ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைகூ வானம். நூலாசிரியர் :வீ.தங்கராஜ். மதிப்புரை:முனைவர் ச.சந்திரா.

Go down

ஹைகூ வானம்.  நூலாசிரியர் :வீ.தங்கராஜ்.  மதிப்புரை:முனைவர் ச.சந்திரா. Empty ஹைகூ வானம். நூலாசிரியர் :வீ.தங்கராஜ். மதிப்புரை:முனைவர் ச.சந்திரா.

Post by eraeravi Tue Dec 04, 2012 7:31 am

ஹைகூ வானம்.

நூலாசிரியர் :வீ.தங்கராஜ்.

மதிப்புரை:முனைவர் ச.சந்திரா.

கோபுர நுழைவாயில்:
அண்டசராசரத்தின் மூலமாம் 'அணுவில்' துவங்கி அமிழ்தினும் இனிய 'தமிழ்' எனும் சொல்லில் நிறைவுறுகின்றது கவிஞர் வீ.தங்கராஜ் அவர்களின் ஹைகூ வானம் நூல்!மண்ணில் இருந்து மலையேறி "குறிஞ்சிப்பூக்கள்" பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து தமிழன்னைக்குச் சூட்டி அழகுபார்த்த இக்கவி இன்று ஹைகூ எனும் ஏணி கொண்டு விண்ணுலகு ஏறி வானம் தொட்டிருக்கின்றார்! வாசிப்போரின் மனதில் ஹைகூவிற்கான ரிஷி மூலத்தையும் நதிமூலத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகின்றது இந்நூல்!
நாற்பாலா?நயம்பாலா?

ஐம்பெரும் பூதங்கள் முதற்பகுப்பாய்,ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையானது இரண்டாம் பகுப்பாய்,இவ்விரண்டின் மாசு-மாசுக்கட்டுப்பாடு மூன்றாம் பகுப்பாய்,ஐந்தறிவு மனிதனுக்கு ஆறாம் அறிவைச் சுட்டிக்காட்டுவது நான்காம் பகுப்பாய்-என நயமாகத் தொகுக்கப் பட்டிருப்பதால் வாசிப்போர் ஒரு நூறு பக்கங்களையும் எவ்வித அலுப்பும் சலிப்புமின்றி பாங்காய் கடந்து சென்றுவிடுகின்றனர் என்பது உண்மை! நாற்பாலின் தலைப்பிற்கு ஏற்றவாறு, கவி பாடுவதில் சிறந்த நம்மவர் நால்வர்-அயலவர் நால்வர் -என இவ்விருவர்களின் வார்த்தைகளை ஒவ்வொரு பகுப்பிலும் வரவேற்பு வளையமாய் வைத்திருப்பதால் அவை ஹைகூ வானத்தின் வானவில் போல் பரிமளிக்கின்றன!
அழகியல் உணர்வா?ஆக்கப்பூர்வ உணர்வா?

காற்றுவாக்கில் நம்மைக்கடந்து செல்கின்ற ,நாம் கண்டுகளிக்கின்ற காட்சிகளெல்லாம் இக்கவிஞருக்கு கருவாகிவிடுகின்றது!ஆம்!இவரது கரங்களில் வானம் நெசவு செய்கின்றது!மேகம் தலை துவட்டுகின்றது!மழைத்துளிகள் மடல் வரைகின்றன!பூக்கள் பூஜை செய்யப்புறப்படுகின்றன!பகலவனும் பால்நிலவும் பக்கத்திற்குப்பக்கம் போட்டிபோட்டு நகர்கின்றன!இரவும் பகலும் இடையிடையே தலைகாட்டுகின்றன!குளிர் காலம்-கோடைக்காலம் என பருவகாலங்களோ ஆங்காங்கே பளிச்சிடுகின்றன!மொத்தத்தில் கேள்விக்குறியும் ஆச்சர்யக்குறியுமாய்,படிமமும் குறியீடுமாய்,ஹைகூ அனைத்தும் முத்திரை பதித்துச் செல்கின்றன! சில ஹைகூ தத்துவங்களை உதிர்க்கின்றன!ஒருசில மானிடவாழ்விற்கு எச்சரிக்கை விடுக்கின்றன!இயற்கையை பற்பல ஹைகூக்கள் வர்ணித்துச் செல்கின்றன!சிற்சில சமூக இழிநிலையைச் சாடுகின்றன!மொத்தத்தில் அழகியல் உணர்வோடு ஆக்கப்பூர்வமான உணர்வுகளையும் இந்நூல் ஊட்டிவிடுகின்றது எனலாம்!

தத்துவார்த்த ஹைகூ ஒன்று!
"விதையின் வாழ்க்கை
மரணத்தின் தொடக்கம்
உயிர்த்தெழுதலின் அற்புதம்!(ப.45)

தற்பெருமையாளனுக்கானச் சாட்டையடிக் கவிதை இதோ!
"நித்தம் பயணித்தாலும்
சுவடுகள் பதிப்பதில்லை
நிலவும் சூரியனும் வானில்!"

மூடத்தனத்தை முறியடிக்கும் முத்திரை ஹைக்கூ:
அவன் தைத்த செருப்பில்
ஊரே நடக்கிறது!
அவனுடையது கக்கத்தில்!(ப.91)
எது முதல் எதுவரை?

சில்வண்டு முதல் சிட்டுக்குருவிவரை,கரையான் முதல் கரடிவரை,எலிமுதல் எருமைவரை,மின்மினிப்பூச்சி முதல் வண்ணத்துப்பூச்சிவரை,புற்றீசல் முதல் பூனைவரை -என ஓரறிவு உயிர் முதல் ஐந்தறிவு உயிர்வரை அனைத்தும் ஆறறிவு உயிர்களுக்கு முச்சிறுவரிகளில் பாடம் கற்றுத்தந்துவிடுகின்றன!தவளைகள் தத்துவம் பேசுகின்றன!எலிகள் எதிர்காலவாழ்விற்கு எச்சரிக்கை விடுக்கின்றன!
பலூன் பாடம் கற்றுத் தரும்விதம் இதோ!

"குடியரசுதின விழா!
வானில் வண்ணபலூன்கள்!
தேசிய ஒருமைப்பாடு!

கருவறை முதல் கல்லறை வரை,பூமி முதல் வானம்வரை-கவி வீ.தங்கராஜ் அவர்களின் ஹைக்கூப்பயணம் தொடர்கின்றது!இதோ மண்ணிலிருந்து விண்ணிற்குப்பாயும் கவியின் சாகசம்!

"இயங்காத விண்கலங்கள்!
விண்ணை மாசாக்கும்
வானக்குப்பை!"

ஒரே கல்லில் இரு மாங்காயாக ஒரு ஹைகூ!

"நூலக அடுக்கில்
வரிசை கலையாமல்
முதிர்கன்னியாய் புத்தகங்கள்!"

என்று கவி கூறுவதில் வாசிப்பின் குறைபாடும்,பெண்மை சந்திக்கும் அவலமும் ஒற்றை வரியில் சொல்லப்பட்டுவிடுகின்றது!
பெண்மையின் பேரவலம் சொல்விளையாடலில் இதோ!

"ஐம்பாலில்
பெண்ணுக்கு
கள்ளிப்பால்!"(ப.87)

அழகியலை ஊட்டும் அற்புத ஹைக்கூ!

"நீலப்பட்டில் முத்துமாலை!
கூடு திரும்புகின்றன
கொக்குகள்!"(ப.32)

மனதை ஈர்த்த ஹைக்கூ!

"மௌனமாய் வந்து
நிறைய பேசியது
தகரக்கூரையில் மழை!"(ப.35)

மனமார...
ஹைக்கூ எனும் சிறகு ஏற்று நாற்றிசையும் பறந்ததோடு மட்டுமல்லாமல்,மண்ணிலிருந்து விண்ணிற்கும் பயணித்து சமூகத்தை உற்றுநோக்கியிருக்கும் கவிஞர் வீ.தங்கராஜ் அவர்களின் இலக்கியப்பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!






































eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தகம் போற்றுதும் நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை:முனைவர் ச.சந்திரா !
» புத்தகம் போற்றுதும் நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை:முனைவர் ச.சந்திரா !
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
» இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum