Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
+11
அசுரன்
DERAR BABU
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
Muthumohamed
ஜாஹீதாபானு
றினா
அச்சலா
15 posters
Page 7 of 37
Page 7 of 37 • 1 ... 6, 7, 8 ... 22 ... 37
சுட சுட செய்திகள்...அச்சலா
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 7.2 ரிக்டர் ஆக பதிவு
புவியியல் அமைப்பின் படி எரிமலை வெடிப்பும், நிலநடுக்கமும் அடிக்கடி ஏற்படும் 'நெருப்பு வளையம்' பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று இந்தோனேஷியா. இந்தோனேஷியாவின் சவும்லாகி நகரை மையமாக கொண்டு, பூமியின் அடியில் 155 கி.மீட்டர் ஆழத்தில் இன்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையொட்டி சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்பு ஏற்படவில்லை. சேதம் குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.
-மாலை மலர்
புவியியல் அமைப்பின் படி எரிமலை வெடிப்பும், நிலநடுக்கமும் அடிக்கடி ஏற்படும் 'நெருப்பு வளையம்' பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று இந்தோனேஷியா. இந்தோனேஷியாவின் சவும்லாகி நகரை மையமாக கொண்டு, பூமியின் அடியில் 155 கி.மீட்டர் ஆழத்தில் இன்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையொட்டி சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்பு ஏற்படவில்லை. சேதம் குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.
-மாலை மலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
சுற்றுச்சூழலை பாதிக்கும் மலைப்பாம்புகளை பிடிக்கும் போட்டி: அமெரிக்க புளோரிடா நிர்வாகம் அறிவிப்பு
அமெரிக்காவில் புளோரிடா மகாண காடுகளில் பர்மீய வகை மலைப்பாம்புகள் அதிகளவில் இருக்கின்றன. இவை அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை வேட்டையாடி சுற்றுச்சூழலை பெரிதளவில் பாதித்து வருகின்றன. இதன் எண்ணிக்கை குறைக்க புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதற்காக பர்மீயவகை மலைப்பாம்புகளை (பைத்தான்) பிடிக்க ஜனவரி மாதத்தில் ஒரு போட்டி ஒன்றை அது அறிவித்துள்ளது. இதில் அதிகம் பாம்புகளை கொல்லுபவர்களுக்கு 1500 டாலர் பரிசும், நீளமான பாம்பை பிடிப்பவருக்கு 1000 டாலர் பரிசும் அளிக்கப்படும் என்று அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது. மலைப்பாம்புகளை ரோட்டில் கொல்வது அனுமதிக்கப்படமாட்டாது என்று அது அறிவித்துள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் 25 டாலர் பதிவு கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
-மாலை மலர்
அமெரிக்காவில் புளோரிடா மகாண காடுகளில் பர்மீய வகை மலைப்பாம்புகள் அதிகளவில் இருக்கின்றன. இவை அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை வேட்டையாடி சுற்றுச்சூழலை பெரிதளவில் பாதித்து வருகின்றன. இதன் எண்ணிக்கை குறைக்க புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதற்காக பர்மீயவகை மலைப்பாம்புகளை (பைத்தான்) பிடிக்க ஜனவரி மாதத்தில் ஒரு போட்டி ஒன்றை அது அறிவித்துள்ளது. இதில் அதிகம் பாம்புகளை கொல்லுபவர்களுக்கு 1500 டாலர் பரிசும், நீளமான பாம்பை பிடிப்பவருக்கு 1000 டாலர் பரிசும் அளிக்கப்படும் என்று அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது. மலைப்பாம்புகளை ரோட்டில் கொல்வது அனுமதிக்கப்படமாட்டாது என்று அது அறிவித்துள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் 25 டாலர் பதிவு கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
-மாலை மலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
2014 பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காங்கிரசின் தலைமையை ஏற்பார்: காங்கிரஸ் கட்சி சூசக அறிவிப்பு
வரும் 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி சூசகமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறியதாவது:-
2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி அக்கட்சியின் எம்பிக்கள் முடிவு செய்வார்கள். 2014-ம் ஆண்டு தேர்தல் வரை பிரதமர் மன்மோகன் சிங் தலைமை பொறுப்பில் இருப்பார். இந்த ஆட்சி 2014-ம் ஆண்டு தொடர்ந்து நீடிக்கும். அதுவரை மன்மோகன் சிங் பிரதமராக இருப்பார்.
சோனியா காந்தியே கட்சியின் தலைவராக இருப்பார். கட்சியின் மூத்த தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஏற்க ராகுல் ஒத்துக்கொண்டுள்ளார். அவர் கட்சியின் தலைமையை ஏற்க வேண்டுகோள்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், அவர் அதை விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தகுதியும் பொருத்தமும் உள்ளவர் என்றும், அதையே கட்சியின் மூத்த மற்றும் இளைய தலைவர்கள் வரவேற்கின்றனர் என்று உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-மாலை மலர்
வரும் 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி சூசகமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறியதாவது:-
2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி அக்கட்சியின் எம்பிக்கள் முடிவு செய்வார்கள். 2014-ம் ஆண்டு தேர்தல் வரை பிரதமர் மன்மோகன் சிங் தலைமை பொறுப்பில் இருப்பார். இந்த ஆட்சி 2014-ம் ஆண்டு தொடர்ந்து நீடிக்கும். அதுவரை மன்மோகன் சிங் பிரதமராக இருப்பார்.
சோனியா காந்தியே கட்சியின் தலைவராக இருப்பார். கட்சியின் மூத்த தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஏற்க ராகுல் ஒத்துக்கொண்டுள்ளார். அவர் கட்சியின் தலைமையை ஏற்க வேண்டுகோள்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், அவர் அதை விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தகுதியும் பொருத்தமும் உள்ளவர் என்றும், அதையே கட்சியின் மூத்த மற்றும் இளைய தலைவர்கள் வரவேற்கின்றனர் என்று உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-மாலை மலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
மோடி ஆட்சியில் ரூ. 1 லட்சம் கோடி ஊழல்: சோனியா குற்றச்சாட்டு
குஜராத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று குஜராத் மாநிலம் சித்தாபூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மோடி அரசு குறித்து பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை பார்க்கிறபோது, அவரது அரசு மக்களை தவறான கொள்கைகளை பின்பற்ற செய்வது தெரிகிறது. குஜராத்தில் 1 லட்சம் கோடிக்குமேல் ஊழல் நடந்துள்ளது என்று, மத்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையை நாங்கள் பெற்று இருக்கிறோம்.
குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கையில், இங்கு 4.1/2 லட்சம் விவசாயிகள் மின்சார இணைப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பழங்குடியின மக்கள் கல்வியில் பிந்தங்கியே உள்ளனர். மக்கள் இங்கு கடுமையான சட்டதிட்டத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.
சரியான முன்னேற்றத்தை குஜராத்தில் திரும்பவும் கொண்டுவரவேண்டும். இதற்கு நாம் கடுமையாக உழைக்கவேண்டும். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மோடி அரசுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
குஜராத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று குஜராத் மாநிலம் சித்தாபூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மோடி அரசு குறித்து பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை பார்க்கிறபோது, அவரது அரசு மக்களை தவறான கொள்கைகளை பின்பற்ற செய்வது தெரிகிறது. குஜராத்தில் 1 லட்சம் கோடிக்குமேல் ஊழல் நடந்துள்ளது என்று, மத்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையை நாங்கள் பெற்று இருக்கிறோம்.
குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கையில், இங்கு 4.1/2 லட்சம் விவசாயிகள் மின்சார இணைப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பழங்குடியின மக்கள் கல்வியில் பிந்தங்கியே உள்ளனர். மக்கள் இங்கு கடுமையான சட்டதிட்டத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.
சரியான முன்னேற்றத்தை குஜராத்தில் திரும்பவும் கொண்டுவரவேண்டும். இதற்கு நாம் கடுமையாக உழைக்கவேண்டும். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மோடி அரசுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
இந்திய ராணுவத்தில் 66,000 பேர் பற்றாக்குறை: ஏ.கே. அந்தோணி தகவல்
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிக்கு எழுத்து மூலமாக பாதுகாப்பு மந்திரி ஏ.கே. அந்தோணி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
தரைப்படையில், 10 ஆயிரத்து 100 அலுவலர்களுக்கான பணியிடங்களும், அலுவலர் பதவிக்கு கீழான நிலையில் 32 ஆயிரத்து 431 பணியிடங்களும் காலியாக உள்ளன. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி கப்பல் படையில் ஆயிரத்து 996 அலுவர்களுக்கான பணியிடங்களும், அலுவலர்களக்கு கீழான நிலையில் 14 ஆயிரத்து 310 பணியிடங்களும் காலியாக உள்ளன.
விமானப்படையில் 962 அலுவலர்களுக்கான பணியிடங்களும், அலுவலர்களுக்கு கீழான நிலையில் 7 ஆயிரம் பணியிடங்களும் காலியாக உள்ளன. இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிப்பதற்காக, ஊடக பிரசாரங்களும், பேரணிகளும் நடத்தப்படுகின்றன.
ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் தேர்வு முறைகளில் உள்ள கண்டிப்பு, பணிச் சூழலில் உள்ள கிரமம், மற்ற பணிகளில் கிடைக்கும் வசதிகள் ஆகியவை இந்த ஆள் பற்றாக்குறைக்கான முக்கிய காரணிகளாக உள்ளன. தரைப்படையில் 10 ஆயிரத்து 81, கப்பல் படையில் 170, விமானப் படையில் 571 பேர் என இந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்து 800 பேர், ஓய்வுகாலத்திற்கு முன்னரே ராணுவப் பணியில் இருந்து விலகியுள்ளனர்.
நாட்டில் உள்ள பல்வேறு ராணுவ பயிற்சி கழகங்களில் இருந்து 2010-ம் ஆண்டில் 9 ஆயிரம் வீரர்கள் பயிற்சிகளை முடித்து பணியில் சேர்த்துள்ளனர். இவ்வாறு பாதுகாப்பு மந்திரியின் பதிலில் கூறப்பட்டுள்ளது.
-மாலைமலர்
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிக்கு எழுத்து மூலமாக பாதுகாப்பு மந்திரி ஏ.கே. அந்தோணி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
தரைப்படையில், 10 ஆயிரத்து 100 அலுவலர்களுக்கான பணியிடங்களும், அலுவலர் பதவிக்கு கீழான நிலையில் 32 ஆயிரத்து 431 பணியிடங்களும் காலியாக உள்ளன. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி கப்பல் படையில் ஆயிரத்து 996 அலுவர்களுக்கான பணியிடங்களும், அலுவலர்களக்கு கீழான நிலையில் 14 ஆயிரத்து 310 பணியிடங்களும் காலியாக உள்ளன.
விமானப்படையில் 962 அலுவலர்களுக்கான பணியிடங்களும், அலுவலர்களுக்கு கீழான நிலையில் 7 ஆயிரம் பணியிடங்களும் காலியாக உள்ளன. இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிப்பதற்காக, ஊடக பிரசாரங்களும், பேரணிகளும் நடத்தப்படுகின்றன.
ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் தேர்வு முறைகளில் உள்ள கண்டிப்பு, பணிச் சூழலில் உள்ள கிரமம், மற்ற பணிகளில் கிடைக்கும் வசதிகள் ஆகியவை இந்த ஆள் பற்றாக்குறைக்கான முக்கிய காரணிகளாக உள்ளன. தரைப்படையில் 10 ஆயிரத்து 81, கப்பல் படையில் 170, விமானப் படையில் 571 பேர் என இந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்து 800 பேர், ஓய்வுகாலத்திற்கு முன்னரே ராணுவப் பணியில் இருந்து விலகியுள்ளனர்.
நாட்டில் உள்ள பல்வேறு ராணுவ பயிற்சி கழகங்களில் இருந்து 2010-ம் ஆண்டில் 9 ஆயிரம் வீரர்கள் பயிற்சிகளை முடித்து பணியில் சேர்த்துள்ளனர். இவ்வாறு பாதுகாப்பு மந்திரியின் பதிலில் கூறப்பட்டுள்ளது.
-மாலைமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எல்லை கடந்து மீன் பிடித்ததாகக் கூறி கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டடு வருகிறனர்.
கடந்த 3-ந்தேதி நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 40 பேர் 5 படகுகளில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 40 பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள திரிகோண மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அந்த கோர்ட்டு உத்தரவுப்படி அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் 40 மீனவர்களும் இன்று பகல் 12 மணி அளவில் மீண்டும் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் தரப்பில் வாதாடிய வக்கீல், தமிழக மீனவர்கள் தவறுதலாக எல்லையை தாண்டிவிட்டதாகவும், அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதாடினார்.
இதையடுத்து 40 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்படட அனைவரும் நாளை அல்லது நாளை மறுநாள் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-மாலைமலர்
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எல்லை கடந்து மீன் பிடித்ததாகக் கூறி கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டடு வருகிறனர்.
கடந்த 3-ந்தேதி நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 40 பேர் 5 படகுகளில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 40 பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள திரிகோண மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அந்த கோர்ட்டு உத்தரவுப்படி அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் 40 மீனவர்களும் இன்று பகல் 12 மணி அளவில் மீண்டும் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் தரப்பில் வாதாடிய வக்கீல், தமிழக மீனவர்கள் தவறுதலாக எல்லையை தாண்டிவிட்டதாகவும், அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதாடினார்.
இதையடுத்து 40 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்படட அனைவரும் நாளை அல்லது நாளை மறுநாள் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-மாலைமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
மதுரையில் நம்மை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது: மு.க.அழகிரி ஆவேச பேச்சு
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனின் மகன் மருது பாண்டியன்-ஆர்த்தி திருமணம் இன்று மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா மகாலில் நடந்தது. மத்திய மந்திரியும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசியதாவது:-
இன்று மணவிழா காணும் மருதுபாண்டியனின் தந்தை மிசா பாண்டியன் என்மீதும் கழகத்தின் மீதும் மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். அவரது இல்ல விழாவை நடத்தி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மணமகன் மருதுபாண்டியனும், எனது மகன் துரை தயாநிதியும் நெருங்கிய நண்பர்கள்.
துரைதயாநிதிக்கு ஒரு வழக்கில் இன்று முன் ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மணமகனுக்கு தெரிவித்தேன். அப்போது அவர் சந்தோசத்துடன் ஆனந்த கண்ணீர் வடித்தார். 1980-ல் முரசொலி பத்திரிகை பொறுப்பை ஏற்று நான் மதுரைக்கு வந்தேன். அப்போது இருந்தே மிசா பாண்டியன் என்னிடம் நம்பிக்கையுடனும், விசுவாசமாகவும் இருந்து வருகிறார்.
தி.மு.க. ஆட்சியில் இருந்த போது அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் என்னிடம் பதவிகளை கேட்டு பெற்றார்கள். ஆட்சி மாறியவுடன் கட்சி நிர்வாகிகள் என்னை விட்டு விலகி சென்று விட்டனர். அந்த துரோகத்தை பற்றி கவலைப் படவில்லை. தி.மு.க.வில் இருந்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் விலகியபோது எங்கிருந்தாலும் வாழ்க என்று அறிஞர் அண்ணா கூறினார். அதனையே நானும் கூறுகிறேன்.
என்னை விட்டு விலகி சென்றவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். பணமும், பதவியும் முக்கியமில்லை. பணத்தை கொண்டு நிம்மதியாக வாழ முடியாது. துரோகிகள் எங்கு சென்றாலும் புகழ் கிடைக்காது. நாம் தேர்தலில் கடுமையாக உழைத்து வீடு, வீடாக சென்று ஓட்டுகளை பெற்று இப்படிப்பட்டவர்களை வெற்றி பெறச் செய்திருக்கிறோம். பதவியில் உட்கார வைத்தவுடன் அவர்கள் மாமனார், மச்சான் மூலம் கிடைத்தது என்று சொல்லி திரிகிறார்கள்.
நமக்கு துரோகம் செய்தவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்கள் எங்கும் போகட்டும். நம்மை விட்டு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நம்மால் பதவியும், பொருளாளதார நிலையில் உயர்ந்தவர்களும் நம்மை விட்டு சென்ற துரோகத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை.
மதுரையில் என்றைக்கும் நாம் தான். நம்மை மீறி யாரும் நடை போட முடியாது. நாம் பெற்று கொடுக்காத பதவியா? பட்டமா? நாம் தேர்தலில் உழைத்து வெற்றி பெற்றவர்கள். இது அனைவருக்கும் தெரியும். அவர்களை இயற்கையே பார்த்து கொள்ளும். நம்மிடம் இருந்த போது ஜெயிக்க முடியாதவர்கள் நம்மை விட்டு சென்று ஜெயிக்க போகிறார்களா? அதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சா, முன்னாள் மேயர் தேன்மொழி, முன்னாள் துணைமேயர் மன்னன், நிர்வாகிகள் உதயகுமார், எம்.எல்ராஜ், தர்மலிங்கம், சின்னம்மாள், கவுன்சிலர்கள் கண்ணன், குடைவீடு அருண் குமார், நன்னா, பகுதி செயலாளர்கள் முபாராக் மந்திரி, கோபிநாதன், ரஜினி மன்ற பொறுப்பாளர் பால தம்புராஜ், வேளாண் வாரிய விற்பனைக்குழு முன்னாள் துணைத்தலைவர் பூக்கடை ராமச்சந்திரன், நிர்வாகிகள் பக்ருதின், செல்லூர் குரும்பன், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை முடித்து கொண்டு மதுரை செல்லூரில் உள்ள முன்னாள் எம். எல்.ஏ. சவுந்திரபாண்டியன் வீட்டிற்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு சவுந்திர பாண்டியனின் தாயார் நாகம்மாளின் மறைவுக்கு குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். பின்னர் அவர் வெளியே வந்தபோது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திருமண விழாவில் பரபரப்பாக பேசி இருக்கிறீர்களே என்று கேட்டனர். அதற்கு இப்போது தான் விதை விதைத்துள்ளேன். பொறுத்து இருந்து பாருங்கள் என்று மு.க.அழகிரி கூறினார்.
மாலைமலர்..
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனின் மகன் மருது பாண்டியன்-ஆர்த்தி திருமணம் இன்று மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா மகாலில் நடந்தது. மத்திய மந்திரியும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசியதாவது:-
இன்று மணவிழா காணும் மருதுபாண்டியனின் தந்தை மிசா பாண்டியன் என்மீதும் கழகத்தின் மீதும் மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். அவரது இல்ல விழாவை நடத்தி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மணமகன் மருதுபாண்டியனும், எனது மகன் துரை தயாநிதியும் நெருங்கிய நண்பர்கள்.
துரைதயாநிதிக்கு ஒரு வழக்கில் இன்று முன் ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மணமகனுக்கு தெரிவித்தேன். அப்போது அவர் சந்தோசத்துடன் ஆனந்த கண்ணீர் வடித்தார். 1980-ல் முரசொலி பத்திரிகை பொறுப்பை ஏற்று நான் மதுரைக்கு வந்தேன். அப்போது இருந்தே மிசா பாண்டியன் என்னிடம் நம்பிக்கையுடனும், விசுவாசமாகவும் இருந்து வருகிறார்.
தி.மு.க. ஆட்சியில் இருந்த போது அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் என்னிடம் பதவிகளை கேட்டு பெற்றார்கள். ஆட்சி மாறியவுடன் கட்சி நிர்வாகிகள் என்னை விட்டு விலகி சென்று விட்டனர். அந்த துரோகத்தை பற்றி கவலைப் படவில்லை. தி.மு.க.வில் இருந்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் விலகியபோது எங்கிருந்தாலும் வாழ்க என்று அறிஞர் அண்ணா கூறினார். அதனையே நானும் கூறுகிறேன்.
என்னை விட்டு விலகி சென்றவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். பணமும், பதவியும் முக்கியமில்லை. பணத்தை கொண்டு நிம்மதியாக வாழ முடியாது. துரோகிகள் எங்கு சென்றாலும் புகழ் கிடைக்காது. நாம் தேர்தலில் கடுமையாக உழைத்து வீடு, வீடாக சென்று ஓட்டுகளை பெற்று இப்படிப்பட்டவர்களை வெற்றி பெறச் செய்திருக்கிறோம். பதவியில் உட்கார வைத்தவுடன் அவர்கள் மாமனார், மச்சான் மூலம் கிடைத்தது என்று சொல்லி திரிகிறார்கள்.
நமக்கு துரோகம் செய்தவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்கள் எங்கும் போகட்டும். நம்மை விட்டு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நம்மால் பதவியும், பொருளாளதார நிலையில் உயர்ந்தவர்களும் நம்மை விட்டு சென்ற துரோகத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை.
மதுரையில் என்றைக்கும் நாம் தான். நம்மை மீறி யாரும் நடை போட முடியாது. நாம் பெற்று கொடுக்காத பதவியா? பட்டமா? நாம் தேர்தலில் உழைத்து வெற்றி பெற்றவர்கள். இது அனைவருக்கும் தெரியும். அவர்களை இயற்கையே பார்த்து கொள்ளும். நம்மிடம் இருந்த போது ஜெயிக்க முடியாதவர்கள் நம்மை விட்டு சென்று ஜெயிக்க போகிறார்களா? அதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சா, முன்னாள் மேயர் தேன்மொழி, முன்னாள் துணைமேயர் மன்னன், நிர்வாகிகள் உதயகுமார், எம்.எல்ராஜ், தர்மலிங்கம், சின்னம்மாள், கவுன்சிலர்கள் கண்ணன், குடைவீடு அருண் குமார், நன்னா, பகுதி செயலாளர்கள் முபாராக் மந்திரி, கோபிநாதன், ரஜினி மன்ற பொறுப்பாளர் பால தம்புராஜ், வேளாண் வாரிய விற்பனைக்குழு முன்னாள் துணைத்தலைவர் பூக்கடை ராமச்சந்திரன், நிர்வாகிகள் பக்ருதின், செல்லூர் குரும்பன், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை முடித்து கொண்டு மதுரை செல்லூரில் உள்ள முன்னாள் எம். எல்.ஏ. சவுந்திரபாண்டியன் வீட்டிற்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு சவுந்திர பாண்டியனின் தாயார் நாகம்மாளின் மறைவுக்கு குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். பின்னர் அவர் வெளியே வந்தபோது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திருமண விழாவில் பரபரப்பாக பேசி இருக்கிறீர்களே என்று கேட்டனர். அதற்கு இப்போது தான் விதை விதைத்துள்ளேன். பொறுத்து இருந்து பாருங்கள் என்று மு.க.அழகிரி கூறினார்.
மாலைமலர்..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
அனைத்து செய்திகளும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
மக்களின் எண்ணங்களை கேட்க மோடிக்கு விருப்பமில்லை: ராகுல்
ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல், அரசியலில் மகாத்மா காந்தி தான் எனது குரு. ஒரு சில நேரங்களில் அரசியலில் கடுமையான முடிவுகள் தேவைப்படுகின்றன. உங்களின் எண்ணங்களை கேட்க மோடிக்கு விருப்பமில்லை. குஜராத்தில் ஒரே ஒரு குரல் தான் கேட்கிறது. ஆனால் அது மக்களின் குரல் அல்ல என கூறினார்.
-தினமலர்
ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல், அரசியலில் மகாத்மா காந்தி தான் எனது குரு. ஒரு சில நேரங்களில் அரசியலில் கடுமையான முடிவுகள் தேவைப்படுகின்றன. உங்களின் எண்ணங்களை கேட்க மோடிக்கு விருப்பமில்லை. குஜராத்தில் ஒரே ஒரு குரல் தான் கேட்கிறது. ஆனால் அது மக்களின் குரல் அல்ல என கூறினார்.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
அமளி; பார்லி., இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடில்லி: கேள்வி நேரத்தை ரத்து செய்யக்கூறி லோக்சபாவில் பா.ஜ., அமளி ஏற்பட்டதை தொடர்ந்து அவையை சபாநாயகர் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். இதேபோல், வால்மார்ட் விவகாரம், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக எழுந்த அமளி காரணமாக ராஜ்யசபாவும் சுமார் அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவை மீண்டும் கூடிய போது, அமளி தொடர்ந்ததால் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-தினமலர்
புதுடில்லி: கேள்வி நேரத்தை ரத்து செய்யக்கூறி லோக்சபாவில் பா.ஜ., அமளி ஏற்பட்டதை தொடர்ந்து அவையை சபாநாயகர் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். இதேபோல், வால்மார்ட் விவகாரம், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக எழுந்த அமளி காரணமாக ராஜ்யசபாவும் சுமார் அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவை மீண்டும் கூடிய போது, அமளி தொடர்ந்ததால் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Page 7 of 37 • 1 ... 6, 7, 8 ... 22 ... 37
Similar topics
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» வரலாற்றில் இன்று-அச்சலா
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!
» சில செய்திகள்
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
» வரலாற்றில் இன்று-அச்சலா
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!
» சில செய்திகள்
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
Page 7 of 37
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|