புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_m10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10 
48 Posts - 51%
heezulia
பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_m10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_m10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_m10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_m10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_m10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10 
48 Posts - 51%
heezulia
பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_m10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_m10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_m10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_m10பொழுது போக்கல்ல, வக்கிரம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுது போக்கல்ல, வக்கிரம்.


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Nov 26, 2012 6:08 pm

20 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலையில் இருந்தது இந்தியா என்பதற்கு இப்போதுள்ள வளர்ச்சியே சாட்சி. உலகப் பொருளாதாரமயம்தான் இந்த வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்.

இது ஒருபுறம் இருந்தாலும், எந்த வளர்ச்சியும் சில கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டியது அவசியம். சில துறைகள் கடிவாளம் போட முடியாத அளவுக்குப் பெருகி வருகின்றன. இதனால் பலன் உண்டு என்றாலும், பாதிப்புகளும் உண்டு. இந்த பாதிப்பு நாளைய சமூகத்தை பாதிக்கும் என்றால், அதற்குக் கட்டுப்பாடு அவசியம்.

இதற்கு உதாரணம் தொலைக்காட்சி. இவற்றின் எண்ணிக்கை பெருகுவதால் அரசின் கருவூலம் நிறைகிறது. ஆனாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு?

தனியார் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் வியாபார நோக்கத்தை முன்னிறுத்தியே தயாரிக்கப்படுகின்றன. கேட்டால், பொதுமக்கள் விரும்பிப் பார்க்கின்றனர் என்பது அவர்களது வாதம். அப்படியே எடுத்துக் கொண்டாலும், ஆபாசக் காட்சிகளுக்குத் தடை விதிப்பது ஏன்? இதைப் பார்க்கவும் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர்தானே.

காலை 10 மணியில் இருந்து தொலைக்காட்சி தொடர்களின் ஒளிபரப்புகள் நள்ளிரவு வரை தற்போது நீள்கின்றன. இடையில் சில நேரங்களில் மட்டும் மற்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி. அதிலும் முன்னணி வகிப்பது சினிமா தொடர்பானவை.

தொடர் நாடக ஒளிபரப்புகளில் குடும்பத்தில் ஏற்படும் சாதாரண பிரச்னைக்காக, அவர்களது முகபாவங்களைக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரின் முகத்தையும் "குளோஸப்'பில் திரும்பத் திரும்பக் காட்டுகின்றனர். இது பார்வையாளர்களை வெறுப்படையவே செய்கிறது. அதிலும் வில்லனாகவும் வில்லனின் கையாளாகவும் நடிப்பவர்களின் தங்கப்பல், சொத்தைப்பல் போன்றவற்றைக் காட்டும்போது அருவறுப்பே அதிகமாகிறது.

பாடல், ஆடல் நிகழ்ச்சிகளில், "ஜட்ஜஸ் என்ன சொல்றாங்கனு கேட்போம்' என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கும்போது, பாட வந்தவரை வானளாவ பாராட்டுவதும், சரியில்லை என்றால் மானாவாரியாகப் பேசுவதும், திட்டுவது போல் வந்து பாராட்டுவதும் (ஷாக் தர்றாங்களாம்...), மதிப்பெண் கொடுப்பது இல்லையென்றால், கலர் கலர் அட்டைகளை எடுத்துக் காட்டுவது, எடிட் செய்யப்பட வேண்டிய காட்சிகளை அப்படியே ஒளிபரப்புவது என என்னவெல்லாம் தங்களால் செய்ய முடியுமோ அனைத்தையும் நிகழ்ச்சிகளில் அரங்கேற்றுகின்றனர்.

பிஞ்சுக் குழந்தைகளைப் பாட, ஆட வைப்பதும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகக் காட்டுவதும் நிறுவனங்களுக்கு வேண்டுமானால் வியாபார யுக்தி என்றாலும், அதனைப் பார்க்கும் மற்ற குழந்தைகளை, "அந்தக் குழந்தையைப் பார்த்தாயா? நீயெல்லாம் என்னத்த கிழிக்கிற?' என வீட்டில் உள்ளவர்கள் பிற குழந்தைகளை வைவதும் பெரும்பாலான குடும்பங்களில் நடக்கிறது.

இவை குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும் என்பதை சமுதாய நோக்கில் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாத் திறமையும் வருவதில்லை. அவர்களால் முடிவதை மட்டுமே செய்யத் தூண்ட வேண்டும். இந்த நிகழ்ச்சிகள் நம் குழந்தைகளின் தகுதியை, தரத்தை எப்படித் தீர்மானிக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களது தரத்தை (ரேட்டிங்) உயர்த்த மேற்கொள்ளும் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவதுபற்றி யோசிக்க வேண்டும்.

பொதுத் தேர்வுகளில் பெயிலாகி விட்டோம், குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்று மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்கள் தற்கொலை செய்வது பள்ளி முதல் கல்லூரி வரை நடக்கிறது.

இதில், இதுபோன்ற நிகழ்ச்சி ஒளிபரப்புகளால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும் சிறுவர்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்த வேண்டுமா? அரசு சட்டம் போட்டால்தான் இதற்குத் தீர்வு கிடைக்கும் என்பது வெற்றுப் பேச்சு. சட்டங்களைவிட சுய கட்டுப்பாடுகள்தான் எதற்கும் தீர்வு. திரைப்படங்களாகப் பல நூறு முறை ஒளிபரப்பாகி, வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஆயிரம் முறை கேட்ட பாடல்களைத்தான் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பாடுகின்றனர். அதிலும் குரல்வள நிபுணர்கள் குழந்தைகளுக்கு அதிக சிரமம் இல்லாமல் பாடப் பயிற்சி தருகின்றனர். ஓரளவுக்கு வசதியான, கலாசார ரீதியாக முன்னேறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் பெரும்பாலும் பங்கேற்கின்றனர். அவர்களுடைய பாடலுக்கு வாசிப்பதும் கைதேர்ந்த இசைக்குழுவினர். இப்படியெல்லாம் வாழ்க்கையில் பிறருக்குக் கிட்டாத வசதிகள், விளம்பரங்களுடன் பாடப்படும் நிகழ்ச்சிகள்தான் தொகுக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன என்பதே புரியாமல் அந்தக் குழந்தையே "ஞானசம்பந்தரை'ப் போல பாடிவிட்டதாக பார்வையாளர்கள் புளகாங்கிதம் அடைகின்றனர்.

""கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா'', ""வடு மாங்கா ஊறுதுங்கோ'' போன்ற பாடல்களைக் குழந்தைகளைவிட்டுப் பாடச் சொல்லி ரசிப்பதற்கு வக்கிரமான புத்திதான் தேவை. அது இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருக்கிறது.

பணம் புகழுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பது என்கிற "தியாக மனப்பான்மை' அவர்களை அழைத்துச் செல்லும் அப்பா, அம்மாக்களிடமும் தாத்தா பாட்டிகளிடமும் நிரம்பவே இருக்கிறது. இந்த வெட்கங்கெட்ட கூத்துக்கு தமிழ்நாட்டில்தான் எத்தனை வரவேற்பு?

முன்பெல்லாம் எப்படியோ, இப்போது தமிழ் இனத்துக்கு எல்லா துறைகளிலும் தரக்குறைவானவற்றை ரசிப்பதிலேதான் அலாதி இன்பம் போலிருக்கிறது. தினமணி .

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 26, 2012 6:18 pm

சூப்பருங்க நல்ல கட்டுரை ... பாரதி யார் என்று ஒரு பள்ளி சிறுவனை கேட்டால் விவேக் என்றானே பார்க்கணும் ... என்ன கொடுமை சார் இது

ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Postஆச்சார்யரஜ்னீஷ் Mon Nov 26, 2012 10:30 pm

இவை அனைத்தும் மிக சரியாக விளக்கப்பட்ட கட்டுரைதான் .... குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் படித்தவர்களும் புரிந்துகொள்ளவேண்டும் . கலாச்சாரம் இப்படிதான் கண்னுக்கு தெரியாமல் கெட்டு போகிறது .

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Tue Nov 27, 2012 10:31 am

அவர்களின் வயதிற்கு மீறி அழுத்ததை கொடுக்கும்போது பாவம் அந்த பிஞ்சுகள் என்ன செய்யமுடியும்.....
நன்றியுடன்,
பாஸ்கர், சு.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 27, 2012 10:36 am

முன்பெல்லாம் எப்படியோ, இப்போது தமிழ் இனத்துக்கு எல்லா துறைகளிலும் தரக்குறைவானவற்றை ரசிப்பதிலேதான் அலாதி இன்பம் போலிருக்கிறது. தினமணி .
நன்றி உண்மையான வார்த்தை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Nov 27, 2012 2:12 pm

மீடியா வெளிச்சத்தை அடைய மிரட்டி வளர்க்கப்படுகிறார்கள் குழந்தைகள். இந்நிலை கண்டிப்பாக மாறவேண்டும். நல்ல கட்டுரை. ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக