புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
20 Posts - 3%
prajai
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று ஒரு தகவல் Poll_c10இன்று ஒரு தகவல் Poll_m10இன்று ஒரு தகவல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு தகவல்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Sun Nov 25, 2012 5:44 pm

இன்று ஒரு தகவல் Humpback_whale_margaret_river

வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் அதிசயத்தின் உச்சம் !!!

உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான் !!

உலகத்தில் வினோதங்கள் பல வகைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் உயிரில்லா வினோதங்கள் அல்லது உயிர் உள்ள வினோதங்கள் என இருவகை பெரும் பிரிவுகளும் உண்டு. இதில் இன்று உயிர் உள்ள வினோதங்களில் ஒன்றான கடல் உயிரினங்களிலே மிகவும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் பற்றி நாம் சில வினோத தகவல்களை தெரிந்துகொள்வோம்.

திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். திமிங்கிலத்தில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும்

10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.

பொதுவாக கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த வகை மீன்களை திமிங்கிலங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இரு புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.

பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் இந்த வகை திமிங்கல மீன்கள் விளங்குகின்றன.

உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான். Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். இவைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் திமிங்கலம் தொடர்ந்து பாடுவதை பதிவு செய்திருக்கிறார்கள். “சில திமிங்கலங்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பாடும் என்கிறார்கள்

ஆராய்ச்சியாளர்கள்.

இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன்படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்று சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்குப் பதில் அளிக்கும் விதமாக தொலைதூரக் கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

உலகத்திலேயே எந்த ஒரு உயிருக்கும் இல்லாத வினோத சுவச அமைப்பை கொண்டு இருக்கின்றன திமிங்கலங்கள். இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவுள்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனைப் போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுரையீரல் அமைப்பைப் பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும். திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ்நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான்.

இதுவரை நாம் அறிந்த உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும். அதிலும் மனிதர்களை சொல்லவே வேண்டாம். மிகவும் குறைவான சுவாசம் தாங்கும் திறமை உடையவர்கள். ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை சுவாசிக்காமல் இருக்கும் ஒரு உயிரினத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? திமிங்கிலங்களின் அறியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம்!.இவை ஒரு முறை சுவாசித்த பின்னர் 8 0நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் ஆழத்திற்குச் செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளாலும் அடைய முடியாத ஓர் இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்.

இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகின்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid. பிடித்து உண்ணும்போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை கபளீபரம் செய்யத் இவை தவறுவதில்லை. இவை தங்களின் உணவைப் பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன.

பாலூட்டிகளின் சாம்ராஜ்ஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளைப் பெற்றெடுக்க அலாஸ்காவிற்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடிய தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரிய கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.

மொத்தம் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆயிரத்திற்கும் அதிகமான இறுதி ஆய்வுகளின் முடிவில் ‘சயின்ஸ்’ இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக தனது முடிவினை கூறியது: மனிதர்களின் மூளையைக் காட்டிலும் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது.

இவை இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப்படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப்பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.

இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட IWC (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் பிரான்ஸிலும் இவ்வாறாக திமிங்கிலங்கள் கடல் கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் வந்து காணப்பட்டது. அவற்றில் பல இறந்தும் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஏன் இவ்வாறு திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றது என்பதினை அறிய ஆராச்சிகளை செய்து வருகின்றார்கள் பிரான்ஸ் ஆராச்சியாளர்கள்.



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Sun Nov 25, 2012 5:54 pm

மனிதனுக்கு அஞ்சும் காட்டுவாசிகள் !!!

எந்த ஒரு வசதியும் இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் நூறு சதவீதம் இயற்கையோடு இயற்கையாக வாழும் நூற்றுக்கனக்கான பழங்குடியினர் இருக்கிறார்கள்.குகைகளில் வசித்து விலங்குகளை வேட்டையாடும் பழங்குடி மக்கள் பலர் இன்னமும் சமைக்கத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். நெருப்பை பற்றி தெரியும் என்றாலும், அதை வைத்து சமைக்க தெரியாது. அதேபோல் அவர்கள் உலகத்தோடு ஒட்டி உறவாடவும் விரும்புவது இல்லை. அந்தமான் நிகோபர் தீவுகளில் சென்டினல் என்ற தீவில் வசிக்கும் சென்டினலீஸ் பழங்குடி மக்கள் இதுவரைக்கும் தங்கள் அருகில் யாரையும் நெருங்கவிட்டதே இல்லை.

நாகரீகத்தையும் நவின உலகத்தையும் கற்றுத்தருகிறோம் என்று வெளியில் இருந்து காட்டுக்குள் செல்பவர்காளாலும் காட்டு மனிதர்ளுக்கு ஆபத்து உண்டு. காட்டில் ஏற்படும் எவ்வளவோ கொடூரமான வியாதிகளில் பிழைத்துக் கொள்ளும் இவர்களால் நாகரீக மனிதர்களால் ஏற்படும் சாதாரண நோய்களைகூட தாங்கிக் கொள்ள முடிவதில்லை. உதாரணமாக நாகரீக மனிதன் மூலம் பரவிய ஜலதோஷத்தை கூட தாங்கமுடியாமல் காட்டு மனிதர்களின் உயிர் பறிபோய் விடுகிறது. இதனாலே நாகரீக மனிதர்கள் அவர்களுக்கு ஆகாதவர்களாக இருக்கிறார்கள்.

பிரேசில் அமேசான் நதிக்கு அருகே வசிக்கும் பழங்குடியின மக்களை புகைப்படம் எடுக்க ஹெலிகாப்டரில் சென்றார், புனாய் என்ற போட்டோ கிராபர். அந்த மக்களின் வசிப்பிடத்திற்கு மேல் ஹெலிக்காப்டர் பறந்தபோது அதை ஏதோ பெரிய ஆபத்தான பறவை என்று நினைத்த காட்டுவாசிகள் அதை நோக்கி சரசரவென அம்புகளை விட்டனர். அதையும் தவற விடாமல் போட்டோ எடுத்து வந்த புனாய் பத்திரிகைகளில் வெளியிட, அந்தபகுதி மிகவும் பிரபலமானது.

இப்போது பத்திரிக்கையாளர்கள் அந்தப்பகுதியை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காட்டு விலங்குகளிடம் இருந்து தப்பிக்கத் தெரிந்த இந்தகாட்டுவாசிகளுக்கு நவீன மனிதர்களிடம் இருந்து தப்பிக்க தெரியவில்லை. காங்கோ காடுகளின் குகைகளில் வசிக்கும் பிக்மி என்ற பழங்குடியினருக்கு வேட்டை தான் பிரதான தொழில். வேட்டையை தவிர அவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது.

ஆனால் மற்ற ஆதிவாசிக் கூட்டத்துக்கும் இவர்களுக்கும் சண்டை ஏற்படும் சூல்நிலை வந்தால், உடனடியாக முதல் வேலையாக வெள்ளைக்கொடி காட்டி சமதானமாகி விடுவார்கள். இந்த மத்திய ஆப்பிரிக்க நாட்டுக்கு போய்வர பிரான்சில் இருந்து இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மட்டும் ஒரே ஒரு விமானம் உள்ளது. காங்கோ காடு பிரான்சைத் தவிர உலகத்தில் வேறு எந்த நாட்டுடனும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொளள வில்லை. இப்படி இருந்தும் கூட இந்த அப்பாவி காட்டுவாசிகளான பிக்மியை காங்கோ வீரர்கள் வேட்டையாடி உண்பார்களாம். காங்கோ இன மக்களின் வேட்டையாடும் விலங்குகல் பட்டியலில் இந்த பிக்மி இனமும் இடம் பெற்றிருக்கிறது



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Nov 25, 2012 5:58 pm

அருமையான தகவல் நண்பரே!!
ம்ம் மேலும் தொடருங்கள்..



இன்று ஒரு தகவல் Paard105xzஇன்று ஒரு தகவல் Paard105xzஇன்று ஒரு தகவல் Paard105xzஇன்று ஒரு தகவல் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Sun Nov 25, 2012 5:59 pm

அச்சலா wrote:அருமையான தகவல் நண்பரே!!
ம்ம் மேலும் தொடருங்கள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Sun Nov 25, 2012 6:00 pm

இன்று ஒரு தகவல் Popcornbucket

பாப்கார்ன் உருவான வரலாறு !!!

இன்று நாம் திரைப்படம் பார்க்கும்போது சுவாரஸ்யமாக கொறித்துத் தின்னும் பாப்கார்ன் எப்போது பிறந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சொன்னால் நம்புவதற்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆம், பாப்கார்னின் வயது சுமார் 6 ஆயிரம் ஆண்டுகள். மெக்சிகோ மக்கள்தான் இந்த சூப்பர் நொறுக்கித் தீனியை கண்டுபிடித்தவர்கள். நியூ மெக்சிகோவில் உள்ள வவ்வால் குகையில் இருந்து 5600 ஆண்டுகள் பழமையான பாப்கார்னை 1948ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

மெக்சிகோவில் கி.பி 300ஆம் ஆண்டைச் சேர்ந்த ஈமக்கலன் ஒன்று கிடைத்திருக்கிறது. சோளக் கடவுள் பாப்கார்ன் போன்ற தலை அலங்காரத்துடன் உள்ள காட்சி இதில் இடம்பெற்றிருக்கிறது. அப்படியே மெக்சிகோவில் இருந்து சீனா, சுமத்திரா, இந்தியா என பாப்கார்ன் உலகம் முழுவதும் பரவிவிட்டது.

கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளை அடைந்தபோது, அவரது குழுவினரிடம் அங்கிருந்த பழங்குடியினர் பாப்கார்ன் விற்றிருக்கிறார்கள். பழங்காலத்தில் பாப்கார்ன் உணவுப் பொருளாக மட்டுமின்றி அலங்காரத்திற்கும் பயன்பட்டிருக்கிறது. செழிப்புக் கடவுள், மழைக் கடவுள் போன்றவர்களின் நகைகளில் பாப்கார்னைப் பதித்து அலங்கரித்திருக்கிறார்கள். மக்களும் பாப்கார்னைக் கொண்டு தங்களை அலங்கரித்துக் கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் சூடான கல்லின் மீதும், சுடு மணலிலும் சோளத்தைப் போட்டு பாப்கார்ன் தயாரித்திருக்கிறார்கள்.

1890களில் அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் திவாலான வங்கி உரிமையாளர் ஒருவர் பாப்கார்ன் மெஷின் ஒன்றை வாங்கி, தியேட்டர் ஒன்றின் அருகே கடை போட்டார். அதில் கிடைத்த வருவாயில் அவர் தாம் இழந்த மூன்று பண்ணைகளை மீண்டும் வாங்கி விட்டாராம். அந்தளவுக்கு பாப்கார்னுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்திருக்கிறது. அந்த வரவேற்பு இன்று வரை தொடர்கிறது.



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 25, 2012 6:06 pm

மிகவும் வித்தியாசமான தகவலாக இருக்கிறதே? ம்

99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Sun Nov 25, 2012 6:07 pm

அசுரன் wrote:மிகவும் வித்தியாசமான தகவலாக இருக்கிறதே? ம்
நன்றி..



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Nov 25, 2012 6:19 pm

மிக பயனுள்ள பதிவுகள்..



இன்று ஒரு தகவல் Paard105xzஇன்று ஒரு தகவல் Paard105xzஇன்று ஒரு தகவல் Paard105xzஇன்று ஒரு தகவல் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Sun Nov 25, 2012 6:29 pm

அச்சலா wrote:மிக பயனுள்ள பதிவுகள்..
நன்றி ,,,,,,,,,



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 8:57 pm

அற்புதத் தகவல்கள். தகவலுக்கு நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக