புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்காக இவர்கள்? Poll_c10எதற்காக இவர்கள்? Poll_m10எதற்காக இவர்கள்? Poll_c10 
62 Posts - 57%
heezulia
எதற்காக இவர்கள்? Poll_c10எதற்காக இவர்கள்? Poll_m10எதற்காக இவர்கள்? Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
எதற்காக இவர்கள்? Poll_c10எதற்காக இவர்கள்? Poll_m10எதற்காக இவர்கள்? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
எதற்காக இவர்கள்? Poll_c10எதற்காக இவர்கள்? Poll_m10எதற்காக இவர்கள்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்காக இவர்கள்? Poll_c10எதற்காக இவர்கள்? Poll_m10எதற்காக இவர்கள்? Poll_c10 
104 Posts - 59%
heezulia
எதற்காக இவர்கள்? Poll_c10எதற்காக இவர்கள்? Poll_m10எதற்காக இவர்கள்? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
எதற்காக இவர்கள்? Poll_c10எதற்காக இவர்கள்? Poll_m10எதற்காக இவர்கள்? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
எதற்காக இவர்கள்? Poll_c10எதற்காக இவர்கள்? Poll_m10எதற்காக இவர்கள்? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்காக இவர்கள்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Dec 07, 2012 4:03 pm

தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீரை புதன்கிழமை முதலாகவே (டிசம்பர் 5) கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியாயமாகப் பார்த்தால் இதைவிட அதிகமான தண்ணீர் தமிழகத்துக்குத் தேவை. ஆனாலும், கர்நாடகத்தின் பிடிவாதத்துக்கு ஒரு பூட்டு போட்டு, தண்ணீரை இந்த அளவுக்காவது திறந்துவிடச் சொல்லி இருக்கிறார்களே என்பதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

இதுவும்கூட, காவிரி கண்காணிப்புக் குழுவைக் கூட்டி முடிவெடுக்கும் வரைதான். டிசம்பர் 9 வரை நமக்கு 5 டிஎம்சி தண்ணீர் கிடைக்கலாம். அதன் பிறகு இதே அளவு தண்ணீர் தொடருமா என்பது நிச்சயமில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு செய்யப்படும் என்று கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் அறிவித்திருக்கிறார்.

நீதிபதிகள் குறிப்பிடும்போது "இரு மாநிலங்களிலும் தண்ணீர் இல்லை. இரு மாநில விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலத் தேவைகளையும் நாம் கணக்கில் எடுத்துப் பார்த்து நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளைக் காணவேண்டும்' என்று கூறியுள்ளனர். சுமார் 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டால், அது ஏறக்குறைய 1 டிஎம்சி தண்ணீருக்குச் சமம். குறைந்தபட்சம் நவம்பர் 26-ஆம் தேதியே அதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து இந்த இடைக்காலத் தீர்ப்பை அறிவித்திருந்தால் கடந்த 10 நாளில் தமிழ்நாட்டுக்கு 10 டிஎம்சி தண்ணீர் வந்து சேர்ந்திருக்கும்.

நடுவர்மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீர் 52.8 டிஎம்சி என்றாலும் இப்போது தமிழகத்தின் நெற்பயிர்களைக் காக்க குறைந்தது 30 டிஎம்சி தண்ணீர் கொடுங்கள் என்றுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதா, நவம்பர் 29-ஆம் தேதி கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷெட்டரைக் கேட்டுக்கொண்டார். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி கிடைக்கவிருக்கும் நீர்அளவு, தமிழக முதல்வர் கேட்ட குறைந்தபட்ச அளவைவிட மிகமிகக் குறைவு.

தமிழக முதல்வர் பெங்களூர் சென்று பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கின் மறுவிசாரணை தேதி குறிக்கப்பட்ட பிறகு, கர்நாடக அரசு செய்த தந்திரம் - தமிழகத்துக்குத் திறந்துவிடும் நீரின் அளவை அதிகரித்ததுதான். நீதிமன்றத்தில் கர்நாடக வழக்குரைஞர் முன்வைத்த வாதமே, "தமிழக விவசாயத்துக்காக ஏற்கெனவே 3,000 கனஅடி திறந்துவிடப்படுகிறது, அதிகமாக தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை' என்பதுதான். கர்நாடகம் எப்போதுமே இதுபோன்ற தந்திரங்களைத் தொடர்ந்து செய்கிறது.

காவிரிநீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய கர்நாடகத்திற்கு நடுவர் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பரப்பளவு 8.47 லட்சம் ஏக்கர் மட்டுமே. ஆனால், கர்நாடகம் 9 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சாகுபடிக்காக காவிரி நீரைப் பயன்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. ஏனென்றால் அங்கே 11.6 லட்சம் ஏக்கரில்தான் விவசாயம் நடைபெற்றுள்ளது. பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கான குடிநீர்த் தேவைக்கு 23 டிஎம்சி தேவை என்று சொல்வது மிகையான புள்ளிவிவரம். இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தையும் தமிழகம் கொடுத்தும்கூட அதுபற்றி நீதிமன்றம் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

இப்போது நீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள கேள்வி - காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் (கெஜட்) ஏன் வெளியிடவில்லை என்பதுதான். சிறு காரணங்களுக்காக மேல்முறையீடு செய்திருக்கிறார்கள் என்பதால், அரசிதழில் வெளியிடக்கூடாது என்று பொருளல்ல என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. அரசிதழில் வெளியிடப்படாத காரணத்தால் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பு வழங்கிய பிறகும் இடைக்காலத் தீர்ப்பின்படியே தீர்வு காணப்படுவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசிதழில் வெளியிடப்பட்டிருந்தால் காவிரி மேலாண்மைக் குழுமம், நதிநீர் ஒழுங்காற்றுக் குழுமம் ஏற்பட்டிருக்கும், கர்நாடகம் கட்டுப்பட மறுத்தால், அணைகளை தன்பொறுப்பில் எடுத்துக்கொள்ள அதிகாரம் பெற்றிருக்கும்.

காவிரி மேலாண்மைக் குழுமம், ஒழுங்காற்றுக் குழுமம் போன்ற அதிகாரம் பெற்ற அமைப்புகள் ஏற்பட்டுவிட்டால், கர்நாடக அரசு தான் நினைத்தபோது தண்ணீரைத் திறந்துவிடவோ, மறுக்கவோ முடியாது. அதற்காகத்தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியாகாதபடி ""யார் யாரோ'' பார்த்துக்கொள்கிறார்கள். இதில் அவர்கள் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தமிழகத்துக்குத் தண்ணீர் விடக்கூடாது என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

நீதிமன்றம் எழுப்பி இருக்கும் அதே கேள்வியை நாம் கேட்பதாக இருந்தால், அதனைத் தமிழ்நாட்டில் திமுக-வை நோக்கித்தான் கேட்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கவிழாமல் இருப்பதற்காக மத்திய அமைச்சர்களை தன் வீட்டுக்கு காவடி தூக்கி வர வைக்கும் "சக்தி படைத்த' திமுக தலைமை, காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசைக் கடந்த 10 ஆண்டுகளில் ஏன் வற்புறுத்திப் பணிய வைக்கவில்லை?

ஒவ்வோராண்டும் கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்டு அவதிப்படுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியாகி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகார அமைப்புகள் நிறுவப்பட வேண்டும்.

முதலில், நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்யும் நடவடிக்கைகளில் தமிழகத்தின் 40 மக்களவை உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும். காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாவிட்டால் நாங்கள் பதவி விலகுகிறோம் என்று மத்திய அமைச்சரவையில் இருக்கும் வேட்டிகட்டிய தமிழர்கள் எல்லோரும் அறிவிக்கட்டுமே... அரசாணை வெளியிடப்படும்வரை தமிழக எம்.பி.க்கள் அனைவரும் அரசுக்கு எதிராகத்தான் வாக்களிப்போம் என்று முடிவெடுக்கட்டுமே...

மத்திய அரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் "சக்தி' தமிழகத்தின் 40 மக்களவை உறுப்பினர்களுக்கு இருந்தும், இவர்கள் காவிரி நீர்ப் பிரச்னையில் ஒன்றுபட்டுச் செயல்பட முடியாவிட்டால், இந்த மக்கள் பிரதிநிதிகள் இருந்து தமிழகத்துக்கு என்ன லாபம்? இவர்களது சொந்த லாபத்துக்காகவும், பதவி சுகத்துக்காகவுமா நாம் இவர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்தோம்?
(நன்றி - தினமணி தலையங்கம்)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 07, 2012 4:06 pm

சாமி wrote:
மத்திய அரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் "சக்தி' தமிழகத்தின் 40 மக்களவை உறுப்பினர்களுக்கு இருந்தும், இவர்கள் காவிரி நீர்ப் பிரச்னையில் ஒன்றுபட்டுச் செயல்பட முடியாவிட்டால், இந்த மக்கள் பிரதிநிதிகள் இருந்து தமிழகத்துக்கு என்ன லாபம்? இவர்களது சொந்த லாபத்துக்காகவும், பதவி சுகத்துக்காகவுமா நாம் இவர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்தோம்?
(நன்றி - தினமணி தலையங்கம்)

உண்மைதான் , ஒவ்வொரு வாக்காளரும் சிந்திக்கவேண்டிய செய்தி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 07, 2012 4:48 pm

முதலில், நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்யும் நடவடிக்கைகளில் தமிழகத்தின் 40 மக்களவை உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும். காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாவிட்டால் நாங்கள் பதவி விலகுகிறோம் என்று மத்திய அமைச்சரவையில் இருக்கும் வேட்டிகட்டிய தமிழர்கள் எல்லோரும் அறிவிக்கட்டுமே... அரசாணை வெளியிடப்படும்வரை தமிழக எம்.பி.க்கள் அனைவரும் அரசுக்கு எதிராகத்தான் வாக்களிப்போம் என்று முடிவெடுக்கட்டுமே...

நமக்கு எந்த ஊருங்க?...கோச்சுக்காதீங்க...
இவங்க நாப்பது பேருக்கும் இருக்கற பதவி காலத்துக்குள்ள எவ்ளோ சுருட்டலாம்...எந்த கோஷ்டில சேர்ந்தா சேப்டி பண்லாம்...அடுத்த முறை சீட்ட எப்டி வாங்கலாம்?...ஜெயிச்சு வந்து ஏசில தூங்கலாம்னு மட்டும்தான் யோசிப்பாங்க...யோசிக்கிறாங்க...யோசிச்சாங்க...
நாமதாங்க யோசிக்காமலே இருக்கோம்...

அநியாயம் என்ன கொடுமை சார் இது



எதற்காக இவர்கள்? 224747944

எதற்காக இவர்கள்? Rஎதற்காக இவர்கள்? Aஎதற்காக இவர்கள்? Emptyஎதற்காக இவர்கள்? Rஎதற்காக இவர்கள்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Fri Dec 07, 2012 5:17 pm

நாம என்னதான் சிந்தித்தாலும் நாட்டு பற்றோட இருந்தாலும் நாட்டை ஆளுகின்ற யாருக்கும் இந்த அக்கறை கிடையாது

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Dec 07, 2012 5:36 pm

செய்தியை விரிவாக ஏடுத்துருதமைக்கு நன்றி



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எதற்காக இவர்கள்? Knight
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Dec 07, 2012 8:10 pm

எல்லாமே வாக்காளன் கையில்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 07, 2012 8:32 pm

வாக்கு வாங்கத்தான் அந்த நீரை வாரி இறைத்து வாங்கிடரானுன்களே.

மக்களே எந்த நீர் வேண்டும் என்று முடிவு பண்ணட்டும்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக