ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

+11
அசுரன்
DERAR BABU
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
Muthumohamed
ஜாஹீதாபானு
றினா
அச்சலா
15 posters

Page 4 of 37 Previous  1, 2, 3, 4, 5 ... 20 ... 37  Next

Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 2:28 pm

சிறையில் பூரி சுட அனுமதி கோரி மரத்தில் ஏறி 8 கைதிகள் அட்டகாசம்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Tamil_News_large_600875

சேலம்:சேலம் மத்திய சிறையில், கைதிகள் பூரி சுட்டு சாப்பிட, அதிகாரிகள் தடை விதித்ததால், ஆத்திரமடைந்த கைதிகள், எட்டு பேர், பூரி சுட தங்களுக்கு அனுமதி வழங்க கோரி, நேற்று சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.அதை அடுத்து அவர்களிடம் சிறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்திய பின், போராட்டத்தை கை விட்டனர்.

கஞ்சா:

சேலம் மத்திய சிறையில், 745 கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மத்தியில் தடை செய்யப்பட்ட மொபைல் போன், கஞ்சா ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்தது. அது மட்டுமின்றி, சிறையில் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறைகளில், பூரி உள்ளிட்ட பொருட்களை சமைத்து சாப்பிட்டு வந்ததாக தெரிந்தது.இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள்,சோதனை மேற் கொள்ள முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன் ஜெயிலர் ஊர்மிளா, சிறையில் உள்ள அறைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது, பிளாக் எண். 8ல், உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ள, சேலம் மாவட்டம் ஓமலூரை அர்ஜுனன், 24, அறையில் பூரி சுட்டதை கண்டு பிடித்தார். அதை அடுத்து அவனை எச்சரித்த ஜெயிலர் ஊர்மிளா, அறையை மாற்றவும் உத்தரவிட்டார். பூரி சுட வசதியாக எல்லாப் பொருட்களும் கிடைத்தது எப்படி என்றும் விசாரித்தார்.

இடமாற்றம்:

நேற்று முன்தினம், அர்ஜுனன், வேறு அறைக்கு மாற்றப்பட்டான். அவன் மட்டுமின்றி, அவன் அறையில் அடைக்கப்பட்டு இருந்த பிற கைதிகளும் வேறு அறைக்கு, மாற்றம் செய்யப்பட்டனர்.நேற்று காலை, வழக்கம் போல் அறையில் இருந்து வெளியேறிய கைதிகளில், அர்ஜுனன், திடீர் என, பிளாக் எண். 8, அருகே இருந்த மரத்தில் ஏறி, தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தான். அவனுக்கு ஆதரவாக ஏழு பேர், மரத்தில் ஏறி தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

மேலும், அவர்கள், தங்களின் அறைகளில் சோதனை நடத்தக் கூடாது; பூரி உள்ளிட்ட உணவுகளை சமைத்து சாப்பிட அனுமதிக்க வேண்டும்; மேலும், மீண்டும் ஒரே அறையில், தங்களை அடைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இவர்களிடம் ஜெயிலர் ஊர்மிளா பேச்சுவார்த்தை நடத்தினார்.கண்காணிப்பாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால், மட்டுமே போராட்டத்தை கை விடுவோம் என, தெரிவித்தனர். அதை அடுத்து கண்காணிப்பாளர், பேச்சுவார்த்தை நடத்தி, கைதிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
விசாரணை:

கைதிகளின் இந்த திடீர் போராட்டத்தின் பின்னணி குறித்து, சிறைத் துறை அதிகாரிகளுடன், போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கைதிகளை போராட்டத்துக்கு தூண்டியது, தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் கலவர வழக்கில் கைதாகி, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ரஜினிகாந்த் என்பது தெரிய வந்துள்ளது.

அதை அடுத்து ரஜினிகாந்த் உட்பட, தற்கொலை மிரட்டலில் ஈடுபட்ட எட்டு கைதிகளையும், வேறு சிறைக்கு மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 2:29 pm

வேலூர் சிறையில் ரூ.1,38 000 பறிமுதல்

வேலூர்: வேலூர் சிறையில் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மத்திய சிறையில் மாவட்ட எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் 5 டி.எஸ்.பி., 138 போலீசார் ஈடுபட்டனர். இந்த சோதனை அதிகாலை 6.30 மணி முதல் காலை 9.30 வரை நீடித்தது. அப்போது கைதிகள் அறையில், ரூ. ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் பணம், 5 சிம்கார்டுகள், 10 மொபைல்கள், 138 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 2:30 pm

காவிரி நீர் தமிழகம் வந்தது

மேட்டூர்: கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். இன்று மாலைக்குள் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, கர்நாடகா 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 2:31 pm

காவிரி விவகாரம்: மாண்டியாவில் இன்று பந்த்

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் இன்று மாண்டியா மாவட்டத்தில் பந்த் நடக்கிறது. இதையொட்டி கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு பலத்த போலீ்ஸ் பாதுகாப்பு போடப்பட்டு்ள்ளது. மேலும் பல்வேறு கன்னட மற்றும் விவசாய அமைப்புகள், வீட்டிற்கு ஒருவர் பந்த்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், கடைகளை அடைக்கவும் வலியுறுத்தியுள்ளளனர்.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 2:32 pm

நாகை அருகே ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

நாகை: நாகை அருகே பள்ளம் தோண்டிய போது, 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தானந்தம் (50). கொத்தனார். இவர் தனது வீட்டின் பின்புறத்தில் பள்ளம் தோண்டிய போது, அதில் ஒன்றரை அடி உயர ஐம்பொன்னால் ஆன விநாயகர், 2 அடி உயர வள்ளி மற்றும் ஒரு திருவாச்சி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. இது தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 2:34 pm

நிலத்தடியில் அமெரிக்கா அணுகுண்டு சோதனை

வாஷிங்டன்: நிலத்தடியில் அணுகுண்டு சோதனையை நடத்தி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தில் நிலத்தடியில் அமெரிக்கா இந்த சோதனையை நடத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 27வது முறையாக அமெரிக்கா அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளதாகவும், வாஷிங்டனை பாதுகாக்கும் நோக்கில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 2:37 pm

ஏழையாகி விட்டதாக கருதும் பிரான்ஸ் மக்கள்

பாரிஸ்:பிரான்ஸ் நாட்டில் உள்ள, பெரும்பாலான மக்கள், தங்களை ஏழைகளாகக் கருதுகின்ற னர்.உலகின் வளர்ந்த நாடுகளாகக் கருதப்பட்ட,ஐரோப்பிய நாடுகள்,தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.வேலையில்லா திண்டாட்டம், ஆட்குறைப்பு, மானியங் கள் வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளால், அவதியுறும் ஐரோப்பிய மக்கள், தாங் கள் ஏழைக ளாகி விட்டதாகக் கருதுகின்றனர்.ஐரோப்பிய வர்த்தக பத்திரிகை இது குறித்து சமீபத்தில், ஆய்வு மேற்கொண்டது.

மாதச் சம்பளம் வாங்குவோர், கைத்தொழில் செய்வோர், தற்போதைய பொருளாதார நெருக் கடியால் தாங்கள் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளனர். டாக்டர்கள், இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளாக இருப்பவர்கள், தாங்களும் பொருளாதார ரீதியாக நலிவடைந்து விட்ட தாக தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் உள்ள, 50 சதவீதம் பேர், ஏழையாகி விட்டதாகவும், இன்னும் நிலைமை மோசமாகி விடுமோ என்று பயப்படுவதாகவும், கருத்து தெரிவித்துள்ளனர்.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sun Dec 09, 2012 8:58 am

வட ‌கொரியா ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

சியோல்:வடகொரியா விண்வெளியில் ‌ராக்கெட் ‌ஏவுதலை ஒத்தி வைத்துள்ளதாக கொரிய ஏஜென்சி செய்தி தெரிவிக்கிறது.தொழில் நுட்ப காரணங்களால் ராக்‌கெட் அனுப்புவதில் சி்க்கல் உள்ளதால் தற்சமயம் ராக்கெட் ஏவுதல் ஒத்து வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கூறியபடி டிசம்பர் 10 மற்றும் 22 தேதிகளில் அனுப்ப இயலாது என ரிவிக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் அதற்காக கொரிய விண்வெளி குழு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ராக்கெட் அனுப்புவது குறித்து தீவிரமாக செயல்பட்டுவருகிறார்கள். தற்‌போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அக்‌குழு தெரிவிக்கிறது.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sun Dec 09, 2012 8:58 am

இந்திய-சீன எல்லை பிரச்சினை:குர்ஷித்

பருக்காபாத்:இந்திய- சீன எல்லைப்பிரசசினை குறித்து இருநாடுகளிடையே சுமூகமாக பேச்சவார்த்தை நடப்பதாக மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:சீனாவில் வரக்கூடிய புதிய தலைவர்களால் இருதரப்பு பேச்சுவார்த்தை நற்பயனாக நடக்கும் என நம்பிக்க‌ை தெரிவித்தார்.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sun Dec 09, 2012 8:59 am

மாணவர்களை கடத்த முயற்சி:3 வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தேவனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டு விளாரத்தை சேர்ந்தவர் துரைசாமி, லட்சுமி தம்பதியரின் மகன் ஆனந்தகுமார், 6, வெங்கடாஜலம், ஜெயலட்சுமி மகன் விஜய், 7. இருவரும், அங்குள்ள ஊராட்சி துவக்கப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கின்றனர்.அதேபோல், பொன்னுசாமி, தனலட்சுமி மகன் கேசவன், 7, முதல் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை, 11 மணிக்கு, சிறுவர்கள் மூன்று பேரும், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, “போர்டு’ காரில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், மாணவர்களை பிடித்து காரில் ஏற்றி, கடத்திச் சென்றனர்.அப்போது, மாணவர்கள் கூச்சலிட்டனர். அருகில் வேலை செய்து கொண்டிருந்த, தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், விபரீதத்தை உணர்ந்து, காரை வழிமறித்து மடக்கிப் பிடித்தனர்.காரில், மூன்று வாலிபர்கள் இருந்தனர். அவர்களை பிடித்த பொதுமக்கள், மாணவர்களை பத்திரமாக மீட்டனர். அதையடுத்து, மூன்று வாலிபர்களையும், வாழவந்திநாடு போலீஸில் ஒப்படைத்தனர். போலீசார், வாலிபர்களிடம் எவ்வித விசாரணையும் நடத்தாமல் இருந்ததால், ஆத்திரமடைந்த, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, மாணவர்களை கடத்த முயன்ற காரை பறிமுதல் செய்து, வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 37 Previous  1, 2, 3, 4, 5 ... 20 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum