புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Poll_c10நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Poll_m10நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Poll_c10நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Poll_m10நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Poll_c10நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Poll_m10நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 08, 2012 5:44 pm

நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் 530507_500567333309436_324884945_n


நடிப்பு: விஷ்ணு, சுனைனா, சரண்யா, ராம், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகி தேவராஜ்
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியன்
இசை: என் ஆர் ரகுநந்தன்
மக்கள் தொடர்பு: நிகில்
தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின்
எழுத்து - இயக்கம்: சீனு ராமசாமி

அரசியல் ‌ரீதியாக சவுண்டாகவும் அதேநேரம் கலாபூர்வமாகவும் தமிழில் ஒரு திரைப்படத்தை பார்ப்பது அ‌ரிது. அப்படிப்பட்ட அ‌ரிதான அபூர்வமான படைப்பாக வெளிவந்திருக்கிறது சீனு ராமசாமியின் நீர்ப்பறவை.

பெற்றோர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட அனாதையாக படகில் அழுது கொண்டிருக்கும் சிறுவனை தமிழக மீனவர் ஒருவர் எடுத்து தன் மகன்போல வளர்க்கிறார். வளர்ந்து பெ‌ரியவனான அவனை அதே கடலில் இருந்து குண்டுகள் துளைத்து இறந்த நிலையில் எடுத்து வரவேண்டியதாகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் இனிக்க இனிக்க அவனது வாழ்க்கையைச் சொல்லி வலிக்க வலிக்க படம் முடிகிறது.

இறுக்கமான முகத்துடன் எப்போதும் ஜெபித்தபடி கடலை வெறித்துக் கொண்டிருக்கும் நந்திதாஸை பார்க்கும் போதே இது வேறு மாதி‌ரியான படம் என்பது பு‌ரிந்துவிடுகிறது. அவரது வீட்டிலிருந்து 25 வருடங்களுக்கு முன் காணாமல் போனதாக சொல்லப்பட்ட நந்திதாதாஸின் கணவ‌ரின் எலும்புக்கூ‌ட்டை தோண்டி எடுக்கிறார்கள். கணவனுக்காக 25 வருடங்களாக கடற்கரையில் காத்திருக்கும் நந்திதாதாஸ் தனது கணவர் இறந்ததை ஏன் மறைத்து வீட்டிலேயே அவரது உடலை புதைக்க வேண்டும்?

இந்த கேள்விக்குப் பதிலாக வருகிறது அருளப்பசாமியின் கதை. எந்நேரமும் கிளாஸும், சாராயமுமாக தி‌ரியும் அருளப்பசாமியை (விஷ்ணு) அந்த ஊர் கிறிஸ்தவ மடத்தில் வளர்ந்து வரும் எஸ்த‌ரின் (சுனைனா) காதல் நல்லவனாக மாற்றுகிறது. குடியைவிட்டு குலத்தொழிலான மீன் பிடித்தலை செய்யலாம் என்றால் அவனது பிறப்பு குறுக்கே வந்து தடுக்கிறது. மீனவனாக இருப்பவர்கள் மட்டும்தான் கடலில் இறங்கி மீன் பிடிக்க அனுமதியுண்டு. அருளப்பசாமி கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டவன். அவன் குலம் எது என்ற கேள்வி மீன் பிடிக்கும் அவனது முயற்சிக்கு குறுக்காக வந்து நிற்கிறது. அதனை கடந்து தனது கனவை அவன் எப்படி சாதித்தான், காதலி எஸ்தருடனான அவனது வாழ்க்கை என்னானது என்பதை மீனவ வாழ்வோடு, அவர்கள் கனவோடு பின்னிப் பிணைந்து சொல்கிறது படம்.

பொழுதுவிடிந்தால் குடித்துவிட்டு கல்லறை‌த் தோட்டத்தில் விழுந்து கிடக்கும் மகன், பிள்ளைக்கு கை நடுங்குது என்று போதை தெ‌ளிந்ததும் குடிக்க பணம் தந்து அனுப்பும் பாசக்கார தாய், இந்த இரண்டு பேருக்கும் நடுவில் தவிக்கும் தகப்பன் என்று உத்தேச மீனவ குடும்பத்தை ச‌ரியாக காட்டியிருக்கிறார் இயக்குனர். பாசக்கார தாயாக சரண்யா வெளுத்து வாங்கியிருக்கிறார். டயலாக் டெலிவ‌ரியில் சிறு பிசகில்லை. அதேபோல் விஷ்ணுவின் தந்தையாக வருகிறவர். குடியிலிருந்து மகனை மீட்ட மருத்துவ‌ரின் முன்னால் பெ‌ரிய மீனை காணிக்கையாக வைத்து கண்கலங்கி நிற்குமிடத்தில் வசனமே இல்லாமல் நம்மை வசப்படுத்துகிறார்.

வெயிட்டான கதாபாத்திரம் என்பதால் அதிகம் நடிக்காமலே விஷ்ணுவின் கேரக்டர் அழுத்தமாக மனதில் உட்கார்ந்து விடுகிறது. சுனைனாவுக்கு லைஃப் டைம் கேரக்டர். மேக்கப் இல்லாமல் கடற்கரையோர எஸ்தராகவே மாறியிருக்கிறார். வயதான எஸ்தருக்கு நந்திதாதாஸ் சாலப் பொருத்தம்.

இவ்வளவு விஸ்தீரணமாக மீனவ வாழ்க்கை தமிழில் சொல்லப்பட்டது இல்லை எனலாம். அதற்கு பக்க துணையாக இருக்கிறது நடிகர்கள் தேர்வு. விஷ்ணுவின் நண்பனாக வரும் பிளாக் பாண்டி, மகன் கள்ளச் சாராயம் குடித்தது கண்டு சாராயம் விற்பதையே நிறுத்தும் வடிவுக்கரசி, எஸ்தருக்கு கேட்கும்படி, இது அருளப்பசாமியோட படகு, சீக்கிரம் முடிங்க என்று அவளிடம் பேசாமலே அவள் மனதை குளிரச் செய்யும் பாசக்கார பாய் சமுத்திரக்கனி, கண்டிப்பும் கருணையுமாக உருகும் பெனிட்டா சிஸ்டர், பாதி‌ரியாக வரும் அழகம் பெருமாள் என்று ஒவ்வொரு கேரக்டரும் தனித்தன்மையுடன் வடிக்கப்பட்டிருக்கிறது.

காஸ்டிங்கை போலவே காஸ்ட்யூமும் படு யதார்த்தம். சுப்பிரமணியெமின் கேமரா கதையோடு இயைந்து பயணிக்கிறது. கதையோடு சேர்ந்து ரசிக்க வைக்கின்றன பாடல்கள். அதிலும் பற பற, ரத்தக்கண்ணீர் பாடல்கள் டாப். பின்னணி இசை பரவாயில்லை.

யதார்த்தமான வசனங்கள். ஜெயமோகனும், சீனு ராமசாமியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். அரசியல் பேச வசதியுள்ள கதை என்றாலும் அடக்கியே வாசித்திருக்கிறார் இயக்குனர். கடைசிக் காட்சியில், என் புருஷன் கொல்லப்பட்டதை சொல்லியிருந்தா மட்டும் என்ன செய்திருப்பீங்க? என்னைப் போல ஆயிரக்கணக்கான மீனவப் பெண்களின் புருஷன்கள் செத்தார்களே அதுக்கு என்ன செய்தீங்க என்று நந்திதாதாஸ் நீதிபதியை பார்த்து கேட்பது சொரணையற்ற நமது அரசுகளுக்கு விடப்பட்ட பொளோர் அறை.

நீர்ப்பறவை.... உயிர்ப்பறவை.

--
வெப் துனியா

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 08, 2012 5:51 pm

விஷ்ணு மற்றும் சுனேனாவுக்கு ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி...



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 08, 2012 5:53 pm

ஆம்...ஆம்...ஆம்...இந்த நீர்ப்பறவை நிறைய விருதுகளை அள்ளப்போகிறது...
கனத்த மனதுடன் திரியும் பாத்திரங்கள் நம்மையும் கனக்கச் செய்துவிடுகிறது ...
வசனங்களில் சூரிக் கத்தியைச் செருகி வைத்திருக்கிறார்கள் ஜெயமோகனும் சீனு ராமசாமியும்...
இயக்குனரின் மெனக்கெடல் படம் நெடுக ஆழமாகவும் அகலமாகவும் வேர்களை விசிறியடித்து வியாபித்திருக்கிறது...
எனக்கு மிகவும் பிடித்தது அந்த ஒளிப்பதிவு நேர்த்தியும் அது வித்தைக் காட்டியிருக்கும் விதமும்...குறிப்பாக டாப் ஆங்கிளில் படமாக்கியதில் டாப்பில் இருக்கிறார் பாலசுப்ரமணியெம்....
முடித்தாள் ஒவ்வொருவரும் தியேட்டருக்கு மட்டும் சென்று பாருங்கள்...



நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் 224747944

நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Rநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Aநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Emptyநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Rநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 6:15 pm

படத்தை தீயேட்டரில் போய் பாருங்க..பீளிஸ்..
நானும் இப்படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன்..
நன்றிகள் பல....



நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Paard105xzநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Paard105xzநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Paard105xzநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Dec 10, 2012 11:12 pm

அருமையான படம்.
அனைவரும் பார்க்க வேண்டிய படம்!!!
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை சிரி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக