புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 5 of 37 •
Page 5 of 37 • 1, 2, 3, 4, 5, 6 ... 21 ... 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நுண்காப்பீடு திட்டம் இந்தியா முதலிடம்
மதுரை:""நுண்காப்பீட்டுத் திட்டத்தில் இந்தியா, முதலிடத்தில் உள்ளது,'' என, உலக வங்கி ஆலோசகர் மொஸ்லிதீன் அகமது தெரிவித்தார்.மதுரையில் தானம் அறக்கட்டளை சார்பில், நடந்த நுண்காப்பீட்டுத் திட்ட சிறப்புப் பயிற்சியின்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் 2005ல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றன. குறிப்பாக பயிர் காப்பீடு, கால்நடை, தனிநபர் விபத்து, மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மத்திய அரசு, இதற்கான மானியத்தை, மார்ச் வரை, கொடுக்க அனுமதித்துள்ளது, என்றார். நெதர்லாந்து பிரதிநிதிகள் ரியான் ப்ளோரிஜின், கர்லிஜின் மொர்சிங், டாடா தானம் அகாடமி இயக்குனர் உமாராணி, பீப்பீள் மியூச்சுவல் சி.இ.ஓ., பாலசுப்ரமணியம் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடுகளை செய்தார்.
-தினமலர்
மதுரை:""நுண்காப்பீட்டுத் திட்டத்தில் இந்தியா, முதலிடத்தில் உள்ளது,'' என, உலக வங்கி ஆலோசகர் மொஸ்லிதீன் அகமது தெரிவித்தார்.மதுரையில் தானம் அறக்கட்டளை சார்பில், நடந்த நுண்காப்பீட்டுத் திட்ட சிறப்புப் பயிற்சியின்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் 2005ல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றன. குறிப்பாக பயிர் காப்பீடு, கால்நடை, தனிநபர் விபத்து, மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மத்திய அரசு, இதற்கான மானியத்தை, மார்ச் வரை, கொடுக்க அனுமதித்துள்ளது, என்றார். நெதர்லாந்து பிரதிநிதிகள் ரியான் ப்ளோரிஜின், கர்லிஜின் மொர்சிங், டாடா தானம் அகாடமி இயக்குனர் உமாராணி, பீப்பீள் மியூச்சுவல் சி.இ.ஓ., பாலசுப்ரமணியம் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடுகளை செய்தார்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
"மெகா லோக் அதாலத்'ரூ.3 கோடி இழப்பீடு
மதுரை:சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த "மெகா லோக் அதாலத்' மூலம், 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் இதை துவக்கினார். மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 843, சிவில் மற்றும் காசோலை மோசடி மேல்முறையீடு 57 உட்பட 900 வழக்குகள் பட்டியலிடப்பட்டன.ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் கே.சாமிதுரை, ஐ.டேவிட் கிறிஸ்டியன், டி.தங்கவேல், மலைசுப்பிரமணியன், ஏ.ஆர்.ராமலிங்கம், எம்.தணிகாசலம், பி.முருகேசன் மற்றும் மாவட்ட கோர்ட் நீதிபதிகள் விசாரித்தனர். பதிவாளர் (நீதித்துறை) தங்கக்கனி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அருள், போக்குவரத்துக் கழகம், இன்சூரன்ஸ் அதிகாரிகள், டாக்டர்கள் பங்கேற்றனர்.
-தினமலர்
மதுரை:சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த "மெகா லோக் அதாலத்' மூலம், 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் இதை துவக்கினார். மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 843, சிவில் மற்றும் காசோலை மோசடி மேல்முறையீடு 57 உட்பட 900 வழக்குகள் பட்டியலிடப்பட்டன.ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் கே.சாமிதுரை, ஐ.டேவிட் கிறிஸ்டியன், டி.தங்கவேல், மலைசுப்பிரமணியன், ஏ.ஆர்.ராமலிங்கம், எம்.தணிகாசலம், பி.முருகேசன் மற்றும் மாவட்ட கோர்ட் நீதிபதிகள் விசாரித்தனர். பதிவாளர் (நீதித்துறை) தங்கக்கனி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அருள், போக்குவரத்துக் கழகம், இன்சூரன்ஸ் அதிகாரிகள், டாக்டர்கள் பங்கேற்றனர்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட
18 ஆயிரத்து 382 ஆசிரியர்களுக்கு சென்னையில்
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் 13-ஆம்
தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் விழாவில் பணி
நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வு, மறுதேர்வில் வெற்றி
பெற்றவர்களில் 18,382 பேர் ஆசிரியர்களாக தேர்வு
செய்யப்பட்டனர். இவர்களில் 9,664 இடைநிலை
ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி
ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில்
வரும் 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்
விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட
உள்ளன.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.
மைதானத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை
அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன
-தினமலர்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட
18 ஆயிரத்து 382 ஆசிரியர்களுக்கு சென்னையில்
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் 13-ஆம்
தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் விழாவில் பணி
நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வு, மறுதேர்வில் வெற்றி
பெற்றவர்களில் 18,382 பேர் ஆசிரியர்களாக தேர்வு
செய்யப்பட்டனர். இவர்களில் 9,664 இடைநிலை
ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி
ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில்
வரும் 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்
விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட
உள்ளன.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.
மைதானத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை
அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
இந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ரூ. 125 கோடி செலவிட்ட வால்மார்ட்
வாஷிங்டன்: இந்தியாவில் தனது சூப்பர் மார்க்கெட்டை திறக்க ஆதரவளிக்கக்கோரி, இதுவரை அமெரிக்க எம்.பி.,க்களுக்கு மட்டும் சுமார் ரூ. 125 கோடி (25 மில்லியன் டாலர்) செலவழித்துள்ளது வால்மார்ட் நிறுவனம்.
இந்தியாவில் சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பார்லிமென்ட்டில் இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடி பதிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சில்லரை வணிக ஜாம்பவான் என கருதப்படும் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் கால்பதிக்க அமெரிக்க எம்.பி.,க்களுக்கு இதுவரை சுமார் ரூ. 125 கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு முதல் வால்மார்ட் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சபை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம், இந்தியாவில் கால்பதிக்கும் தங்களது முயற்சிகளுககு ஆதரவளிக்கக்கோரி, பேரம் பேசியுள்ளது வால்மார்ட். இந்தாண்டு மட்டும் இதுவரை ரூ. 18 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வால்மார்ட் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது கடைகள் மூலம் ஆண்டுக்கு 444 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் தொகை 500 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 50 ஆயிரம் கோடி). அதிகரித்து வரும் தனிநபர் வருமானம் மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், வரும் 2020ம் ஆண்டில் இந்த தொகை 1 டிரில்லியன் டாலர் (ரூ. 1 லட்சம் கோடி) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அபரிமிதமான வளமே, வால்மார்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடை விரிக்க ஆவலுடன் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
-தினமலர்
வாஷிங்டன்: இந்தியாவில் தனது சூப்பர் மார்க்கெட்டை திறக்க ஆதரவளிக்கக்கோரி, இதுவரை அமெரிக்க எம்.பி.,க்களுக்கு மட்டும் சுமார் ரூ. 125 கோடி (25 மில்லியன் டாலர்) செலவழித்துள்ளது வால்மார்ட் நிறுவனம்.
இந்தியாவில் சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பார்லிமென்ட்டில் இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடி பதிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சில்லரை வணிக ஜாம்பவான் என கருதப்படும் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் கால்பதிக்க அமெரிக்க எம்.பி.,க்களுக்கு இதுவரை சுமார் ரூ. 125 கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு முதல் வால்மார்ட் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சபை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம், இந்தியாவில் கால்பதிக்கும் தங்களது முயற்சிகளுககு ஆதரவளிக்கக்கோரி, பேரம் பேசியுள்ளது வால்மார்ட். இந்தாண்டு மட்டும் இதுவரை ரூ. 18 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வால்மார்ட் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது கடைகள் மூலம் ஆண்டுக்கு 444 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் தொகை 500 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 50 ஆயிரம் கோடி). அதிகரித்து வரும் தனிநபர் வருமானம் மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், வரும் 2020ம் ஆண்டில் இந்த தொகை 1 டிரில்லியன் டாலர் (ரூ. 1 லட்சம் கோடி) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அபரிமிதமான வளமே, வால்மார்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடை விரிக்க ஆவலுடன் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
காஷ்மீர் பிரச்னை தீர இந்தியா பாக்., மீண்டும் ஒன்றாக வேண்டும்: நீதிபதி மார்கண்டேய கட்ஜூ
புதுடில்லி: காஷ்மீர் மற்றும் பயங்கரவாதிகள் பிரச்னை தீர, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த தெற்காசிய ஊடகங்கள் கமிஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், "காஷ்மீர் பிரச்னைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் இந்திய பாகிஸ்தான் பிரிவினை என்பதே ஒரு கள்ளத்தனமான நடவடிக்கை. இரு நாட்டு கொள்கை என்பதை நான் எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். பாகிஸ்தானை ஒரு சட்டபூர்வமான நாடாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். காஷ்மீர் பிரச்னைக்கு ஓரே நிரந்தர தீர்வு, மீண்டும் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் ஒன்றிணைவதே. மத்தியில் வலிமையான, மதச்சார்பற்ற, நவீன கால மனப்பான்மை கொண்ட அரசு அமைய வேண்டும்.
நான் சொல்கிறேன் இந்தியாவில் 90 சதவீதம் பேர் முட்டாள்கள். உங்களுக்கெல்லாம் தலையில் மூளை என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. டில்லியில் வெறும் ரூ. 2 ஆயிரத்தில் ஒரு ஜாதி மோதலை ஏற்படுத்தி விடலாம். வழிபாட்டுத்தலம் என்று கூட பார்க்காமல் சிலர் இதை செய்யத் தயாராக இருக்கின்றனர். இதை நம்பி பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர். இந்த மோதலுக்குப்பின்னால் சில விஷமிகள் இருப்பதை அவர்கள் உணர்வதேயில்லை.
கடந்த 1857ம் ஆண்டுக்கு முன்னால் வரை இந்தியாவில் ஜாதி, இன மோதல்கள் இல்லை. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக உள்ளது. மிகவும் கசப்பான உண்மையை நான் உங்களுக்குச் சொல்கிறேன் இந்தியாவில் உள்ள மக்களில் 80 சதவீதம் பேர் மத வெறியர்களாக உள்ளன. இது எவ்வாறு நடந்தது. இதற்கு காரணம் ஆங்கிலேயர்களே. அவர்களின் வருகைக்குப்பின்னரே நாட்டில் மத மோதல்கள் அதிகரித்தன. இந்தியர்களை மத ரீதியாக பிரித்தால் மட்டுமே தங்களால் இந்நாட்டை ஆளமுடியும் என்ற ஆங்கிலேயர்களின் சதியே இந்த மோதல்களுக்கு காரணம். நமது முன்னோர்கள் இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளை கற்றனர். ஆனால் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள், இந்தி இந்துக்களுக்கு என்றும், உருது முஸ்லிம்களுக்கு என்றும் பிரித்து, இருவருக்குமிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டனர். இந்தியர்களாகிய நாம், இந்த விளையாட்டெல்லாம் நம்மை முட்டாளாக்க செய்யப்பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கசப்பான விஷயங்களை நான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.
-தினமலர்
புதுடில்லி: காஷ்மீர் மற்றும் பயங்கரவாதிகள் பிரச்னை தீர, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த தெற்காசிய ஊடகங்கள் கமிஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், "காஷ்மீர் பிரச்னைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் இந்திய பாகிஸ்தான் பிரிவினை என்பதே ஒரு கள்ளத்தனமான நடவடிக்கை. இரு நாட்டு கொள்கை என்பதை நான் எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். பாகிஸ்தானை ஒரு சட்டபூர்வமான நாடாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். காஷ்மீர் பிரச்னைக்கு ஓரே நிரந்தர தீர்வு, மீண்டும் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் ஒன்றிணைவதே. மத்தியில் வலிமையான, மதச்சார்பற்ற, நவீன கால மனப்பான்மை கொண்ட அரசு அமைய வேண்டும்.
நான் சொல்கிறேன் இந்தியாவில் 90 சதவீதம் பேர் முட்டாள்கள். உங்களுக்கெல்லாம் தலையில் மூளை என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. டில்லியில் வெறும் ரூ. 2 ஆயிரத்தில் ஒரு ஜாதி மோதலை ஏற்படுத்தி விடலாம். வழிபாட்டுத்தலம் என்று கூட பார்க்காமல் சிலர் இதை செய்யத் தயாராக இருக்கின்றனர். இதை நம்பி பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர். இந்த மோதலுக்குப்பின்னால் சில விஷமிகள் இருப்பதை அவர்கள் உணர்வதேயில்லை.
கடந்த 1857ம் ஆண்டுக்கு முன்னால் வரை இந்தியாவில் ஜாதி, இன மோதல்கள் இல்லை. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக உள்ளது. மிகவும் கசப்பான உண்மையை நான் உங்களுக்குச் சொல்கிறேன் இந்தியாவில் உள்ள மக்களில் 80 சதவீதம் பேர் மத வெறியர்களாக உள்ளன. இது எவ்வாறு நடந்தது. இதற்கு காரணம் ஆங்கிலேயர்களே. அவர்களின் வருகைக்குப்பின்னரே நாட்டில் மத மோதல்கள் அதிகரித்தன. இந்தியர்களை மத ரீதியாக பிரித்தால் மட்டுமே தங்களால் இந்நாட்டை ஆளமுடியும் என்ற ஆங்கிலேயர்களின் சதியே இந்த மோதல்களுக்கு காரணம். நமது முன்னோர்கள் இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளை கற்றனர். ஆனால் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள், இந்தி இந்துக்களுக்கு என்றும், உருது முஸ்லிம்களுக்கு என்றும் பிரித்து, இருவருக்குமிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டனர். இந்தியர்களாகிய நாம், இந்த விளையாட்டெல்லாம் நம்மை முட்டாளாக்க செய்யப்பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கசப்பான விஷயங்களை நான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மும்பை தாக்குதல்: பாக்., கோர்ட்டில் ஆதாரங்கள் ஒப்படைப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்து வரும் மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய படகுகளின் புகைப்படங்கள் ஆகியவற்றை புலனாய்வு போலீசார், பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.
-தினமலர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்து வரும் மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய படகுகளின் புகைப்படங்கள் ஆகியவற்றை புலனாய்வு போலீசார், பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பிரதமர் மிகவும் நேர்மையானவர்: ரத்தன் டாடா
புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் நேர்மையானவர் என தொழிலதிபர் ரத்தன் டாடா கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, நாட்டில் நுகர்வோருக்கு மிகவும் பயனளிக்கும். இந்த விவகாரத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே திருப்தி கிடைத்துள்ளது. இது போதாது. இந்தியாவில் ஊழல் மற்றும் வரி காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. அரசின் ஒப்புதல் என்பதை எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது. இல்லாதபட்சத்தில் இந்தியாவை அனைவரும் எளிதாக எண்ணுவர். விமான போக்குவரத்து துறையில் நுழையும் எண்ணம் டாடா நிறுவனத்துக்கு இல்லை என கூறினார்
-தினமலர்
புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் நேர்மையானவர் என தொழிலதிபர் ரத்தன் டாடா கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, நாட்டில் நுகர்வோருக்கு மிகவும் பயனளிக்கும். இந்த விவகாரத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே திருப்தி கிடைத்துள்ளது. இது போதாது. இந்தியாவில் ஊழல் மற்றும் வரி காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. அரசின் ஒப்புதல் என்பதை எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது. இல்லாதபட்சத்தில் இந்தியாவை அனைவரும் எளிதாக எண்ணுவர். விமான போக்குவரத்து துறையில் நுழையும் எண்ணம் டாடா நிறுவனத்துக்கு இல்லை என கூறினார்
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மதுரைக்கு ரூ.30 கோடி இழப்பு காவிரியால்
மதுரை:காவிரி நீர் பிரச்னையால், மதுரையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு, சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள், மூன்று நாட்களாக காத்திருப்பதால், 30 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மதுரையில் இருந்து தினமும், 50 லாரிகள், மைசூருக்கு நவதானியம், எண்ணெய், ஜவுளிகளை கொண்டு செல்கின்றன. அங்கிருந்து, ரப்பர் போன்ற பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.காவிரி பிரச்னையால், மைசூரு எல்லையில், பாதுகாப்பு கருதி, லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.மதுரை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சாத்தையா கூறியதாவது:பெங்களூருவிலிருந்து மைசூருக்கு செல்லும் பாதையும் மூடப்பட்டு உள்ளதால், நேற்று முன்தினம் வரை தமிழக எல்லையில், 2,000 லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.இதனால், 30 கோடி ரூபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதேசமயம், பெங்களூரு வழியே, வடமாநிலங்களுக்கு லாரிகள் வழக்கம் போல் செல்கின்றன, என்றார்.
-நன்றி:தினமலர்
மதுரை:காவிரி நீர் பிரச்னையால், மதுரையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு, சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள், மூன்று நாட்களாக காத்திருப்பதால், 30 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மதுரையில் இருந்து தினமும், 50 லாரிகள், மைசூருக்கு நவதானியம், எண்ணெய், ஜவுளிகளை கொண்டு செல்கின்றன. அங்கிருந்து, ரப்பர் போன்ற பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.காவிரி பிரச்னையால், மைசூரு எல்லையில், பாதுகாப்பு கருதி, லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.மதுரை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சாத்தையா கூறியதாவது:பெங்களூருவிலிருந்து மைசூருக்கு செல்லும் பாதையும் மூடப்பட்டு உள்ளதால், நேற்று முன்தினம் வரை தமிழக எல்லையில், 2,000 லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.இதனால், 30 கோடி ரூபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதேசமயம், பெங்களூரு வழியே, வடமாநிலங்களுக்கு லாரிகள் வழக்கம் போல் செல்கின்றன, என்றார்.
-நன்றி:தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
எய்ட்ஸ் நோய் பாதிப்போர் குறைவு: கலெக்டர் பெருமிதம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தால், எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, கலெக்டர் லில்லி தெரிவித்தார்.உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி மாவட்ட நிர்வாகம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக தர்மபுரியில் மாணவ, மாணவிகளின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் லில்லி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தர்மபுரி அரசு மருத்துமனையில் தொடங்கிய பேரணி இலக்கியம்பட்டி, செந்தில் நகர் வழியாக கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது.தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தின விழா கலெக்டர் லில்லி தலைமையில் நடந்தது. எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் உலகநாதன் வரவேற்றார். டி.ஆர்.ஓ., ராமர், தர்மபுரி மாவட்ட பாசிடிவ் நல சங்க தலைவர் ராஜாமகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை தொடர்ந்து கலெக்டர் லில்லி பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2006ம் ஆண்டு முதல், 2012 நவம்பர் மாதம் வரை 278 கர்ப்பிணி பெண்கள் உட்பட, 5ஆயிரத்து, 343 பேர் எச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.2012 நவம்பர் மாதம் வரை, 444 பேர் எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட, 164 பேர் குறைவாகும். அரசின் சுகாதார அமைப்புகள் , அரசு சார நிறுவனங்கள், சமூக சங்கங்கள் ஆகியவை அரசின் பிற துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் எச்.ஐ.வி., குறித்த விழிப்பபுணர்வு பிரச்சாரம் மற்றும் திட்டங்களால் இப்பாதிப்பு குறைந்துள்ளது.மாவட்டத்தில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை பரிசோதனை மற்றும் சிறந்த சிகிச்சை வழங்கிட, 17 நம்பிக்கை மையங்கள், ஒரு கூட்டு மருந்து சிகிச்சை மையம், நான்கு இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள், ஐந்து சுகவாழ்வு மையங்கள், மூன்று ரத்த வங்கிகள், ஒரு சமூக நல, மையம், ஒரு இளைப்பாறுதல் மையம், இரு இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது, என பேசினார்.எச்.ஐ.வி., தொற்றுள்ள குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த, 62 குழந்தைகளுக்கு கல்வி செலவுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக, 2 லட்சத்து, 22 ஆயிரம் ரூபாய் மற்றும் எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, 70 விவசாயிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் ஆணையை கலெக்டர் லில்லி வழங்கினார்.மேலும் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய் தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் நடந்த பேச்சு, ஓவிய, வாசகம் எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களும், எச்.ஐ.வி., தொற்றுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை, பிரசவம் பார்த்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள்,உதவி செவிலியர்கள் ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.எய்ட்ஸ் தடுப்பு சங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-தினமலர்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தால், எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, கலெக்டர் லில்லி தெரிவித்தார்.உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி மாவட்ட நிர்வாகம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக தர்மபுரியில் மாணவ, மாணவிகளின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் லில்லி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தர்மபுரி அரசு மருத்துமனையில் தொடங்கிய பேரணி இலக்கியம்பட்டி, செந்தில் நகர் வழியாக கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது.தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தின விழா கலெக்டர் லில்லி தலைமையில் நடந்தது. எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் உலகநாதன் வரவேற்றார். டி.ஆர்.ஓ., ராமர், தர்மபுரி மாவட்ட பாசிடிவ் நல சங்க தலைவர் ராஜாமகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை தொடர்ந்து கலெக்டர் லில்லி பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2006ம் ஆண்டு முதல், 2012 நவம்பர் மாதம் வரை 278 கர்ப்பிணி பெண்கள் உட்பட, 5ஆயிரத்து, 343 பேர் எச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.2012 நவம்பர் மாதம் வரை, 444 பேர் எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட, 164 பேர் குறைவாகும். அரசின் சுகாதார அமைப்புகள் , அரசு சார நிறுவனங்கள், சமூக சங்கங்கள் ஆகியவை அரசின் பிற துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் எச்.ஐ.வி., குறித்த விழிப்பபுணர்வு பிரச்சாரம் மற்றும் திட்டங்களால் இப்பாதிப்பு குறைந்துள்ளது.மாவட்டத்தில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை பரிசோதனை மற்றும் சிறந்த சிகிச்சை வழங்கிட, 17 நம்பிக்கை மையங்கள், ஒரு கூட்டு மருந்து சிகிச்சை மையம், நான்கு இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள், ஐந்து சுகவாழ்வு மையங்கள், மூன்று ரத்த வங்கிகள், ஒரு சமூக நல, மையம், ஒரு இளைப்பாறுதல் மையம், இரு இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது, என பேசினார்.எச்.ஐ.வி., தொற்றுள்ள குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த, 62 குழந்தைகளுக்கு கல்வி செலவுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக, 2 லட்சத்து, 22 ஆயிரம் ரூபாய் மற்றும் எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, 70 விவசாயிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் ஆணையை கலெக்டர் லில்லி வழங்கினார்.மேலும் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய் தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் நடந்த பேச்சு, ஓவிய, வாசகம் எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களும், எச்.ஐ.வி., தொற்றுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை, பிரசவம் பார்த்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள்,உதவி செவிலியர்கள் ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.எய்ட்ஸ் தடுப்பு சங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
2 மணி நேரத்திற்கு தோல்வி; 18 மணி நேரத்திற்கு? ஸ்டாலின் கிண்டல்
விருதுநகர்: ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் இருண்ட ஆட்சியை ஜெ., நடத்துகிறார். ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனை, சபாநாயகர் உட்பட 13 அமைச்சர்களை மாற்றியது; ஊழலுக்கு துணை போகாத உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டது தான். ஜெ., போடும் வழக்குகளை சந்திக்க தயாராக இருக்கிறோம்.தி.மு.க., ஆட்சியில், மின்தடை குறித்து முன் அறிவிப்பு செய்யப்பட்டது; இரண்டு மணிநேர மின்தடைக்கே, தி.மு.க.,விற்கு தோல்வி என்றால், 18 மணி நேரத்திற்கு என்ன பரிசோ? என்றார்
-தினமலர்
விருதுநகர்: ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் இருண்ட ஆட்சியை ஜெ., நடத்துகிறார். ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனை, சபாநாயகர் உட்பட 13 அமைச்சர்களை மாற்றியது; ஊழலுக்கு துணை போகாத உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டது தான். ஜெ., போடும் வழக்குகளை சந்திக்க தயாராக இருக்கிறோம்.தி.மு.க., ஆட்சியில், மின்தடை குறித்து முன் அறிவிப்பு செய்யப்பட்டது; இரண்டு மணிநேர மின்தடைக்கே, தி.மு.க.,விற்கு தோல்வி என்றால், 18 மணி நேரத்திற்கு என்ன பரிசோ? என்றார்
-தினமலர்
- Sponsored content
Page 5 of 37 • 1, 2, 3, 4, 5, 6 ... 21 ... 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 37
|
|