ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

+11
அசுரன்
DERAR BABU
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
Muthumohamed
ஜாஹீதாபானு
றினா
அச்சலா
15 posters

Page 9 of 37 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 23 ... 37  Next

Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Tue Dec 11, 2012 11:20 pm

மானிய விலை சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானியவிலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி இன்று இந்த சிலிண்டர்களிலிருந்து எண்ணிக்கையை ஒரு வருடத்தில் 6-லிருந்து 9 ஆக உயர்த்துவதற்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி சிலிண்டரின் எண்ணிக்கையை உயர்த்துவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று கேட்டு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Tue Dec 11, 2012 11:21 pm

நைஜீரியாவில் துப்பாக்கி சண்டை: 15 பேர் பலி

நைஜீரியாவில் செயல்பட்டு வரும் மதவாத தீவிரவாதிகள் மைதுகுரி பகுதியில் உள்ள பொடிஸ்கும் என்னுமிடத்தில் வங்கி மற்றும் காவல் நிலையங்களின் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது அரசுப்படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் காவலர் ஒருவர் உள்பட போகோ ஹராம் தீவிரவாத இயக்கத்தினர் 14 பேர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இப்பகுதியில் ஷரியா சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று போகோ ஹராம் அமைப்பினர் அரசுக்கு எதிராக கொரில்லா தாக்குதலை நடத்திவருகின்றனர். அல்கொய்தா அமைபுடன் தொடர்பு வைத்துள்ள இந்த அமைப்பினரின் தாக்குதலுகு இந்த வருடம் மட்டும் பொதுமக்கள் 770 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 11:22 pm

அவங்களால நமக்கும் சேர்த்து ஆப்பா?...அட போங்கப்பா... சோகம்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 224747944

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Rசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Emptyசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Rசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Tue Dec 11, 2012 11:22 pm

நாளை முதல் 25-ம் தேதி வரை, மதுவிலக்கை வலியுறுத்தி நடை பயணம்: வைகோ பேட்டி

நாளை முதல் 25-ம் தேதி வரை, உவரி முதல் மதுரை வரை மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ நடைப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதால், வன்முறை, கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. உவரியில் பாதிரியார் அந்தோணிசூசை நாதன் 1921-ல், மதுவிலக்கு சபையை ஏற்படுத்தி, மது இல்லாத கிராமமாக மாற்றினார்; எனவே, அங்கிருந்து பயணத்தை துவக்குகிறோம் என்று குறிப்பிட்டவர், 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 1,200 பேர் இந்த நடைபயணத்தில் பங்கேற்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு நாட்கள், விருதுநகர் மாவட்டத்தில் ஆறு நாட்கள், மதுரை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடந்து, டிசம்பர் 25-ல் மதுரையில் நிறைவு விழா நடைபெறும் என்றார். இந்த நடை பயணத்தை ஒரு சிலுவைப் போராக கருதுகிறோம் என்றார்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Tue Dec 11, 2012 11:23 pm

சிரியா உள்நாட்டு போர்: அகதிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் புரட்சியாளர்கள் படைக்கும் இடையே தீவிர சண்டை நடந்து வருகிறது. தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களை கைப்பற்றுவதற்காக இரு தரப்பும் கடுமையான தாக்குதலை நடத்திவருகின்றன. இதில் அப்பாவி மக்கள் தங்கள் குழந்தைகள், உறவினர்கள் மற்றும் உடைமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்கள் உயிருக்கு பயந்து பக்கத்து நாடுகளான லெபனன், ஜோர்டன் மற்றும் துருக்கி நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

சமீப காலமாக அதிபர் தரப்பு படையினர் விமானத்தின் மூலம் புரட்சியாளர்களின் மறைவிடங்களில் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து உள்ளது. அதற்கு பதிலடியாக புரட்சியாளர்கள் திடீர் தாக்குதல் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் என மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர்.

இதில் பக்கத்து நாடுகளில் வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை இப்போது 5 லட்சத்து 10000 பேராக அதிகரித்துள்ளது. உள்நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இப்பகுதியில் குளிர்காலம் தொடங்கி விட்டதால் அகதிகளின் நிலைமை மிக கவலைக்கிடமாக உள்ளது என்றும் ஐ.நா. மனித உரிமை அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 11:24 pm

வைகோவின் இந்த சிலுவைப் போர் சிறப்பாக வெற்றி பெற வேண்டும்...
அவரும் சிகரம் தொட வேண்டும்...வாழ்த்துகள்...


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 224747944

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Rசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Emptyசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Rசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Tue Dec 11, 2012 11:25 pm

மானிய விலை சமையல் சிலிண்டர் 6-லிருந்து 9 ஆக உயர்த்தப்படும்: வீரப்ப மொய்லி அறிவிப்பு
சமீபத்தில் மத்திய அரசு வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானியவிலையில் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதற்கு மேல் வாங்குபவர்கள் கூடுதல் தொகை கொடுத்து வாங்க வேண்டும் என்றும் அது தெரிவித்து இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி இதுகுறித்து கூறியதாவது:-

வருடத்திற்கு 6 மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். ஒரு வருடத்தில் அதை 6-லிருந்து 9 ஆக உயர்த்துவதற்கு வழிவகை செய்யப்படும். இதுகுறித்து நிதி அமைச்சகத்துடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். இப்பிரச்சினை குறித்து விரைவில் கேபினட் மந்திரி சபை கூடி முடிவெடுக்கும். அதன் பின்னரே அது நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Tue Dec 11, 2012 11:28 pm

நாளை 12.12.12 அதிசய நாள்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 32f8ffc8-6fb5-42fa-99a4-bd9747d5a9b8_S_secvpf

நாளை தேதி, மாதம், வருடம் எல்லாம் 12ம் எண்ணில் வருகிறது.

12-12-12 என்ற இந்த தேதியை அதிர்ஷ்ட நாளாக பலரும் கருதுகின்றனர். எனவே இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்தால் அது வெற்றியடையும் என்றும் நினைக்கின்றனர். வெளிநாட்டில் நாளை திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று இளைஞர்கள் நம்புகிறார்கள். எனவே பல நாடுகளிலும் நாளை ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

சிங்கப்பூர், ஹாங்ஹாங், தாய்லாந்து போன்ற நாடுகளில் நாளைய தினத்தில் திருமணம் செய்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஹாங்ஹாங்கில் மட்டுமே நாளை 696 பேர் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் முன் பதிவு செய்துள்ளனர். அதேபோல சிங்கப்பூரிலும் திருமணம் செய்ய விரும்பி 540 பேர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதுதவிர சீனா, ஐரோப்பிய நாடுகளிலும் நாளை திருமணம் செய்ய பலர் முடிவு செய்துள்ளனர்.

மேல்நாட்டின் இந்த கலாச்சாரம் இந்தியாவிலும் பரவி வருகிறது. அதிர்ஷ்ட நாள் என்று கருதப்படும் 12-12-12 அன்று இந்திய பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். இதற்காக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நிறைமாத கர்ப்பிணிகள் சிலர் மருத்துவர்களை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 11:30 pm

இந்த அதிசய நாள் மீண்டும் வர நூறு ஆண்டுகள் ஆகுமாமே?...இப்போதே பார்த்தாச்சு...
12 .12 .12 . சூப்பருங்க


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 224747944

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Rசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Emptyசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Rசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Tue Dec 11, 2012 11:32 pm

நாளை அதிசய நாள்: 12.12.12-ல் திருமணம் செய்ய வெளிநாட்டினர் ஆர்வம்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 17ed59a6-a582-48a7-a473-f7bac6507c75_S_secvpf

நாளை தேதி, மாதம், வருடம் எல்லாம் 12-ம் எண்ணில் வருகிறது. 12-12-12 என்ற இந்த தேதியை அதிர்ஷ்டநாளாக பலரும் கருதுகின்றனர். எனவே இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்தால் அது வெற்றியடையும் என்றும் கருதுகின்றனர்.

வெளிநாட்டில் நாளை திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று இளைஞர்கள் நம்புகிறார்கள். எனவே பல நாடுகளிலும் நாளை ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

சிங்கப்பூர், ஹாங்ஹாங், தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஹாங்ஹாங்கில் மட்டும் நாளை 696 பேர் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல சிங்கப்பூரிலும் திருமணம் செய்ய விரும்பி 540 பேர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதேபோல சீனா, ஐரோப்பிய நாடுகளிலும் நாளை திருமணம் செய்ய பலர் முடிவு செய்துள்ளனர்.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 9 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 37 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 23 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum