ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?

5 posters

Go down

அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Empty அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?

Post by DERAR BABU Mon Dec 03, 2012 12:24 pm

முதல் அமைச்சர் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் விருதுநகரில் வசித்து வந்தார். அவருடைய செலவுகளுக்கு காமராஜர் மாதம் 120 ரூபாய் அனுப்பி வந்தார். காமராஜரின் நண்பரும், காங்கிரஸ் பிரமுகருமான முருக.தனுஷ்கோடி, விருதுநகருக்கு சென்றபோது சிவகாமி அம்மாளைப் போய்ப் பார்த்தார்.

தனுஷ்கோடியுடன் சிவகாமி அம்மாள் பேசிக்கொண்டிருந்தபோது, "அய்யா (காமராஜர்) மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கூட வாங்கிக்கொடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா? ஆகையால் அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாயாவது கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்றார்.

சென்னை திரும்பியதும், இதுபற்றி காமராஜரிடம் தனுஷ் கோடி சொன்னார். "யார் யாரோ பார்க்க வருவார்கள் என்பது உண்மைதான். வருகிறவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். இப்போது கொடுத்து வரும் 120 ரூபாயே போதும்" என்று கூறிவிட்டார், காமராஜர்.

காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகன் ஜவகருக்கு திருமண ஏற்பாடு நடந்தபோது, சிவகாமி அம்மாளை தனுஷ்கோடி சந்தித்தார். வீட்டில் பாத்ரூம் (கழிப்பிடம்) கட்டவேண்டும் என்றும், வீட்டை ஒட்டிய இடம் விலைக்கு வருவதாகவும், அதற்கு ரூ.3ஆயிரம் செலவாகும் என்றும், இதை காமராஜரிடம் தெரிவிக்குமாறும் சிவகாமி அம்மாள் கூறினார். இதன் பிறகு நடந்தது பற்றி, தனுஷ்கோடி கூறுகிறார்:

"ஒரு முதல் அமைச்சர் வீட்டில் இந்த வசதிக்கூட இல்லா விட்டால் எப்படி?" என்று எண்ணிக்கொண்டு, சென்னை வந்ததும், தாயார் சொன்னதை தலைவரிடம் (காமராஜர்) கூறினேன். உடனே தலைவர், "நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன் நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான்.

சிலர் பத்திரிகையில் கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ!" என்று என்னை விரட்டி விட்டார். சந்தர்ப்பம் சரியில்லை என்று நான் உடனே திரும்பி விட்டேன். மறுநாள் போனேன். "ஊரான் சொல்வான் என்பதற்காக வயதான தாயார் கஷ்டப்பட வேண்டுமா? உங்கள் பெயரால் வாங்க வேண்டும் என்பதற்காகவே, உங்களிடம் கேட்க வந்தேன்.

நீங்கள் இப்போது ரூபாய் ஒன்றும் கொடுக்க வேண்டாம். இப்போது எனக்கு வேண்டியது உங்கள் அனுமதி மட்டுமே" என்று உறுதியுடனும் பணிவுடனும் கூறினேன். "சரி, எப்படியோ செய் போ" என்று மனம் மாறி அனுமதி தந்தார். எனக்கு வேண்டிய அனுமதி கிடைத்துவிட்டது. தாயாரின் ஆசைப்படி அந்த இடமும் வாங்கப்பட்டது."

இவ்வாறு முருக.தனுஷ் கோடி கூறியுள்ளார்.

காமராஜர், சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். முதல் அமைச்சர் பதவி ஏற்ற பிறகும் கூட, அரசு பங்களாவுக்கு குடிபோகாமல் அதே வாடகை வீட்டில்தான் வசித்தார். வீட்டின் எண் 8. பொதுவாக, எட்டாம் எண்ணை அதிர்ஷ்ட மற்ற எண்ணாக நினைப்பார்கள்.

ஆனால் காமராஜர் அது பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. காமராஜர் எந்தப் பண்டிகையையும் கொண்டாடுவது இல்லை. தீபாவளியின்போதுகூட, புது வேட்டி, புது சட்டை அணியமாட்டார். ஆனால் அவருடைய உதவியாளராக இருந்த வைரவனுக்கு தீபாவளிக்கு புது துணிமணிகள் வழங்குவார்.

பொதுவாக காலை 6 மணிக்கு எழுவார். காலையில் எங்காவது அவசரமாகப் போகவேண்டியிருந்தால், முன்னதாகவே எழுப்பி விடும்படி வைரவனிடம் கூறுவார். காலையில் காபி சாப்பிட்டதும், பத்திரிகைகளைப் படிப்பார். பிறகு, தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கு பேட்டி அளிப்பார். வந்தவர்களின் கோரிக்கைக்கு தக்கவாறு பதில் அளிப்பார்.

தனக்குத் தெரிந்தவர்கள், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளைக் கொண்டு வந்தால், "முடியாது, போ" என்று கண்டிப்புடன் கூறிவிடுவார். மற்றவர்கள் இத்தகைய கோரிக்கைகளைத் தெரிவித்தால், அவர்கள் மனதைப் புண்படுத்தாமல், "ஆகட்டும் பார்க்கலாம்" என்பார். அவசியமான உதவியைச் செய்யும்போது, அவர்களின் சாதி, மதம், தெரிந்தவன், தெரியாதவன், கட்சிக்காரர், எதிர்க்கட்சிக்காரர் என்றெல்லாம் பார்ப்பதே இல்லை.

நியாயமும், தகுதியும் இருந்தால் நிச்சயமாக உதவுவார். காலையில் முகச்சவரம் செய்து கொண்டு குளிப்பார். இரவில் எவ்வளவு நேரமானாலும் குளித்துவிட்டுத்தான் சாப்பிடுவார். இரவில் தூங்குவதற்கு முன் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படிப்பது வழக்கம். சில நாட்களில் இரவு 2 மணி வரை கூட படித்துக்கொண்டு இருப்பார்.

சிக்கலான அரசியல் பிரச்சினைகள் பற்றி முக்கிய பிரமுகர்களுடன் கலந்து ஆலோசிக்கும் சமயங்களில், காலை 5 மணி வரை கூட பேசிக்கொண்டு இருப்பார். அதன்பின், ஒரு மணி நேரம்தான் தூக்கம்! பிறகு வழக்கம்போல் எழுந்து, தன் அலுவல்களை கவனிப்பார்.

மதியச்சாப்பாடு, சைவம்தான். என்றாவது ஒருநாள் முட்டை வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார். அதுதான் விசேஷ சாப்பாடு. மாலையில் ஒரு கப் காபி. இரவில் இட்லியும், பாலும்தான் அவர் உணவு. இடையில் காலையிலோ, மாலையிலோ சாப்பிடுவது இல்லை. பகல் சாப்பாட்டை முடித்தவுடன் தூங்கும் வழக்கம் அவருக்கு இருந்தது........................




அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Empty Re: அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?

Post by யினியவன் Mon Dec 03, 2012 12:27 pm

தலைவர் என்றால் இது போல் இருக்கணும்.

தலைவிதி என்று புலம்பணும் இன்றைய தலைவர்களை எண்ணி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Empty Re: அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?

Post by Kuzhali Mon Dec 03, 2012 12:31 pm

யினியவன் wrote:தலைவர் என்றால் இது போல் இருக்கணும்.

தலைவிதி என்று புலம்பணும் இன்றைய தலைவர்களை எண்ணி.

யினியவன் அண்ணா வசனம் அருமை. சூப்பருங்க
Kuzhali
Kuzhali
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Empty Re: அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?

Post by பூவன் Mon Dec 03, 2012 12:33 pm

யினியவன் wrote:தலைவர் என்றால் இது போல் இருக்கணும்.

தலைவிதி என்று புலம்பணும் இன்றைய தலைவர்களை எண்ணி.

இதுதான் விதி தலைவி (தி ) என்று புலம்பணும் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Empty Re: அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?

Post by கரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 3:16 pm

எனக்கு டாட்டா கார் தரவில்லைனா நான் கட்சிக்கு டாடா காட்டிடுவேன்னு சொல்ற காலம் இது .சரிதான் நீங்க சொன்னது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Empty Re: அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum