ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?

5 posters

Go down

சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? Empty சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?

Post by சாமி Wed Dec 12, 2012 6:10 pm

சைவம் என்பது ஒரு சமயம். சனாதனம் என்பது ஒரு தர்மம். அது ஒரு சமயமல்ல. சைவம் என்பது தமிழர்களால் தொன்றுதொட்டுக் கடைபிடிக்கப்படும் ஒரு சமயம். சனாதனம் என்பது ஆரியர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு ஒழுகலாறு.

இரண்டிற்கும் பாரதூரமான வேறுபாடு உண்டு. ஆனால் இரண்டையும் ஒன்று போலக்காட்டிக் கூறுவது ஓர் உள் நோக்கமுடையது.

சனாதன தர்மம் நால் வருண வேறுபாடுகளும், நால்வகை ஆசிரமங்களையும் உடையது. நால்வருணத்தில் பிராமணர்கள் எனப்படும் ஆரியர்களே ஏனைய அரசர், வணிகர், சூத்திரர் என்பவர்களுக்கு மேலானவர்கள் என்பது கொள்கை.

நால்வகை ஆசிரமங்களாவன: 1)பிரமச்சரியம், 2)கிரகஸ்தம், 3)வானப்பிரஸ்தம், 4) சந்யாசம்.

இந்த நான்கு ஆசிரமங்களுக்கும் சைவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சிவனை நினைத்து பிரமச்சரியம் இருக்கவேண்டும் என்றோ, சிவனை நினைத்து கிரகஸ்தம் ஆற்ற வேண்டும் என்றோ, சிவனை நினைத்து சந்யாஸம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றோ இந்த ஆசிரமவிதிகள் இல்லை. எனவே, இந்த ஆசிரமங்களுக்கும் சைவத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அதேபோல் நான்கு வருணங்களுக்கும் சைவத்திற்கும் சம்பந்தம் இல்லை. மெய்கண்ட தேவர் என்ற வேளாளர், அருணந்தி சிவம் என்கிற அந்தணர்க்கு தீக்கை அளித்துள்ளார் (இருவரும் சந்தான குரவர்கள்). அப்பர் (திருநாவுக்கரசர்) சுவாமிகள் என்ற வேளாளர் அப்பூதி அடிகள் என்ற பிராமணருக்கு குருவானார்.

எனவே சைவத்திற்கும் வருணங்கள் எனப்படும் சாதிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
(திருவாசக முழக்கம் பாவமா? என்ற புத்தகத்திலிருந்து)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? Empty Re: சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?

Post by சதாசிவம் Wed Dec 12, 2012 6:19 pm

அழகான விளக்கங்கள் சாமி, தொடருங்கள்........

சூப்பருங்க


சதாசிவம்
சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? Empty Re: சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?

Post by ச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 11:09 pm

புலால் உண்ணாதவர்களை சைவம் என்று சொல்லுவதற்கும்
சைவ சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை விளக்குவீர்களா ஐயா?


சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? Empty Re: சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?

Post by ஆரூரன் Thu Dec 13, 2012 7:57 am

ஒன்றே குலம். ஒருவனே தேவன்.
- இதுதான் தமிழர்களின் வேதவாக்கு.
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? Empty Re: சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?

Post by சதாசிவம் Thu Dec 13, 2012 10:06 am

ச. சந்திரசேகரன் wrote:புலால் உண்ணாதவர்களை சைவம் என்று சொல்லுவதற்கும்
சைவ சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை விளக்குவீர்களா ஐயா?

காஞ்சிப் பெரியவரின் கீழ்கண்ட கட்டுரை உங்கள் கேள்விக்கு விடையளிக்கும்,,

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
' சைவ ' உணவு


ஆ ஹார விஷயத்தில் பதார்த்த சுத்தியைப் பார்க்கும் போது ஐடியல் என்பது அஹிம்ஸா போஜனம் சாக உணவு, மரக்கறி உணவு என்கிற வெஜிடேரியனிஸம், 'புலால் மறுத்தல்'என்று திருக்குறள் முதலானவற்றில் வலியுறுத்தியிருப்பது இதைத்தான்.

'சைவம்', என்று வெஜிடேரியனுக்கு ஏன் பேர் என்றால், தமிழ் தேசத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் அப்பிராமணர்களாக இருக்கப்பட்டவர்களில் சைவர்களே வெஜிடேரியன்களாக இருந்ததுதான். மாம்ஸம் மட்டுந்தான் என்றில்லை;வெஜிடேரியன் ஆஹாரத்திலுங்கூட சித்தசுத்திக்கு உதவாததாக இருப்பதை நல்ல ஆசார சீலர்களான சைவர்கள் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். 'முக்காயம் தள்ளியவர்கள்'என்று அவர்களைச் சொல்வதுண்டு காயம் என்றால் உடம்பு அல்லவா?உடம்பு ஊன்தானே?முக்காயம் என்கிற மூன்றுவித ஊன் என்ன?இல்லை;இங்கே அப்படி அர்த்தமில்லை. ஸ்தூல சரீரம், ஸ¨க்ஷ்ம சரீரம், காரண சரீரம் என்கிற மூன்றுதான் முக்காயமா?- என்றால் அப்படி அர்த்தமில்லை. முக்காயம் என்று இங்கே சொன்னது வெங்காயம், உள்ளிக்காயம் (அதாவது பூண்டு) , பெருங்காயம் என்ற மூன்றுதான். மாம்ஸமாயில்லாவிட்டாலும் இதுகளுங்கூட ராஜஸ, தாமஸ குணத்தைக் கொடுப்பவை என்பதால் இவற்றையும் சைவர்கள் தள்ளிவிடுவார்கள். காயம் என்பது ஊனை, மாம்ஸத்தைக் குறிப்பதால் இங்கே 'முக்காயம்'என்பது சிலேடையாகவுமிருக்கிறது!

ஒரு வேடிக்கை!தக்ஷிணத்தில் 'சைவம்'என்றால் வெஜிடேரியனிஸம். வடக்கிலோ 'வைஷ்ணவம்'என்றால்தான் வெஜிடேரியனிஸம் தெற்கேதான் சிவன், அம்பாள் இவர்களை ஸெளம்யமாக, சாந்த ஸ்வரூபமாக வழிபடுவது. வடக்கே ருத்ரனாக 'கால பைரவ்'என்றும், காளி, துர்கை, இப்படியும்தான் ஆராதிக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அங்கே வல்லபாசார்யார், ராமாநந்தர், சைதன்யர் என்றெல்லாம் செல்வாக்கோடு தோன்றியிருக்கிற பெரியவர்களும் முழுக்க ராமாநுஜ ஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பாலும் ஃபிலாஸஃபியில் அதைத் தொட்டுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். பரம அஹிம்ஸாவாதிகளான வடக்கத்திக்கார ஜைனர்களும் இந்த மதாசாரியர்களால் தாய் மதத்துக்குத் திரும்பியபோது வைஷ்ணவர்களாகவே ஆகி, அஹிம்ஸா போஜனத்தைத் தொடர்ந்து வந்திருப்பதால் அங்கே வைஷ்ணவ ஆஹாரம் என்பதே 'வெஜிடேரியனிஸம்'என்று ஆகிவிட்டிருக்கிறது.

தெற்கே 'அன்பே சிவம்'என்பது கொள்கை. அதோடு இங்கே ஜைனர்களைப் பெருவாரியாக ஹிந்து மதத்துக்குத் திருப்பினவர் சைவ ஸமயசாரியாரான ஞான ஸம்பந்தமூர்த்திகள். இங்கே வெஜிடேரியனிஸமே சைவம் என்றிருப்பது நியாயம்தான்.

வடக்கே வல்லபாசாரியார் காலத்தில்தான் ஜைனர்கள் ஹிந்துக்களாக மாஸ்-கன்வெர்ஷன் ஆனது ஜாஸ்தி. (கன்னட தேசத்தில் ராமாநுஜாசாரியாரின் செல்வாக்கால் இப்படியே ஜைன ராஜா உள்பட அந்த மதஸ்தர்கள் ஹிந்துக்களாக, வைஷ்ணவர்களாக ஆகியிருக்கிறார்கள்.) வல்லபாசாரியாரின் ஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களுக்குப் 'புஷ்டி மார்க்கிகள்'என்று பெயர். குஜராத்தைச் சுற்றி இப்படி அவருடைய ஸித்தாந்தத்தைத் தழுவிய, அதுவரை ஜைனர்களாயிருந்த, வைசியர்களுக்குப் 'புஷ்டி மார்க்கி பனியா'என்று பெயர். வாணிஜ்யன், வாணியன் என்பதே 'பனியா'என்பது. இவர்கள் குங்குமப் பூவால் நாமம் போட்டுக் கொள்பவர்கள்;துளஸிமணி மாலை தவறாமல் போட்டுக் கொண்டிருப்பவர்கள். காந்தி அவர்களில் ஒருவர்தான். பூர்வ கால ஜைன பாரம்பரியத்தால்தான் அவர் ஒரேயடியாய் அஹிம்ஸை, அஹிம்ஸை என்றது.


"தன் உடம்பு கொழுக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு உயிரின் உடம்பைக் கொலை பண்ணித் தின்கிறவனிடம் அருள் எப்படி உண்டாகும்?"என்று திருவள்ளுவர் "புலால் மறுத்தல்"அதிகாரத்தில் கேட்கிறார்.

தன்ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் ?

இவனிடம் அருள்தன்மை இல்லாவிட்டால் இவனுக்கு மட்டும் எப்படி ஈஸ்வரன் அருள் பண்ணுவான்?அருள், அன்பு என்று சொல்லிக்கொண்டு மாம்ஸ போஜனமும் பண்ணுவதென்றால் அது ஒன்றுக்கொன்று பொருந்தாததாகத்தான் தோன்றுகிறது. ஒரே ஒரு ஈஸ்வரன்தான் அம்மையும் அப்பனுமாக இருக்கிறான். அவனுக்கே நாம் இத்தனைபேரும் (மநுஷ்யர்கள் மட்டுமில்லை. மிருகம், பக்ஷி எல்லாமும்தான்) குழந்தைகள் என்றால் அப்புறம் ஒரு மநுஷ்யன் மிருகம், பக்ஷி இவற்றை ஆஹாரம் பண்ணுவது ப்ராத்ரு ஹத்திதான் (உடன் பிறப்பைக் கொலை செய்வதுதான்) . 'நான்-வெஜிடேரியனிஸ'த்தை ஆதரித்தால் ஸர்வஜீவ ஸஹோதரத்வம் என்பதற்கு அர்த்தமில்லாமல் போகிறது.


நன்றி: www.kamakodi.org


சதாசிவம்
சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? Empty Re: சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 10:57 am

சிறந்த பதிவு. அன்பர் சதாசிவம் அவர்களின் பதிவு சிறப்பு. நன்றி.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? Empty Re: சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?

Post by ச. சந்திரசேகரன் Thu Dec 13, 2012 1:40 pm

சதாசிவம் wrote:
ச. சந்திரசேகரன் wrote:புலால் உண்ணாதவர்களை சைவம் என்று சொல்லுவதற்கும்
சைவ சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை விளக்குவீர்களா ஐயா?

காஞ்சிப் பெரியவரின் கீழ்கண்ட கட்டுரை உங்கள் கேள்விக்கு விடையளிக்கும்,,
நன்றி: www.kamakodi.org
பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா.


சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா? Empty Re: சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum