய நம்பிக்கையோடு புது வாழ்க்கையைத் தொடங்குங்கள்...
: கடலை மிட்டாய் என்பது ஒரு மீடியம்தான். கடலை மிட்டாய்க்குப பதில் சாக்லேட், மின்ட் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்... உங்களுக்குத் தேவை திசை திருப்ப உதவும் ஒரு டைவர்ஷன் மட்டும்தான். உங்களுக்குப் பிரியமானவர்களை நினைத்துக் கொண்டாலும் கூட நீங்கள் புகை பிடிப்பதை விட முடியும்...!
ஒன்இந்தியா தமிழ்
எப்படிப்பா இந்த சிகரெட் 'குடிக்கும்' பழக்கத்தை நிறுத்துவது...உலகம் முழுவதும் இதே பிரச்சினைதான்!. எத்தனையோ உபாயங்களை பலரும் சொல்கிறார்கள், என்னென்னவோ பண்ணிப் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த அல்லது வெகுவாக குறைக்க ஒரு ஈசியான வழி உள்ளது
. புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் கூடப் பிறந்தது அல்ல, இடையில் வந்ததுதான். எனவே அதை நிறுத்துவது என்பது மலையை சாய்க்கும் காரியம் அல்ல, சற்றே மனது வைத்தால் போதும். மனக் கட்டுப்பாட்டை சற்றே உறுதியோடு கடைப்பிடித்தாலே போதும் இதை எளிதில் சமாளிக்கலாம். சரி மேட்டருக்கு வருவோம்... சிகரெட் பிடிப்பதை நிறுத்த மிக மிக ஈசியான வழி ஒன்று உள்ளது. அதுகுறித்துத்தான் இந்த கட்டுரையே...
முதலில் நீங்கள் புகை பிடிப்பதில் 'செயின்' ஜெயபாலா அல்லது 'அக்கேஷனல்' ஆரோக்கியசாமியா, இல்லை 'மிடில்கிளாஸ்' மாதவனாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் எப்படியாப்பட்ட 'கிங்ஸாக' இருந்தாலும் இந்த உபாயத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம் -
நம்பிக்கையோடு. - நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை, சிகரெட்டை நிறுத்த வேண்டும் என்று முதலில் மனதளவில் தீர்மானியுங்கள்.
முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் கண்ணை மூடிக் கொண்டு முதலில் முடிவை எடுத்து விடுங்கள். - முடிவெடுத்து விட்டாயிற்றா, அதை எந்த நாளிலிருந்து அமல்படுத்துவது என்பதையும் தீர்மானியுங்கள். இப்போது முதலே நிறுத்துகிறேன் என்று சவடாலாக முடிவெடுக்க வேண்டாம். அது சாத்தியமில்லாதது. எனவே நாளையிலிருந்து அல்லது அடுத்த வாரத்திலிருந்து என்று ஒரு தேதி குறிப்பிடுங்கள்.
- முடிவு செய்த தேதிக்கு வந்துருச்சா, நீங்கள் தம் அடிக்கும் நேரம் வந்து விட்டதா.. உடனே கடைக்குப் போங்கள். ஒரு சிகரெட்டை வாங்குங்கள். ஆனால் பற்ற வைக்காதீர்கள். அதை வெறுமனே வாயில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் தம் அடிப்பது போல உணர மட்டும் செய்யுங்கள். ஒரு சிகரெட்டை நீங்கள் எப்படியெல்லாம் அனுபவித்து பிடிப்பீர்களோ, அந்த உணர்வு வருவது போல வாயில் வைத்து எடுங்கள்.
படு கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்துங்கள். - வாங்கிய சிகரெட்டை அப்படியே வைத்துக் கொண்டு இதே போல முதல் நாள் முழுவதும் செய்து பாருங்கள். சற்று கட்டுப்படுவது போலத் தோன்றும். ஆனால் பெரும் கஷ்டமாகவும் இருக்கும். இருந்தாலும் மனம் தளர்ந்து பற்ற வைத்து விடாதீர்கள். -
அடுத்த நாள்தான் 'சத்திய சோதனை'யே ஆரம்பம். 2வது நாளில் நீங்கள் ஒரு சிகரெட்டை கூட வாங்கக் கூடாது. மாறாக கடைக்குப் போய் 50 காசு கொடுத்து கடலை மிட்டாயை வாங்குங்கள். சென்னைப் பக்கம் இதற்கு பர்பி என்று பெயர், மதுரைப் பக்கம் போனால் கடலை மிட்டாய் என்பார்கள்
. இந்தக் கடலை மிட்டாய்தாங்க உங்களின் புகைப் பழக்கத்தை அடியோடு விரட்டப் போகும் அரு மருந்து. எனவே இதை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். - 2வது நாள் முழுவதும் எப்போதெல்லாம் தம் அடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒன்று அல்லது 2 கடலை மிட்டாய்களை வாங்கி வாயில் போட்டு சாப்பிடுங்கள். இது மிகப் பெரிய 'டைவர்ஷனை' கொடுக்கும்- இது அனுபவ வார்த்தை எனவே நம்புங்கள
2வது நாள் முழுவதும் உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும், கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போலவும் இருக்கும். இருந்தாலும் மனதை கட்டுப்படுத்துங்கள், டைவர்ஷனைத் தரும் வகையிலான சிந்தனைக்கு மாறிப் பாருங்கள், நிச்சயம் புகை பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்த முடியும்
. - 3வது நாளில் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை உணர முடியும். புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வெகுவாக குறைந்திருப்பதை நீங்களே உணர முடியும். அப்படி ஒரு வேளை தவிர்க்க முடியாமல் தோன்றினாலும், உடனே கடைக்குப் போய் கடலை மிட்டாயை வாங்கி வாயில் போடுங்கள். இந்த மிக மிக எளிய முறையில் 3 நாட்களிலேயே, ஒரு வேளை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கூடுதலாக 2 நாட்களை எடுத்துக் கொள்ளலாம், உங்களது புகை பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் கட்டோடு நிறுத்தி விட முடியும் அல்லது குறைத்து விட முடியும்.
அது எப்படிய்யா கடலை மிட்டாயை வச்சு தம் அடிப்பதைக் குறைக்க முடியும், பெரிய டுபாக்கூரா இருக்கே என்று அவ நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா.. அப்படிச் சொல்லாதீங்க, நிச்சயம் முடியும். உங்களுக்கு மன உறுதியும், கட்டுப்பாடும் மட்டும்தான் இந்த சமயத்தில் மிக மிக முக்கியமாக தேவை
. இன்னொரு விஷயம், இந்த மூன்று நாட்களுமே நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதைச் செய்து பார்க்காதீர்கள், சத்தியமாக உங்களால் புகைப் பழகத்தை விடவே முடியாது. நீங்கள் எங்கு வழக்கமாக சிகரெட் வாங்குவீர்களோ அதே கடைக்குப் போய்த்தான் இந்த 'மருந்தை சாப்பிட' வேண்டும். அப்போதுதான் உங்களைப் பிடித்துள்ள இந்த 'நோய்' குணமாகும். இதுவும் கூட ஒரு வகையில் 'சைக்கலாஜிகல் அப்ரோச்'தான். அதாவது சிகரெட்டை சிகரெட்டை வைத்தே விரட்டுவது
. விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 2.50 ரூபாய்க்கு விற்ற கிங்ஸ் இன்று 6 ரூபாய்க்கு வந்து விட்டது. ஒரு நாளைக்கு நீங்கள் சராசரியாக பத்து சிகரெட்டை 'சாப்பிடுவதாக' இருந்தால் ஒரு நாளைக்கு 60 ரூபாய் வரை செலவிட வேண்டும். ஒரு மாதத்திற்கு 1800 ரூபாய் செலாவாகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 22,000 ரூபாய் செலவாகிறது. கேட்கவே படு கொடுமையாக இருக்கிறதில்லையா.. அதை விட மகா கொடுமை உங்களது வாழ்நாளை நீங்களே தினசரி தீவைத்துக் கொல்வது. ஒருசிகரெட்டானது உங்களது ஒரு நாள் ஆயுளைக் குறைக்கிறதாம். அத்தோடு உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கூட காவு வாங்கி விடுகிறது.
எனவே இனியும் கையில் 'தம்'மோடு திரியாதீர்கள்.. மனதில் தெம்போடு திரிய கடலை மிட்டாயை வாங்குங்கள், மனம் நிறைய நம்பிக்கையோடு புது வாழ்க்கையைத் தொடங்குங்கள்...
: கடலை மிட்டாய் என்பது ஒரு மீடியம்தான். கடலை மிட்டாய்க்குப பதில் சாக்லேட், மின்ட் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்... உங்களுக்குத் தேவை திசை திருப்ப உதவும் ஒரு டைவர்ஷன் மட்டும்தான். உங்களுக்குப் பிரியமானவர்களை நினைத்துக் கொண்டாலும் கூட நீங்கள் புகை பிடிப்பதை விட முடியும்...!
ஒன்இந்தியா தமிழ்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!
அச்சலா wrote:இல்லனா....Muthumohamed wrote:ரா.ரா3275 wrote:எனக்கெல்லாம் இது சரிப்பட்டு வருமா?...
வரணுமிங்க அப்பா தான் மனுஷன்
தெய்வம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!
மனுஷன் தனக்கு தானே வச்சுக்குவான் சிகரட் வத்தி
மனுஷன் தெய்வத்துக்கு வச்சிடுவான் சேக்ரட் ஊது வத்தி
அதைத்தானே சொல்றீங்க ராரா?
மனுஷன் தெய்வத்துக்கு வச்சிடுவான் சேக்ரட் ஊது வத்தி
அதைத்தானே சொல்றீங்க ராரா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!
யினியவன் wrote:மனுஷன் தனக்கு தானே வச்சுக்குவான் சிகரட் வத்தி
மனுஷன் தெய்வத்துக்கு வச்சிடுவான் சேக்ரட் ஊது வத்தி
அதைத்தானே சொல்றீங்க ராரா?
நான் அடிக்கிற தம்ம பத்தி சொல்றேன் அண்ணா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கடலை மிட்டாய்
» கடலை மிட்டாய் கமலா.
» முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடையில்லை சட்டசபையில் அமைச்சர் கருப்பணன் தகவல்
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
» பீடி, சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டுமா | புகை பிடிப்பதை நிறுத்த வழிகள்
» கடலை மிட்டாய் கமலா.
» முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடையில்லை சட்டசபையில் அமைச்சர் கருப்பணன் தகவல்
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
» பீடி, சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டுமா | புகை பிடிப்பதை நிறுத்த வழிகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|