புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
92 Posts - 61%
heezulia
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
1 Post - 1%
viyasan
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
284 Posts - 45%
heezulia
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
19 Posts - 3%
prajai
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வித்தியாசமான தலைவர் Poll_c10வித்தியாசமான தலைவர் Poll_m10வித்தியாசமான தலைவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்தியாசமான தலைவர்


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 1:03 pm

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இன்றைய தினம் தமிழர் தலைவராக உயர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் மூத்த தலைவராக விளங்கக் கூடிய மானமிகு கலைஞர் அவர்கள் கூட இவரை விளிக்கும்போது எனது அருமை இளவல் தமிழர் தலைவர் வீரமணி என்று குறிப்பிடத் தவறுவதில்லை.

1. எளிய குடும்பத்தில் பிறந்தவர் - இன்றைக்கு உலகம் அறிந்த தமிழர் தலைவராக ஒளிர்கிறார்.

2. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அவருக்கே உரித்தான முறையில் சொன்னது மிகப் பொருத்தமானது.
(பெரியாருக்குப் பின்)
வெறிச்சோடிப் போகாமல் தமிழ்நாட்டைக் காப்பாற்றியவர் வீரமணி என்பது பாராட்டு என்று கருதக் கூடாது; அதில் ஆழமான பொருளும், உண்மையும் நிறைந்துள்ளன. (16.8.1981)

3. வயது ஒன்பதரை ஆண்டு இருக்கும்போதே மேசையின்மீது ஏற்றப்பட்டு முழக்கமிட்ட புதுமை இவரை சாரும்.

4. 11 வயதில் திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய அதிசயம்.

5. 11 வயதில் சரித்திர திருப்பம் வாய்ந்த மாநாட்டில் (சேலத்தில் - நீதிக்கட்சி திராவிடர் கழகம் பெயர் மாற்றம் பெற்ற மாநாட்டில்) உரையாற்றிய வாய்ப்பு.

6. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே புதுமை முழக்கம் என்ற கையெழுத்து ஏட்டினை நடத்திய ஆர்வம்.

7. 13 வயதில் இவர் ஆற்றிய வீரவேக உரையைக் கேட்டு பெரும் பேச்சாளரான அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தன் என்று தொலைநோக்கோடு கூறிய பாங்கு! இந்த வயதிலேயே வெளி மாவட்டங்களுக்குப் பேச அழைக்கப்பட்ட விந்தை!

8. தி.மு.க. பிரிந்தபோது இவருக்கு வயது 16. தன்னை கொள்கைப் பாதையில் வார்த்தெடுத்த மூத்த அண்ணன், அவரின் குருநாதர் - சுற்றியுள்ளோர் அனைவரும் பெரியாரை விட்டு விலகிச் சென்ற நிலையிலும், அந்த வயதிலேயே தனக்குத் தலைவர் பெரியார்தான், இயக்கம் திராவிடர் கழகம்தான் என்று சஞ்சலம் ஏதுமின்றி முடிவெடுத்த பக்குவம் - முதிர்ச்சி!

9. திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பல்கலைக் கழகங்களில் படித்திருந்தாலும், கல்வியில் திறன் காட்டியது இவர் அளவுக்குக் கிடையாது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதார பாடத்தில் (பி.ஏ. ஹானர்ஸ்) இரு தங்க மெடல்களைப் பெற்ற சாதனை!

10. சனி, ஞாயிறுகளில் பிரச்சாரக் கூட்டங்களுக்குச் செல்லுவது - மற்ற நாட்களில் பல்கலைக்கழகப் படிப்பில் கவனம் எனும் கடமை உணர்வு!

11. திருமணத்தில் கூட பெண்ணை நான் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. பெரியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்த நம்பிக்கை.

12. திருமணம் முடிந்து தேனிலவு என்பது பெரியாரோடு சுற்றுப்பயணம் செய்த உள்ளம்.

13. வக்கீல் தொழிலைத் தொடங்கி நல்ல அளவு அதில் பரிணமித்தபோது, தம் தலைவர் அழைப்புக் கொடுத்தார் என்றவுடன் அனைத்தையும் தூக்கி எறிந்து, சென்னை வந்து விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்ற பொறுப்புணர்வு.

14. யாருக்கும் எளிதில் கிடைக்காத பாராட்டும், நம்பிக்கையும் பெரியாரிடம் இவருக்கு மட்டுமே கிடைத்த பேறு!
விடுதலையை வீரமணியின் ஏகபோக நிர்வாகத்தில் விடுகிறேன் என்று தந்தை பெரியார் விடுதலையில் எழுதிய அதிசயம் (6.6.1964).

15. பெரியார் என்னும் மாமலை சாய்ந்தபோது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கழகம் கலையாது - இணையாது அய்யா காட்டிய வழியில் நூலிழை பிறழாமல் நடப்போம் என்று சொன்ன உறுதி (25.12.1973).

16. எந்த ஒரு குற்றமும், தவறும் இழைக்காத நிலையில், மிசா கைதியாக ஓராண்டு காலம் கழித்த அவலம். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 47 முறை கைது.

17. பெரியார் அறக்கட்டளையை வருமான வரித்துறை மூலம் கபளீகரம் செய்துவிடலாம் என்ற ஆரிய சூழ்ச்சியை முறியடித்து, அறக்கட்டளைதான் என்று வருமான வரி தீர்ப்பாயத்திடமே (இரு நீதிபதிகளும் பார்ப்பனர்கள்) தீர்ப்புப் பெற்ற தீரம். வருமான வரித் துறையிடம் கட்டிய பணத்திற்கு வட்டி போட்டுத் திரும்பப் பெற்ற உலக அதிசயம்!

18. உடல்நலம் பாதிக்கப்பட்ட அன்னை மணியம்மையார் அவர்கள் அவசரமாக அழைத்து நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாகவும், அந்தப் பொறுப்பை வீரமணி ஏற்க வேண்டும் என்று அன்னை மணியம்மையார் எழுதியிருந்த கடிதத்தை சுக்கல் நூறாகக் கிழித்தெறிந்து -அம்மா இருக்கும்வரை அவர்தான் தலைவர் என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்த உள்ளப் பாங்கு! (25.12.1977).

19. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டு ஒன்றுக்கு 9000 ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற ஆணையை எ(ரி)திர்த்து ஆணையைத் திரும்பப் பெறச் செய்தது - அதன்மூலம் 31 சதவிகித பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 ஆக உயர்த்த காரணமாக இருந்தது (எம்.ஜி.ஆர். அரசில் போராட்டம் நடத்தி யாரும் வெற்றி பெற்றது கிடையாது என்பதையும் கணக்கில் கொள்க!)

20. மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தி, இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு வழி செய்தது.

21. இதன்மூலம் இந்திய அரசியலிலே சமூகநீதி - சமூகநீதிக்கு எதிரான அணி என்னும் புதிய சமூக அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்திய நேர்த்தி.
22. நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து சமூகநீதி உணர்ச்சி பெறுகிறேன் என்று ஒரு பிரதமரே (வி.பி. சிங்) கூறியது.

23. ‘‘Veeramani is the most popular Leader in Tamil nadu’’ என்று ஒரு குடியரசுத் தலைவரே கூறியது (25.5.1987 - கியானி ஜெயில் சிங்).

24. திராவிடர் கழகம் இருக்க, பெரியார் திடல் இருக்க வீரமணி இருக்க நான் எதற்கு அஞ்சப் போகிறேன் என்று முதலமைச்சர் கலைஞர் கூறும் அளவுக்கு உயர்நிலை (11.11.2006 திருச்சி).

25. வீரமணி எங்கள் ராஜகுரு என்று மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் பெருமையாக கூறியது.

26. திராவிடர் இயக்க வரலாறு நூலை எழுதிய நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் திராவிடர் இயக்க வரலாற்று நூலை வெளியிடத் தகுதி படைத்தவர் வீரமணியே என்று கூறிய கொள்கைப் பார்வை (11.7.1996).

27. 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடங்களைக் காப்பாற்ற சட்டம் எழுதித் தந்து (31-சி) மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றச் செய்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலும் பெற்று - நீதிமன்ற குறுக்கீட்டி லிருந்து காப்பாற்ற ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்தது. (76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்). (முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆக மூன்று பார்ப்பனரையும் பயன்படுத்தி சமூகநீதியைக் காப்பாற்றியது - சாதாரணமா?)

28. தந்தை பெரியார் காலத்தில் இருந்த கல்வித் தொடர்பான நான்கு நிறுவனங்கள் இப்பொழுது 50 நிறுவனங்கள் அளவுக்கு வளர்த்த அசாதாரண செயல்_பல்கலைக்கழகம் உள்பட!

29. நான்கு பக்கங்களாக இருந்த விடுதலையை 8 பக்கங்களாக்கி ஆஃப்செட்டில் அச்சிட்டு பூத்துக் குலுங்கும் புதுமலராக நுகரச் செய்துள்ள திறன். திருச்சியிலும் இன்னொரு பதிப்பு. இணைய தளத்திலும் முதன்முதலாக வெளிவந்த ஏடு விடுதலை எனும் பெருமை.
1962ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் பிறந்தநாள் விடுதலை மலரை அறிவுப் பெட்டகமாகக் கொண்டு வந்தவர்.

30. அலை அலையாக வெளியீடுகள் பல மொழிகளிலும், 1949 வரை குடியரசு தொகுப்பு, தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு தொடர்ச்சி.
பழைய நூல்கள், புதிய பொலிவிலும், புது நூல்களும் வெளியிட்டது; கீதையின் மறுபக்கம் (கி. வீரமணி) திராவிடர் இயக்கத்தின் முக்கிய வெளியீடு.

31. உலகளவில் பெரியார் கொள்கையைப் பரப்பிட பெரியார் பன்னாட்டு மய்யம்; உலக மனித நேய அமைப்பில் (I.H.E.U) திராவிடர் கழகம் உறுப்பு. 1994 இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பெரியார் மய்யம் நிறுவிய நிகரற்ற சாதனை.

32. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் கொண்டு வந்து யார் செயல்படுத்துகிறார்களோ அவர்களுக்கே ஆதரவு என்று நிபந்தனை வைத்து தேர்தலில் ஆதரவு அளித்த கொள்கை வழி அணுகுமுறை.

33. தன் பக்கம் நியாயம் இருக்கும் நிலையில் தந்தை பெரியார் அவர்களிடமே கூட வாதாடும் நிலை உண்டு.

34. தந்தை பெரியாரை அன்னை மணியம்மையார் உணவுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். உடலுக்கு ஒவ்வாத பொருளை தந்தை பெரியார் வாயில் வைத்தால் கையை விட்டு வெளியே எடுத்தெறிந் தவர் அன்னையார். அதே பணியை அன்னை மணியம்மையார் விடயத்திலும் மானமிகு கி. வீரமணி அவர்கள் செய்ததுண்டு.

35. இரயிலில் முன்பதிவு கிடைக்காமல் மூன்றாம் வகுப்பில் ரயிலில் நடைபாதையில் படுத்து வந்ததும் உண்டு. (இக்கட்டுரையாளர் கரூரிலிருந்து ஆசிரிய ருடன் அத்தகைய பயணத்தில் சென்றிருக்கிறார்).

36. தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்குப்பின் இயக்கத்தையும், நாட்டையும் பெரியார் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடித்தமைக்காக எடைக்கு எடை வெள்ளி, தங்கம் அளித்து சீராட்டிய செயல். (எல்லாம் இயக்கத்துக்கே) மாலைக்குப் பதில் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கழகத்திற்கே வந்து சேரும்).

37. 50 ஆண்டுகாலம் ஒரு பத்திரிகைக்கு (விடுதலைக்கு) ஆசிரியராக இருந்த சாதனை. அதற் காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் தோழர் கள் சேர்த்து கொடுத்த அதிசயம்.

38. உடலில் அறுவை சிகிச்சை பெறாத இடம் இல்லை. கண், மூக்கு, தொண்டை, விலா எலும்பு, குடலிறக்கம் மூன்று முறை இருதய சிகிச்சை, மூலம் இவ்வளவையும் தாண்டி, சதா ஓடிக்கொண்டி ருக்கும் நில்லாத கடிகாரம் (காலில் சக்கரம் என்பார் களே அது இதுதானோ!).

39. மாமனார் மானமிகு சித. சிதம்பரம் அவர்கள் மறைந்த போது, அவர் உடலுக்குக் கொள்ளி வைக்கவேண்டும் என்று மாமியார் கேட்டுக் கொண்டபோது, அது என்ன கொள்ளி வைப்பு?- யார் தீ மூட்டினால் என்ன? என்று கொள்கை பிடிவாதம் செய்ததால், திரண்ட சொத்துக்களை இழந்தவர்!

40. படிப்பு, பயணம், பிரச்சாரம், போராட்டம் என்று வாழ்வை வ(ரி)டித்துக் கொண்ட இவருக்கு வாய்ந்த வாழ்விணையர் - (ஒரு வகையில் இரக்கம் ஏற்பட்டாலும் ஈடு கொடுக்கும் ஈகை உள்ளம் படைத்த பெரும் பண்பின் குடியிருப்பு!).

41. நிறுவனங்களை ஏராளமாக வளர்த்துவிட்டு பெரும் சுமையை தொண்டறத்தின் ஒரு கூறாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.

42. ஈழத்தமிழர்களுக்காக ஈழ விடுதலை மாநாட்டை உலகத் தமிழர்கள் எழுச்சி கொள்ளும் வகையில் மதுரையில் நடத்திய மாண்பு (17, 18.12.1983)

43. மானமிகு, தொண்டறம் எனும் சொற்களைத் தமிழுக்கு தந்த பெருமை.

44. தமிழர்கள் பிளவுண்டு போகக்கூடாது என்பதற்காக பிரிந்தவர்களை ஒன்றிணைக்க மேற் கொள்ளும் முயற்சி (தி.மு.க.- அ.தி.மு.க.) இணைப் புக்குக் கூட பெருமுயற்சி செய்தவர்.
பிரிந்திருந்த அப்துல் சமது அவர்களையும், அப்துல் லத்தீப் அவர்களையும் ஒன்றிணைக்க தோள் கொடுத்த தோன்றல்)

45. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தை உருவாக்கி, ஆக்க ரீதியான பணியில் ஈடுபாடு. திராவிடர் இயக்க கலைக் களஞ்சியம் தயாரிக்கும் பணி.

46. தமிழா! தமிழா! ஒன்றுபடு - தமிழன் பகையை வென்றுவிடு! என்று முழக்கம் கொடுத்துவரும் இனப் பாதுகாவலர்.

47. கட்சிகளைக் கடந்து தமிழர்களால், மக்களால் மதிக்கப் பெறும் மானமிகு தலைவர்.
அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் தகுதியுள்ள தலைவர்.

48. மம்சாபுரம் (20.7.1982), வடசென்னை (27.4.1985), சேலம் மாவட்டம் தம்மம்பட்டி (26.8.1987) ஆகிய இடங்களில் உயிருக்குக் குறிவைத்துத் தாக்குதல். பழனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி பாடை கட்டித் தூக்கிச் சென்றனர் (1981).

49. கோபம் வரும் என்றாலும், உள்நோக்கம் இருக்காது. வந்த வேகத்தில் விடைபெறும். எதிலும் துல்லியம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பால் ஏற்படக் கூடிய இயல்பு அது.
இன்னும் பட்டியலிடலாம். விரிக்கலாம் - வியக்கத் தக்க வகையில் வளர்ந்துகொண்டே போகும்.

50. தந்தை பெரியார் இயக்கத்தை உருவாக்கியதோடு தொலைநோக்கோடு செய்த ஏற்பாடுகள், தக்காரை உருவாக்கி அடையாளம் காட்டிய பான்மை பெரிதும் வியக்கத்தக்கது.
சிவகங்கை பொதுக்கூட்டத்தில் (10.4.1965) தந்தை பெரியார் தெரிவித்த கருத்து நூற்றுக்கு நூறு மானமிகு கி.வீரமணி அவர்களுக்குப் பொருந்து கிறது; இதோ பெரியார் பேசுகிறார்.
தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள்.
இந்தத் தொண்டும் பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்; உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால் அவன் அடுத்து தலைமை ஏற்க வருவான். அதுவரை யார் என்றால் இந்தப் புத்தகங்கள்தான். வேறு யாரும் வரக்கூடாது என்பதல்ல என் கருத்து. அந்தப் பக்குவம் உள்ளவனிருந்தால் அவன் வருவான். முகமது நபியைப் பார்த்து உங்களுக்குப் பின் யார்? என்று கேட்டதற்கு அவர், எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறிவிட்டார். நான் அப்படிக் கூற விரும்பவில்லை.
அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம் என்று குறிப்பிட்டார்கள்.
(ஆதாரம்: சிவகங்கையில் 10.4.1965 அன்று ஆற்றிய உரையிலிருந்து. விடுதலை 23.4.1965, பக்கம் 3)
பெரியார் பரவாயில்லை என்று கூறி ஆரியம் நடுங்கும் அளவுகோல் ஒன்றே போதும் - இந்தத் தலைவரின் (பழனியில் பாடை கட்டித் தூக்கவில்லையா?) எழுச்சிக்கும் ஈடில்லா சிறப்பிற்கும்! பெரியாரை இழந்த மானுடம் - பெரும் ஆறுதல் பெறுவது இவரிடம்!

51. தந்தை பெரியார் கொள்கைகள் தான் இந்த மண்ணுக்குரியவை! சமுதாயத்தின் எல்லாத் தடத்திலும், தளத்திலும் தலைகீழ் புரட்சியை நடத்தியவை. பெரியார் மறைவுக்குப் பிறகு அந்தக் கொள்கை அடிப்படையில் பணியாற்ற விரும்புவோர் - நாட்டில் நல்லது நடக்க வேண்டும்; பெரும்பலன்கள் வேண்டும், பெரியாரியல் வெற்றி பெற வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அணி வகுத்துக் கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண்டியது - மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் இயங்கும் - திராவிடர் கழகத்தில்தான்.
80 ஆண்டு வயதில் 70 ஆண்டு பொதுவாழ்க்கைக்குத் தொடர்புடையவரும், தந்தை பெரியார் அவர்களால் வார்த்து எடுக்கப்பட்ட வரும், இந்த வகையில் உலகத்தால் அறியப்பட்டு வரும், இந்தப் பிரச்சினையில் வீரமணியின் கருத்து என்ன என்று எதிர்ப்பார்க்கப் பட்டு வருபவருமான ஒரு தலை வரின் கரத்தைப் பிடித்துக் கொள்வதுதான் பொறுப்பான புத்திசாலித்தனம்.
இதை விடுத்த எத்தகையவர் களாயினும், ஆற்றல் மிக்கவரா யினும் அவர்கள் தன்னலச் செறுக்குக்குச் சொந்தக்காரர்களே தவிர, பெரியாரி யலுக்குப் பயன்படமாட்டார்கள் இது கல்லின் மேல் எழுத்தே!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!

- கவிஞர் கலி.பூங்குன்றன் (விடுதலை டெய்லி)




வித்தியாசமான தலைவர் Mவித்தியாசமான தலைவர் Uவித்தியாசமான தலைவர் Tவித்தியாசமான தலைவர் Hவித்தியாசமான தலைவர் Uவித்தியாசமான தலைவர் Mவித்தியாசமான தலைவர் Oவித்தியாசமான தலைவர் Hவித்தியாசமான தலைவர் Aவித்தியாசமான தலைவர் Mவித்தியாசமான தலைவர் Eவித்தியாசமான தலைவர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 05, 2012 2:28 pm

சில வேளைகளில் இரண்டு கூடாரங்களையும் மாறி மாறி மாற்றிக்கொண்டே இருந்தார்...
இது கொஞ்சம் வருந்தத்தக்கதே...



வித்தியாசமான தலைவர் 224747944

வித்தியாசமான தலைவர் Rவித்தியாசமான தலைவர் Aவித்தியாசமான தலைவர் Emptyவித்தியாசமான தலைவர் Rவித்தியாசமான தலைவர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 2:30 pm

அரசியல் நடத்த இவ்வாறு கூடு விட்டு கூட தாவ வேண்டி இருக்கும் ரா ரா




வித்தியாசமான தலைவர் Mவித்தியாசமான தலைவர் Uவித்தியாசமான தலைவர் Tவித்தியாசமான தலைவர் Hவித்தியாசமான தலைவர் Uவித்தியாசமான தலைவர் Mவித்தியாசமான தலைவர் Oவித்தியாசமான தலைவர் Hவித்தியாசமான தலைவர் Aவித்தியாசமான தலைவர் Mவித்தியாசமான தலைவர் Eவித்தியாசமான தலைவர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 05, 2012 4:49 pm

வீரமணி பற்றிய இத்தகவல்களை என் நண்பர் ஒருவரிடம் காண்பித்தபோது, இதேபோன்று அவரைப்பற்றிய எதிர்மறையான விஷயங்களையும் இதேயளவுக்குப் பட்டியலிடலாம் என்கிறார். அவையெல்லாம் என்ன என்று ஏனோ எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 6:42 pm

பார்த்திபன் wrote:வீரமணி பற்றிய இத்தகவல்களை என் நண்பர் ஒருவரிடம் காண்பித்தபோது, இதேபோன்று அவரைப்பற்றிய எதிர்மறையான விஷயங்களையும் இதேயளவுக்குப் பட்டியலிடலாம் என்கிறார். அவையெல்லாம் என்ன என்று ஏனோ எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.

அனைவருக்கும் நல்லவனா இருக்க முடியாதுங்க நண்பரே




வித்தியாசமான தலைவர் Mவித்தியாசமான தலைவர் Uவித்தியாசமான தலைவர் Tவித்தியாசமான தலைவர் Hவித்தியாசமான தலைவர் Uவித்தியாசமான தலைவர் Mவித்தியாசமான தலைவர் Oவித்தியாசமான தலைவர் Hவித்தியாசமான தலைவர் Aவித்தியாசமான தலைவர் Mவித்தியாசமான தலைவர் Eவித்தியாசமான தலைவர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 06, 2012 1:30 pm

Muthumohamed wrote:
பார்த்திபன் wrote:வீரமணி பற்றிய இத்தகவல்களை என் நண்பர் ஒருவரிடம் காண்பித்தபோது, இதேபோன்று அவரைப்பற்றிய எதிர்மறையான விஷயங்களையும் இதேயளவுக்குப் பட்டியலிடலாம் என்கிறார். அவையெல்லாம் என்ன என்று ஏனோ எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.

அனைவருக்கும் நல்லவனா இருக்க முடியாதுங்க நண்பரே

உண்மைதான். ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக