புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_m10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_m10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_m10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_m10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_m10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_m10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_m10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_m10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_m10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_m10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_m10மானிய மறக்கடிப்புத் திட்டம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மானிய மறக்கடிப்புத் திட்டம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Dec 07, 2012 4:21 pm

மானியம் மற்றும் உதவித் தொகைகளைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணமாகச் செலுத்தும் திட்டம் 51 மாவட்டங்களில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2013-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதிலும் இது அமல்படுத்தப்படும் என்று அரசு கூறியுள்ளது.

ஊழல் காரணமாக, பயனாளிகளுக்கு முழுமையான பலன் போய்ச் சேருவதில்லை என்பதால்தான், இவ்வாறு நேரடியாகப் பணமாகக் கொடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அரசு தெரிவிக்கிறது. எந்த அளவுக்கு இந்தத் திட்டம் செயல்படும், பயன் தரும் என்பது சந்தேகத்துக்குரியது.

கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றில் இவ்வாறு பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தும் நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. இவற்றில் எல்லாம் ஊழல் ஒழிந்துவிட்டது என்றா சொல்லிவிட முடியும்?

வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கான ஊதியத்தை வங்கியில் செலுத்திவிட்டதாக அதிகாரிகள் கூறினாலும், வங்கிக் கணக்கில் பணம் முறையாக வந்து சேர்வதில்லை. கிராம மக்கள் மறியல் செய்கின்றபோதுதான் "நேரடிப் பணப் பரிமாற்றம்' ("டைரக்ட் கேஷ் டிரான்ஸ்பர்') அந்த அதிகாரிகளுக்கு ஆகாததுதான் பிரச்னை என்று தெரிகிறது.

பயனாளிகளுக்கான உதவித்தொகையை வங்கியில் செலுத்த வேண்டிய அதிகாரம் உள்ளூர் அளவில் இருந்தால், ஊழல் வேறு வடிவம் கொள்கிறது என்பதுதான் உண்மை நிலை. இத்தகைய நிலைமை முதியோர் உதவித்தொகை திட்டத்தில் இல்லை என்பதற்குக் காரணம், அது மாவட்ட அளவில் ஒரே நேரத்தில் வழங்கப்படுவதுதான். மேலும் முதியோர் ஓய்வூதிய ஆணை வழங்கும்போது ஒரே தவணையாக ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை "நேரடிப் பணப் பரிமாற்றம்' ஆகிவிடுவதும் மற்றொரு காரணம்.

இந்தச் சிக்கல்கள் உதவித்தொகைகளை மட்டுமே பொருத்தவை. ஆனால், மறைமுகமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்துக்கொண்டிருக்கும் மானியத்தின் பயன் வேறானது. அதனையும் நேரடியாகப் பயனாளிக்குப் பணமாக வழங்குவது முறையாக இருக்காது. ஏனெனில் இத்தகைய மானியத்தை, ஒரு பயனாளி முன்கூட்டியே பெற முடியாது என்பதுதான் இதில் உள்ள சிக்கல்!

தற்போது உர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உரமானியத்தை சந்தையில் விற்பனையாகும் உரத்தின் அளவுக்கு ஏற்ப வழங்குவது என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு இந்த ஆண்டு அமல்படுத்தியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு உர நிறுவனமும் விற்பனை செய்துள்ள உர மூட்டைகளின் அளவை அந்நிறுவன முகவர்கள் விற்றுள்ள மூட்டைகளையும், விவசாயிகள் வாங்கியுள்ள யூரியா மூட்டைகளையும் சரிபார்த்து, பிறகு அதற்கான மானியத்தை அந்த உரநிறுவனத்துக்கு வழங்குவார்கள்.

இந்தப் புதிய நடைமுறை பெரிய நிறுவனங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அவர்களால் இந்த மானியம் கிடைக்கும் வரை சில மாதங்கள் பொறுத்திருக்க முடியும். சாதாரண ஏழைக்கு இது பொருந்தாது.

நியாயவிலைக் கடையில் இப்போது சர்க்கரையின் விலை கிலோ ரூ.13.50. வெளிச்சந்தை விலை தோராயமாக ரூ.35. இத்திட்டம் அமலுக்கு வந்தால், ஒரு நுகர்வோர் கிலோ ரூ.35 கொடுத்துதான் சர்க்கரையை வாங்கியாக வேண்டும். அந்த மாதம் சர்க்கரை வாங்கினார் என்ற புள்ளிவிவரம் வட்ட, மாவட்ட அளவில் பதிவாகும்போதுதான், இவர் ஒரு கிலோவுக்குக் கூடுதலாகச் செலுத்திய ரூ.20 இவரது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இதேபோன்றதுதான் எரிவாயு உருளையிலும். தற்போதைய நடைமுறைப்படி 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் தரப்படுகிறது. இத்திட்டம் அமலுக்கு வந்தால், அன்றைய சந்தை விலையைக் கொடுத்து வாங்க வேண்டும். பிறகு, காஸ் ஏஜன்ஸி மூலமாக எண்ணெய் நிறுவனங்களுக்குத் தகவல் போய், அவர்கள் இதற்குரிய மானியத்தை வங்கிக் கணக்கில் போடுவார்கள்.

இந்த நடைமுறையை ஒவ்வொரு சிலிண்டருக்கும் செய்யாமல், அரையாண்டுக்கு ஒருமுறை மானியத்தை வழங்குதல் என்று அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், கூடுதல் பணிப்பளு, போதுமான ஆட்கள் இல்லை என்கின்ற வழக்கமான பதில் கிடைக்கும். அதுவரை ஒரு நடுத்தர, ஏழைக் குடும்பம் தாக்குப்பிடிக்க வேண்டும்.

இதனால் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும் என்று அரசு கூறினாலும், இவ்வாறு வங்கிகள் மூலம் நேரடியாக மானியம் வழங்கும்போது, போலிப் பயனாளிகளை உருவாக்கி, மானியத்தை ஒருபக்கம் ஒதுக்கிக் கொள்ள அதிகாரிகளால் முடியும். அல்லது, தற்போது வசதிபடைத்தவர்களின் குடும்ப அட்டைகளில் அரிசி, கோதுமை வாங்கப்பட்டதாக அவர்களே எழுதிக்கொள்வதைப்போல, மானியத்தை வேறு கணக்கில் செலுத்தும் முறைகேடுக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நேரடிப் பணப் பரிமாற்றம் என்பதை மிகவும் உன்னிப்பாகப் பார்த்தால் ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். இது ஊழலை ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டமல்ல. மானியத்தை ஒழிப்பதற்கான திட்டம் என்பதுதான் அது.

உலக வங்கி தொடர்ந்து, ""மானியத்தை ரத்து செய்யுங்கள், குறையுங்கள்'' என்று கூறி வருகிறது. மானியத்தைக் குறைத்தால் எதிர்க்கட்சிகளும் மக்களும் குரல் எழுப்புகிறார்கள். ஆகவே இந்தப் புதிய திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடிமகனையும் சந்தை விலையைக் கொடுத்து வாங்கப் பழக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைதான் இந்த "நேரடிப் பணப் பரிமாற்றம்'. சில காலத்துக்கு மானியம் கிடைக்கும். பிறகு குறைக்கப்படும். அப்புறம் சில இனங்களுக்கு மானியம் ரத்தாகும். பிறகு மானியம் முழுவதுமே விலக்கிக்கொள்ளப்படும். அப்போது, இதை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் சந்தை விலையைக் கொடுத்து வாங்கப் பழக்கிவிடப்பட்டிருப்பார்கள்.

ஒரு நல்ல அரசுக்கு அடையாளம், அமைச்சர்கள், அதிகாரிகள் அளவிலான ஊழலை ஒழித்து, மக்களின் வாங்குசக்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம், மானியம் பெறுவதை மக்கள் ஒரு அவமானமாகக் கருதும் நிலையை உருவாக்குவதுதான். மாறாக, இவ்வாறு மானியத்தை மறக்கடிக்க வைப்பதல்ல. தாய்ப்பாலை குழந்தை வெறுக்கச் செய்வதற்காக வேப்பெண்ணெய் தடவிக் கொடுப்பது போலத்தான் இதுவும்!
நன்றி - தினமணி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 07, 2012 4:32 pm

''ஒரு நல்ல அரசுக்கு அடையாளம், அமைச்சர்கள், அதிகாரிகள் அளவிலான ஊழலை ஒழித்து, மக்களின் வாங்குசக்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம், மானியம் பெறுவதை மக்கள் ஒரு அவமானமாகக் கருதும் நிலையை உருவாக்குவதுதான்''

அதெல்லாம் நல்ல அரசியல்வாதிகளுக்கு தான்.. எங்களுக்கு இல்லை .(நமது அரசியல் வியாதிகள் }..



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 07, 2012 4:35 pm

எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதில் ஓட்டையைக் கண்டுபிடித்து காசு பார்ப்பது வழக்கமாகிவிட்டது.




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Dec 07, 2012 7:20 pm

அரசை உருவாக்கும் மக்கள் தலையால் சிந்தித்து கையால் செயற்படவேண்டும்.
அப்போதான் சிறந்த சிந்தனை மிக்க சீரிய மக்கள் கேள்வி கேட்கும் அரசு உருவாகும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக