Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
+11
அசுரன்
DERAR BABU
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
Muthumohamed
ஜாஹீதாபானு
றினா
அச்சலா
15 posters
Page 34 of 37
Page 34 of 37 • 1 ... 18 ... 33, 34, 35, 36, 37
சுட சுட செய்திகள்...அச்சலா
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
திருச்சி அருகே ரூ.50 கோடி கோவில் நிலம் "ஸ்வாகா
திருச்சி: இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, கோவில் மானிய நிலம், "ப்ளாட்' போட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதை, அறநிலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் குருநாத கோவிலுக்கு சொந்தமான கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவில் பூசாரிகளாக சாமிநாதன், அர்ச்சுனன் ஆகியோர் உள்ளனர்.கோவிலுக்கு சொந்தமாக, துவரங்குறிச்சியில், 18 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் இன்றைய மதிப்பு, 50 கோடி ரூபாய்.
கோவில் பூசாரிகளாக இருக்கும் சாமிநாதன், அர்ச்சுனன் ஆகியோர் அனுபவத்தில் கோவில் நிலம் இருந்து வருவதால், அவற்றை, 1990ம் ஆண்டு முதல், "ப்ளாட்' போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இது கோவிலை நிர்வகிக்கும் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
துவரங்குறிச்சி குருநாத கோவிலுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர் நிலமும் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டு, அந்த பகுதி முழுவதும் வீடுகள் கட்டப்பட்டு விட்டன. அந்த வீடுகளுக்கு பொன்னம்பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அனுமதி அளித்து, வீட்டு உரிமையாளர்களிடம் சொத்து வரியும் வசூலித்து வருகிறது.இதேபோல், கோவிலுக்கு சொந்தமான மற்ற நிலங்களும் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள், ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டது குறித்து, அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கோவில் நிலங்களை விற்பனை செய்ய, சில அரசியல்வாதிகளும், இந்து சமய அறநிலைத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் சிலரும் உடந்தை என்பதால், இது தொடர்பாக எத்தனை புகார் சென்றாலும், கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
தமிழகம் முழுவதும், அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக் கப்பட்டிருந்தால், அவற்றை கைப்பற்றி, ஆக்கிரமிப்புகளை அகற்ற, முதல்வர் ஜெயலலிதா கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் கோவில் நிலம் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் நிலத்தை விதிமுறைகளை மீறி விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தை யாக இருந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும், விற்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றன. அப்போது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என, தெரிகிறது..
-தினமலர்
திருச்சி: இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, கோவில் மானிய நிலம், "ப்ளாட்' போட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதை, அறநிலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் குருநாத கோவிலுக்கு சொந்தமான கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவில் பூசாரிகளாக சாமிநாதன், அர்ச்சுனன் ஆகியோர் உள்ளனர்.கோவிலுக்கு சொந்தமாக, துவரங்குறிச்சியில், 18 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் இன்றைய மதிப்பு, 50 கோடி ரூபாய்.
கோவில் பூசாரிகளாக இருக்கும் சாமிநாதன், அர்ச்சுனன் ஆகியோர் அனுபவத்தில் கோவில் நிலம் இருந்து வருவதால், அவற்றை, 1990ம் ஆண்டு முதல், "ப்ளாட்' போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இது கோவிலை நிர்வகிக்கும் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
துவரங்குறிச்சி குருநாத கோவிலுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர் நிலமும் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டு, அந்த பகுதி முழுவதும் வீடுகள் கட்டப்பட்டு விட்டன. அந்த வீடுகளுக்கு பொன்னம்பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அனுமதி அளித்து, வீட்டு உரிமையாளர்களிடம் சொத்து வரியும் வசூலித்து வருகிறது.இதேபோல், கோவிலுக்கு சொந்தமான மற்ற நிலங்களும் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள், ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டது குறித்து, அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கோவில் நிலங்களை விற்பனை செய்ய, சில அரசியல்வாதிகளும், இந்து சமய அறநிலைத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் சிலரும் உடந்தை என்பதால், இது தொடர்பாக எத்தனை புகார் சென்றாலும், கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
தமிழகம் முழுவதும், அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக் கப்பட்டிருந்தால், அவற்றை கைப்பற்றி, ஆக்கிரமிப்புகளை அகற்ற, முதல்வர் ஜெயலலிதா கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் கோவில் நிலம் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் நிலத்தை விதிமுறைகளை மீறி விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தை யாக இருந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும், விற்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றன. அப்போது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என, தெரிகிறது..
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
தமிழகத்துக்கு அவமானமா? நஷ்டமா?
தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கிளப்பிய புயல் இன்னும் ஓயவில்லை. "தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கவும், அரசியல் லாபத்திற்காகவும் முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்' என்றும், தி.மு.க., - காங்., கூட்டணி கருத்து தெரிவித்து உள்ளது.
ஆனால், "இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்' என்று முதல்வர் ஜெயலலிதாவின் கருத்திற்கு ஆதரவாக, பிரதமர் கொடும்பாவி எரிப்பு சம்பவங்களில், அ.தி.மு.க.,வினர் இறங்கிவிட்டனர். இந்த இரு தரப்புக்குமிடையே, "ஐந்து ஆண்டு திட்டங்களை, பத்து நிமிடத் தில் விளக்கிட முடியுமா' என்ற சாதாரண மக்களின் குரல்களும் ஒலிக்கின்றன. முதல்வரின் அதிரடி குறித்து, டில்லி அரசியலில் குறிப்பிடத்தக்கவர்களாக வலம் வரும், மூன்று கட்சிகளின் பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள்...
பழனிமாணிக்கம், நிதித்துறை இணை அமைச்சர்:
பிரதமர் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், சண்டையிட்டுக் கொண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததால், தமிழகத்துக்கு தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை நடத்துபவர்களும், கூட்டத்தில் பங்கேற்பவர்களும், ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போனால் தான், கூட்டம் நடத்துவதற்கான நோக்கத்தை எட்ட முடியும்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அகர வரிசைப்படி அமர வைத்தால், கடைசியில் தான் அமர வேண்டும். அகர வரிசைப்படி தான், பேசவும் முடியும். ஆனால், அவர் முதலில் பேச வேண்டும் என, கேட்டுக் கொண்டதால், பேச அனுமதிக்கப்பட்டார்.மேலும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அமருவதற்கு, ஒரே மாதிரியான "ஸ்டீல்' நாற்காலிகள் தான் போடப்பட்டன. ஆனால், ஜெயலலிதா அமருவதற்கு வசதியாக, வேறு நாற்காலி போட்டுக் கொள்கிறோம் என, தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.அதற்கு அனுமதி அளித்து, டில்லி தமிழ்நாடு ஹவுசிலிருந்து, அவருக்காக பிரத்யேகமாக நாற்காலி கொண்டு வந்து பயன்படுத்தப்பட்டது. இதனால், யாரையும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம், யாருக்கும் இல்லை என்பது தெளிவாகிறது.நாட்டின் மிக முக்கியமான ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஜெயலலிதா, சண்டையிட்டு, தனது உரிமையை நிலைநாட்டி இருக்க வேண்டும். மாறாக, வெளிநடப்பு செய்ததால், அவருக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை; தமிழகத்துக்கு தான் நஷ்டம்.ஜெயலலிதா பண்பட்டவராக நடந்திருந்தால், தமிழகத்துக்கு கூடுதல் நன்மைகள் கிடைத்திருக்கும்.
தம்பிதுரை, பார்லிமென்ட் அ.தி.மு.க., தலைவர்:
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்காமல், நிதி வழங்காமல், ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. திட்டங்களை வகுக்கும் அதிகாரம் தான், மத்திய அரசிடம் உள்ளது. அத்திட்டங்களை அமல்படுத்துபவர்கள் மாநில முதல்வர்கள் தான்.இந்நிலையில், மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டு, அதன்படி திட்டங்களை உருவாக்குதல், மாறுதல் செய்தல் போன்றவற்றை மத்திய அரசு செய்ய வேண்டும். இதற்கு நேர் எதிராக, தான் சொன்னதைத் தான், மற்றவர்கள் செய்யவேண்டும் என்ற, அதிகார மமதையில் மத்திய அரசு செயல்படுகிறது. பார்லிமென்டில் கூட, உறுப்பினர்கள் பேச நேரம் நிர்ணயிக்கப்படும். ஆனால், அதை கடுமையாக பின்பற்றுவதில்லை.இதற்கு, அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்ற ஜனநாயக முறை தான் காரணம். இந்த ஜனநாயக நடைமுறை, நாட்டின் மிக முக்கியமான, 12வது ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசு பின்பற்றவில்லை என்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.அரசியல் அமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக முதல்வர், கூட்டத்தின் முதல் நபராக பேசுகிறார். அவரை பேச விடாமல். மணி அடித்து அமர செய்கின்றனர்.கூட்ட அரங்கில் வேண்டுமானால், காங்கிரசார் மணி அடிக்கலாம். ஆனால், அவர்களின் ஆட்சிக்கு, சாவு மணி அடிக்க மக்கள் காத்திருக்கின்றனர்.
டி.ராஜா, தேசிய செயலர், இந்திய கம்யூ.,:
கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட நாடு இந்தியா. இங்கு, அனைத்துத் தரப்பினருக்கும், சரிநிகர் சமமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். இல்லையேல், கூட்டாட்சி தத்துவத்துக்கே கேடு விளைவிப்பதாகும்.இந்த அடிப்படையில் தான், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வெளிநடப்பை பார்க்க வேண்டியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த, 12வது ஐந்தாண்டு திட்டக் கூட்டம், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, ஒரு மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியது. இக்கூட்டத்தில் பேச, மாநில முதல்வர்களுக்கு, போதிய கால அவகாசம் அளிக்கவேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடந்தபோது, ஒரு மாநில முதல்வருக்கு, 10 நிமிடங்கள் ஒதுக்கி பேச அனுமதித்துஇருக்கலாம். இன்று நிலைமை மாறியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் வேறு,வேறு கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், உரிய நேரம் ஒதுக்கி, மாநில முதல்வர்களுக்கு, பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்.நேரம் போதாது என, கூறுவதை ஏற்க முடியாது. ஒரு நாள் நடக்கும் கூட்டத்தை, மூன்று நாள்கள் நடத்தலாம். முதல் நாள் முதல்வர்கள் பேசலாம்; அடுத்த நாள், மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும் பதில் சொல்லலாம்; இறுதி நாளன்று பிரதமர் நிறைவுரையாற்றலாம்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது சரியானதே. இதை, மத்திய அரசு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். வரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள், தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டங்களில், நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது, மத்திய அரசின் கடமை.
தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கிளப்பிய புயல் இன்னும் ஓயவில்லை. "தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கவும், அரசியல் லாபத்திற்காகவும் முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்' என்றும், தி.மு.க., - காங்., கூட்டணி கருத்து தெரிவித்து உள்ளது.
ஆனால், "இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்' என்று முதல்வர் ஜெயலலிதாவின் கருத்திற்கு ஆதரவாக, பிரதமர் கொடும்பாவி எரிப்பு சம்பவங்களில், அ.தி.மு.க.,வினர் இறங்கிவிட்டனர். இந்த இரு தரப்புக்குமிடையே, "ஐந்து ஆண்டு திட்டங்களை, பத்து நிமிடத் தில் விளக்கிட முடியுமா' என்ற சாதாரண மக்களின் குரல்களும் ஒலிக்கின்றன. முதல்வரின் அதிரடி குறித்து, டில்லி அரசியலில் குறிப்பிடத்தக்கவர்களாக வலம் வரும், மூன்று கட்சிகளின் பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள்...
பழனிமாணிக்கம், நிதித்துறை இணை அமைச்சர்:
பிரதமர் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், சண்டையிட்டுக் கொண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததால், தமிழகத்துக்கு தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை நடத்துபவர்களும், கூட்டத்தில் பங்கேற்பவர்களும், ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போனால் தான், கூட்டம் நடத்துவதற்கான நோக்கத்தை எட்ட முடியும்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அகர வரிசைப்படி அமர வைத்தால், கடைசியில் தான் அமர வேண்டும். அகர வரிசைப்படி தான், பேசவும் முடியும். ஆனால், அவர் முதலில் பேச வேண்டும் என, கேட்டுக் கொண்டதால், பேச அனுமதிக்கப்பட்டார்.மேலும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அமருவதற்கு, ஒரே மாதிரியான "ஸ்டீல்' நாற்காலிகள் தான் போடப்பட்டன. ஆனால், ஜெயலலிதா அமருவதற்கு வசதியாக, வேறு நாற்காலி போட்டுக் கொள்கிறோம் என, தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.அதற்கு அனுமதி அளித்து, டில்லி தமிழ்நாடு ஹவுசிலிருந்து, அவருக்காக பிரத்யேகமாக நாற்காலி கொண்டு வந்து பயன்படுத்தப்பட்டது. இதனால், யாரையும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம், யாருக்கும் இல்லை என்பது தெளிவாகிறது.நாட்டின் மிக முக்கியமான ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஜெயலலிதா, சண்டையிட்டு, தனது உரிமையை நிலைநாட்டி இருக்க வேண்டும். மாறாக, வெளிநடப்பு செய்ததால், அவருக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை; தமிழகத்துக்கு தான் நஷ்டம்.ஜெயலலிதா பண்பட்டவராக நடந்திருந்தால், தமிழகத்துக்கு கூடுதல் நன்மைகள் கிடைத்திருக்கும்.
தம்பிதுரை, பார்லிமென்ட் அ.தி.மு.க., தலைவர்:
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்காமல், நிதி வழங்காமல், ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. திட்டங்களை வகுக்கும் அதிகாரம் தான், மத்திய அரசிடம் உள்ளது. அத்திட்டங்களை அமல்படுத்துபவர்கள் மாநில முதல்வர்கள் தான்.இந்நிலையில், மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டு, அதன்படி திட்டங்களை உருவாக்குதல், மாறுதல் செய்தல் போன்றவற்றை மத்திய அரசு செய்ய வேண்டும். இதற்கு நேர் எதிராக, தான் சொன்னதைத் தான், மற்றவர்கள் செய்யவேண்டும் என்ற, அதிகார மமதையில் மத்திய அரசு செயல்படுகிறது. பார்லிமென்டில் கூட, உறுப்பினர்கள் பேச நேரம் நிர்ணயிக்கப்படும். ஆனால், அதை கடுமையாக பின்பற்றுவதில்லை.இதற்கு, அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்ற ஜனநாயக முறை தான் காரணம். இந்த ஜனநாயக நடைமுறை, நாட்டின் மிக முக்கியமான, 12வது ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசு பின்பற்றவில்லை என்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.அரசியல் அமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக முதல்வர், கூட்டத்தின் முதல் நபராக பேசுகிறார். அவரை பேச விடாமல். மணி அடித்து அமர செய்கின்றனர்.கூட்ட அரங்கில் வேண்டுமானால், காங்கிரசார் மணி அடிக்கலாம். ஆனால், அவர்களின் ஆட்சிக்கு, சாவு மணி அடிக்க மக்கள் காத்திருக்கின்றனர்.
டி.ராஜா, தேசிய செயலர், இந்திய கம்யூ.,:
கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட நாடு இந்தியா. இங்கு, அனைத்துத் தரப்பினருக்கும், சரிநிகர் சமமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். இல்லையேல், கூட்டாட்சி தத்துவத்துக்கே கேடு விளைவிப்பதாகும்.இந்த அடிப்படையில் தான், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வெளிநடப்பை பார்க்க வேண்டியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த, 12வது ஐந்தாண்டு திட்டக் கூட்டம், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, ஒரு மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியது. இக்கூட்டத்தில் பேச, மாநில முதல்வர்களுக்கு, போதிய கால அவகாசம் அளிக்கவேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடந்தபோது, ஒரு மாநில முதல்வருக்கு, 10 நிமிடங்கள் ஒதுக்கி பேச அனுமதித்துஇருக்கலாம். இன்று நிலைமை மாறியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் வேறு,வேறு கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், உரிய நேரம் ஒதுக்கி, மாநில முதல்வர்களுக்கு, பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்.நேரம் போதாது என, கூறுவதை ஏற்க முடியாது. ஒரு நாள் நடக்கும் கூட்டத்தை, மூன்று நாள்கள் நடத்தலாம். முதல் நாள் முதல்வர்கள் பேசலாம்; அடுத்த நாள், மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும் பதில் சொல்லலாம்; இறுதி நாளன்று பிரதமர் நிறைவுரையாற்றலாம்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது சரியானதே. இதை, மத்திய அரசு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். வரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள், தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டங்களில், நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது, மத்திய அரசின் கடமை.
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
உரத்த சிந்தனை: தமிழின் தலையெழுத்து: ஜி.கிருஷ்ணசாமி
உலகத் தமிழரின் ஒரே தலைவர் அவர்களுக்கு...கவிதை நூல் ஒன்றை எழுதுவதற்கு முன், அந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துக் கவிதை எழுதுவது, தமிழ்ப் புலவர்களின் வழக்கம். திருக்குறளுக்கு, வள்ளுவர் பெருமகன் கடவுள் வாழ்த்துப் பாடியது போல. தாங்கள் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர் ஆகையால், இக்கட்டுரைக்கு தங்களையே கடவுளாக்கி மகிழ்ந்துள்ளேன்.
நான் வீரபாண்டிய கட்டபொம்மன் இல்லை. இருப்பினும், தங்களிடம் நான் சில கேள்விகளை கேட்க ஆசைப்படுகிறேன். அவை நியாயமான கேள்விகளாக எனக்கு தோன்றுகின்றன. தங்களைக் கேள்விகள் கேட்க எனக்குத் தைரியம் இருக்கிறதோ, இல்லையோ தார்மீகக் கடமை என்ற ஒன்று இருக்கிறது.
காரணம், நான் சாமானியனாக இருந்து, கோடீஸ்வரன் ஆன பின்பும், என்னை ஒரு சாமானியன் என்று சொல்லிக் கொண்டிருப்பவன் அல்ல. சாமானியர்களோõடு, சாமானியனாக வாழ்பவன்; உங்களை கேள்விகள் கேட்கப் பயப்படுவதற்கு, நான் உங்கள் எதிரியோ அல்லது நான் உங்கள் புகழ்பாடும் சீடனோ அல்ல; உங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரும் அல்ல.
ஏதோ, நானும், மற்ற தமிழர்களும் பெயரே இல்லாத ஓர் ஊரில் பிறந்தவர்கள் போலவும், எங்களுக்குத் தமிழன் எனும் முகவரி இல்லாதது போலவும், தாங்கள் நினைத்துக் கொண்டுள்ளீர்கள். ஒன்றை தயவு செய்து மறந்து விடாதீர்கள். நாங்களும், நீங்கள் பிறந்த அதே தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தான்; நீங்கள் கற்ற அதே தமிழ் தான் நாங்களும் கற்றிருக்கிறோம்.
நீங்கள் சுத்த தமிழன் என்றும், உலகத் தமிழர்களின் ஒரே நிகரற்ற தலைவர் என்றும், உங்களை பாராட்டும் போது, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறீர்களே, உங்கள் மீது அபரிமித நம்பிக்கையும், தெரிந்தோ, தெரியாமலோ அளவற்ற பற்றும், பாசமும் கொண்டுள்ள தமிழர்களுக்குத் தாங்கள் ஆற்றிய, ஆற்றிவரும் அரும்பணிதான் என்னவென்று தெரிந்து கொள்ள, கோடிக்கணக்கான தமிழ் மக்கள் ஆசைப்படுகின்றனர்.
மூச்சுக்கு மூச்சு முன்னூறு முறை தமிழா, தமிழா என்றும் தமிழே, தமிழே என்றும் வெறும் முழக்கமிட்டு விட்டால் மட்டும் போதுமா? தமிழனுக்கும், தமிழ் மொழிக்கும் நிரந்தர நன்மை பயக்கும் வகையில் உருப்படியாக ஏதேனும் செய்துள்ளீர்களா?
தமிழ் மக்களுக்கு செய்துள்ள மகத்தான பணிகளில் முன்னிலை வகிப்பது, ஒவ்வொரு தமிழனையும் குடிகாரனாக ஆக்கியதும், அவன் குடும்பத்தை தெருவில் நிறுத்தியதும் தானே...?
தொலைக்காட்சி பெட்டிகளை, மக்கள் வரிப்பணத்தில் வாங்கி, அதற்கு உங்கள் பெயரிட்டு, வீடுதோறும் வினியோகித்து பாமரத் தமிழர்கள் தங்களை மறந்து, தங்கள் நிலையை மறந்து; தங்கள் எதிர்கால முன்னேற்றத்தை மறந்து; சோம்பேறிகளாக இருக்கச் செய்ததோடு, அரை குறை ஆடை அணிந்து, ஆட்டம் போடும் பெண்களை பார்த்து ரசிக்கவும், தமிழச்சிகள், வக்கிர புத்தியுள்ள மெகா சீரியல்களில் வரும் பெண்களை பார்த்து தங்களையும், அவர்களை போல் நினைக்கவும், செயல்படவும் வைத்துள்ளீர்களே, அது எந்த வகையில் நியாயம்? இதுதான் சுத்த தமிழனுக்குரிய பண்பாடா? இது என் கேள்வி.
ஆனால், விவரம் தெரிந்த தமிழர்கள் சொல்கின்றனர், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்த திறமை தங்களையே சேரும் என்று. ஒன்று உங்கள் சொந்தப் பணத்தில் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்காமல், உடன்பிறப்புகளின் பணத்திலேயே அதை வாங்கி, அவனுக்கே அதை இலவசமாக வழங்குவது போல் வழங்கி, அவனது தலையில் மிளகாய் அரைத்து, உங்கள் சேனல்களை பார்த்து அவனை ரசிக்கும்படி செய்த கில்லாடித்தனம் உங்களை தவிர்த்து வேறு யாருக்கு வரும்?உங்களை கொள்கைப் பித்தன் என்று அடிக்கடி சொல்லி மகிழ்கிறீர்கள்!
"அடைந்தால் திராவிட நாடு; இல்லாவிட்டால் சுடுகாடு' என்று, ஒரு காலத்தில் பட்டி தொட்டிகள், மூலை முடுக்குகளில் எல்லாம் மார்தட்டியவர் தானே நீங்கள்? இப்படி வீர வசனம் பேசிவிட்டீர்களே தவிர, உங்கள் கட்சியை, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்காரன், இல்லாமல் செய்துவிடுவோம் என்று மிரட்டியதும், அதற்கு பயந்துபோன நீங்களும், உங்கள் தலைமையும், சீனப் படையெடுப்பைக் காரணம் காட்டி, "எங்களுக்கு தேச ஒருமைப்பாடுதான் முக்கியம், தனித் திராவிட நாடு இரண்டாம் பட்சம் தான், அது வெறும் திண்ணைப் பேச்சுதான்' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டு தனித் திராவிட நாடு கொள்கையை குழிதோண்டி நீங்கள் புதைத்து விட்டதை நீங்கள் மறந்தாலும், இல்லை மறந்தவர் போல் நடித்தாலும், எங்களைப் போல் உங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்களும், புரிந்து கொண்டவர்களும் மறக்கவில்லையே.
தமிழ், ஆங்கிலத்தோடு விருப்ப பாடமாக என்னைப் போன்றவர்கள், மூன்றாம் மொழியாக இந்தி மொழியை பள்ளியில் பயின்றதுபோல், எங்களுக்கு பின்னால் கல்வி கற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல், இந்திய மொழியான இந்தியை கற்கவிடாமல், தமிழையும், ஆங்கிலத்தையும் மட்டுமே கற்க வைத்தீர்களே, அதனால், தமிழை உங்களால் வளர்க்க முடிந்ததா அல்லது இந்தி மொழி இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோய்விட்டதா? ஆங்கிலம் என்ன நமது முப்பாட்டான் பேசிய மொழியா?
இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள், இந்தியாவின் பொது மொழியான இந்தியை, நம் சந்ததியினரைப் படிக்க விடாமல் செய்துவிட்டீர்களே... அது எந்த வகையில் நியாயம்?
உங்களால் வேலை கொடுக்கப்படாமல் போன பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள், இந்திய ராணுவத்தில் சேர்ந்து, தங்கள் இன்னுயுரைத் தந்து வருகிறார்களே, அவர்கள் ராணுவத்தில் கற்பதும், பேசுவதும் இந்தி மொழிதானே?மற்ற தமிழ் குழந்தைகளை, இந்தி படிக்காதே என்று சொல்லிவிட்டு, உங்கள் பேரக் குழந்தைகளை கான்வென்டுகளில் படிக்க வைத்து, இந்தியை கற்க வைக்கிறீர்களே.
தமிழர்கள் முட்டாள்கள் அல்ல; திறமைசாலிகள்! எத்தனை மொழிகளையும் அவர்களால் கற்க முடியும். தயவுசெய்து அவர்களை முட்டாள்களாகவும், நாதியற்றவர்களாகவும் இனிமேல் ஆக்க நினைக்காதீர்கள்.
சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருந்தாலும், தமிழர்கள் கோடீஸ்வரர்களாகவோ, லட்சாதிபதிகளாகவும் இல்லை. நீங்கள் தீட்டிய மகத்தான திட்டங்களால், நீங்கள் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிற போது, அவர்கள் இன்னும் வறியவர்களாகவே நீடிக்கிறார்கள்! அது ஏன்?இந்திரா அம்மையாருக்குப் பயந்து, அவருடன் சேர்ந்து நீங்களும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததினால் தானே இன்று, நம் மீனவர் சமுதாயம், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்கள் இன்னுயிரையும் பறிகொடுத்த வண்ணம் உள்ளனர்.
இன்று, ஒவ்வொரு தமிழனும் தண்ணீருக்காகவும், மின்சாரத்திற்காகவும், தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்படுவதற்கு நீங்களும் காரணம் என்பதை, உங்களால் மறுக்க முடியுமா? தமிழரின் உரிமையான காவிரி, முல்லைப் பெரியாறு நீரை பெற நீங்கள் உங்கள் அமைச்சர் பதவிகளை, தியாகம் செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. குறைந்த பட்சம் உரத்த குரலையாவது, என்றைக்காவது பார்லிமென்டில் எழுப்பியிருக்கிறீர்களா?
சமச்சீர் கல்வியை மாணவர்கள் அனைவர்க்கும் வழங்குவதில், தவறேதும் இல்லை. ஆனால், சமச்சீர் கல்வியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமானால், ஆரம்ப நிலையிலிருந்தே அக்குழந்தைகளுக்கு, நகர்ப்புற மாணவர் களுக்கு அளிக்கப்படும் அதே தரமான கல்வியை வழங்கி, அதற்கான தகுதியுள்ள ஆசிரியர் களை நியமித்து கற்பிப்பதுதானே முறை? அதை விடுத்து தரமற்ற கல்வியை எல்லா மாணவர் களையும் படிக்க வைப்பது, இருக்கிற நல்ல அம்சங்களையும் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கி யது ஏன்?
மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, அலைவரிசை கொள்ளை என்று கொள்ளை களுக்கு, மேல் கொள்ளைகளை நாட்டில் அரங்கேற்றி, நாட்டு வளத்தை கெடுத்து, வீட்டு வளத்தை பெருக்கி கொண்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுருக்கின்றனவே? மனசாட்சி என்ற சொல்லை தமிழ் அகராதியில் இருந்து நீக்கி விட்டீர்களா?
இந்திய தமிழர்கள் ஒருபுறம் இருக்க, இலங்கை தமிழர்களுக்காக காலம் கடந்து, இப்போது வக்காலத்து வாங்குகிறீர்களே? இதை உங்கள் ஆட்சிக்காலத்தில் ஏன் செய்யவில்லை. பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றாகவும் அல்லவா இருக்கின்றன உங்கள் செயல்பாடுகள். ஒன்று நன்றாக புரிகிறது... தமிழகம் உங்களை போன்றவர்களுக்கு நல்ல விளைச்சல் நிலம். இங்கே பரம்பரை பரம்பரையாக நல்ல விளைச்சலை பெறமுடியும் என்பதுதான் அந்த உண்மை. வாழ்க உங்கள் பற்று; வளர்க தமிழகம் உங்கள் புண்ணியத்தில்...!
ஜி.கிருஷ்ணசாமி,கூடுதல் காவல்துறைகண்காணிப்பாளர் (பணிநிறைவு), எழுத்தாளர், சிந்தனையாளர்
உலகத் தமிழரின் ஒரே தலைவர் அவர்களுக்கு...கவிதை நூல் ஒன்றை எழுதுவதற்கு முன், அந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துக் கவிதை எழுதுவது, தமிழ்ப் புலவர்களின் வழக்கம். திருக்குறளுக்கு, வள்ளுவர் பெருமகன் கடவுள் வாழ்த்துப் பாடியது போல. தாங்கள் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர் ஆகையால், இக்கட்டுரைக்கு தங்களையே கடவுளாக்கி மகிழ்ந்துள்ளேன்.
நான் வீரபாண்டிய கட்டபொம்மன் இல்லை. இருப்பினும், தங்களிடம் நான் சில கேள்விகளை கேட்க ஆசைப்படுகிறேன். அவை நியாயமான கேள்விகளாக எனக்கு தோன்றுகின்றன. தங்களைக் கேள்விகள் கேட்க எனக்குத் தைரியம் இருக்கிறதோ, இல்லையோ தார்மீகக் கடமை என்ற ஒன்று இருக்கிறது.
காரணம், நான் சாமானியனாக இருந்து, கோடீஸ்வரன் ஆன பின்பும், என்னை ஒரு சாமானியன் என்று சொல்லிக் கொண்டிருப்பவன் அல்ல. சாமானியர்களோõடு, சாமானியனாக வாழ்பவன்; உங்களை கேள்விகள் கேட்கப் பயப்படுவதற்கு, நான் உங்கள் எதிரியோ அல்லது நான் உங்கள் புகழ்பாடும் சீடனோ அல்ல; உங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரும் அல்ல.
ஏதோ, நானும், மற்ற தமிழர்களும் பெயரே இல்லாத ஓர் ஊரில் பிறந்தவர்கள் போலவும், எங்களுக்குத் தமிழன் எனும் முகவரி இல்லாதது போலவும், தாங்கள் நினைத்துக் கொண்டுள்ளீர்கள். ஒன்றை தயவு செய்து மறந்து விடாதீர்கள். நாங்களும், நீங்கள் பிறந்த அதே தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தான்; நீங்கள் கற்ற அதே தமிழ் தான் நாங்களும் கற்றிருக்கிறோம்.
நீங்கள் சுத்த தமிழன் என்றும், உலகத் தமிழர்களின் ஒரே நிகரற்ற தலைவர் என்றும், உங்களை பாராட்டும் போது, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறீர்களே, உங்கள் மீது அபரிமித நம்பிக்கையும், தெரிந்தோ, தெரியாமலோ அளவற்ற பற்றும், பாசமும் கொண்டுள்ள தமிழர்களுக்குத் தாங்கள் ஆற்றிய, ஆற்றிவரும் அரும்பணிதான் என்னவென்று தெரிந்து கொள்ள, கோடிக்கணக்கான தமிழ் மக்கள் ஆசைப்படுகின்றனர்.
மூச்சுக்கு மூச்சு முன்னூறு முறை தமிழா, தமிழா என்றும் தமிழே, தமிழே என்றும் வெறும் முழக்கமிட்டு விட்டால் மட்டும் போதுமா? தமிழனுக்கும், தமிழ் மொழிக்கும் நிரந்தர நன்மை பயக்கும் வகையில் உருப்படியாக ஏதேனும் செய்துள்ளீர்களா?
தமிழ் மக்களுக்கு செய்துள்ள மகத்தான பணிகளில் முன்னிலை வகிப்பது, ஒவ்வொரு தமிழனையும் குடிகாரனாக ஆக்கியதும், அவன் குடும்பத்தை தெருவில் நிறுத்தியதும் தானே...?
தொலைக்காட்சி பெட்டிகளை, மக்கள் வரிப்பணத்தில் வாங்கி, அதற்கு உங்கள் பெயரிட்டு, வீடுதோறும் வினியோகித்து பாமரத் தமிழர்கள் தங்களை மறந்து, தங்கள் நிலையை மறந்து; தங்கள் எதிர்கால முன்னேற்றத்தை மறந்து; சோம்பேறிகளாக இருக்கச் செய்ததோடு, அரை குறை ஆடை அணிந்து, ஆட்டம் போடும் பெண்களை பார்த்து ரசிக்கவும், தமிழச்சிகள், வக்கிர புத்தியுள்ள மெகா சீரியல்களில் வரும் பெண்களை பார்த்து தங்களையும், அவர்களை போல் நினைக்கவும், செயல்படவும் வைத்துள்ளீர்களே, அது எந்த வகையில் நியாயம்? இதுதான் சுத்த தமிழனுக்குரிய பண்பாடா? இது என் கேள்வி.
ஆனால், விவரம் தெரிந்த தமிழர்கள் சொல்கின்றனர், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்த திறமை தங்களையே சேரும் என்று. ஒன்று உங்கள் சொந்தப் பணத்தில் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்காமல், உடன்பிறப்புகளின் பணத்திலேயே அதை வாங்கி, அவனுக்கே அதை இலவசமாக வழங்குவது போல் வழங்கி, அவனது தலையில் மிளகாய் அரைத்து, உங்கள் சேனல்களை பார்த்து அவனை ரசிக்கும்படி செய்த கில்லாடித்தனம் உங்களை தவிர்த்து வேறு யாருக்கு வரும்?உங்களை கொள்கைப் பித்தன் என்று அடிக்கடி சொல்லி மகிழ்கிறீர்கள்!
"அடைந்தால் திராவிட நாடு; இல்லாவிட்டால் சுடுகாடு' என்று, ஒரு காலத்தில் பட்டி தொட்டிகள், மூலை முடுக்குகளில் எல்லாம் மார்தட்டியவர் தானே நீங்கள்? இப்படி வீர வசனம் பேசிவிட்டீர்களே தவிர, உங்கள் கட்சியை, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்காரன், இல்லாமல் செய்துவிடுவோம் என்று மிரட்டியதும், அதற்கு பயந்துபோன நீங்களும், உங்கள் தலைமையும், சீனப் படையெடுப்பைக் காரணம் காட்டி, "எங்களுக்கு தேச ஒருமைப்பாடுதான் முக்கியம், தனித் திராவிட நாடு இரண்டாம் பட்சம் தான், அது வெறும் திண்ணைப் பேச்சுதான்' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டு தனித் திராவிட நாடு கொள்கையை குழிதோண்டி நீங்கள் புதைத்து விட்டதை நீங்கள் மறந்தாலும், இல்லை மறந்தவர் போல் நடித்தாலும், எங்களைப் போல் உங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்களும், புரிந்து கொண்டவர்களும் மறக்கவில்லையே.
தமிழ், ஆங்கிலத்தோடு விருப்ப பாடமாக என்னைப் போன்றவர்கள், மூன்றாம் மொழியாக இந்தி மொழியை பள்ளியில் பயின்றதுபோல், எங்களுக்கு பின்னால் கல்வி கற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல், இந்திய மொழியான இந்தியை கற்கவிடாமல், தமிழையும், ஆங்கிலத்தையும் மட்டுமே கற்க வைத்தீர்களே, அதனால், தமிழை உங்களால் வளர்க்க முடிந்ததா அல்லது இந்தி மொழி இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோய்விட்டதா? ஆங்கிலம் என்ன நமது முப்பாட்டான் பேசிய மொழியா?
இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள், இந்தியாவின் பொது மொழியான இந்தியை, நம் சந்ததியினரைப் படிக்க விடாமல் செய்துவிட்டீர்களே... அது எந்த வகையில் நியாயம்?
உங்களால் வேலை கொடுக்கப்படாமல் போன பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள், இந்திய ராணுவத்தில் சேர்ந்து, தங்கள் இன்னுயுரைத் தந்து வருகிறார்களே, அவர்கள் ராணுவத்தில் கற்பதும், பேசுவதும் இந்தி மொழிதானே?மற்ற தமிழ் குழந்தைகளை, இந்தி படிக்காதே என்று சொல்லிவிட்டு, உங்கள் பேரக் குழந்தைகளை கான்வென்டுகளில் படிக்க வைத்து, இந்தியை கற்க வைக்கிறீர்களே.
தமிழர்கள் முட்டாள்கள் அல்ல; திறமைசாலிகள்! எத்தனை மொழிகளையும் அவர்களால் கற்க முடியும். தயவுசெய்து அவர்களை முட்டாள்களாகவும், நாதியற்றவர்களாகவும் இனிமேல் ஆக்க நினைக்காதீர்கள்.
சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருந்தாலும், தமிழர்கள் கோடீஸ்வரர்களாகவோ, லட்சாதிபதிகளாகவும் இல்லை. நீங்கள் தீட்டிய மகத்தான திட்டங்களால், நீங்கள் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிற போது, அவர்கள் இன்னும் வறியவர்களாகவே நீடிக்கிறார்கள்! அது ஏன்?இந்திரா அம்மையாருக்குப் பயந்து, அவருடன் சேர்ந்து நீங்களும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததினால் தானே இன்று, நம் மீனவர் சமுதாயம், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்கள் இன்னுயிரையும் பறிகொடுத்த வண்ணம் உள்ளனர்.
இன்று, ஒவ்வொரு தமிழனும் தண்ணீருக்காகவும், மின்சாரத்திற்காகவும், தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்படுவதற்கு நீங்களும் காரணம் என்பதை, உங்களால் மறுக்க முடியுமா? தமிழரின் உரிமையான காவிரி, முல்லைப் பெரியாறு நீரை பெற நீங்கள் உங்கள் அமைச்சர் பதவிகளை, தியாகம் செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. குறைந்த பட்சம் உரத்த குரலையாவது, என்றைக்காவது பார்லிமென்டில் எழுப்பியிருக்கிறீர்களா?
சமச்சீர் கல்வியை மாணவர்கள் அனைவர்க்கும் வழங்குவதில், தவறேதும் இல்லை. ஆனால், சமச்சீர் கல்வியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமானால், ஆரம்ப நிலையிலிருந்தே அக்குழந்தைகளுக்கு, நகர்ப்புற மாணவர் களுக்கு அளிக்கப்படும் அதே தரமான கல்வியை வழங்கி, அதற்கான தகுதியுள்ள ஆசிரியர் களை நியமித்து கற்பிப்பதுதானே முறை? அதை விடுத்து தரமற்ற கல்வியை எல்லா மாணவர் களையும் படிக்க வைப்பது, இருக்கிற நல்ல அம்சங்களையும் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கி யது ஏன்?
மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, அலைவரிசை கொள்ளை என்று கொள்ளை களுக்கு, மேல் கொள்ளைகளை நாட்டில் அரங்கேற்றி, நாட்டு வளத்தை கெடுத்து, வீட்டு வளத்தை பெருக்கி கொண்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுருக்கின்றனவே? மனசாட்சி என்ற சொல்லை தமிழ் அகராதியில் இருந்து நீக்கி விட்டீர்களா?
இந்திய தமிழர்கள் ஒருபுறம் இருக்க, இலங்கை தமிழர்களுக்காக காலம் கடந்து, இப்போது வக்காலத்து வாங்குகிறீர்களே? இதை உங்கள் ஆட்சிக்காலத்தில் ஏன் செய்யவில்லை. பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றாகவும் அல்லவா இருக்கின்றன உங்கள் செயல்பாடுகள். ஒன்று நன்றாக புரிகிறது... தமிழகம் உங்களை போன்றவர்களுக்கு நல்ல விளைச்சல் நிலம். இங்கே பரம்பரை பரம்பரையாக நல்ல விளைச்சலை பெறமுடியும் என்பதுதான் அந்த உண்மை. வாழ்க உங்கள் பற்று; வளர்க தமிழகம் உங்கள் புண்ணியத்தில்...!
ஜி.கிருஷ்ணசாமி,கூடுதல் காவல்துறைகண்காணிப்பாளர் (பணிநிறைவு), எழுத்தாளர், சிந்தனையாளர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
தமிழக வங்கிகள் திரட்டிய டெபாசிட் 21 சதவீதம் உயர்வு
சென்னை: சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஓராண்டு காலத்தில், தமிழகத்தில் உள்ள வங்கிகள் திரட்டிய டெபாசிட், 20.92 சதவீதம் வளர்ச்சிகண்டு, 4.02 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.இதே காலத்தில், இவ்வங்கிகள் வழங்கிய கடன், 22.01 சதவீதம் வளர்ச்சியடைந்து, 4.73 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.இந்தியாவில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் உள்ள வங்கிகள், திரட்டும் டெபாசிட்டும், வழங்கும் கடன்களின் அளவும் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.கணக்கீட்டு காலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த வங்கிகள், முன்னுரிமை துறைக்கு வழங்கிய கடனின் அளவு, 41 சதவீதம் என்ற அளவிலும், வேளாண் துறைக்கு வழங்கிய கடன் அளவு, 18.27 சதவீதம் என்ற அளவிலும் உள்ளன. இவை, தேசிய அளவில் முறையே, 40 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் உள்ளன.
-தினமலர்
சென்னை: சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஓராண்டு காலத்தில், தமிழகத்தில் உள்ள வங்கிகள் திரட்டிய டெபாசிட், 20.92 சதவீதம் வளர்ச்சிகண்டு, 4.02 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.இதே காலத்தில், இவ்வங்கிகள் வழங்கிய கடன், 22.01 சதவீதம் வளர்ச்சியடைந்து, 4.73 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.இந்தியாவில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் உள்ள வங்கிகள், திரட்டும் டெபாசிட்டும், வழங்கும் கடன்களின் அளவும் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.கணக்கீட்டு காலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த வங்கிகள், முன்னுரிமை துறைக்கு வழங்கிய கடனின் அளவு, 41 சதவீதம் என்ற அளவிலும், வேளாண் துறைக்கு வழங்கிய கடன் அளவு, 18.27 சதவீதம் என்ற அளவிலும் உள்ளன. இவை, தேசிய அளவில் முறையே, 40 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் உள்ளன.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
டிசம்பர் 31ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு
சென்னை: முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு, காலையிலும், வேறு மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு நடக்கிறது.
முதுகலை ஆசிரியர்கள், 2,895 பேரை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், 500 பணியிடங்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, 2,300 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது. தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பாணை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
தேர்வுப் பட்டியலில் இருந்து தகுதியில்லாத, 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
-தினமலர்
சென்னை: முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு, காலையிலும், வேறு மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு நடக்கிறது.
முதுகலை ஆசிரியர்கள், 2,895 பேரை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், 500 பணியிடங்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, 2,300 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது. தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பாணை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
தேர்வுப் பட்டியலில் இருந்து தகுதியில்லாத, 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்குத் தீர்வு என்ன?
மீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களை கடவுளாக போற்றும் நமது நாட்டில் ஏன் இந்த நிலை? நமது கலாச்சாரம் முறையாக பாதுகாக்கப்படவில்லையா? இத்தகைய சீரழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிதான் என்ன? இன்னும் நாம் பழங்கால சட்டங்களையே பின்பற்ற போகிறோமா அல்லது மாற்றம் தான் பிரச்னைக்கு தீர்வா என இந்திய கிரிமினல் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம். ஏதாவது பிரச்னை வரும்போது தான் இதன் வலிகள் நமக்கு உணர முடிகிறது. மனித ஒழுக்கம் குறையும் போது குபீரென பிரச்னைகள் உருவெடுக்கின்றன. நாட்டில் நாள்தோறும் எத்தனையோ குற்றங்கள் நடந்து வந்தாலும் , ஒரு சில குற்ற நடவடிக்கைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதுடன் அனைவராலும் பேசக்கூடிய விஷயமாகி விடுகிறது. காரணம் சம்பவத்தின் தன்மை மற்றும் கொடூர செயல் ஆகியனதான். என்றாலும் பாதிக்கப்பட்ட விஷயம் விழிப்புணர்வு காரணமாக விஸ்வரூபமெடுக்கிறது. இதற்கு சான்றுதான் டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு. போதையில் இருந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர் மீது திணிக்கப்பட்ட இந்த கொடூரம் அனைவரையும் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இவர் உயிர் பிழைத்து விடுவாரா என்ற ஏக்கம் இந்தியா முழுவதும் எழுந்தது. ஆனால் அவர் இன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார்.
இது போன்ற சோகத்திற்கும் , கொடிய விஷயத்திற்கும் முடிவு கட்ட வேண்டுமாயின் என்ன நடவடிக்கை இருக்கலாம் ? சில நாடுகளைப் போல கண்ணுக்கு கண், கல் வீசி கொல் என்று கொண்டு வர முடியுமா இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் இது ஒன்றி போக முடியுமா? அப்படியானால் என்ன தான் தீர்வு ? சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது . இது போன்ற வாசகர்கள் எண்ணம் என்ன என்பதை அறிய தினமலர் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்படுகிறது. இதில் தாங்களும் தங்களின் கருத்துக்களை கீழக்கண்ட இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
-தினமலர்
மீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களை கடவுளாக போற்றும் நமது நாட்டில் ஏன் இந்த நிலை? நமது கலாச்சாரம் முறையாக பாதுகாக்கப்படவில்லையா? இத்தகைய சீரழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிதான் என்ன? இன்னும் நாம் பழங்கால சட்டங்களையே பின்பற்ற போகிறோமா அல்லது மாற்றம் தான் பிரச்னைக்கு தீர்வா என இந்திய கிரிமினல் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம். ஏதாவது பிரச்னை வரும்போது தான் இதன் வலிகள் நமக்கு உணர முடிகிறது. மனித ஒழுக்கம் குறையும் போது குபீரென பிரச்னைகள் உருவெடுக்கின்றன. நாட்டில் நாள்தோறும் எத்தனையோ குற்றங்கள் நடந்து வந்தாலும் , ஒரு சில குற்ற நடவடிக்கைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதுடன் அனைவராலும் பேசக்கூடிய விஷயமாகி விடுகிறது. காரணம் சம்பவத்தின் தன்மை மற்றும் கொடூர செயல் ஆகியனதான். என்றாலும் பாதிக்கப்பட்ட விஷயம் விழிப்புணர்வு காரணமாக விஸ்வரூபமெடுக்கிறது. இதற்கு சான்றுதான் டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு. போதையில் இருந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர் மீது திணிக்கப்பட்ட இந்த கொடூரம் அனைவரையும் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இவர் உயிர் பிழைத்து விடுவாரா என்ற ஏக்கம் இந்தியா முழுவதும் எழுந்தது. ஆனால் அவர் இன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார்.
இது போன்ற சோகத்திற்கும் , கொடிய விஷயத்திற்கும் முடிவு கட்ட வேண்டுமாயின் என்ன நடவடிக்கை இருக்கலாம் ? சில நாடுகளைப் போல கண்ணுக்கு கண், கல் வீசி கொல் என்று கொண்டு வர முடியுமா இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் இது ஒன்றி போக முடியுமா? அப்படியானால் என்ன தான் தீர்வு ? சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது . இது போன்ற வாசகர்கள் எண்ணம் என்ன என்பதை அறிய தினமலர் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்படுகிறது. இதில் தாங்களும் தங்களின் கருத்துக்களை கீழக்கண்ட இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
தேயிலை தோட்டத்தில்15 அடி மலை பாம்பு
கூடலூர்:தனியார் தேயிலை தோட்டத்தில் புகுந்த, 15 அடி மலைப்பாம்பை, வனத்துறையினர் மீட்டு, முதுமலையில் விட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் மேபீல்டு அருகே, ஆதிவாசி குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில், பெண்கள் தேயிலை பறிக்க சென்றனர். அப்போது, நீளமான மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்ததை கண்டு பெண்கள் அலறினர். தகவல் அறிந்த, பிதர்காடு, வனச்சரகர் கணேசனின் உத்தரவுப்படி, காவலர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், 15 அடி மலைப்பாம்பை பிடித்தனர். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், மலைப்பாம்பு விடப்பட்டது.
-தினமலர்
கூடலூர்:தனியார் தேயிலை தோட்டத்தில் புகுந்த, 15 அடி மலைப்பாம்பை, வனத்துறையினர் மீட்டு, முதுமலையில் விட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் மேபீல்டு அருகே, ஆதிவாசி குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில், பெண்கள் தேயிலை பறிக்க சென்றனர். அப்போது, நீளமான மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்ததை கண்டு பெண்கள் அலறினர். தகவல் அறிந்த, பிதர்காடு, வனச்சரகர் கணேசனின் உத்தரவுப்படி, காவலர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், 15 அடி மலைப்பாம்பை பிடித்தனர். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், மலைப்பாம்பு விடப்பட்டது.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
வன்கொடுமைக்கு ஆளான மாணவி உடல் தகனம்; துவாரகாவில் ரகசிய இறுதிச்சடங்கு
சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி உடல் துவாரகாவில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவர் வசித்த மகாவீர் என்க்ளேவ் பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று அதிகாலையில் இறந்தார். அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புதுடில்லி விமான நிலையத்திற்குவந்தது. புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வந்த போது மாணவியின் உடலை பார்க்க பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்.,. தலைவர் சோனியா மட்டும் வந்தனர். உடல் எத்தனை மணிக்கு வருகிறது எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை ரகசியமாகவே வைத்திருந்தனர்.உள்ளூர் எம்.பி., மற்றும டில்லி பா.ஜ., தலைவர் விஜேந்தர்குப்தா ஆகியோருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. துவாராகா மயானத்திற்கு உடல் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். கடும் பனிப்பொழிவு இருந்த நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இந்நேரத்தில் ரகசியமாக தகனம் முடிக்கப்பட்டது. உடல் மக்கள் பார்வைக்கு வைக்கும்போது கூடுதல் பதட்டம் ஏற்படும் என்பதால் மத்திய உளவுத்துறை அறிவுரையின்படி டில்லி போலீசார் தகனத்தை ரகசியமாக முடித்து விட்டதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
சிறப்பு வக்கீல் நியமனம்:
இதற்கிடையில் மாணவிக்கு வ்னகொடுமை செய்த குற்றவாளிகள் மீது 3ம்தேதி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த வழக்கில் மாணவி சார்பில் ஆஜராக சிறப்பு வக்கீலை அரசு நியமித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கொந்தளி்ப்பான நிலை நிலவுவதால், இந்த வழக்கை விரைவில் விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.
பாதுகாப்பு அதிகரிப்பு:
டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது. இந்தியா கேட், ரைசினா ஹில்ஸ் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதிக்கு செல்லும் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ராஜ்பத், விஜய் சவுக், போன்ற பகுதிகளுக்கு செல்லும் பாதைகள்மூடப்பட்டதுடன.
-தினமலர்
சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி உடல் துவாரகாவில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவர் வசித்த மகாவீர் என்க்ளேவ் பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று அதிகாலையில் இறந்தார். அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புதுடில்லி விமான நிலையத்திற்குவந்தது. புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வந்த போது மாணவியின் உடலை பார்க்க பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்.,. தலைவர் சோனியா மட்டும் வந்தனர். உடல் எத்தனை மணிக்கு வருகிறது எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை ரகசியமாகவே வைத்திருந்தனர்.உள்ளூர் எம்.பி., மற்றும டில்லி பா.ஜ., தலைவர் விஜேந்தர்குப்தா ஆகியோருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. துவாராகா மயானத்திற்கு உடல் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். கடும் பனிப்பொழிவு இருந்த நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இந்நேரத்தில் ரகசியமாக தகனம் முடிக்கப்பட்டது. உடல் மக்கள் பார்வைக்கு வைக்கும்போது கூடுதல் பதட்டம் ஏற்படும் என்பதால் மத்திய உளவுத்துறை அறிவுரையின்படி டில்லி போலீசார் தகனத்தை ரகசியமாக முடித்து விட்டதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
சிறப்பு வக்கீல் நியமனம்:
இதற்கிடையில் மாணவிக்கு வ்னகொடுமை செய்த குற்றவாளிகள் மீது 3ம்தேதி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த வழக்கில் மாணவி சார்பில் ஆஜராக சிறப்பு வக்கீலை அரசு நியமித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கொந்தளி்ப்பான நிலை நிலவுவதால், இந்த வழக்கை விரைவில் விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.
பாதுகாப்பு அதிகரிப்பு:
டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது. இந்தியா கேட், ரைசினா ஹில்ஸ் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதிக்கு செல்லும் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ராஜ்பத், விஜய் சவுக், போன்ற பகுதிகளுக்கு செல்லும் பாதைகள்மூடப்பட்டதுடன.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
இன்றும், நாளையும் பூஸ்டர் பேக்குகள் செல்லாது செல்போன் நிறுவனங்கள் அறிவிப்பு
சென்னை : பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக்கொள்வது வழக்கம். முன்பு வாழ்த்து அட்டைகள், தபால் மற்றும் போன் மூலம் வாழ்த்துக்களை பரிமாறி வந்தனர். செல்போன் வருகைக்கு பிறகு வாழ்த்து சொல்வது மிகவும் எளிதாகி விட்டது. உலகில் எந்த பகுதியில் இருந்தும் வாழ்த்துகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
இதற்காக செல்போன் நிறுவனங்கள் எஸ்எம்எஸ் அனுப்ப பூஸ்டர் கார்டு போட்டால் மாதத்துக்கு குறிப்பிட்ட எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம் என்று சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்காக ஒரு மாதம், 2, 3 மாதம் என்று கட்டணங்களில் ‘பூஸ்டர் பேக்குகள்‘ உள்ளன. பண்டிகை நாட்களில் இந்த பூஸ்டர் பேக்குகள் செல்லாது என்று செல்போன் நிறுவனங்கள் அறிவிக்க தொடங்கியுள்ளன.
நாளை புத்தாண்டு பிறக்கிறது. இதற்காக செல்போன் நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன் ஒரு மெசேஜ் வந்தது. அதில், பூஸ்டர் பேக்குகள் இன்று மற்றும் நாளை(ஜனவரி 1ம் தேதி) செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அன்றைய தினம் அனுப்பப்படும் ஒரு உள்ளூர் எஸ்எம்எஸ்க்கு தலா 1, தேசிய எஸ்எம்எஸ்க்கு 1.50 காசு, சர்வதேச எஸ்எம்எஸ்க்கு 5 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் என ஒரு டோல் ஃபிரீ‘ எண் வழங்கப்பட்டுள்ளது. செல்போன் நிறுவனங்களின் எஸ்எம்எஸ் கட்டண அறிவிப்பை தொடர்ந்து ஒவ்வொருவரும் நேற்றே தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு செல்போனில் இருந்து புத்தாண்டு எஸ்எம்எஸ் அனுப்ப தொடங்கி விட்டனர்.
- தினகரன்
சென்னை : பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக்கொள்வது வழக்கம். முன்பு வாழ்த்து அட்டைகள், தபால் மற்றும் போன் மூலம் வாழ்த்துக்களை பரிமாறி வந்தனர். செல்போன் வருகைக்கு பிறகு வாழ்த்து சொல்வது மிகவும் எளிதாகி விட்டது. உலகில் எந்த பகுதியில் இருந்தும் வாழ்த்துகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
இதற்காக செல்போன் நிறுவனங்கள் எஸ்எம்எஸ் அனுப்ப பூஸ்டர் கார்டு போட்டால் மாதத்துக்கு குறிப்பிட்ட எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம் என்று சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்காக ஒரு மாதம், 2, 3 மாதம் என்று கட்டணங்களில் ‘பூஸ்டர் பேக்குகள்‘ உள்ளன. பண்டிகை நாட்களில் இந்த பூஸ்டர் பேக்குகள் செல்லாது என்று செல்போன் நிறுவனங்கள் அறிவிக்க தொடங்கியுள்ளன.
நாளை புத்தாண்டு பிறக்கிறது. இதற்காக செல்போன் நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன் ஒரு மெசேஜ் வந்தது. அதில், பூஸ்டர் பேக்குகள் இன்று மற்றும் நாளை(ஜனவரி 1ம் தேதி) செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அன்றைய தினம் அனுப்பப்படும் ஒரு உள்ளூர் எஸ்எம்எஸ்க்கு தலா 1, தேசிய எஸ்எம்எஸ்க்கு 1.50 காசு, சர்வதேச எஸ்எம்எஸ்க்கு 5 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் என ஒரு டோல் ஃபிரீ‘ எண் வழங்கப்பட்டுள்ளது. செல்போன் நிறுவனங்களின் எஸ்எம்எஸ் கட்டண அறிவிப்பை தொடர்ந்து ஒவ்வொருவரும் நேற்றே தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு செல்போனில் இருந்து புத்தாண்டு எஸ்எம்எஸ் அனுப்ப தொடங்கி விட்டனர்.
- தினகரன்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சுட சுட செய்திகள்...அச்சலா
நீச்சல்குளம் அருகே மேடை அமைக்க தடை
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நிபந்தனைகள்
சென்னை : புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களை கிண்டல், கேலி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தற்காலிக மேடை அமைக்க தகுதி சான்றிதழ் அவசியம் என்று போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை நகரில் உணவு விடுதி மற்றும் கேளிக்கை விடுதி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
உணவு மற்றும் கேளிக்கை விடுதிகள்:
* உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். எல்லா நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட அரங்கங்களில் மட்டுமே கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
* தற்காலிக மேடைகள் அமைக்க, அதன் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம், பொதுப்பணி துறை மற்றும் தீயணைப்பு துறையினரிடமிருந்து தகுதி சான்றிதழ் பெறப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ மேடை அமைத்தல் கூடாது.
* நீச்சல் குளம் செல்லும் வழிகள், சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புதடை ஏற்படுத்த வேண்டும்.
* ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சி முடிவில் போதையில் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டி செல்லவும், வாகனங்களை சாலைகளில் நிறுத்தவும் நிர்வாகத்தினர் அனுமதிக்க கூடாது. விதி மீறல் ஏதேனும் நிகழுமாயின், நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர, மற்ற பகுதிகளில் மது பரிமாறுதல் கூடாது.
* உணவு மற்றும் மதுபான சேவை (உரிமத்துடன்) அதிகாலை 2 மணிக்குள் முடித்து கொள்ள வேண்டும்.
* போதையில் தகராறு செய்பவர்களை உணவு விடுதி நிர்வாகம் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கான கட்டுப்பாடு
* பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசு வெடித்தல் கூடாது.
* பெண்களிடம் கேலி, கிண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* வர்ணப் பொடிகள், வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
* குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் லைசன்ஸ் ரத்து செய்யப்படுவதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
* அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* கடலுக்குள் இறங்கி விளையாடுதல் மற்றும் படகுகளில் செல்வதை தவிர்த்தல் வேண்டும்.
இவ்வாறு போலீசார் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
-தினகரன்
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நிபந்தனைகள்
சென்னை : புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களை கிண்டல், கேலி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தற்காலிக மேடை அமைக்க தகுதி சான்றிதழ் அவசியம் என்று போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை நகரில் உணவு விடுதி மற்றும் கேளிக்கை விடுதி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
உணவு மற்றும் கேளிக்கை விடுதிகள்:
* உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். எல்லா நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட அரங்கங்களில் மட்டுமே கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
* தற்காலிக மேடைகள் அமைக்க, அதன் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம், பொதுப்பணி துறை மற்றும் தீயணைப்பு துறையினரிடமிருந்து தகுதி சான்றிதழ் பெறப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ மேடை அமைத்தல் கூடாது.
* நீச்சல் குளம் செல்லும் வழிகள், சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புதடை ஏற்படுத்த வேண்டும்.
* ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சி முடிவில் போதையில் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டி செல்லவும், வாகனங்களை சாலைகளில் நிறுத்தவும் நிர்வாகத்தினர் அனுமதிக்க கூடாது. விதி மீறல் ஏதேனும் நிகழுமாயின், நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர, மற்ற பகுதிகளில் மது பரிமாறுதல் கூடாது.
* உணவு மற்றும் மதுபான சேவை (உரிமத்துடன்) அதிகாலை 2 மணிக்குள் முடித்து கொள்ள வேண்டும்.
* போதையில் தகராறு செய்பவர்களை உணவு விடுதி நிர்வாகம் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கான கட்டுப்பாடு
* பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசு வெடித்தல் கூடாது.
* பெண்களிடம் கேலி, கிண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* வர்ணப் பொடிகள், வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
* குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் லைசன்ஸ் ரத்து செய்யப்படுவதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
* அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* கடலுக்குள் இறங்கி விளையாடுதல் மற்றும் படகுகளில் செல்வதை தவிர்த்தல் வேண்டும்.
இவ்வாறு போலீசார் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
-தினகரன்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Page 34 of 37 • 1 ... 18 ... 33, 34, 35, 36, 37
Similar topics
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» வரலாற்றில் இன்று-அச்சலா
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!
» சில செய்திகள்
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
» வரலாற்றில் இன்று-அச்சலா
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!
» சில செய்திகள்
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
Page 34 of 37
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|