ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்

5 posters

Go down

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Empty செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்

Post by சாமி Fri Dec 07, 2012 11:33 pm

1) உலகத்திலேயே கடவுள் உண்டா? என்னும் ஆராய்ச்சியை முறையாகச் செய்வது சைவ சமயம் ஒன்றுதான்.

ஏனையச் சமயங்கள் நம்பிக்கையைத்தான் வலியுறுத்துகின்றன. சைவ சித்தாந்தமும் (செம்பொருள் துணிவு) நம்பிக்கை அவசியம் வேண்டுமென்றே கூறுகிறது. ஆனால், மனிதனுக்கு அறிவு இருப்பதால் கடவுளை நேரடியாக உணர்த்த முடியாவிட்டாலும் அவர் இருக்கிறார் என்னும் உண்மையை அறிவியல் வழியில் நிலைநாட்டலாம் எனக் கருதுகிறது.

சித்தாந்தம் என்றால் என்ன? 'முடிந்த முடிபு' என்பது இதன் பொருளாகும்.
எந்த ஒரு பொருளைப் பற்றியும் முதலில் நாம் ஒரு முடிவு கொள்வோம்.பின்னர் அப்பொருளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது இறுதியாக ஒரு முடிவு கொள்வோம். இதுவே 'முடிந்த முடிபு' ஆகும்.

சில சமயம் முதல் முடிவே முடிந்த முடிபாகவும் வரலாம்; ஆயினும் அஃது ஆராயாமல் கொள்ளப்பட்ட நிலை போல அல்லாமல், நிலைத்து நிற்கும் முடிபாகித் திகழுமாகையால், அதுவே 'முடிந்த முடிபு' என்று வழங்கப் பெறும்.

''செம்பொருள் துணிவில்' 'முடிந்த முடிபாக' கொள்ளப்படும் பொருள்கள் மூன்று. அவை
இறை,
உயிர்,
தளை.


(தொடரும்)


Last edited by சாமி on Wed Apr 17, 2013 10:10 pm; edited 2 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Empty Re: செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்

Post by சாமி Mon Apr 15, 2013 10:18 pm

2) ''செம்பொருள் துணிவில்' 'முடிந்த முடிபாக' கொள்ளப்படும் பொருள்கள் மூன்று. அவை இறை, உயிர், தளை. (இதனை வடமொழியில் முறையே பதி, பசு, பாசம் என்பர்).

முதலில் இறையை எடுத்துக் கொள்வோம்.
இறை அதாவது கடவுள். இதற்கு மூன்றுவிதமான பொருள் சொல்லலாம்.
1. கடவுதல் என்றால் இயக்குதல்; எனவே கடவுள் என்றால் உலகை இயக்குபவர்.
2. கடவுள் = உள்ளத்தைக் கடந்தவர்.
3. கடவுள் (கட+உள்) = கடவுள் உலகைக் கடந்தவர்; அதே சமயம் உலகுள்ளும் உள்ளவர்.


கடவுள் கொள்கையை ‘செம்பொருள் துணிவு (சை.சி.) இருவகையில் விளக்குகிறது.

ஒன்று: கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிப்பதன் மூலம்.
இரண்டு: கடவுளுக்குரிய இயல்புகளையும் குணங்களையும் கூறுவதன் மூலம்.

(தொடரும்)


Last edited by சாமி on Tue Apr 16, 2013 10:52 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Empty Re: செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்

Post by சதாசிவம் Tue Apr 16, 2013 10:04 am

அவசியமான அழகிய தொடர்,, தொடருங்கள்... சூப்பருங்க


சதாசிவம்
செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Empty Re: செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்

Post by Murali1946 Tue Apr 16, 2013 11:48 am

[center]அவசியம் தொடர வேண்டுகிறேன்.
Murali1946
Murali1946
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013

Back to top Go down

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Empty Re: செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்

Post by சாமி Tue Apr 16, 2013 10:54 pm

3) கடவுள் உண்டு.

கடவுள் உண்டு என்று சொல்வோமானால் அதை காரணங்கள் காட்டி மெய்ப்பிக்க வேண்டும். அதேபோல் கடவுள் இல்லை என்று சொல்வோரது வாதங்கள் பொருந்தாது என்று நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் கடவுள் உண்டு என்பதை நடுநிலையோடு ஏற்றுக் கொள்ள முடியும். முதலில் கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிக்கலாம் வாருங்கள்!

ஒரு பொருள் உண்டென்பதை மூன்று வழிகளில் மெய்ப்பிக்கலாம். அவை காட்சி, கருதல் மற்றும் பெரியோரது பெருமொழிகள். இப்படிச் சொன்னால் புரியாது. உங்களுக்கு எடுத்துக்காட்டோடு சொல்கிறேன்.

எடுத்துக்காட்டு: தொலைவில் புகை தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

காட்சி: நம் கண்களுக்கு புகை தெரிகிறது அல்லவா? இப்படி ஐம்பொறிகளின் வாயிலாக அறிவதே காட்சியாகும்.

கருதல்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை நாம் பலமுறை நேரில் கண்டுள்ளோமாதலால், நெருப்பைக் காணாமலேயே, புகையை மட்டும் கண்டு நெருப்பு அங்கு உள்ளது என்பதை திடமாக அறிகின்றோம். இதுதான் கருதல்.

பெரியோரது பெருமொழிகள்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை அனுபவத்தால் அறிந்த பெரியவர்கள் சொல்லும் வாக்கை வைத்து அறிந்து கொள்வது.

காட்சி, கருதல் என்பதை மெய்ப்பிப்பது கடினமாதலால், பெரியோரது பெருமொழிகள் முதன்மையான வழியாக செம்பொருள் துணிவில் (சை.சி) ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Empty Re: செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்

Post by பத்மநாபன் Wed Apr 17, 2013 10:35 am

நல்ல விளக்கம் தொடருங்கள்!!!
சைவ சித்தாந்தம் என்பதற்கு செம்பொருள் துணிவு என்று எங்கும் கேள்விப்பட்டதில்லை.
விளக்குங்கள்.
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Empty Re: செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்

Post by mbalasaravanan Wed Apr 17, 2013 6:18 pm

அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Empty Re: செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum