புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீளாத் துயரில் கிராமங்கள்


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Nov 27, 2012 6:18 pm

பசுமையான வயல்வெளிகள், நீர் நிலைகள், தூய்மையான காற்று, கள்ளங் கபடமற்ற வெள்ளந்தியான மனிதர்கள்...!

ஆஹா..! உண்மையான சொர்க்கம் கிராமங்களில்தான் இருக்கிறது எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நிலைமை வேறாக இருக்கிறது என்கிறார்கள் அங்கிருந்து நகரங்களைத் தேடி வருபவர்கள்.

விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்காததால், லாபமில்லாத தொழிலாகிவிட்ட விவசாயம். ஆண்டாண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கும் ஆண்டான் அடிமை மனோபாவத்தால், அடங்க மறுக்கும் சாதிய வெறியாட்டங்கள்.

சமுதாய சிந்தனையே இல்லாமல் வளரும் இளைய தலைமுறையினரிடையே பெருகி வரும் போதைப் பழக்கம். உள்ளாட்சி அதிகாரப் பரவலில் களையப்படாத குறைபாடுகளால் நிலவிவரும் குழப்பம்.

இப்படி நாலாபுறத் தாக்குதலால் கிராமங்கள் நிலைகுலைந்து போயுள்ளன என்றால் அது மிகையல்ல. பிறந்த மண்ணை விட்டுச்செல்ல மனமின்றி, பிழைக்க வழியும் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மிச்சமிருக்கிற மனிதர்களையும், வெளியேற்றாமல் ஓய மாட்டார்கள் போலிருக்கிறது.

நாட்டில் இருக்கிற பிரச்னை போதாதென்று, புதிது புதிதாகச் சிலைகளை வைக்கத் துடிக்கிறார்கள். விழா எடுக்கிறார்கள். மணிமண்டபம் கட்டுகிறார்கள்.

வருடந்தோறும் வாகனப் புறப்பாடு நடத்தி, ஆறிலிருந்து அறுபதுகள்கூட, தலைகளில் ரிப்பன்களைக் கட்டிக் கொண்டு வழியெங்கும் பேய்க் கூச்சலிட்டபடி, மாற்று சாதியினரை வசை பாடிச் செல்கிறார்கள். பிறகெப்படி மலரும் சமத்துவமும். சாதி பேதமற்ற சமுதாயமும்.

பெயருக்கு வேண்டுமானால் சமத்துவபுரங்களைக் கட்டலாம். சமபந்தி போஜனங்களை நடத்தலாம். சம தர்மம்(?) நிலவும் நாகரீக சமுதாயத்தை நாம் உருவாக்கி விட்டோம் என மேடைகளில் முழங்கலாம்.

ஆனால், ஒவ்வொரு மனிதனின் ரத்தத்திலும் சாதியம் உறைந்து கிடக்கும் வரை, இவை எதுவுமே சாத்தியமில்லை!

பொதுவாக தொடர் வறட்சியோ, குடிநீர்ப் பஞ்சமோ, பிழைக்க வழியில்லாதுபோனாலோ கிராம மக்கள், ஊரைக் காலி செய்துவிட்டு பிழைப்பைத் தேடி வேறிடங்களுக்குச் செல்வது வழக்கம்.

ஆனால், இப்போது அப்படியொரு நிலைமை தென் மாவட்ட கிராமங்களில் ஏற்பட்டு விடுமோ என அஞ்சினால் அது மிகையல்ல.

"வளர்த்து விட்டோம்

செந்நீர் ஊற்றி..

வேர்களோ எட்டாத ஆழத்தில்..!'

என்கிறார் ஒரு கவிஞர்.

யார் வளர்த்தார்கள்..? எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒவ்வோர் ஆண்டும் சாதிய விழாக்களின்போது ஏற்படும் வன்முறையாலும், விபத்துகளாலும் குறைந்தது பத்து, இருபது உயிர்களையாவது பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இதனால், ஏற்படும் பேரிழப்பும், துயரமும் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் மட்டுமே ஆறாத ரணமாக பல ஆண்டுகளுக்கு மிஞ்சியிருக்கும்.

"சொல்லச் சொல்ல கேட்காமல் போனானே..! இப்ப பொணமா வந்திருக்கானே..!' கலவரத்தில் உயிரிழந்த இளைஞனின் தாயாரின் புலம்பல்களை, சாதித் தலைவர்கள் செவிமெடுப்பார்களா எனத் தெரியவில்லை. அவர்களுக்கென்ன கவலை!

இதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தலைவர்களின் சிலைகளைச் சுற்றிலும், குறைந்தபட்சம் பத்து போலீஸôராவது நாள் கணக்கில் நிற்கிறார்கள்.

ஏதேனும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால், மாதக்கணக்கில் சிலைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலைமை.

சாதி மோதல்கள் தொடர்ந்தால், ஆளும் நிர்வாகத்துக்கு ஏற்படும் அவப் பெயரும், இழப்பும் குறைந்த பட்சம் அடுத்த தேர்தல் வரைக்குமாவது நீடிக்குமே. இந்த விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலை மனதில்கொண்டு, பெரிய கட்சிகளும் மெüனம் சாதிப்பது வேதனையானது.

ஒவ்வோர் ஆண்டும் தொடரும், இந்தத் துயரத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

இந்த ஒரு விஷயத்திலாவது, சர்வ கட்சிகளின் ஒத்துழைப்போடு, சட்டத்தைக் கையிலெடுக்க அரசு துணிய வேண்டும்.

இனி தமிழகத்தில் எந்தவொரு சாதியினரும் விழாக்களின் பெயரால் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என சட்டம் கொண்டு வந்து சாதி விழாக்களுக்குத் தடை விதித்தால் மட்டுமே, சாதிய வன்முறைகளால் ஏற்படும் உயிர்ப் பலிகளையும், அப்பாவிகளின் மண்டை உடைவதையும் தடுக்க முடியும்.

இந்த முடிவை, அமைதியை விரும்பிய அனைத்து சாதி தேசியத் தலைவர்களின் ஆன்மாக்கள் நிச்சயம் வரவேற்றுப் போற்றும்.............................. தினமணி ............

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 6:18 pm

பகிர்வுக்கு நன்றி... நன்றி



மீளாத் துயரில் கிராமங்கள் Paard105xzமீளாத் துயரில் கிராமங்கள் Paard105xzமீளாத் துயரில் கிராமங்கள் Paard105xzமீளாத் துயரில் கிராமங்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Nov 27, 2012 6:45 pm

மக்கள் தான் மாற வேண்டும்.

வோட்டுக்காக மக்களை வேட்டை ஆடும் குள்ள நரிகளிடம்
சட்டம் இயற்ற புலம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 27, 2012 7:47 pm

ஏதோ கிராமங்களைப் பற்றிய கட்டுரை எனப் படித்தால், சாதி வெறிதான் தலைதூக்கி நிற்கிறது.

இந்தக் கட்டுரை தேவர் குருபூஜையைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.



மீளாத் துயரில் கிராமங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக