புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
91 Posts - 61%
heezulia
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 5%
eraeravi
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%
viyasan
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
283 Posts - 45%
heezulia
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
19 Posts - 3%
prajai
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_m10கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 2:26 pm

கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி காலனி பகுதி.
அங்கே உள்ளது கீதாஞ்சலி கலைக் கழகம். அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் அங்கே சென்று ஓவியங்களை வரையக் கற்றுக் கொள்கிறார்கள்.
தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், கிளாஸ் பெயிண்டிங், மியூரல் வகை பெயிண்டிங், ஃபேப்ரிக் பெயிண்டிங், எம்பிராய்டரி, செராமிக் பெயிண்டிங், செயற்கை நீருற்று செய்வது... இப்படி நிறையக் கற்றுக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் கற்றுக் கொடுப்பவர் சாந்தி சேகர். ஆனால் இவற்றைவிட அவர் கற்றுக் கொடுக்கும் இன்னொன்று மிக முக்கியமானது. அது வாழ்க்கைக் கல்வி.
திருமணமாகப் போகும் பெண்களுக்கு, குடும்ப வாழ்க்கையில் வரும் பல்வேறு பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது? குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது? வீட்டில் உள்ள பெரியவர்களிடம் எப்படி அனுசரித்துப் போவது? வருமானத்துக்கு ஏற்ப எப்படித் திட்டமிட்டு வாழ்வது? வேலைக்குப் போகும் பெண்கள் கணவனிடம் வீட்டு வேலைகளை எப்படி வாங்குவது? என்பன போன்றவற்றையெல்லாம் கற்றுத் தருகிறார். அவரும் அவர் கணவர் சேகரும் சேர்ந்து இதற்காகவே "குடும்பத்தின் விழுது உறவுகள்' என்று ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள்.
சாந்தி சேகரிடம் பேசினோம்:
""நான் பிறந்தது திருநெல்வேலிக்கு அருகில் உள்ள தச்சநல்லூரில். எம்.ஏ., எம்.எட் படித்தேன். கணவர் சேகர் ஸ்ரீ.ஜி.கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர். நான் வேலைக்குப் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது என்னிடமுள்ள ஓவியத் திறமையைப் பார்த்த என் கணவர், கீதாஞ்சலி கலைக் கழகத்தை ஆரம்பிக்கச் சொன்னார்.
இங்கே ஓவியம் கற்றுக் கொள்ள வருகிற பெண்கள் பெரும்பாலோர் திருமணம் ஆகாதவர்கள். படித்து முடித்துவிட்டு திருமணத்துக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் இங்கே வருகிறபோது, என்னிடம் அவர்களுடைய திருமண வாழ்க்கையைப் பற்றிய பயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். சில திருமணமான பெண்களும் அன்றாடம் அவர்களுடைய வீட்டில் நடைபெறும் சண்டை, சச்சரவுகளை என்னிடம் சொல்வார்கள்.
அப்போது நான் அவர்களுக்கு வழிகாட்டும்விதமாக ஆலோசனைகளைச் சொல்வேன். அதைக் கேட்டுவிட்டுச் சென்ற அவர்கள் அதன்படி நடந்து கொண்டதாகவும், அதனால் வீட்டில் இருந்த பிரச்னை தீர்ந்துவிட்டது என்றும் மகிழ்ச்சியாகச் சொல்வார்கள்.
இவற்றையெல்லாம் கேட்ட எனக்கு, இங்கு வருபவர்கள் தவிர, நிறையப் பெண்களுக்குப் பயன்படும் விதத்தில் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது. நான் மட்டுமல்லாமல், பல வல்லுநர்களையும் வைத்து, குடும்பம் பற்றியும் குடும்ப உறவுகள் பற்றியும் வகுப்புகளை நடத்தத் தொடங்கினேன்.
இப்போது முதலில் மாதிரி கூட்டுக் குடும்பங்கள் இல்லை. தனிக்குடித்தனங்கள் அதிகமாகிவிட்டன. பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போகிறார்கள். அலுவலக வேலைகளையும், வீட்டு வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. குழந்தைகளை வளர்க்க வேண்டியிருக்கிறது. கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே செய்தால், குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்துக்குப் போக முடியாது. குழந்தைகளை குறித்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியாது. கணவனும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் நிறைய வீடுகளில் ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்யமாட்டார்கள். ஆண்களின் மனம் கோணாதவாறும் அதேசமயம் வீட்டு வேலைகளை அவர்களைச் செய்ய வைப்பது எப்படி? என்று திருமணமாகப் போகும் பெண்களுக்குச் சொல்லித் தருகிறோம்.
குடும்பங்களில் பெரியவர்களை இப்போது யாரும் மதிப்பது கிடையாது. பெரியவர்கள் சேர்த்து வைத்த சொத்துகள் வேண்டும். பெரியவர்கள் வேண்டாம், அவர்கள் ஒரு சுமை என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். நாளைக்கு நமக்கு வயதாகும்போது இதுபோல, நமது பிள்ளைகளும் நம்மைச் சுமையாகத்தானே நினைப்பார்கள் என்று அவர்கள் யோசிப்பது கிடையாது.
இப்போது மகனும் பெரியவர்களை மதிப்பதில்லை. மருமகளும் மதிப்பதில்லை. பேரன், பேத்திகளும் மதிப்பதில்லை. பெரியவர்கள் பேசுவதைக் கேட்க வீட்டில் ஆள் இல்லை. பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி பாசம் இல்லை. ஆனால் பெரியவர்களும் வீட்டில் உள்ளவர்களே. வீட்டில் எந்த முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும் பெரியவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய அனுபவங்களைச் சொல்வார்கள். இளையதலைமுறையினருக்குப் பயன்படும் என்று சொல்லித்
தருகிறோம்.
கணவனும் மனைவிக்கும் பிரச்னை பெரும்பாலும் ஈகோவால்தான் வருகிறது. "நான் சொல்வதுதான் சரி' என்று கணவனும், "நான் சொல்வதே சரி' என்று மனைவியும் நினைப்பதால்தான் பெரும்பாலான வீடுகளில் பிரச்னை வருகிறது. பிரச்னை முற்றிப் போகிறது. சில குடும்பங்களில் மணவிலக்குப் பெறும் நிலைக்குப் போய்விடுகிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது என்று வாழ்ந்தால் பிரச்னையில்லை. குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது? என்பதிலிருந்து, பிள்ளைகளை எந்தப் படிப்பு படிக்க வைப்பது என்பது வரை கருத்து மாறுபாடுகள் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
எனக்குத் தெரிந்து ஒரு வீட்டில் அப்பா என்ஜினியர். அம்மா டாக்டர். பையனை டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று அம்மாவும், என்ஜினியருக்குப் படிக்க வைக்க வேண்டும் என்று அப்பாவும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
கடைசியில் பையனை நிறையப் பணம் செலவு செய்து, என்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்தார்கள். பையனுக்கோ அந்தப் படிப்பில் கொஞ்சம் கூட ஆர்வமில்லை. இரண்டு வருடங்களாக நிறையப் பாடங்களில் தோல்வி. அப்புறம் அந்தப் பையனை ஆர்ட்ஸ் காலேஜில் சேர்த்தார்கள். அவனுக்கு இரண்டு ஆண்டுகள் வீணாகப் போனது. இதற்கு முதலிலேயே அவனிடம் என்ன படிக்க விருப்பம்? என்று கேட்டு இருக்கலாம்.
இப்போதும் சரி, வருங்காலத்திலும் சரி செலவுகள் அதிகமாகிக் கொண்டேதான் போகும். அந்த அளவுக்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டும். குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும்போதுதான் சேமிக்க முடியும். பெரியவர்களானால் கல்லூரி படிப்பு, திருமணம் என்று எல்லாவற்றுக்கும் நிறைய செலவாகும். எனவே ஆரம்பத்திலேயே வரவுக்குத் தக்கவிதத்தில் செலவு செய்ய வேண்டும் என்று வகுப்புகளில் சொல்லித் தருகிறோம். தேவையில்லாத பொருட்களை வாங்கக் கூடாது. அடுத்த வீட்டில் வாங்கினார்கள் என்பதற்காக நாமும் வாங்கக் கூடாது.
படித்த பெண்ணாக இருந்தால் வேலைக்குப் போகலாம். அப்படியில்லை என்றால் அரசே பல தொழில்களைப் பெண்களுக்குக் கற்றுத் தருகிறது.
"குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிறுவனம்' என்ற அரசு நிறுவனம் 75 வகையான தொழில்கள் செய்யப் பயிற்சிகளைத் தருகிறது. தொழில் தொடங்க வழிகாட்டுகிறது. வங்கிக் கடன் பற்றிய தகவல்களையும் சொல்கிறது. பெண்கள் இப்படிப்பட்ட நிறுவனங்களை அணுகினால் வருமானம் கிடைக்கக் கூடிய தொழில்களைத் தேர்ந்து எடுத்து அதில் ஈடுபட முடியும் என்றும் சொல்லித் தருகிறோம்.
படித்துவிட்டு வரும் இளம் பெண்களுக்கு இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லித் தர இப்போது ஆட்கள் இல்லை. அதை நாங்கள் செய்கிறோம்'' என்கிறார் பெருமையாக.

- ந.ஜீவா(தினமணி)




கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Mகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Uகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Tகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Hகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Uகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Mகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Oகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Hகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Aகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Mகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Eகணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 13, 2012 3:14 pm

உங்க வீட்டுல நீங்க எப்புடி...?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 3:23 pm

அவரு பேச்சலராம் - அதான் எங்களுக்கு வெக்கிறாரு ஆப்பு.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 13, 2012 3:26 pm

யினியவன் wrote:அவரு பேச்சலராம் - அதான் எங்களுக்கு வெக்கிறாரு ஆப்பு.

அப்போ நீங்க சொல்லுங்க உங்க வீட்டுல என்ன வேலையெல்லாம் செய்றிங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 3:31 pm

ஜாஹீதாபானு wrote:அப்போ நீங்க சொல்லுங்க உங்க வீட்டுல என்ன வேலையெல்லாம் செய்றிங்க
என்னை நானே கஷ்டப்பட்டு எழுப்பி, வேண்டா வெறுப்பா பல்லு தேச்சு அப்புறம் குளிச்சு , அதுக்கு முன்னாடி தர்ற கழனித் தண்ணிய சாரி காப்பிய குடிச்சு, தேமேன்னு ஏங்கி கெடக்குற பேப்பர படிச்சு அப்புறம் அவக மனசு கோணக் கூடாதுன்னு தர்றத விழுங்கிட்டு, வண்டிக்கு வலிக்காம அலுவலகத்துக்கு கூட்டிட்டு போவேன்.

அப்புறம் தெரியுமே உங்களுக்கு - இங்கதான் பாய போட்டு படுத்து கெடப்பேன்.

போதுமா பானு?




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 13, 2012 4:07 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்போ நீங்க சொல்லுங்க உங்க வீட்டுல என்ன வேலையெல்லாம் செய்றிங்க
என்னை நானே கஷ்டப்பட்டு எழுப்பி, வேண்டா வெறுப்பா பல்லு தேச்சு அப்புறம் குளிச்சு , அதுக்கு முன்னாடி தர்ற கழனித் தண்ணிய சாரி காப்பிய குடிச்சு, தேமேன்னு ஏங்கி கெடக்குற பேப்பர படிச்சு அப்புறம் அவக மனசு கோணக் கூடாதுன்னு தர்றத விழுங்கிட்டு, வண்டிக்கு வலிக்காம அலுவலகத்துக்கு கூட்டிட்டு போவேன்.

அப்புறம் தெரியுமே உங்களுக்கு - இங்கதான் பாய போட்டு படுத்து கெடப்பேன்.

போதுமா பானு?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 13, 2012 4:34 pm

நல்ல வைகுரைங்கய்யா ஆப்பு .. சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 13, 2012 4:37 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்போ நீங்க சொல்லுங்க உங்க வீட்டுல என்ன வேலையெல்லாம் செய்றிங்க
என்னை நானே கஷ்டப்பட்டு எழுப்பி, வேண்டா வெறுப்பா பல்லு தேச்சு அப்புறம் குளிச்சு , அதுக்கு முன்னாடி தர்ற கழனித் தண்ணிய சாரி காப்பிய குடிச்சு, தேமேன்னு ஏங்கி கெடக்குற பேப்பர படிச்சு அப்புறம் அவக மனசு கோணக் கூடாதுன்னு தர்றத விழுங்கிட்டு, வண்டிக்கு வலிக்காம அலுவலகத்துக்கு கூட்டிட்டு போவேன்.

அப்புறம் தெரியுமே உங்களுக்கு - இங்கதான் பாய போட்டு படுத்து கெடப்பேன்.

போதுமா பானு?

பாவம் நீங்க இவ்ளோ கஷ்டப் படுறிங்களே அண்ணியை மாத்திருவோமா...... சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 13, 2012 4:38 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்போ நீங்க சொல்லுங்க உங்க வீட்டுல என்ன வேலையெல்லாம் செய்றிங்க
என்னை நானே கஷ்டப்பட்டு எழுப்பி, வேண்டா வெறுப்பா பல்லு தேச்சு அப்புறம் குளிச்சு , அதுக்கு முன்னாடி தர்ற கழனித் தண்ணிய சாரி காப்பிய குடிச்சு, தேமேன்னு ஏங்கி கெடக்குற பேப்பர படிச்சு அப்புறம் அவக மனசு கோணக் கூடாதுன்னு தர்றத விழுங்கிட்டு, வண்டிக்கு வலிக்காம அலுவலகத்துக்கு கூட்டிட்டு போவேன்.

அப்புறம் தெரியுமே உங்களுக்கு - இங்கதான் பாய போட்டு படுத்து கெடப்பேன்.

போதுமா பானு?

பாவம் நீங்க இவ்ளோ கஷ்டப் படுறிங்களே அண்ணியை மாத்திருவோமா...... சோகம்

எங்க எவ்ளோவோ சொல்லியாச்சு அம்மா ... கேட்க மாற்றாரு சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 9:29 pm

Ahanya wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்போ நீங்க சொல்லுங்க உங்க வீட்டுல என்ன வேலையெல்லாம் செய்றிங்க
என்னை நானே கஷ்டப்பட்டு எழுப்பி, வேண்டா வெறுப்பா பல்லு தேச்சு அப்புறம் குளிச்சு , அதுக்கு முன்னாடி தர்ற கழனித் தண்ணிய சாரி காப்பிய குடிச்சு, தேமேன்னு ஏங்கி கெடக்குற பேப்பர படிச்சு அப்புறம் அவக மனசு கோணக் கூடாதுன்னு தர்றத விழுங்கிட்டு, வண்டிக்கு வலிக்காம அலுவலகத்துக்கு கூட்டிட்டு போவேன்.

அப்புறம் தெரியுமே உங்களுக்கு - இங்கதான் பாய போட்டு படுத்து கெடப்பேன்.

போதுமா பானு?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ச உண்மைய சொன்னா இந்த உலகம் சிரிக்குதுப்பா!!!




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக