புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்! I_vote_lcapதிருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்! I_voting_barதிருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
திருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்! I_vote_lcapதிருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்! I_voting_barதிருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்! I_vote_lcapதிருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்! I_voting_barதிருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 10, 2012 3:02 pm

உலகமொழிகளில் பக்திமொழி என்று பாராட்டத்தக்க பாடல்கள் அமைந்த மொழி தமிழே என அறிஞர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். அருளிச் செயல்களில் அமைந்துள்ள தமிழ்த்திறம் முதன்மைக் காரணமாக அமைந்தது. இறைவனே தமிழ்ப் பாடலைக் கேட்டு இரங்கி அன்பர் வழிபாட்டினை ஏற்றருள் புரிகிறான் என்ற கருத்தினைத் திருமுறைப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. திருமுறையாசிரியர்கள் இறையருள் பெற்றவர்கள் தமிழின் செம்மை நலமும், இசைப் பண்புகளும் உணர்ந்து தெளிந்தவர்கள். அதனால்தான் அருளாளர்கள் பலரும் தமிழை அடைகொடுத்துப் போற்றி் பாடியுள்ளனர். அத்திருமுறைகளில் செந்தமிழ் முழக்கம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

திருஞானசம்பந்தரின் செந்தமிழ்:
திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய மூவருள்ளும் முதன்மையானவர். மறையவர் மரபில் தோன்றி முதல் மூன்று திருமுறைகள் பாடிய ஞானசம்பந்தர் தம்மைத் தமிழ் ஞானசம்பந்தர் என்று மிகுந்த பெருமிதத்துடன் கூறுகிறார்.
`ஞானத்துயர் சம்பந்தன்
நலங்கொள் தமிழ்' (14)
`எந்தையடி வந்தணுரு
சந்தமொடு செந்தமிழ்' (326)
`பாரின்மலி கின்ற புகழ்நின்ற
தமிழ்ஞான சம்பந்தன்
உரைசெய் சீரின்மலி செந்தமிழ்கள்' (333)
`முத்தமிழ் விரகனே
நானுரைத்த செந்தமிழ் பத்துமே' (373)

பல இடங்களில் செந்தமிழ்ச் சிறப்புகளை விளக்கியுள்ளார்.

அப்பரின் செந்தமிழ்:
தேவார மூவரில் இரண்டாமவர் திருநாவுக்கரசர் நான்காம், ஐந்தாம் மற்றம் ஆறாம் திருமுறைகளைப் பாடியருளியவர் தமிழில் பரமன் புகழைப் பாடுதலே தன் பணியாகப் பொறித்துள்ளார். உருக்கம் மிக்க ஒண்தமிழ்ப் பாடல்கள் அப்பர் அருளிச் செயல்கள் திருக்கடைக்காப்புப் பாடுதல் இவர் வழக்கமன்று. நமச்சிவாயத் திருப்பதிகத்திற்கு மட்டும் இவர் பயன் கூறியிருப்பினும் தன் பெயரைச் சுட்டவில்லை. ஒரு பாடலில் செந்தமிழ் (91) என்ற சொல்லாட்சி காணப்படுகிறது.

`தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்' (1)
`முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்' (23)
`ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' (23)

எனவரும் திருத்தொண்டகப் படற்பகுதிகள் புலப்படுத்துகின்றன. ஆரூராகிய சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் காணப்பெறும் தமிழ் பற்றிய தனிச்சிறப்பினைக் காணலாம்.

சுந்தரர் செந்தமிழ்:
திருஞானசம்பந்தருக்கு அடுத்த நிலையில் மிகுதியான பண்களைப் பயின்றவர் சுந்தரர் தமிழிசையின் மாண்பினை உணர்ந்தவர்.
`பண்ணார் இன் தமிழாய்ப் பரவிய பரஞ்சுடரே' (24)
`பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்' (29)

என்ற சிவனடி போற்றுகிறார் சுந்தரர்.
`நாளும் இன்னிசையில் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை' (62)

இப்பாடலில் `தமிழ்' என்ற சொல் வெறும் மொழியை மட்டும் சுட்டாது. தமிழ்க்கலை, நெறி, பண்பாடு அனைத்தையும் சுட்டுவதாய் அமைந்துள்ளது.
இப்பகுதியில் நற்றமிழ், தண்தமிழ், அருந்தமிழ், ஒண்தமிழ், செந்தமிழ், வண்தமிழ், இன்தமிழ் முதலிய அமுதச் சொற்களினால் அன்னைத் தமிழின் அருமை பெருமைகளைச் சுந்தரர் கூறுகிறார்.

திருவாசகத் தமிழ்:
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் எட்டாம் திருமுறைகளில் ஒன்று சங்கம் வைத்துத் தமிழாராய்ந்த மதுரை மாநகரைத் தலைநகரமாகக் கொண்ட வழியின் நட்பினை.
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானை (8-10)
உளங்குளிரச் செய்யும் உயரியல்பால் தண்தமிழ் என்றும் நம் மொழியைத் திருமுறையாசிரியர்கள் உணர்ந்து பாராட்டினார்கள்.
`உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ'

என்ற பாடலில் மணிவாசகப்பெருமான் சங்கத் தமிழின் மாண்பினை விளக்கியுள்ளார்.

திருவிசைப்பாவில் செந்தமிழ்:
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அருளிய பக்தி நலங்கனிந்த பதிகங்களைத் தமிழின் மேல்வரம்பாகக் கொண்ட சுந்தரரைப் போலவே திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவராகிய சேந்தனாரும் கொண்டுள்ளார். பாசுரங்களையும் பழுத்த செந்தமிழ் மலர் என்று தாம் பாடிய திருவீழிமிழலைத் திருவிசைப்பாவில் இவர் போற்றியுள்ளார்.
`பூந்துருத்திக் காடன் தமிழ்மாலை பத்தும்' (4-2)
`ஆரா இன்சொல் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை' (5-1)
`அமுதவாலி சொன்ன தமிழ்மாலைப்
பால்நேர் பாடல்பத்தும்' (7-3)

தமிழைப் போற்றும் பாங்கில் தேவார மரபினைத் திருவிசைப்பா அடியொற்றிச் சென்றுள்ள உண்மையினை மேற்கோள் பகுதிகள் உறுதிப்படுத்துகின்றன.

திருமந்திரத்தில் தமிழ்:
திருமூலர் தமிழ், வடமொழி உள்ளிட்ட பதினெட்டு மொழிகளில் புலமை படைத்தவர். இம் மொழிகள் யாவும் நாவல நாடாகிய இந்தியாவிலும், ஈழம் தென்கிழக்காசியத் தீவுகள், சீனம் முதலிய நாடுகளிலும் பேசப்படுகின்றன.
மொழிப்பொதுமை பேணிய திருமூலர் இம்மொழிகளில் சிறப்பாக வியந்து கூறப்பெறும் தமிழ் வடமொழி ஆகிய இருபெரும் மொழிகளையும் உமையம்மைக்கு ஈசனே புகட்டியதாகத் திருமூலர் சுட்டியுள்ளார்.
`ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே' (65)
`தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே' (66)

மெய்ப்பொருள் நூலினைத் தமிழ்ச் சாத்திரம் (87) என்று திருமூலர் குறித்தனர். திருமந்திரம் முதல் தமிழ் ஆகமம் என்பதைச் சேக்கிழார் சுட்டினார்.
இறைவனைத் தமிழால் வழிபடுவதைப் பெரிதும் விரும்பியுள்ளார் திருமூலர். எனவே,
`செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு' (1089)
`தமிழ் மண்டலம் ஐந்தும் தழுவிய ஞானம்' (1646)

எனவே `பஞ்சத்திராவிடம்' என்ற கொள்கை ஒரு வகையில் பொருத்தம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. திருமூலரின் மொழிக்கொள்கை பரந்த பார்வை கொண்டது என்பது தமிழ்மொழியினைப் பெரிதும் போற்றியதால் தெரிகின்றது.
தொல்காப்பியர் காலம் முதலே நல்ல தமிழைச் செந்தமிழ் என்று சொல்லும் மரபு காணப்படுகிறது. `செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்' என்ற சொல்லதிகார நூற்பா எண்ணத்தக்கது. தொல்காப்பியப் பாயிரத்தில் `செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு, முந்து நூல் கண்டு' என்று பனம்பாரனார் செவ்விய தமிழின் சிறப்பினைக் குறித்தனர்.

செந்தமிழ் பிரபந்தமாலை எனப் போற்றப்படும் பதினோராம் திருமுறை செந்தமிழ் பற்றிச் சிறந்த கருத்துகளைக் கொண்டுள்ளது. தமிழில் முதன் முதலில் பதிகம் பாடிய சிறப்புக்குரியவர் காரைக்காலம்மையார். இவர் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில்
`செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்' (11)

தொல்காப்பியர் காலம் முதலே நல்ல தமிழைச் செந்தமிழ் என்று சொல்லும் மரபு காணப்படுகிறது. `செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்' எனற் சொல்லதிகார நூற்பா எண்ணத்தக்கது. தொல்காப்பியப் பாயிரத்தில் `செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு, முந்து நூல் கண்டு' என்று பனம்பாரனார் செவ்விய தமிழின் சிறப்பினைக் குறித்தனர்.
சுந்தரர் செந்தமிழ்த் திறத்தையும் நம்பியாண்டார் நம்பி உணர்ந்து மகிழ்ந்தவர். சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடிய செந்தமிழ்ப் பாசுரங்களில் திளைத்து இன்புற்ற சுந்தரர் அருளிய தண்டமிழ்ப் பதிகங்களின் மாண்பினைச் செந்தமிழ் பாடி (33-32) என்ற தொடரில் குறித்துள்ளார்.

பெரியபுராணத்தில் தமிழ்:
நம்பியாண்டார் நம்பியை் போலவே சேக்கிழார் திருஞானசம்பந்தரைத் தமிழாகரர் என்றும் போற்றியுள்ளார்.
`அருந்தமிழாகரர் சரிதை அடியேனுக்கு அவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி துதிசெய்தேன்' (1256)

`ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழாம்' (1-5) - என்ற சேக்கிழார் பாடுகின்றார். மேலும் பல பாடல்களில் அருந்தமிழ், செந்தமிழ், தீந்தமிழ், இன்தமிழ், நற்றதமிழ், வண்தமிழ் என்றெல்லாம் பாடிப் பரப்புகிறார். குலோத்தங்கச் சோழனின் தலைமை அமைச்சராக விளங்கிய அரசியல் பணிபுரிந்தவரும், பின்னர் அரசியலைத் துறந்து ஆன்மிக நெறியில் ஈடுபாடு கொண்டு தொண்டர் வரலாற்றைப் பக்தி நனிசொட்டச் சொட்டப் பாடித் `தொண்டர்சீர் பரவுவார்' எனப் போற்றப்பெற்ற சேக்கிழார் செந்தமிழ்ச் சீர்பரவுவார் என்று பாராட்டைப் பெற்றவர். திருமுறையாசிரியர்களின் இறைநெறி சார்ந்த செந்தமிழ்ப் பற்றும் பிறமொழிகளை ஒப்பமதிக்கும் பண்பும் புலனாகிறது.

உலகநோக்கே தமிழ்நோக்கு, தமிழின் தலையாய இலக்கியங்கள் பலவும் திருமுறையின் உலகப் பார்வையை மேலும் சிறப்பித்துக் கூறுகின்றன.

தமிழ்மொழியே சிறப்பானது என்பது திருமுறையாளர்கள் கருத்தாகம். தாய்மொழியைக் காக்கும் பெரும் பொறுப்பினை ஏற்றுத் திருமுறையில் செந்தமிழ் முழக்கம் இருப்பதை நன்கு உணரலாம்.
(நன்றி- தேவாரம் .org )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக