Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்
+6
ரா.ரமேஷ்குமார்
பாலாஜி
யினியவன்
Arunjk
றினா
முத்துராஜ்
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்
இந்த அண்டவெளியில், நாம் தனியாக இருக்கிறோமா? அதாவது, நமது பூமியைத் தவிர வேறு எங்காவது உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவா?
பில்லியன் டாலர் மதிப்புடைய கேள்வி. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் எப்போதாவது, ஏதோ ஒரு வடிவத்தில் எழும் கேள்வி இது. இதற்கு விடை, அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிடக்கூடிய அளவு சுலபம் அல்ல என்பது இந்தக் கேள்வியை இன்னும் மர்மமாக மாற்றுகிறது.
உயிர்மையில் நமது ராஜ் சிவா எழுதிய ’2012இல் உலக அழிவும், மாயா இன மக்களும்‘ என்ற தொடரை வெகு சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. அந்தத் தொடரைப் படிக்கையில், எனது சிறுவயதில் வானமண்டல மனிதர்கள் பற்றிய புத்தகங்களைப் படித்தது நினைவு வந்தது. அந்த நினைவுகள் உந்தித் தள்ள, இணையத்தில் ஒரு முழு நாள் இது பற்றிச் செலவிட்டேன். சிறுவயதில் படித்த புத்தகங்களைத் தேடிப்பிடித்தது மட்டுமல்லாது, இந்த 20 வருடங்களில் மேன்மேலும் வந்திருக்கக்கூடிய பல ஆராய்ச்சிக்கட்டுரைகள், புதிய புத்தகங்கள் ஆகியனவற்றையும் ஒரே மூச்சில் படித்தேன்; படித்துக்கொண்டும் இருக்கிறேன். படித்ததை நண்பர்களுடன் பகிரலாம் என்பதே நோக்கம். இது ஒரு விவாதமாகவும் இருக்கட்டும். படிக்கும் நண்பர்கள், உங்கள் கருத்துகளையும் எழுதலாம். ஒருவகையில் பார்த்தால், மறந்தே போயிருந்த பல விஷயங்கள், ராஜ் சிவாவினால் நினைவு வந்தன. ஆகவே, அவருக்கே முதல் நன்றி.
கட்டுரையை ஆரம்பிக்கும் முன்னர், இன்னொருவரைப் பற்றியும் விரிவாகச் சொல்லியே ஆக வேண்டும்.
விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்.
ஆவிகளைப் பற்றிப் படிக்கும் யாருக்கும் அவ்வளவு சுலபமாக மறந்துவிடாத பெயர். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஆவிகளைப் பற்றியும், occult விஷயங்களைப் பற்றியும் எழுதிவருகிறார். இவர் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் ‘அறிவுக்கு அப்பாற்பட்ட அதிசய சக்திகள்’. இந்தப் புத்தகத்தை, எனது தந்தையின் மூலம், எனது பத்தாவது வயதில் படிக்க நேர்ந்தது. அக்காலத்தில் எப்போது பார்த்தாலும் புத்தகங்களைக் கட்டிக்கொண்டு மாரடித்து வந்ததால், இப்புத்தகத்தைப் படிப்பது கடினமாக இருக்கவில்லை. அப்புத்தகத்தின் மூலம் பல அதிசய மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். ரஸ்புடீன், அரிகோ, யூரி கெல்லர், மாயன்களின் அரசன் குக்குல்கன், சகுந்தலா தேவி, நெப்போலியன் எகிப்து சென்ற மர்மம் ஆகிய பல விஷயங்கள் அவற்றில் விரிவாக எழுதப்பட்டிருக்கும். துறுதுறுப்பான ஒரு சிறுவனுக்கு இந்த விஷயங்கள் எப்பேர்ப்பட்ட ஒரு உலகத்தைத் திறந்துவிட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
அந்தப் புத்தகத்தில் நான் படித்த மறக்க முடியாத இன்னொரு பெயர்: Erich Von Daniken. பண்டைய காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்தது உண்மைதான் என்று பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கும் மனிதர் இவர். இவரைப் பற்றியும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இரண்டு decades முன்பே. அதனைத்தொடர்ந்து, பள்ளி இறுதி ஆண்டுகளில் எரிக் வான் டேனிக்கென் எழுதிய ‘Chariots of Gods‘ புத்தகம் கிடைத்தது. அதுவும் ஒரு மறக்கமுடியாத புத்தகம்தான்.
இந்த டேனிக்கெனை விகடனில் மதன் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன்பு. அதைப் படித்ததும் நன்றாக நினைவிருக்கிறது. அதில், மதனை வரவேற்கும்போதே, ‘உங்கள் ஊர் ராமர் கூட வேற்றுக்கிரக வாசிதான் தெரியுமா?’ என்று டேனிக்கென் கேட்ட கேள்வியை மதன் எழுதியிருப்பார்.
அவர் எழுதிய பல விஷயங்கள் இப்போது ஹம்பக் என்று சொல்லப்பட்டு வருகின்றன. என்றாலும், அவற்றில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முடிந்தால் விபரமாகப் பார்ப்போம்.
அவரைப்போலவே இந்தத் துறையில் பல்லாண்டுகளாகப் பழம் தின்று கோட்டை போட்ட மனிதர்கள் எழுதிய சில புத்தகங்களையும் முடிந்தால் அலசலாம். அவற்றில் அவர்கள் எழுதியுள்ள விபரங்கள், ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருக்கும். அவைகளை உண்மை என்று எடுத்துக்கொள்ளாவிட்டாலும் கூட, சற்று நேரம் வேற்றுக்கிரக வாசிகள், UFOக்கள், அவர்களின் மொழிகள், பறக்கும் தட்டுகள் ஆகியவற்றின் நினைவில் ஆழ்ந்து இன்புறலாம் வாருங்கள்.
அப்படியே, இந்த விஷயங்கள் உண்மையா? அல்லது பொய்யா? என்ற வகையில் பல தகவல்களையும் பார்க்கப்போகிறோம். அதிலேயே மாயன்கள், சுமேரியர்கள் ஆகியவர்களைப் பற்றிய தகவல்களையும் தொட்டுச்செல்லலாம். பலவற்றை ராஜ் சிவா ஏற்கெனவே எழுதிவிட்டார். ஆகவே, அவற்றை ஒரு highlight போலப் பார்க்கலாம்.
சரி. முன்னுரை போதும். ஆரம்பிக்கலாமா?
1. சரித்திரம் சொல்லும் Alien கதைகள்
மனிதகுலத்தில் பல்வேறு இனங்களில் வழங்கி வரும் புராணங்களை எடுத்துக்கொண்டால், அவைகள் எல்லாவற்றிலும் பல ஆச்சரியங்கள் நிறைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட இவைகள் அனைத்துமே, வானில் இருந்து இறங்கிய ‘கடவுளர்’களைப் பற்றிப்பல தகவல்களைச் சொல்கின்றன. அவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். மனிதகுலத்தின் ஆதிமூலம், அவர்களது புராணங்களே என்பதால், இந்த referenceகள் அவசியம். மட்டுமில்லாமல், அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் fantasized விஷயங்கள் படிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்தியாவிலிருந்தே ஆரம்பிப்போம்.
நாம் எடுத்துக்கொள்ளப்போகும் புராணம், மஹாபாரதம். ராமாயணத்திலும் ஆச்சரியமான UFO குறிப்புகள் உண்டு என்றாலும் (புஷ்பக விமானம்), மஹாபாரதத்தில், உலகின் எந்த UFO குறிப்புகளையும் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய தகவல்கள் நிறைந்துள்ளதால், அதில் உள்ள விபரங்களைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். எனக்கு மஹாபாரதத்தைப் பற்றித் தெரிந்தவைகளையும் (அதிலிருக்கும் முக்காலே மூணு வீச கதைகள் எனக்கு அத்துப்படி), UFO ஆராய்ச்சியாளர்களின் கூற்றையும், மறந்துபோன சில தகவல்கள் இணையத்திலிருந்தும் கொடுக்கிறேன்.
மஹாபாரதத்தின் தொடக்கத்திலேயே, ‘கடவுளர்கள்’ குந்திதேவிக்குக் குழந்தைகளை அருளியது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. துர்வாசர் சொல்லிக்கொடுத்த ஒரு மந்திரத்தைச் சொல்லி ஒரு குறிப்பிட்ட கடவுளை நினைத்தால், அந்தக் கடவுளின் குழந்தை அம்மந்திரத்தைச் சொல்லும் பெண்ணின் வயிற்றில் உருவாகிவிடும். அப்படி அதனை உபயோகித்து உருவான குழந்தைகளே கர்ணன் (சூரியன்), யுதிஷ்டிரன் என்னும் தர்மன் (எமனின் குழந்தை), பீமன் (வாயு), அர்ஜுனன் (இந்த்ரன்), நகுலன் மற்றும் சகதேவன் (அஸ்வினி தேவர்கள்). இதில் நகுலனும் சகதேவனும் பாண்டுவின் இரண்டாம் மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர்கள்.
மஹாபாரதத்தில் சிவன் அழித்த மூன்று அசுரர்களைப் பற்றிய கதையும் வருகிறது. கர்ண பர்வத்தில் இக்கதை விபரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. த்ரிபுரர்கள் என்று சொல்லப்பட்ட மூன்று அசுரர்களுக்கு, மூன்று பெரிய நகரங்களை தேவர்களின் சிற்பியான மயன் வானில் கட்டிக்கொடுத்த கதையும், அந்த பிரம்மாண்டமான நகரங்கள் ஒரே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்ததும், அந்நகரங்களை எப்படி ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தி சிவன் அழித்தார் என்பதும் விபரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது (இதே கதையில், தனது புன்னகையாலேயே அந்நகரங்களை சிவன் அழித்ததாக மற்றொரு பாடபேதம் உண்டு). மூன்று நகரங்கள் வானில் சுற்றிக்கொண்டிருந்தன என்று பாரதத்தில் வருவது, ஒருவேளை ஏலியன்களின் பறக்கும் தட்டுதானோ?
மஹாபாரதத்தின் துரோண பர்வத்தில், 201 வது அத்தியாயத்தில், துரோணரின் மகனான அஸ்வத்தாமா, தண்ணீரிலிருந்து எப்படி ஆக்நேயாஸ்திரம் என்ற ஒன்றைப் பாண்டவர்களின் மீது பிரயோகித்தான் என்று விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அஸ்திரத்தை அஸ்வத்தாமா எய்தவுடன் – ‘அந்த ஆயுதத்திலிருந்து அம்பு மழை அர்ஜுனனின் மீது பொழிந்தது; உலகமே இருண்டு போனது; வானத்திலிருந்து எரிகற்கள் விழுந்தன; வெப்பம் கடுமையாக அதிகரித்தது; சூரியன் கண்ணுக்கே தெரியவில்லை; ஆயிரமாயிரம் ரதங்கள் ஒரே நொடியில் எரிக்கப்பட்டன; யானைகள் செத்து விழுந்தன; சில யானைகள் வெறிகொண்டு பிளிறியபடி அங்குமிங்கும் ஓடின; பாண்டவப் படையில் இருந்த பல வீரர்கள் முற்றியும் எரிந்து சாம்பலாயினர்; மொத்தத்தில், நெருப்பின் கடவுளான அக்னி, பாண்டவர்களைக் கபளீகரம் செய்ததுபோல் இருந்தது’ – என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த அத்தனை symptomகளும், ஹிரோஷிமா அல்லது நாகசாகியிலிருந்துகொண்டு நேரடி ஒளிபரப்பு செய்ததைப்போல் இருக்கிறதல்லவா?
மஹாபாரதத்தில் வரும் extra terrestrial விஷயங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று இந்த alien ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
இது தவிர, அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஆப்பன்ஹீமர் – அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – உலகின் முதல் ந்யூக்ளியர் குண்டு வெடிக்கப்பட்டபோது, அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று அவரைப் பத்திரிகை நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் சொன்ன quote உலகப்பிரசித்தி பெற்றது. அந்த quote, நமது பகவத்கீதையிலிருந்தே எடுக்கப்பட்டது. அர்ஜுனனுக்குத் தனது விஸ்வரூபத்தைக் கண்ணன் காண்பிக்கையில், பயத்தில் நடுநடுங்கிக்கொண்டே அர்ஜுனன் சொல்லும் ஒரு ஸ்லோகம் அது.
அவர் இந்த ஸ்லோகத்தைப் பற்றிப் பேசும் வீடியோ இங்கே காணலாம்.
[youtube][/youtube]
அவரிடம், இதுதான் உலகின் முதல் ந்யூக்ளியர் குண்டுவெடிப்பா என்று பத்திரிக்கையாளர்கள் வினவியபோது, ‘நவீனகாலத்தில் என்றால், ஆமாம்’ என்று பதிலளித்தும் இருக்கிறார்.
இப்படி, பண்டைய காலத்தில் ந்யூக்ளியர் குண்டின் சக்தியை ஒத்த ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதே, அவைகளை பூமிக்குக் கொண்டு வந்த ஏலியன்களின் இருப்பை உறுதிப்படுத்துவதாக ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
இந்துமதத்தில் மட்டுமல்ல. வேறு பல மதங்களின் புராணங்களிலும் ஏலியன்களைப் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம். அப்படியே இந்தச் செய்திகள் உண்மையா டுபாக்கூரா என்றும் அலசலாம்.
தொடரும் . . . .
நன்றி : கருந்தேள்
பில்லியன் டாலர் மதிப்புடைய கேள்வி. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் எப்போதாவது, ஏதோ ஒரு வடிவத்தில் எழும் கேள்வி இது. இதற்கு விடை, அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிடக்கூடிய அளவு சுலபம் அல்ல என்பது இந்தக் கேள்வியை இன்னும் மர்மமாக மாற்றுகிறது.
உயிர்மையில் நமது ராஜ் சிவா எழுதிய ’2012இல் உலக அழிவும், மாயா இன மக்களும்‘ என்ற தொடரை வெகு சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. அந்தத் தொடரைப் படிக்கையில், எனது சிறுவயதில் வானமண்டல மனிதர்கள் பற்றிய புத்தகங்களைப் படித்தது நினைவு வந்தது. அந்த நினைவுகள் உந்தித் தள்ள, இணையத்தில் ஒரு முழு நாள் இது பற்றிச் செலவிட்டேன். சிறுவயதில் படித்த புத்தகங்களைத் தேடிப்பிடித்தது மட்டுமல்லாது, இந்த 20 வருடங்களில் மேன்மேலும் வந்திருக்கக்கூடிய பல ஆராய்ச்சிக்கட்டுரைகள், புதிய புத்தகங்கள் ஆகியனவற்றையும் ஒரே மூச்சில் படித்தேன்; படித்துக்கொண்டும் இருக்கிறேன். படித்ததை நண்பர்களுடன் பகிரலாம் என்பதே நோக்கம். இது ஒரு விவாதமாகவும் இருக்கட்டும். படிக்கும் நண்பர்கள், உங்கள் கருத்துகளையும் எழுதலாம். ஒருவகையில் பார்த்தால், மறந்தே போயிருந்த பல விஷயங்கள், ராஜ் சிவாவினால் நினைவு வந்தன. ஆகவே, அவருக்கே முதல் நன்றி.
கட்டுரையை ஆரம்பிக்கும் முன்னர், இன்னொருவரைப் பற்றியும் விரிவாகச் சொல்லியே ஆக வேண்டும்.
விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்.
ஆவிகளைப் பற்றிப் படிக்கும் யாருக்கும் அவ்வளவு சுலபமாக மறந்துவிடாத பெயர். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஆவிகளைப் பற்றியும், occult விஷயங்களைப் பற்றியும் எழுதிவருகிறார். இவர் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் ‘அறிவுக்கு அப்பாற்பட்ட அதிசய சக்திகள்’. இந்தப் புத்தகத்தை, எனது தந்தையின் மூலம், எனது பத்தாவது வயதில் படிக்க நேர்ந்தது. அக்காலத்தில் எப்போது பார்த்தாலும் புத்தகங்களைக் கட்டிக்கொண்டு மாரடித்து வந்ததால், இப்புத்தகத்தைப் படிப்பது கடினமாக இருக்கவில்லை. அப்புத்தகத்தின் மூலம் பல அதிசய மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். ரஸ்புடீன், அரிகோ, யூரி கெல்லர், மாயன்களின் அரசன் குக்குல்கன், சகுந்தலா தேவி, நெப்போலியன் எகிப்து சென்ற மர்மம் ஆகிய பல விஷயங்கள் அவற்றில் விரிவாக எழுதப்பட்டிருக்கும். துறுதுறுப்பான ஒரு சிறுவனுக்கு இந்த விஷயங்கள் எப்பேர்ப்பட்ட ஒரு உலகத்தைத் திறந்துவிட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
அந்தப் புத்தகத்தில் நான் படித்த மறக்க முடியாத இன்னொரு பெயர்: Erich Von Daniken. பண்டைய காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்தது உண்மைதான் என்று பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கும் மனிதர் இவர். இவரைப் பற்றியும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இரண்டு decades முன்பே. அதனைத்தொடர்ந்து, பள்ளி இறுதி ஆண்டுகளில் எரிக் வான் டேனிக்கென் எழுதிய ‘Chariots of Gods‘ புத்தகம் கிடைத்தது. அதுவும் ஒரு மறக்கமுடியாத புத்தகம்தான்.
இந்த டேனிக்கெனை விகடனில் மதன் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன்பு. அதைப் படித்ததும் நன்றாக நினைவிருக்கிறது. அதில், மதனை வரவேற்கும்போதே, ‘உங்கள் ஊர் ராமர் கூட வேற்றுக்கிரக வாசிதான் தெரியுமா?’ என்று டேனிக்கென் கேட்ட கேள்வியை மதன் எழுதியிருப்பார்.
அவர் எழுதிய பல விஷயங்கள் இப்போது ஹம்பக் என்று சொல்லப்பட்டு வருகின்றன. என்றாலும், அவற்றில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முடிந்தால் விபரமாகப் பார்ப்போம்.
அவரைப்போலவே இந்தத் துறையில் பல்லாண்டுகளாகப் பழம் தின்று கோட்டை போட்ட மனிதர்கள் எழுதிய சில புத்தகங்களையும் முடிந்தால் அலசலாம். அவற்றில் அவர்கள் எழுதியுள்ள விபரங்கள், ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருக்கும். அவைகளை உண்மை என்று எடுத்துக்கொள்ளாவிட்டாலும் கூட, சற்று நேரம் வேற்றுக்கிரக வாசிகள், UFOக்கள், அவர்களின் மொழிகள், பறக்கும் தட்டுகள் ஆகியவற்றின் நினைவில் ஆழ்ந்து இன்புறலாம் வாருங்கள்.
அப்படியே, இந்த விஷயங்கள் உண்மையா? அல்லது பொய்யா? என்ற வகையில் பல தகவல்களையும் பார்க்கப்போகிறோம். அதிலேயே மாயன்கள், சுமேரியர்கள் ஆகியவர்களைப் பற்றிய தகவல்களையும் தொட்டுச்செல்லலாம். பலவற்றை ராஜ் சிவா ஏற்கெனவே எழுதிவிட்டார். ஆகவே, அவற்றை ஒரு highlight போலப் பார்க்கலாம்.
சரி. முன்னுரை போதும். ஆரம்பிக்கலாமா?
1. சரித்திரம் சொல்லும் Alien கதைகள்
மனிதகுலத்தில் பல்வேறு இனங்களில் வழங்கி வரும் புராணங்களை எடுத்துக்கொண்டால், அவைகள் எல்லாவற்றிலும் பல ஆச்சரியங்கள் நிறைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட இவைகள் அனைத்துமே, வானில் இருந்து இறங்கிய ‘கடவுளர்’களைப் பற்றிப்பல தகவல்களைச் சொல்கின்றன. அவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். மனிதகுலத்தின் ஆதிமூலம், அவர்களது புராணங்களே என்பதால், இந்த referenceகள் அவசியம். மட்டுமில்லாமல், அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் fantasized விஷயங்கள் படிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்தியாவிலிருந்தே ஆரம்பிப்போம்.
நாம் எடுத்துக்கொள்ளப்போகும் புராணம், மஹாபாரதம். ராமாயணத்திலும் ஆச்சரியமான UFO குறிப்புகள் உண்டு என்றாலும் (புஷ்பக விமானம்), மஹாபாரதத்தில், உலகின் எந்த UFO குறிப்புகளையும் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய தகவல்கள் நிறைந்துள்ளதால், அதில் உள்ள விபரங்களைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். எனக்கு மஹாபாரதத்தைப் பற்றித் தெரிந்தவைகளையும் (அதிலிருக்கும் முக்காலே மூணு வீச கதைகள் எனக்கு அத்துப்படி), UFO ஆராய்ச்சியாளர்களின் கூற்றையும், மறந்துபோன சில தகவல்கள் இணையத்திலிருந்தும் கொடுக்கிறேன்.
மஹாபாரதத்தின் தொடக்கத்திலேயே, ‘கடவுளர்கள்’ குந்திதேவிக்குக் குழந்தைகளை அருளியது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. துர்வாசர் சொல்லிக்கொடுத்த ஒரு மந்திரத்தைச் சொல்லி ஒரு குறிப்பிட்ட கடவுளை நினைத்தால், அந்தக் கடவுளின் குழந்தை அம்மந்திரத்தைச் சொல்லும் பெண்ணின் வயிற்றில் உருவாகிவிடும். அப்படி அதனை உபயோகித்து உருவான குழந்தைகளே கர்ணன் (சூரியன்), யுதிஷ்டிரன் என்னும் தர்மன் (எமனின் குழந்தை), பீமன் (வாயு), அர்ஜுனன் (இந்த்ரன்), நகுலன் மற்றும் சகதேவன் (அஸ்வினி தேவர்கள்). இதில் நகுலனும் சகதேவனும் பாண்டுவின் இரண்டாம் மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர்கள்.
மஹாபாரதத்தில் சிவன் அழித்த மூன்று அசுரர்களைப் பற்றிய கதையும் வருகிறது. கர்ண பர்வத்தில் இக்கதை விபரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. த்ரிபுரர்கள் என்று சொல்லப்பட்ட மூன்று அசுரர்களுக்கு, மூன்று பெரிய நகரங்களை தேவர்களின் சிற்பியான மயன் வானில் கட்டிக்கொடுத்த கதையும், அந்த பிரம்மாண்டமான நகரங்கள் ஒரே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்ததும், அந்நகரங்களை எப்படி ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தி சிவன் அழித்தார் என்பதும் விபரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது (இதே கதையில், தனது புன்னகையாலேயே அந்நகரங்களை சிவன் அழித்ததாக மற்றொரு பாடபேதம் உண்டு). மூன்று நகரங்கள் வானில் சுற்றிக்கொண்டிருந்தன என்று பாரதத்தில் வருவது, ஒருவேளை ஏலியன்களின் பறக்கும் தட்டுதானோ?
மஹாபாரதத்தின் துரோண பர்வத்தில், 201 வது அத்தியாயத்தில், துரோணரின் மகனான அஸ்வத்தாமா, தண்ணீரிலிருந்து எப்படி ஆக்நேயாஸ்திரம் என்ற ஒன்றைப் பாண்டவர்களின் மீது பிரயோகித்தான் என்று விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அஸ்திரத்தை அஸ்வத்தாமா எய்தவுடன் – ‘அந்த ஆயுதத்திலிருந்து அம்பு மழை அர்ஜுனனின் மீது பொழிந்தது; உலகமே இருண்டு போனது; வானத்திலிருந்து எரிகற்கள் விழுந்தன; வெப்பம் கடுமையாக அதிகரித்தது; சூரியன் கண்ணுக்கே தெரியவில்லை; ஆயிரமாயிரம் ரதங்கள் ஒரே நொடியில் எரிக்கப்பட்டன; யானைகள் செத்து விழுந்தன; சில யானைகள் வெறிகொண்டு பிளிறியபடி அங்குமிங்கும் ஓடின; பாண்டவப் படையில் இருந்த பல வீரர்கள் முற்றியும் எரிந்து சாம்பலாயினர்; மொத்தத்தில், நெருப்பின் கடவுளான அக்னி, பாண்டவர்களைக் கபளீகரம் செய்ததுபோல் இருந்தது’ – என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த அத்தனை symptomகளும், ஹிரோஷிமா அல்லது நாகசாகியிலிருந்துகொண்டு நேரடி ஒளிபரப்பு செய்ததைப்போல் இருக்கிறதல்லவா?
மஹாபாரதத்தில் வரும் extra terrestrial விஷயங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று இந்த alien ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
இது தவிர, அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஆப்பன்ஹீமர் – அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – உலகின் முதல் ந்யூக்ளியர் குண்டு வெடிக்கப்பட்டபோது, அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று அவரைப் பத்திரிகை நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் சொன்ன quote உலகப்பிரசித்தி பெற்றது. அந்த quote, நமது பகவத்கீதையிலிருந்தே எடுக்கப்பட்டது. அர்ஜுனனுக்குத் தனது விஸ்வரூபத்தைக் கண்ணன் காண்பிக்கையில், பயத்தில் நடுநடுங்கிக்கொண்டே அர்ஜுனன் சொல்லும் ஒரு ஸ்லோகம் அது.
அவர் இந்த ஸ்லோகத்தைப் பற்றிப் பேசும் வீடியோ இங்கே காணலாம்.
[youtube][/youtube]
அவரிடம், இதுதான் உலகின் முதல் ந்யூக்ளியர் குண்டுவெடிப்பா என்று பத்திரிக்கையாளர்கள் வினவியபோது, ‘நவீனகாலத்தில் என்றால், ஆமாம்’ என்று பதிலளித்தும் இருக்கிறார்.
இப்படி, பண்டைய காலத்தில் ந்யூக்ளியர் குண்டின் சக்தியை ஒத்த ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதே, அவைகளை பூமிக்குக் கொண்டு வந்த ஏலியன்களின் இருப்பை உறுதிப்படுத்துவதாக ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
இந்துமதத்தில் மட்டுமல்ல. வேறு பல மதங்களின் புராணங்களிலும் ஏலியன்களைப் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம். அப்படியே இந்தச் செய்திகள் உண்மையா டுபாக்கூரா என்றும் அலசலாம்.
தொடரும் . . . .
நன்றி : கருந்தேள்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 2
சென்ற கட்டுரையில், மஹாபாரதத்தில் ந்யூக்ளியர் குண்டுகளின் வர்ணனை வருவதைப்பற்றிப் பார்த்தோம். மேலே தொடருமுன்னர், சில சந்தேகங்களைப் பார்க்கலாம்.
யோவ். மஹாபாரதம் என்பதே ஒரு கதை. கதையில் கண்டபடி எதைவேண்டுமானாலும் எழுதலாமே? அப்படியிருக்கும்போது அதை உண்மை என்று நம்பி, ஏலியன்கள் அவர்களது ஆயுதங்களை உபயோகித்தார்கள் என்று எப்படி எடுத்துக்கொள்ளமுடியும்? இது ஒரு கோணம்.
மஹாபாரதத்தையும், மற்ற உலகின் புராணங்களையும் ஏன் கதை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்? உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளின் ஆவணங்களாகக்கூட அவை இருக்கலாமே? இது இன்னொரு கோணம்.
நம்மைப்பொறுத்தவரை, புராணங்கள் உண்மையா பொய்யா என்று அலசுவது இந்தக் கட்டுரைகளின் நோக்கம் அல்ல. அவற்றில் தரப்பட்டிருக்கும் பல்வேறு ஏலியன் சம்மந்தமான விஷயங்களை எடுத்துக்கொண்டு அவற்றை அலசுவதே நோக்கம். புராணங்கள் பொய்யாகவும் இருக்கலாம்; அல்லது அவை உண்மை என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எந்த contextல் அவை இந்த extra terrestrial தகவல்களைத் தருகின்றன என்பதை மட்டுமே நோக்கப்போகிறோம்.
இன்னொரு விஷயம் – இந்தப் புராணங்கள் அடியோடு பொய் என்றோ, அல்லது அப்பட்டமான உண்மை என்றோ நூறு சதவிகிதம் நிரூபிக்கக்கூடிய எந்தத் தகவலும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை என்பதும் உண்மை. ஆகவே, எந்தப் பக்கமும் சாயாமல், இரண்டு கோணங்களிலும் இந்த சுவாரஸ்யமான விஷயங்களை நோக்கலாம்.
இந்திய புராணங்களில் விமானங்கள்
பழங்கால இந்தியாவில், விமானங்களை உருவாக்குவதற்கான அறிவும் ஆற்றலும் கட்டாயம் இருந்தது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதற்குக் காரணம், புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விமானங்கள் செய்யும் வழிமுறைதான். குறிப்பாக, ‘வைமானிக சாஸ்த்ரம்’ என்று ஒரு நூல் – மகர்ஷி பாரத்வாஜரால் செய்யப்பட்டது – இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்த நூலைப்பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
யந்த்ர சர்வஸ்வம் என்பதுதான் பாரத்வாஜர் எழுதிய மூல நூல் என்று தெரிகிறது. அதன் ஒரு பகுதியே இந்த வைமானிக சாஸ்த்ரம்.
யந்த்ர சர்வஸ்வம் என்ற இந்த நூல், யந்திரங்கள் என்ற கருவிகள் பற்றிச் சொல்வதாகச் சொல்லப்படுகிறது. இந்த யந்திரங்கள் என்பன தகடில் கோடு கிழித்து உருவாக்கப்படும் தற்கால யந்திரங்கள் அல்ல. முற்காலத்தில், மனிதனால் ஆட்டுவிக்கப்படும் கருவிகளே யந்திரங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. அப்படிப்பட்ட யந்திரங்களைப் பற்றிச் சொல்கையில், விமானங்களைப் பற்றியும் இந்நூல் சொல்வதாகக் கருதப்படுகிறது. இந்த நூலில் இருந்து ஒரு சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். அதன்பின், இந்த நூலின் நம்பகத்தன்மை குறித்தும் விவாதிக்கலாம்.
அதற்கு முன், இந்தப் புத்தகத்தின் சுலோகங்களில் இருந்தே இதைச் செய்தவர் பாரத்வாஜர் என்று தெரிகிறது. இது எந்த வருடத்தில் செய்யப்பட்டது என்றோ, இது ஒரு பழங்காலப் புத்தகம் என்றோ வேறு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த வைமானிக சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்தில், பாரத்வாஜ ரிஷி, விமானம் என்ற வார்த்தைக்குப் பொருள் தருகிறார். அப்படித் தரும்போதே, அவருக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த ரிஷிகள், இந்த விமானம் என்ற வார்த்தையை எவ்வாறாக விளக்கியிருக்கிறார்கள் என்றே அதன் பலவிதமான அர்த்தங்களை விவரிக்கிறார்.
“தரைமேலும் கடலின்மேலும் தனது சொந்த சக்தியினால் பறவையைப்போல் காற்றில் சீறிப்பாயும் ஒன்றே விமானம் எனப்படுகிறது”.
“விமான சாஸ்திரத்தை நன்கு தெரிந்தவர்கள், காற்றில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும் ஒரு பொருளையே விமானம் என்று அழைக்கிறார்கள்”
“காற்றில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கும், ஒரு உலகத்தில் இருந்து மற்றொரு உலகத்துக்கும் செல்லும் திறன் படைத்த ஒன்றையே விமானம் என்று அழைக்கிறார்கள்”
இந்த மூன்று விளக்கங்களால் விமானம் என்ற பொருளை விளக்கியபின்னர், விமானத்தை செலுத்தக்கூடிய நபர் எப்படி இருக்கவேண்டும், எந்த உடை அணிந்திருக்கவேண்டும், விமானத்தைப் பற்றி எந்தவிதமான தகவல்கள் அவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆகிய விஷயங்களை மிகவிளக்கமாக விவரித்திருக்கிறார் பாரத்வாஜர். ஒரு விமானிக்கு இதுவிதமாக 32 ரகசியங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவருடைய கூற்று. இதைத்தவிர, தனக்கு முன்னால் இருந்த ரிஷிகள் சொல்லியவற்றையும் அவர் எழுதுகிறார். இப்படிப் பல ரிஷிகளின் கூற்றாக ஒரு விமானிக்கு எவையெல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என்று விளக்குகிறார் பாரத்வாஜர்.
இதற்குப் பிறகு, ஒரு விமானி உண்ணக்கூடிய உணவுகளைப் பற்றிய விவரணை வருகிறது. எந்தெந்த நேரங்களில் விமானி உணவு உண்ணவேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது. இதற்குப்பிறகு, விமானத்தின் அங்கமாக இருக்கும் பல்வேறு உலோக வகைகளையும் விளக்குகிறார். அந்த உலோகங்களும் கனிமங்களும் பூமியில் எங்கு கிடைக்கும் என்றும் விளக்கம் வருகிறது. உலோகங்கள் இருப்பது இரண்டாம் அத்தியாயம். மூன்றாவது அத்தியாயத்தில், ஒரு விமானத்தில் எங்கெல்லாம் கண்ணாடிகள் இருக்கவேண்டும் என்பது சொல்லப்படுகிறது. அக்கண்ணாடிகளை எப்படி உருவாக்குவது, அவற்றின் பயன்கள் என்ன என்பதும் மிக விரிவாக இதில் இருக்கின்றன.
நான்காவது அத்தியாயத்தில், விமானத்திற்கு எப்படிப் பறப்பதற்கான சக்தி கிடைக்கிறது என்பது சொல்லப்படுகிறது. அச்சக்திகளை உருவாக்கத் தேவையான கருவிகளும் விவரிக்கப்படுகின்றன. ஐந்தாவது அத்தியாயத்தில் இந்தக் கருவிகளை இயக்கம் சூத்திரங்கள் உள்ளன. இந்தப் பலவிதமான கருவிகளை இணைக்கும் ரகசியமும் இதில் உள்ளது. அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதும் இதிலேயே வந்துவிடுகிறது. இந்த ஐந்தாவது அத்தியாயம்தான் இருப்பதிலேயே பெரிய அத்தியாயமும் கூட.
ஆறாவது அத்தியாயத்தில், பலவகையான விமானங்களைப் பற்றி இருக்கிறது. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு வகையான விமானம். முதல் யுகமான கிருத யுகத்தில் விமானங்கள் இல்லை. ஆகமொத்தம் மூன்று வகையான விமானங்கள் இருக்கின்றன என்பது இதில் உள்ளது. அதன்பிறகு, இந்த மூன்று வகைகளிலும் உள்ள எண்ணிறந்த உள்வகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன்பிறகு, விமானங்களின் பல்வேறு பாகங்கள்; அவற்றின் நீள அகலங்கள் ஆகியவை சொல்லப்பட்டிருக்கின்றன.
இப்படியாக அந்தப் புத்தகம் முடிகிறது.
விரிவாகப் பல விமானங்களைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், இந்த விமானங்கள் எப்படிப் பறக்கின்றன என்பது இந்தப் புத்தகத்தில் இல்லை. அதாவது, இதன் செயல்முறை விளக்கம்.
இந்தப் புத்தகத்தின் முதல் பிரதி, 1973ல் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. சுப்பராய சாஸ்திரி என்பவர், 1914ல் தனது நினைவில் இருந்து இந்த சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொன்னதாகவும், அவற்றைப் பிரதி எடுத்து, 20 ஆண்டுகள் மொழிபெயர்க்கப்பட்டு அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1973ல் இப்புத்தகம் உருவாக்கப்பட்டதாக இதனைத் தொகுத்த G.R ஜோஸ்யர் என்பவர் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்.
இந்த வைமானிக சாஸ்திரத்தின் சுலோகங்களை முதன்முதலில் வெளியிட்ட சுப்பராய சாஸ்திரியின் மேற்பார்வையில், ஷிவ்கர் பாபுஜி தல்படே என்ற மகராஷ்ட்ர ஆசாமி, 1895ல் ஒரு விமானத்தை உருவாக்கியதாகவும், அதில் கொஞ்ச நேரம் பறந்ததாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது. இதைப்பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வந்திருக்கிறது (க்ளிக்கிப் படிக்கலாம்).
ரைட் சகோதரர்களுக்கு எட்டு வருடங்கள் முன்னரே இது நடந்துவிட்டது என்றும், ஆகையால் இவர்தான் உலகின் முதல் விமானத்தில் பறந்தவர் என்றும் இந்தச் செய்தி சொல்கிறது. ஆனால் இதைப்பற்றிய எந்த ஆவணமும் இதுவரை கிடைக்கவில்லை. தல்படே உருவாக்கிய விமானத்தின் பெயர் ‘மாருத்சஹா’. இந்த விமானத்தின் மாடல், பெங்களூர் HALல் இருக்கிறது என்றும் இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது.
இந்த வைமானிக சாஸ்த்ரம் உண்மையா? அல்லது பொய்யா?
ஒருவேளை இது உண்மை என்றே வைத்துக்கொள்ளலாம். அப்படியென்றால், பழங்கால மக்களுக்கு விமானங்கள் செய்யக் கற்றுக்கொடுத்தது யார்? வேற்றுக்கிரகங்களிலிருந்து பூமிக்கு வந்த மனிதர்களா?
பழங்கால இந்திய புராணங்களில், பூமியிலிருந்து வேறு உலகங்களுக்குச் சென்ற மனிதர்களைப் பற்றிப் பல கதைகள் இருக்கின்றன. நமது ஔவையாரே பூமியில் இருந்து சுயநினைவுடன் கைலாசத்துக்கு ஒரே ஜம்ப்பில் சென்று அடைந்ததாக ஒரு கதை இருக்கிறதே? அவரை அப்படித் தூக்கிவிட்டவர் பிள்ளையார் என்றும் அதே கதை சொல்கிறது.
ஒருவேளை இந்த வைமானிக சாஸ்த்ரம் பொய் என்று வைத்துக்கொண்டால்? அதையும் விபரமாகப் பார்க்கத்தான் போகிறோம்.
தொடரும் . . .
நன்றி : கருந்தேள்
சென்ற கட்டுரையில், மஹாபாரதத்தில் ந்யூக்ளியர் குண்டுகளின் வர்ணனை வருவதைப்பற்றிப் பார்த்தோம். மேலே தொடருமுன்னர், சில சந்தேகங்களைப் பார்க்கலாம்.
யோவ். மஹாபாரதம் என்பதே ஒரு கதை. கதையில் கண்டபடி எதைவேண்டுமானாலும் எழுதலாமே? அப்படியிருக்கும்போது அதை உண்மை என்று நம்பி, ஏலியன்கள் அவர்களது ஆயுதங்களை உபயோகித்தார்கள் என்று எப்படி எடுத்துக்கொள்ளமுடியும்? இது ஒரு கோணம்.
மஹாபாரதத்தையும், மற்ற உலகின் புராணங்களையும் ஏன் கதை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்? உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளின் ஆவணங்களாகக்கூட அவை இருக்கலாமே? இது இன்னொரு கோணம்.
நம்மைப்பொறுத்தவரை, புராணங்கள் உண்மையா பொய்யா என்று அலசுவது இந்தக் கட்டுரைகளின் நோக்கம் அல்ல. அவற்றில் தரப்பட்டிருக்கும் பல்வேறு ஏலியன் சம்மந்தமான விஷயங்களை எடுத்துக்கொண்டு அவற்றை அலசுவதே நோக்கம். புராணங்கள் பொய்யாகவும் இருக்கலாம்; அல்லது அவை உண்மை என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எந்த contextல் அவை இந்த extra terrestrial தகவல்களைத் தருகின்றன என்பதை மட்டுமே நோக்கப்போகிறோம்.
இன்னொரு விஷயம் – இந்தப் புராணங்கள் அடியோடு பொய் என்றோ, அல்லது அப்பட்டமான உண்மை என்றோ நூறு சதவிகிதம் நிரூபிக்கக்கூடிய எந்தத் தகவலும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை என்பதும் உண்மை. ஆகவே, எந்தப் பக்கமும் சாயாமல், இரண்டு கோணங்களிலும் இந்த சுவாரஸ்யமான விஷயங்களை நோக்கலாம்.
இந்திய புராணங்களில் விமானங்கள்
பழங்கால இந்தியாவில், விமானங்களை உருவாக்குவதற்கான அறிவும் ஆற்றலும் கட்டாயம் இருந்தது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதற்குக் காரணம், புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விமானங்கள் செய்யும் வழிமுறைதான். குறிப்பாக, ‘வைமானிக சாஸ்த்ரம்’ என்று ஒரு நூல் – மகர்ஷி பாரத்வாஜரால் செய்யப்பட்டது – இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்த நூலைப்பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
யந்த்ர சர்வஸ்வம் என்பதுதான் பாரத்வாஜர் எழுதிய மூல நூல் என்று தெரிகிறது. அதன் ஒரு பகுதியே இந்த வைமானிக சாஸ்த்ரம்.
யந்த்ர சர்வஸ்வம் என்ற இந்த நூல், யந்திரங்கள் என்ற கருவிகள் பற்றிச் சொல்வதாகச் சொல்லப்படுகிறது. இந்த யந்திரங்கள் என்பன தகடில் கோடு கிழித்து உருவாக்கப்படும் தற்கால யந்திரங்கள் அல்ல. முற்காலத்தில், மனிதனால் ஆட்டுவிக்கப்படும் கருவிகளே யந்திரங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. அப்படிப்பட்ட யந்திரங்களைப் பற்றிச் சொல்கையில், விமானங்களைப் பற்றியும் இந்நூல் சொல்வதாகக் கருதப்படுகிறது. இந்த நூலில் இருந்து ஒரு சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். அதன்பின், இந்த நூலின் நம்பகத்தன்மை குறித்தும் விவாதிக்கலாம்.
அதற்கு முன், இந்தப் புத்தகத்தின் சுலோகங்களில் இருந்தே இதைச் செய்தவர் பாரத்வாஜர் என்று தெரிகிறது. இது எந்த வருடத்தில் செய்யப்பட்டது என்றோ, இது ஒரு பழங்காலப் புத்தகம் என்றோ வேறு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த வைமானிக சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்தில், பாரத்வாஜ ரிஷி, விமானம் என்ற வார்த்தைக்குப் பொருள் தருகிறார். அப்படித் தரும்போதே, அவருக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த ரிஷிகள், இந்த விமானம் என்ற வார்த்தையை எவ்வாறாக விளக்கியிருக்கிறார்கள் என்றே அதன் பலவிதமான அர்த்தங்களை விவரிக்கிறார்.
“தரைமேலும் கடலின்மேலும் தனது சொந்த சக்தியினால் பறவையைப்போல் காற்றில் சீறிப்பாயும் ஒன்றே விமானம் எனப்படுகிறது”.
“விமான சாஸ்திரத்தை நன்கு தெரிந்தவர்கள், காற்றில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும் ஒரு பொருளையே விமானம் என்று அழைக்கிறார்கள்”
“காற்றில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கும், ஒரு உலகத்தில் இருந்து மற்றொரு உலகத்துக்கும் செல்லும் திறன் படைத்த ஒன்றையே விமானம் என்று அழைக்கிறார்கள்”
இந்த மூன்று விளக்கங்களால் விமானம் என்ற பொருளை விளக்கியபின்னர், விமானத்தை செலுத்தக்கூடிய நபர் எப்படி இருக்கவேண்டும், எந்த உடை அணிந்திருக்கவேண்டும், விமானத்தைப் பற்றி எந்தவிதமான தகவல்கள் அவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆகிய விஷயங்களை மிகவிளக்கமாக விவரித்திருக்கிறார் பாரத்வாஜர். ஒரு விமானிக்கு இதுவிதமாக 32 ரகசியங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவருடைய கூற்று. இதைத்தவிர, தனக்கு முன்னால் இருந்த ரிஷிகள் சொல்லியவற்றையும் அவர் எழுதுகிறார். இப்படிப் பல ரிஷிகளின் கூற்றாக ஒரு விமானிக்கு எவையெல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என்று விளக்குகிறார் பாரத்வாஜர்.
இதற்குப் பிறகு, ஒரு விமானி உண்ணக்கூடிய உணவுகளைப் பற்றிய விவரணை வருகிறது. எந்தெந்த நேரங்களில் விமானி உணவு உண்ணவேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது. இதற்குப்பிறகு, விமானத்தின் அங்கமாக இருக்கும் பல்வேறு உலோக வகைகளையும் விளக்குகிறார். அந்த உலோகங்களும் கனிமங்களும் பூமியில் எங்கு கிடைக்கும் என்றும் விளக்கம் வருகிறது. உலோகங்கள் இருப்பது இரண்டாம் அத்தியாயம். மூன்றாவது அத்தியாயத்தில், ஒரு விமானத்தில் எங்கெல்லாம் கண்ணாடிகள் இருக்கவேண்டும் என்பது சொல்லப்படுகிறது. அக்கண்ணாடிகளை எப்படி உருவாக்குவது, அவற்றின் பயன்கள் என்ன என்பதும் மிக விரிவாக இதில் இருக்கின்றன.
நான்காவது அத்தியாயத்தில், விமானத்திற்கு எப்படிப் பறப்பதற்கான சக்தி கிடைக்கிறது என்பது சொல்லப்படுகிறது. அச்சக்திகளை உருவாக்கத் தேவையான கருவிகளும் விவரிக்கப்படுகின்றன. ஐந்தாவது அத்தியாயத்தில் இந்தக் கருவிகளை இயக்கம் சூத்திரங்கள் உள்ளன. இந்தப் பலவிதமான கருவிகளை இணைக்கும் ரகசியமும் இதில் உள்ளது. அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதும் இதிலேயே வந்துவிடுகிறது. இந்த ஐந்தாவது அத்தியாயம்தான் இருப்பதிலேயே பெரிய அத்தியாயமும் கூட.
ஆறாவது அத்தியாயத்தில், பலவகையான விமானங்களைப் பற்றி இருக்கிறது. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு வகையான விமானம். முதல் யுகமான கிருத யுகத்தில் விமானங்கள் இல்லை. ஆகமொத்தம் மூன்று வகையான விமானங்கள் இருக்கின்றன என்பது இதில் உள்ளது. அதன்பிறகு, இந்த மூன்று வகைகளிலும் உள்ள எண்ணிறந்த உள்வகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன்பிறகு, விமானங்களின் பல்வேறு பாகங்கள்; அவற்றின் நீள அகலங்கள் ஆகியவை சொல்லப்பட்டிருக்கின்றன.
இப்படியாக அந்தப் புத்தகம் முடிகிறது.
விரிவாகப் பல விமானங்களைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், இந்த விமானங்கள் எப்படிப் பறக்கின்றன என்பது இந்தப் புத்தகத்தில் இல்லை. அதாவது, இதன் செயல்முறை விளக்கம்.
இந்தப் புத்தகத்தின் முதல் பிரதி, 1973ல் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. சுப்பராய சாஸ்திரி என்பவர், 1914ல் தனது நினைவில் இருந்து இந்த சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொன்னதாகவும், அவற்றைப் பிரதி எடுத்து, 20 ஆண்டுகள் மொழிபெயர்க்கப்பட்டு அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1973ல் இப்புத்தகம் உருவாக்கப்பட்டதாக இதனைத் தொகுத்த G.R ஜோஸ்யர் என்பவர் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்.
இந்த வைமானிக சாஸ்திரத்தின் சுலோகங்களை முதன்முதலில் வெளியிட்ட சுப்பராய சாஸ்திரியின் மேற்பார்வையில், ஷிவ்கர் பாபுஜி தல்படே என்ற மகராஷ்ட்ர ஆசாமி, 1895ல் ஒரு விமானத்தை உருவாக்கியதாகவும், அதில் கொஞ்ச நேரம் பறந்ததாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது. இதைப்பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வந்திருக்கிறது (க்ளிக்கிப் படிக்கலாம்).
ரைட் சகோதரர்களுக்கு எட்டு வருடங்கள் முன்னரே இது நடந்துவிட்டது என்றும், ஆகையால் இவர்தான் உலகின் முதல் விமானத்தில் பறந்தவர் என்றும் இந்தச் செய்தி சொல்கிறது. ஆனால் இதைப்பற்றிய எந்த ஆவணமும் இதுவரை கிடைக்கவில்லை. தல்படே உருவாக்கிய விமானத்தின் பெயர் ‘மாருத்சஹா’. இந்த விமானத்தின் மாடல், பெங்களூர் HALல் இருக்கிறது என்றும் இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது.
இந்த வைமானிக சாஸ்த்ரம் உண்மையா? அல்லது பொய்யா?
ஒருவேளை இது உண்மை என்றே வைத்துக்கொள்ளலாம். அப்படியென்றால், பழங்கால மக்களுக்கு விமானங்கள் செய்யக் கற்றுக்கொடுத்தது யார்? வேற்றுக்கிரகங்களிலிருந்து பூமிக்கு வந்த மனிதர்களா?
பழங்கால இந்திய புராணங்களில், பூமியிலிருந்து வேறு உலகங்களுக்குச் சென்ற மனிதர்களைப் பற்றிப் பல கதைகள் இருக்கின்றன. நமது ஔவையாரே பூமியில் இருந்து சுயநினைவுடன் கைலாசத்துக்கு ஒரே ஜம்ப்பில் சென்று அடைந்ததாக ஒரு கதை இருக்கிறதே? அவரை அப்படித் தூக்கிவிட்டவர் பிள்ளையார் என்றும் அதே கதை சொல்கிறது.
ஒருவேளை இந்த வைமானிக சாஸ்த்ரம் பொய் என்று வைத்துக்கொண்டால்? அதையும் விபரமாகப் பார்க்கத்தான் போகிறோம்.
தொடரும் . . .
நன்றி : கருந்தேள்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்
கில்லி கட்டுரைங்க ! தொடருங்க !
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்
நல்ல தொடர் .. தொடருங்கள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்
அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஆச்சரியமான தகவல்களை அறிந்து கொள்ள...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 3
சென்ற கட்டுரையில் விமானங்களைப் பற்றிய புராண விளக்கங்களைப் பார்த்தோம். இப்போது, ஓரிரு கேள்விகளைப் பார்த்துவிட்டு மேலே செல்லலாம்.
முதலில், புராணம் என்ற கற்பனைக்கதையை நாம் ஏன் மதிக்கவேண்டும்? தற்காலத்தில் நாம் எழுதுவதே வருங்காலத்தில் புராணங்கள் ஆகின்றன அல்லவா? அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு ஏன் மதிப்பைக் கொடுத்து ஆராய வேண்டும்?
இந்தியப் புராணங்களில் மட்டும் இந்த பறக்கும் தட்டுகள் கொடுக்கப்படவில்லை; மாறாக உலகின் வேறு பல புராணங்களிலும் அவைகளைப்பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன என்று ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் சொல்லிவருகின்றனர். அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்க ஆரம்பிக்கலாம்.
இந்த இடத்தில், இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பண்டையகால கிரேக்கப் பழமொழியை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது ஒரு சிறிய கற்பனை. இது, எரிக் வான் டேனிக்கென் சொன்னது.
தற்காலத்தில், அண்டவெளியின் எந்த மூலைக்கும் சென்றுவரக்கூடிய அதிவேக ராக்கெட் ஒன்றைக் கண்டுபிடிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமது முதல் நோக்கம் என்னவாக இருக்கும்? நமது பால்வீதிக்கு மிகப் பக்கலில் இருக்கும் ஏதாவது ஒரு பால்வீதிக்குச் சென்று ஆராய வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கும் அல்லவா? அப்படி ஒரு பால்வீதிக்குள் இருக்கும் ஒரு நட்சத்திரத்தையோ அல்லது கிரகத்தையோ குறி வைத்து அந்த ராக்கெட்டில் நாம் பயணிக்கிறோம். ராக்கெட் அதிவேகத்தில் செல்வதால், சில வருடங்களில் அந்த கிரகத்தை அடைகிறோம்.அங்கே தரையிறங்கும்போது, அந்த கிரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உயிர்கள் – நமது நாகரிகத்தை விடப் பன்மடங்கு பின்தங்கியிருக்கும் உயிர்கள் இவை – நமது ராக்கெட்டைப் பார்த்து மிரட்சியடைந்து ஓடி ஒளிகின்றன. நாம் அங்கே இறங்கி, நமது ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறோம். கொஞ்ச காலத்தில், மெதுவாக வெளியே வரும் அந்த கிரகத்தின் உயிர்களிடம் பேசும் முயற்சியை நாம் ஆரம்பிக்கிறோம். நம்மிடம் பேசுவதற்கே அவர்கள் வெகுவாக பயந்துகொள்கின்றனர். எப்படியோ நம்மிடம் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும் அவர்கள், நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கண்டு நடுங்குகின்றனர் (நெருப்பைக் கக்கும் கை இத்யாதி). மெதுவாகத் தங்களது இனப் பெண் உயிர்களை நமக்கு அனுப்பி, அவர்களைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்டுக்கொள்கின்றனர். இந்தப் பெண்களுடன் நாம் உறவு கொள்வதன் மூலமாக சில புதிய, அறிவில் சற்றே மேம்பட்ட உயிர்கள் தோன்றுகின்றன. நமது ஆராய்ச்சி முடிந்ததும் அங்கிருந்து நாம் கிளம்பி விடுகிறோம். அதன்பின் வழிவழியாக வரும் அந்த கிரகத்தின் மக்கள், நம்மைப்பற்றிப் புராணங்களையும் கதைகளையும் எழுதுகின்றனர். நம்மைப் பற்றிய கோயில்கள் கட்டப்படுகின்றன. தற்காலத்தில் அங்கு சென்று பார்த்தால், நாம் தான் கடவுளர்கள் என்று நம்பி நம்மை அவர்கள் வழிபட்டுக்கொண்டிருப்பதைக் காணலாம். இன்னொரு கும்பல்,நாம் ஏலியன்கள் தான் என்று நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருக்கும். ஆனால் – மைன்ட் யூ – அவர்களிடம், தற்போது (ஏலியன்களாகிய) நம்மிடம் இருப்பதைப்போல் அதிவேகமாக கிரகங்களுக்குச் செல்லும் ராக்கெட்கள் இல்லை. ஆகையால், அவர்களால் எதையும் நிரூபித்து அறிந்துகொள்ள இயலாது. அதற்கு அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அந்த இடைவெளியில் – அவர்கள் அறிவினால் முன்னேறும் அந்தக் காலகட்டத்தில் – நமது தொழில்நுட்பமும் எக்கச்சக்கமாக முன்னேறிவிடும். ஆகையால், எப்படியானாலும், நாம்தான் அவர்களைவிட மேம்பட்டவர்களாக இருப்போம். நாம் எப்போது நினைத்தாலும் அவர்களின் கிரகத்துக்கு விஸிட் அடிக்க முடியும். ஆனால், அவர்கள் என்னதான் முயன்றாலும், அடுத்த சில நூறு வருடங்கள் வரை அவர்களால் அவர்களது பால்வீதியையே முழுதாக சுற்ற முடியாத நிலை.
நினைத்துப் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா?
இதுதான் பூமியில் கடவுளர்கள் வந்த கதை. ஏன் இப்படி நடந்திருக்கக்கூடாது என்பது எரிக் வான் டானிக்கென் போன்ற நபர்கள் எடுத்துவைக்கும் வாதம். இது உண்மையாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டா? அல்லது இதெல்லாம் டுபாக்கூரா என்பதை, கட்டுரைகளின் போக்கில் அலசலாம்.
அத்தியாயம் 2 : Claude Vorilhon (AKA Raël)
இந்த ஏலியன் தியரிகளை உலகெங்கும் பரப்பி வரும் ஒரு நபரைப் பற்றி இப்போது பார்க்கலாம். இவர் பெயர் Claude Vorilhon. நமது வசதிக்காக, இவரை க்ளாட் என்று அழைப்போம்.
இப்போது நான் சொல்லப்போகும் விஷயங்கள், எனது சொந்த சரக்கு அல்ல. இது க்ளாட் எழுதிய புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டது. ஒருவேளை இது எவரது நம்பிக்கையையாவது காயப்படுத்தினால், அதற்கு முழுப்பொறுப்பு வகிக்கக்கூடியவர் இந்த க்ளாட் மட்டுமே. நானல்ல. ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு நாவலுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இவரது புத்தகங்களில் உண்டு.
இந்தப் பீடிகையுடன், மேலே தொடருவோம்.
ஆண்டு 1973. தேதி – டிஸம்பர் 13. ஃப்ரான்ஸின் Clermont -Ferrand பகுதியில், ஒரு எரிமலை. பெயர், Puy -de -Lassolas. அதனுள் ஜாக்கிங் செய்துகொண்டிருக்கிறார் க்ளாட். அன்றைய நாள் வரை அவர் ஒரு ரேஸ் கார் டிரைவர். அவ்வப்போது அந்த எரிமலைக்கு அவரது குடும்பத்தோடு அவர் வருவதுண்டு.
வானமெங்கும் மெல்லிய பனிப்புகை படர்ந்திருக்கிறது. அங்கிருந்து அவர் கிளம்பும் நேரம். கடைசியாக ஒருமுறை, எரிமலையின் உச்சியைச் சுற்றிப் படர்ந்துள்ள பனியைப் பார்க்கிறார் க்ளாட்.
பனியின் மத்தியில் செந்நிற ஒளி. சிறிது நேரத்தில், ஒரு சிறிய ஹெலிகாப்டர் அவரைநோக்கி வருகிறது. பக்கத்தில் வந்ததும், அது ஒரு ஹெலிகாப்டர் அல்ல என்று தெரிகிறது. எங்கும் நிசப்தம். இவரைநோக்கி இறங்கி வரும் ‘அதிலிருந்து’ ஒரு சிறிய சத்தம் கூட வரவில்லை.
ஆம். அது ஒரு பறக்கும் தட்டு.
கூம்பு வடிவில் அமைந்திருக்கும் அந்தக் கலம், அடியில் மிகவும் தட்டையாக இருக்கிறது. அடிப்பாகத்திலிருந்துதான் அந்த செந்நிற ஒளி வந்துகொண்டிருக்கிறது. கூம்பின் உச்சியில் இருந்து கண்களைக்கூசவைக்கும் வெண்ணிற ஒளி. இவரது அருகில், தரையிலிருந்து இரண்டு மீட்டர்கள் அளவில், அந்தரத்தில் எந்தச் சத்தமும் இன்றி நிற்கிறது அந்தக் கலம். அதன் அடிப்பாகத்திலிருந்து ஒருவிதமான படி தரையை நோக்கி நீள்கிறது.
இதோ… யாரோ அதில் இருந்து இறங்கி வரப்போகிறார்கள். பயமும் எதிர்பார்ப்பும் அவரது இதயத்தைப் பிளக்கின்றன. கடைசியாக, இரண்டு பாதங்கள் அப்படிகளில் இறங்குகின்றன. பாதங்களைத் தொடர்ந்து, இரண்டு கால்கள். இப்போது, க்ளாட் சற்றே ஆசுவாசம் அடைகிறார். காரணம், ஒரு மனிதனைச் சந்திக்கப்போகிறோம் என்பதை, அக்கால்களைக் கண்டதிலிருந்து அவர் புரிந்துகொண்டதே. அதனைத் தொடர்ந்து, நான்கு அடியே உள்ள ஒரு குழந்தை – இல்லையில்லை – ஒரு மனிதன் – இவரை நோக்கி மெதுவாக நடந்துவருகிறான். கருப்பு வண்ண நீள்முடி, தாடி இவற்றோடு சேர்ந்து ஒருவிதமான பச்சை வண்ண நீளமான உடையும் அணிந்திருக்கிறான்.
க்ளாடை நோக்கி மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்க்கிறார் ‘அம்மனிதர்’. க்ளாடின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.
அம்மனிதனிடம் ஃப்ரெஞ்ச்சில் பேசத் தலைப்படுகிறார் க்ளாட்.
“எங்கிருந்து வருகிறீர்கள்?”
அதிசயிக்கத்தக்கவிதமாக, ஃப்ரெஞ்ச்சிலேயே பதில் வருகிறது. “மிகத்தொலைவிலிருந்து வருகிறேன்”.
“உங்களுக்கு எப்படி ஃப்ரெஞ்ச் புரிகிறது?”
“எனக்கு உலகின் எல்லா மொழிகளும் தெரியும்”.
இதன்பின் க்ளாட் அந்த மனிதரிடம் பேசியதாக வெளியிட்டிருக்கும் தகவல்கள் நம்மை அதிரவைக்கக்கூடியவை (என்கிறார் க்ளாட்). படுபயங்கர விறுவிறுப்பான ஒரு படத்தை, இத்தகவல்களை வைத்து எடுக்க முடியும்.
அவை…….?
தொடரும்……..
சென்ற கட்டுரையில் விமானங்களைப் பற்றிய புராண விளக்கங்களைப் பார்த்தோம். இப்போது, ஓரிரு கேள்விகளைப் பார்த்துவிட்டு மேலே செல்லலாம்.
முதலில், புராணம் என்ற கற்பனைக்கதையை நாம் ஏன் மதிக்கவேண்டும்? தற்காலத்தில் நாம் எழுதுவதே வருங்காலத்தில் புராணங்கள் ஆகின்றன அல்லவா? அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு ஏன் மதிப்பைக் கொடுத்து ஆராய வேண்டும்?
இந்தியப் புராணங்களில் மட்டும் இந்த பறக்கும் தட்டுகள் கொடுக்கப்படவில்லை; மாறாக உலகின் வேறு பல புராணங்களிலும் அவைகளைப்பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன என்று ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் சொல்லிவருகின்றனர். அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்க ஆரம்பிக்கலாம்.
இந்த இடத்தில், இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பண்டையகால கிரேக்கப் பழமொழியை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது ஒரு சிறிய கற்பனை. இது, எரிக் வான் டேனிக்கென் சொன்னது.
தற்காலத்தில், அண்டவெளியின் எந்த மூலைக்கும் சென்றுவரக்கூடிய அதிவேக ராக்கெட் ஒன்றைக் கண்டுபிடிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமது முதல் நோக்கம் என்னவாக இருக்கும்? நமது பால்வீதிக்கு மிகப் பக்கலில் இருக்கும் ஏதாவது ஒரு பால்வீதிக்குச் சென்று ஆராய வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கும் அல்லவா? அப்படி ஒரு பால்வீதிக்குள் இருக்கும் ஒரு நட்சத்திரத்தையோ அல்லது கிரகத்தையோ குறி வைத்து அந்த ராக்கெட்டில் நாம் பயணிக்கிறோம். ராக்கெட் அதிவேகத்தில் செல்வதால், சில வருடங்களில் அந்த கிரகத்தை அடைகிறோம்.அங்கே தரையிறங்கும்போது, அந்த கிரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உயிர்கள் – நமது நாகரிகத்தை விடப் பன்மடங்கு பின்தங்கியிருக்கும் உயிர்கள் இவை – நமது ராக்கெட்டைப் பார்த்து மிரட்சியடைந்து ஓடி ஒளிகின்றன. நாம் அங்கே இறங்கி, நமது ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறோம். கொஞ்ச காலத்தில், மெதுவாக வெளியே வரும் அந்த கிரகத்தின் உயிர்களிடம் பேசும் முயற்சியை நாம் ஆரம்பிக்கிறோம். நம்மிடம் பேசுவதற்கே அவர்கள் வெகுவாக பயந்துகொள்கின்றனர். எப்படியோ நம்மிடம் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும் அவர்கள், நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கண்டு நடுங்குகின்றனர் (நெருப்பைக் கக்கும் கை இத்யாதி). மெதுவாகத் தங்களது இனப் பெண் உயிர்களை நமக்கு அனுப்பி, அவர்களைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்டுக்கொள்கின்றனர். இந்தப் பெண்களுடன் நாம் உறவு கொள்வதன் மூலமாக சில புதிய, அறிவில் சற்றே மேம்பட்ட உயிர்கள் தோன்றுகின்றன. நமது ஆராய்ச்சி முடிந்ததும் அங்கிருந்து நாம் கிளம்பி விடுகிறோம். அதன்பின் வழிவழியாக வரும் அந்த கிரகத்தின் மக்கள், நம்மைப்பற்றிப் புராணங்களையும் கதைகளையும் எழுதுகின்றனர். நம்மைப் பற்றிய கோயில்கள் கட்டப்படுகின்றன. தற்காலத்தில் அங்கு சென்று பார்த்தால், நாம் தான் கடவுளர்கள் என்று நம்பி நம்மை அவர்கள் வழிபட்டுக்கொண்டிருப்பதைக் காணலாம். இன்னொரு கும்பல்,நாம் ஏலியன்கள் தான் என்று நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருக்கும். ஆனால் – மைன்ட் யூ – அவர்களிடம், தற்போது (ஏலியன்களாகிய) நம்மிடம் இருப்பதைப்போல் அதிவேகமாக கிரகங்களுக்குச் செல்லும் ராக்கெட்கள் இல்லை. ஆகையால், அவர்களால் எதையும் நிரூபித்து அறிந்துகொள்ள இயலாது. அதற்கு அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அந்த இடைவெளியில் – அவர்கள் அறிவினால் முன்னேறும் அந்தக் காலகட்டத்தில் – நமது தொழில்நுட்பமும் எக்கச்சக்கமாக முன்னேறிவிடும். ஆகையால், எப்படியானாலும், நாம்தான் அவர்களைவிட மேம்பட்டவர்களாக இருப்போம். நாம் எப்போது நினைத்தாலும் அவர்களின் கிரகத்துக்கு விஸிட் அடிக்க முடியும். ஆனால், அவர்கள் என்னதான் முயன்றாலும், அடுத்த சில நூறு வருடங்கள் வரை அவர்களால் அவர்களது பால்வீதியையே முழுதாக சுற்ற முடியாத நிலை.
நினைத்துப் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா?
இதுதான் பூமியில் கடவுளர்கள் வந்த கதை. ஏன் இப்படி நடந்திருக்கக்கூடாது என்பது எரிக் வான் டானிக்கென் போன்ற நபர்கள் எடுத்துவைக்கும் வாதம். இது உண்மையாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டா? அல்லது இதெல்லாம் டுபாக்கூரா என்பதை, கட்டுரைகளின் போக்கில் அலசலாம்.
அத்தியாயம் 2 : Claude Vorilhon (AKA Raël)
இந்த ஏலியன் தியரிகளை உலகெங்கும் பரப்பி வரும் ஒரு நபரைப் பற்றி இப்போது பார்க்கலாம். இவர் பெயர் Claude Vorilhon. நமது வசதிக்காக, இவரை க்ளாட் என்று அழைப்போம்.
இப்போது நான் சொல்லப்போகும் விஷயங்கள், எனது சொந்த சரக்கு அல்ல. இது க்ளாட் எழுதிய புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டது. ஒருவேளை இது எவரது நம்பிக்கையையாவது காயப்படுத்தினால், அதற்கு முழுப்பொறுப்பு வகிக்கக்கூடியவர் இந்த க்ளாட் மட்டுமே. நானல்ல. ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு நாவலுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இவரது புத்தகங்களில் உண்டு.
இந்தப் பீடிகையுடன், மேலே தொடருவோம்.
ஆண்டு 1973. தேதி – டிஸம்பர் 13. ஃப்ரான்ஸின் Clermont -Ferrand பகுதியில், ஒரு எரிமலை. பெயர், Puy -de -Lassolas. அதனுள் ஜாக்கிங் செய்துகொண்டிருக்கிறார் க்ளாட். அன்றைய நாள் வரை அவர் ஒரு ரேஸ் கார் டிரைவர். அவ்வப்போது அந்த எரிமலைக்கு அவரது குடும்பத்தோடு அவர் வருவதுண்டு.
வானமெங்கும் மெல்லிய பனிப்புகை படர்ந்திருக்கிறது. அங்கிருந்து அவர் கிளம்பும் நேரம். கடைசியாக ஒருமுறை, எரிமலையின் உச்சியைச் சுற்றிப் படர்ந்துள்ள பனியைப் பார்க்கிறார் க்ளாட்.
பனியின் மத்தியில் செந்நிற ஒளி. சிறிது நேரத்தில், ஒரு சிறிய ஹெலிகாப்டர் அவரைநோக்கி வருகிறது. பக்கத்தில் வந்ததும், அது ஒரு ஹெலிகாப்டர் அல்ல என்று தெரிகிறது. எங்கும் நிசப்தம். இவரைநோக்கி இறங்கி வரும் ‘அதிலிருந்து’ ஒரு சிறிய சத்தம் கூட வரவில்லை.
ஆம். அது ஒரு பறக்கும் தட்டு.
கூம்பு வடிவில் அமைந்திருக்கும் அந்தக் கலம், அடியில் மிகவும் தட்டையாக இருக்கிறது. அடிப்பாகத்திலிருந்துதான் அந்த செந்நிற ஒளி வந்துகொண்டிருக்கிறது. கூம்பின் உச்சியில் இருந்து கண்களைக்கூசவைக்கும் வெண்ணிற ஒளி. இவரது அருகில், தரையிலிருந்து இரண்டு மீட்டர்கள் அளவில், அந்தரத்தில் எந்தச் சத்தமும் இன்றி நிற்கிறது அந்தக் கலம். அதன் அடிப்பாகத்திலிருந்து ஒருவிதமான படி தரையை நோக்கி நீள்கிறது.
இதோ… யாரோ அதில் இருந்து இறங்கி வரப்போகிறார்கள். பயமும் எதிர்பார்ப்பும் அவரது இதயத்தைப் பிளக்கின்றன. கடைசியாக, இரண்டு பாதங்கள் அப்படிகளில் இறங்குகின்றன. பாதங்களைத் தொடர்ந்து, இரண்டு கால்கள். இப்போது, க்ளாட் சற்றே ஆசுவாசம் அடைகிறார். காரணம், ஒரு மனிதனைச் சந்திக்கப்போகிறோம் என்பதை, அக்கால்களைக் கண்டதிலிருந்து அவர் புரிந்துகொண்டதே. அதனைத் தொடர்ந்து, நான்கு அடியே உள்ள ஒரு குழந்தை – இல்லையில்லை – ஒரு மனிதன் – இவரை நோக்கி மெதுவாக நடந்துவருகிறான். கருப்பு வண்ண நீள்முடி, தாடி இவற்றோடு சேர்ந்து ஒருவிதமான பச்சை வண்ண நீளமான உடையும் அணிந்திருக்கிறான்.
க்ளாடை நோக்கி மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்க்கிறார் ‘அம்மனிதர்’. க்ளாடின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.
அம்மனிதனிடம் ஃப்ரெஞ்ச்சில் பேசத் தலைப்படுகிறார் க்ளாட்.
“எங்கிருந்து வருகிறீர்கள்?”
அதிசயிக்கத்தக்கவிதமாக, ஃப்ரெஞ்ச்சிலேயே பதில் வருகிறது. “மிகத்தொலைவிலிருந்து வருகிறேன்”.
“உங்களுக்கு எப்படி ஃப்ரெஞ்ச் புரிகிறது?”
“எனக்கு உலகின் எல்லா மொழிகளும் தெரியும்”.
இதன்பின் க்ளாட் அந்த மனிதரிடம் பேசியதாக வெளியிட்டிருக்கும் தகவல்கள் நம்மை அதிரவைக்கக்கூடியவை (என்கிறார் க்ளாட்). படுபயங்கர விறுவிறுப்பான ஒரு படத்தை, இத்தகவல்களை வைத்து எடுக்க முடியும்.
அவை…….?
தொடரும்……..
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|