ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

+11
அசுரன்
DERAR BABU
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
Muthumohamed
ஜாஹீதாபானு
றினா
அச்சலா
15 posters

Page 16 of 37 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 26 ... 37  Next

Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 10:48 pm

இடஒதுக்கீடு மசோதாவுக்கு அ.தி.மு.க., ஆதரவு

புதுடில்லி: பதவி உயர்வில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்துள்ளது.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 10:49 pm

ராகுல் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும்: மோடி

சித்பூர்: குஜராத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக, ராகுல் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் என அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சித்பூரில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து அம்மாநில முதல்வர் மோடி பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், குஜராத் சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய வரும் முன்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தனது தந்தை பிரதமர் அல்ல என்றும், எனினும் தன் மீது குஜராத் மக்கள் மிகவும் அன்பு வைத்திருப்பதாகவும் மோடி கூறினார். மோடி பிரசாரம் செய்த இடத்திற்கு 30 கி.மீ., தொலைவில், அவர் பேசுவதற்கு சில மணி நேரம் முன்பாக ராகுல் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 10:50 pm

குமரியில் புலிகள் சரணாலயம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் புதிய புலிகள் சரணாலயம் அமைக்க வனத்துறை பரிந்துரை செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய புலிகள் சரணாலயம் அமைப்பது தொடர்பாக மாவட்ட வனத்துறையிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் மொத்தமுள்ள 50 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பில், 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் புதிய புலிகள் சரணாலயம் அமைக்க வனத்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 10:51 pm

பரமக்குடியில் தமிழகத்தின் முதல் சோலார் பூங்கா

சென்னை: பரமக்குடியில் அரசு தனியார் பங்களிப்பு மூலம் சுமார் ரூ. 920 கோடி செலவில் 100 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி பூங்கா துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் ராசி கிரீன் எனர்ஜி நிறுவன இயக்குநர் நரசிம்மன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில், 500 ஏக்கர் பரப்பளவில், இந்த பூங்கா அமையவுள்ளது.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 10:52 pm

சமாஜ்வாடி எம்.பி.,க்கள் வெளிநடப்பு

புதுடில்லி: பதவி உயர்வில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமாஜ்வாடி எம்.பி.,க்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 10:53 pm

தமிழக அரசின் இலவச லேப்-டாப் கேரளாவில் ரூ.6,000க்கு விற்பனை

இடுக்கி :பிளஸ் 2 மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கிய, இலவச லேப்-டாப்கள், கேரளாவின் பல இடங்களிலும், 6,000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. அதே போல், இலவச கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டிகளும், பலரது வீடுகளில் பயன்பாட்டில் உள்ளன.

கடந்த ஆண்டு, தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடந்த போது, அ.தி.மு.க., சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப் - டாப்களும், வீடுகளுக்கு மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் போன்றவையும் இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.தேர்தலில் வெற்றி பெற்ற பின், அ.தி.மு.க., அரசு சார்பில், அறிவித்தபடி, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச லேப் - டாப்களும், வீடுகளுக்கு மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் போன்றவையும், வழங்கப்பட்டு வருகின்றன.தற்போதைய தமிழக அரசால், வழங்கப்பட்ட இவையும்; முந்தைய, தி.மு.க., அரசால் வழங்கப்பட்ட, இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும், கேரளாவின் பல பகுதிகளிலும் விற்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசால் வழங்கப்பட்ட இவை எல்லாம், அடுத்த சில நாட்களிலேயே, கேரளாவில் விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லேப்-டாப், கிரைண்டர், மிக்சி, மின்விசிறி போன்றவற்றில் முதல்வர் ஜெயலலிதா படமும், தமிழக அரசின் சின்னமும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும் இடம் பெற்றிருக்கும். இவைதான், கேரளாவில் விற்கப்பட்டுள்ளன. கேரளா, இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பலனின் வீடுகளில், இவை புழக்கத்தில் உள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, லேப்-டாப்களில் பல, பயன்படுத்தப்படாமலேயே, 6,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகள், கசாப்பு கடைகளுக்கு விற்கப்பட்டது தொடர்பாக, சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 10:56 pm

இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது ; அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர்
லக்னோ: பார்லி.,யில் இன்று தாக்கலான அரசு பணியில் இட மசோதா ஒதுக்கீட்டு திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுக்க துவங்கியிருக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உ .பி ., மாநிலத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் குதித்தனர் தொடர்ந்து பேராடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பு நாடு முழுவதும் கிளம்பும் என்றும் தெரிகிறது. இதனால் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அரசு பணியாளர்கள் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கலானது . இதற்கு முலாயம் சிங் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் பிரதமரை முலாயம்சிங் சந்தித்து பேசியும் பயனில்லை.

சுமார் 18 லட்சம் பேர் :

இந்நிலையில் முலாயம்சிங் மகன் ஆளும் உத்திரபிரதேசத்தில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர் சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளளர். சுமார் 18 லட்சம் பேர் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபடுவர். இதனால் அடிப்படை பணிகள் பாதிக்கும் நிலை ஏற்படும். இன்று முதல் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஸ்டிரைக்கில் இறங்கினர். இது போன்று நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பும் என தெரிகிறது.

திறமைசாலிகள் பாதிக்கப்படுவர் என்று பா.ஜ., மற்றும் முலாயம்சிங் கட்சியினர் எதிர்க்கின்றனர். அதே நேரத்தில் பகுஜன்சமாஜ்கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுள்ளார்.

-தின மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 10:57 pm

சீனா - ஜப்பான் விமானங்கள் மோதல்; பதட்டம்: மீன்வளம் கொண்ட தீவு பகுதி உரிமை யாருக்கு?

பீஜிங்: சீனாவின் கிழக்கு கடல் பகுதியை ஒட்டிய தீவுகள் யாருக்கு என்ற உரிமை பிரச்னை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய பகுதியில் இன்று சீன விமானம் நுழைந்ததாகவும், இதனை ஜப்பான் போர்க்கப்பல் மூலம் விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருநாடுகள் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் கிழக்கே உட்சோரித் , சென்காகு, தீவுப்பகுதி உள்ளிட்ட 5 தீவுகளை ஜப்பானும்,சீனாவும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மீன்வளம் மிக்க இத்தீவு பகுதி தங்களுடையது என சீனாவும், நிலப்பரப்பின்படி கடந்த 100 ஆண்டுகளாக தங்களுடைய பகுதி என ஜப்பானும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் இரு நாடுகளும் இதனை அரசியல் பிரச்சனையாக கையில் எடுத்துள்ளன.



அத்துமீறிநுழைந்தனர் :
சீனாவைச் சேர்ந்த சிலர் சமீபத்தில் இத்தீவுப்பகுதிக்குள் அத்துமீறிநுழைந்ததாக ஜப்பான் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் விரட்டியடிக்கப்பட்டனர். சீனாவின் இந்த செயலுக்கு ஜப்பான் பிரதமர் யாஷிஹிட்டோ நௌடாவும் கண்டனம் தெரிவித்தார்.
ஜப்பானைச்சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் பார்லிமென்ட் உறுப்பினர்கள் சிலர் படகு மூலமாக இத்தீவுக்கு அத்துமீறி சென்று அத்தீவின் மையப்பகுதியில் தங்களது தேசியக்கொடியினை நட்டு வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போர்ரக விமானம் அனுப்பி வைப்பு:

இதனையடுத்து ஜப்பான் போர்ரக விமானங்களை தீவுகள் கொண்ட ஜப்பான் எல்லை பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டு செயலர் ஒருவர் தெரிவித்தார். ஜப்பான் வான் எல்லை பகுதியில் சீன விமானம் நுழைந்ததற்கு அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனாவின் போர் விமானம் நுழைந்தது. ஜப்பான் போர்க்கப்பல் விரட்டியடித்தது, தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

-தின மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 10:58 pm

தூக்கு கயிறை எதிர்நோக்கி : 477கைதிகள்

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளில் தூக்கு ‌கயிறை நோக்கி காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்‌கை 477 என ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இம்மாதம் முதல் தேதி வரையிலான நிலவரப்படி உ.பி., மாநில சிறைகைதிகளில் சுமார் 174 கைதிகள் தூக்கு கயிறை எதிர்நோக்கியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் 61 கைதிகளும் காத்தகிருக்கின்றனர். மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்டான். அவன் உயிருடன் இருந்த வரையில் தங்கவைக்கப் பட்டிருந்த சிறையில் தற்போதுள்ள நிலவரப்படி சுமார் 50 கைதிகளின் எண்ணிக்கையுடன் மூன்றாம் இடத்தை வகி்க்கிறது. தொடர்‌ந்து பீகார் மாநிலம் 37 கைதிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்லிமென்ட் வளாகத்த‌ில் நிகழ்‌ந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து கைது ‌செய்யப்பட்ட அப்சல் குருவுடன் இணைந்து 24 ‌கைதிகள் டில்லி மாநிலத்தில் காத்திருக்கின்றனர்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முறையே மூன்று மற்றும் நான்கு கைதிகள் தூக்கு கயிறை எதிர்நோக்கி காத்திருப்பதாக ராஜ்யசபாவில் அளி்த்துள்ள பதிலில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.


-தின மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:00 pm

ரூ. 6.75 கோடி மோசடி :கலாநிதி மீது போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை,: சினிமா இயக்குனர், தியேட்டர் உரிமையாளர்களிடம், 6.75 கோடி ரூபாய்க்கு மேல், பண மோசடி செய்தது தொடர்பாக, "சன்' குழும தலைவர் கலாநிதி, மேலாளர்கள் ரமேஷ், செம்பியன், கண்ணன் ஆகியோர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சினிமா இயக்குனர் ஷக்தி சிதம்பரம், கடந்த சில தினங்களுக்கு முன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் ஒன்றை அளித்தார். அதன் விவரம்:
"எந்திரன்' படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் வினியோகிக்கும் உரிமை வழங்குவதற்காக, 6.75 கோடி ரூபாயை, சன் குழுமத்தினர் வாங்கினர். ஆனால், எங்களுக்கு வினி@யாக உரிமை வழங்கப்படவில்லை.எங்களிடம் வாங்கிய பணத்தில், 2.75 கோடி ரூபாயை, திருப்பி தந்துவிட்டனர். மீதமுள்ள, 4 கோடி ரூபாயை தராமல், ஏமாற்றி வந்தனர். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு, "சன் டிவி' நிறுவனத்திற்கு சென்ற போது, கலாநிதி தூண்டுதலின் பேரில், மேலாளர்கள் ரமேஷ், கண்ணன், செம்பியன் ஆகியோர் மிரட்டல் விடுத்தனர்.அதுபோல், "காவலன்' படத்திற்காக, "சேட்டிலைட்' உரிமம் வழங்கியது தொடர்பாக, 2.75 கோடி ரூபாயை பெற்றனர். அந்த, பணத்தை கோர்ட்டில் கட்டி விட்டதாகவும் தெரிவித்து, பணத்தை தர மறுக்கின்றனர்.இவ்வாறு புகாரில் தெரிவித்து இருந்தார்.
இவர் தவிர, அயனாவரம் கோபிகிருஷ்ணா சினிமா தியேட்டர் உரிமையாளர் நரேஷ்பாபு, போலீசில் அளித்த புகாரில், "சன் குழுமத்தினர், 25 லட்சம் ரூபாயை தராமல், மோசடி செய்து விட்டனர்' என, தெரிவித்திருந்தார்.இந்த புகார்கள் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சன் குழும தலைவர் கலாநிதி, மேலாளர்கள் ரமேஷ், செம்பியன், கண்ணன் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்@காரி, சென்னை ஐ@கார்ட்டில், கலாநிதி மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி ஆறுமுகசாமி முன், விசாரணைக்கு வந்தது.விசாரணையை இம்மாதம், 18ம் @ததிக்கு தள்ளி வைத்த நீதிபதி, "அதுவரை, அவரை கைது செய்ய@வா, துன்புறுத்த@வா, விசாரணைக்கு வரவழைக்க@வா கூடாது' என, உத்தரவிட்டார்.

-தின மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 16 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 37 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 26 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum