ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

+11
அசுரன்
DERAR BABU
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
Muthumohamed
ஜாஹீதாபானு
றினா
அச்சலா
15 posters

Page 31 of 37 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 37  Next

Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Wed Dec 26, 2012 10:34 pm

நான்காவது இன்னிங்சை துவக்கினார் நரேந்திர மோடி: பதவியேற்பு விழாவில் ஜெ.,


ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தின் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 182 இடங்களில் 115ஐ கைப்பற்றி ஆளும் பா.ஜ., தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்தது. குஜராத் சட்டசபை பா.ஜ., தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, குஜராத் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று காலை நடந்தது. இதற்காக ஆமதாபாத்தில் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‌‌மொத்தம் 1 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்பு விழாவையொட்டி, மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இதற்காக அவர் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஆமதாபாத் சென்றடைந்தார். சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். நரேந்திர மோடிக்கு, கவர்னர் கமலா பெனிவால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், இன்று காலை தனது டுவிட்டர் இணையதளத்தின் வாயிலாக தொண்டர்களிடையே உரையாடிய மோடி, எதிர்கால இந்தியா சிறப்பாக அமைவதற்கான ரகசியம், அதன் ஒருங்கிணைப்பு மற்றும் உறுதிப்பாட்டிலேயே உள்ளதாக தெரிவித்துள்ளார். மோடியின் இந்த பேச்சு, தேசிய அளவில் அவர் தன்னை நிலைநிறுத்துவதற்கான வழிகளை நோக்கி செல்வதாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Wed Dec 26, 2012 10:35 pm

ஈவ்-டீசிங் செய்வோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் : உ.பி., அரசு அதிரடி
அலகாபாத் : ஈவ்-டீசிங் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பெண்களை பாதுகாக்க சட்டங்களை கடுமையாக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் மற்றவர்களுக்கும் பயம் வரும் என உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

புதிய நடவடிக்கையின் பின்னணி:

உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் பதவி ஏற்ற பிறகு தேர்தலில் அவர் அளித்த வாக்குறுதிப்படி சட்ட ஒழுங்கு சீரமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அகிலேஷ் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த 10 மாதங்களில் 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரேதசத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்கள் குறித்து ஆபாச கருத்துக்களை வெளியிட்ட இளம் தம்பதியரை மாணவர்கள் பொது இடத்தில் கடுமையாக தாக்கி உள்ளனர். இது தொடர்பாக 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் தேசிய பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கப்பட உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் ஏற்கனவே கற்பழிப்பு வழக்கில் ஈடுபட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான அகிலேஷின் திட்டங்கள் :

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைப்பேசி எண்ணான 1090 திட்டத்தை அகிலேஷ் கடந்த மாதம் துவக்கி வைத்தார். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் லக்னோவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அவசர தொலைப்பேசி எண் திட்டத்தின் கீழ் இது வரை 61,000 அழைப்புகள் பெறப்பட்டு, பெண்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 15,000 தொலைப்பேசி அழைப்புகள் அறிமுகமில்லாத நபரிடம் இருந்து வந்த ஆபாச அழைப்புகள் ஆகும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை :

டில்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிரான குரல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து பெரில்லி கோர்ட் டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வந்தாலும் இது போன்று தண்டனை பெறும் குற்றங்களும், வெளியே தெரிய வரும் சம்பவங்களும் மிக மிக அரிது என அரசு தரப்பு வழக்கறிஞர் தயாகி தெரிவித்துள்ளார். இருப்பினும் இது போன்ற வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Wed Dec 26, 2012 10:36 pm

விரைவில் புதிய அறிவியல் கொள்கை: மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்

புதுடில்லி: அறிவியல் துறையில் பெண்களின் பங்கு மற்றும் வரும் 2020-ம் ஆண்டில் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக உருவாவது குறித்த கொள்கைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு: வரும் ஜனவரி 3-ம் தேதி மேற்குவங்க மாநில தலைநகர் ‌கோல்கட்டாவில் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேச உள்ளார். அப்‌போது அறிவியல்,தகவல் மற்றும் அறிவியல் துறையில் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்துவது போன்ற கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவை அதிகரிப்பது குறித்த அறிவிப்பும் கொள்கை முடிவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஓப்புதல்: கடந்த 2003-ம் வகுக்கப்பட்ட அறிவியல் கொள்கை தற்போது பல்வேறு மாறுதல்களுடன் புதிய கொள்கையாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இன்று பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வரும் 2020-ம் ஆண்டிற்குள் அறிவியல்துறையில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தி்யா நிலைநிறுத்திக்கொள்ள புதிய கொள்கை பயன்படும் என இத்துறை அதிகாரிகள் நம்‌பிக்கை தெரிவித்துள்ளனர்.


-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Wed Dec 26, 2012 10:37 pm

ஜப்பான் புதிய பிரதமருக்கு மன்மோகன் வாழ்த்து

புதுடில்லி: ஜப்பான் புதிய பிரதமர் ஷின்சோ அபேவுக்கு பிரதமர் மன்‌மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பானில் நடந்த பொதுத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான சுதந்திர ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. இக்கட்சியைச் சேர்ந்த ஷின்சோ அபே பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இந்தியா சார்பில் அபேவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், ஜப்பான் பிரதமராக தேர்வு பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள், உங்களது வெற்றியால் உலகளவிலான நட்புறவு நாடு இந்தியா என்ற முறையில், இந்தியா- ஜப்பான் இரு தரப்பிலும் உறவு மேன்மேலும் வலுப்பெறும். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Wed Dec 26, 2012 10:38 pm

தென்காசி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தங்கசாமி தலைமையில் சோதனை நடந்து வருகிறது.


-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Wed Dec 26, 2012 10:38 pm

12ம் நூற்றாண்டை சேர்ந்த ஐம்பொன் சிலைகள் மீட்பு

நாகை: காணாமல் போன பலகோடி மதிப்பிலான 12ம் நூற்றாண்டை சேர்ந்த ஐந்து ஐம்‌பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்குளம் ஊரில் உள்ளது எழுமேஸ்வர உடையார் கோயில். இந்த கோவிலில் கடந்த 1.4.12 அன்று 6 ஐம்பொன் சிலைகள் களவு போயின. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வேதாரண்யம் அருகே ஏ.எஸ்.பி. சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரை போலீசார் விசாரித்ததில் அவர்கள் இருவரும் தான் சிலையை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் அம்மாபேட்டையை சேர்ந்த கமலக்கண்ணன்(26), திருவாரூரை சேர்ந்த தினேஷ்(23) என்பதும், சிலையை சென்னை மகாலிபுரத்தை சேர்ந்த பத்பநாபன் என்ற கலைப்பொருட்களை விற்பனை செய்து வருபவரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பத்மநாபனிடம் இருந்த பெருமாள் சிலை (3அடி), லட்சுமணன் சிலை (3 1/2 அடி), குருவாயூரப்பன் சிலை(1 1/2 அடி), ஸ்ரீதேவி - பூதேவி சிலை (2 அடி) ஆகிய ஐந்து ஐம்பொன் சிலைகளையும் மீட்டனர். மேலும் ஒரு சிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.


-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Wed Dec 26, 2012 10:42 pm

மலேஷியாவில் வெள்ளம்; 14 ஆயிரம் பேர் தவிப்பு

கோலாலம்பூர்: மலேஷியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 14 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழை காரணமாக டெரன்கனு, பஹாங், கெலன்டன் போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களிலிருந்து சுமார் 13,746 பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வெள்ளத்தின் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பஹாங் செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.


-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Wed Dec 26, 2012 10:43 pm

மன ஆறுதல் போதாது; பண ஆறுதல் வேண்டும்; முதல்வருக்கு விவசாயிகள் வேண்டுகோள்
"விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம்' என்ற முதல்வரின் அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, மன ஆறுதலை தந்துள்ள நிலையில், பயிர் இழப்பீட்டு தொகையை அதிகரித்து, பண ஆறுதல் வழங்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் காவிரி தண்ணீர் தராமல், கர்நாடகா ஏமாற்றியதால், டெல்டா மாவட்டங்களில், 11.20 லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.நிலம், நகை உள்ளிட்டவற்றை அடகு வைத்து விவசாயம் செய்த நிலையில், கண்முன்னே பயிர்கள் கருகுவதால், மனம் உடைந்த விவசாயிகள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருகின்றனர்.இப்பிரச்னையை கையில் எடுத்துள்ள அரசியல்கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், பயிர் இழப்பீடு வழங்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், "சம்பா பயிர் இழப்பு ஏற்பட்டால், அரசு உரிய நிவாரணம் வழங்கும். பயிர் இழப்பீடாக ஏக்கருக்கு, 13.7 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். எனவே, விவசாயிகள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்தார்.பயிர் கருகுவதால் என்ன செய்வது என தெரியாமல், மன உளைச்சல் அடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முதல்வரின் அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், முதல்வர் அறிவித்துள்ள நிவாரணத்தொகை, பயிர் இழப்பை சரி செய்வதற்கு போதுமானதாக இருக்காது என, விவசாயிகள் கருதுகின்றனர். எனவே, பயிர் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியதாவது:முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு உண்மையிலேயே விவசாயிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மன ஆறுதலை தருகிறது. இந்த அறிவிப்பை, 20 நாட்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தால், உயிர் இழப்பை தடுத்திருக்க முடியும். 13.7 ஆயிரம் ரூபாயை, பயிர் இழப்பீடாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயியும் ஏக்கருக்கு, 20 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். அதனால், அரசு வழங்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை. இந்த பணத்தால், அடகு வைத்த பொருட்களை மீட்கவோ, குடும்பத்தை காப்பாற்றவோ முடியாது.எனவே, பயிர் இழப்பீட்டு தொகையை, ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வழங்கினால் மட்டுமே, வரும் காலங்களில், விவசாயிகளையும், விவசாயத்தையும் அரசால் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -தினமணி


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed Wed Dec 26, 2012 11:59 pm

அச்சலா wrote:
Muthumohamed wrote:இல்லை உங்களை காணததின் காரணமாக இன்று தான் துவங்கினேன்
எனக்கு முன்பே தனி திரி துங்கலாம் என்று இருந்தேன்
அதை நமது இனியவரின் ஆலோசனைப்படி இன்று துவங்கினேன்
வாழ்த்துக்கள்.தொடருங்கள் உங்கள் நல்ல ஆக்கங்களை.. மகிழ்ச்சி

உங்களின் ஆசியுடன் தொடருவேன் அம்மா



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 27, 2012 12:12 am

Muthumohamed wrote:
அச்சலா wrote:
Muthumohamed wrote:இல்லை உங்களை காணததின் காரணமாக இன்று தான் துவங்கினேன்
எனக்கு முன்பே தனி திரி துங்கலாம் என்று இருந்தேன்
அதை நமது இனியவரின் ஆலோசனைப்படி இன்று துவங்கினேன்
வாழ்த்துக்கள்.தொடருங்கள் உங்கள் நல்ல ஆக்கங்களை.. மகிழ்ச்சி
அருமையிருக்கு சூப்பருங்க

உங்களின் ஆசியுடன் தொடருவேன் அம்மா
:வணக்கம்: நன்றி


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 31 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 37 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum