புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
1 Post - 3%
viyasan
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குரு தெய்வம்! Poll_c10குரு தெய்வம்! Poll_m10குரு தெய்வம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு தெய்வம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 26, 2012 5:26 pm


பத்து நாட்கள் ஜுரத்துல படுத்து, ஸ்கூலுக்கு லீவு போட்டிருந்த ஆனந்தி, அன்று தான் அரைப் பரிட்சை ஆரம்பம் என்பதால், பள்ளிக்கு வந்திருந்தாள்.

""ஆனந்தி... தமிழ் பரிட்சைக்கு நல்லா படிச்சுட்டீயா? நம்ப சுகுணா இந்த முறை உன்னை பின்னுக்கு தள்ளி, பர்ஸ்ட் ராங்க் எடுத்துடணும்ங்கிறதில் குறியா இருக்கா. நீயும் உடம்பு சரியில்லாம பத்து நாளா ஸ்கூலுக்கு வரலை. எப்படி படிச்சி இருக்கே?'' சகதோழி கேட்டாள்.

""ம்... நல்லா படிச்சிருக்கேன், '' சொன்னவள் மனதில் பயம் ஏற்பட்டது.

"இவ்வளவு நாள் வகுப்பில் முதல் மாணவியாக வந்த நான், இந்த முறை சுகுணாவிடம் விட்டுக் கொடுத்து விடுவேனோ... மாட்டேன் எப்படியும் நான் தான் முதல் ராங்க் வர வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது? மற்றவர்கள் முன், என் தகுதியை குறைத்துக் கொள்ள முடியாது...' மனதில் ஏற்பட்ட எண்ணம், அவளைத் தப்பு செய்யத் தூண்டியது.

ஹாலில் மாணவிகள் உட்கார்ந்து பரீட்சை எழுத, அவர்களை கண்காணித்தபடி நடந்து கொண்டிருந்தாள் மீனா டீச்சர். ஆனந்தியின் அருகில் வந்த போது, அவள் சற்று தடுமாறுவது போல் தோன்ற, ""என்ன ஆனந்தி... உடம்பு பரவாயில்லையா... நல்லா படிச்சிருக்கியா... தைரியமா எழுது,'' புன்னகையுடன் அவளைப் பார்த்தபடி கடந்து சென்றாள்.

பத்தாவது படிக்கும் அந்த மாணவியர், பரிட்சை எழுதுவதில் தீவிரமாக இருக்க, அந்த பெரிய ஹாலில் திரும்ப நடந்தவள், அப்போது தான் ஆனந்தி காலிடுக்கில் மறைத்து வைத்த புத்தகத்தை பார்த்து எழுதுவதை கவனித்தாள்.

""ஆனந்தி... என்ன செய்யறே... எழுந்திரு.''

கண்களில் பயம் பரவ, மாட்டிக்கொண்டு விட்டோமே என்ற பதற்றம் நெஞ்சில் தொற்றிக் கொள்ள, மெல்ல எழுந்தாள்.

""என்ன புக் மறைச்சு வச்சிருக்கே... அதை எடு.''

வாங்கியவள், தமிழ் கோனார் நோட்ஸ் என்பதைப் பார்த்து, ""என்ன ஆனந்தி... நல்லா படிக்கிற பொண்ணு உனக்கு என்ன ஆச்சு. இப்படி செய்யலாமா... புத்தகத்தைப் பார்த்து எழுதறது தப்பில்லையா... உனக்கு உடம்பு சரியில்லாததால் சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன். அதுக்காக, இது எவ்வளவு கேவலமான காரியம். இப்படியெல்லாம் தப்பான அணுகுமுறையோடு பரீட்சை எழுதணுமா... உனக்கு இது தப்பா தெரியலை?''

""டீச்சர்... தெரியாம செஞ்சுட்டேன்.''

குரல் தடுமாற ஆனந்தி சொல்ல, வகுப்பில் பரீட்சை எழுதும் மற்ற மாணவியர் அவளையே பார்க்க, அவமானத்தில் தலைகுனிந்து நின்றாள்.

""உன் பேப்பரை கொடு.''

வாங்கி, அதில் பரீட்சை பார்த்து எழுதியதைக் குறிப்பிட்டு, கையெழுத்துப் போட்டு, திரும்ப அவளிடம் கொடுத்தாள்.

""இது தான் உனக்கு தர்ற தண்டனை. அப்பதான் இனிமே இந்த மாதிரி எண்ணம் உன் மனசில் வராது. உனக்கு இந்த முறை தமிழ் பரிட்சையில் மார்க் கிடையாது. நல்லா படிக்கிற பெண்கிறதாலே, உன்னை எச்.எம்.,கிட்டே கூட்டிட்டு போகாம விடறேன்.''

கண்களில் கண்ணீர் வழிய பரீட்சை ஹாலை விட்டு வெளியேறினாள் ஆனந்தி.

""ஆனந்தி... ஸ்கூலுக்கு கிளம்பலையா?'' துணிக்கடையில் வேலை பார்க்கும் ஆனந்தியின் அம்மா, வேலைக்கு கிளம்பியபடி மகளைப் பார்த்து கேட்டாள்.

""இதோ கிளம்பிட்டேன்.''

""சரி ஆனந்தி... சாப்பாடு காரியர் டேபிள் மேலே இருக்கு. மறக்காம எடுத்துக்க. கதவை பூட்டி, பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்துடு. அப்பா ஷிப்ட் முடிஞ்சு இரண்டு மணிக்கு வருவாரு. நான் போய்ட்டு வர்றேன்.''
மகளிடம் விடை பெற்று கிளம்பினாள்.

அவள் தெருவில் இறங்கி நடக்க, கதவை உள்புறம் தாழிட்டாள் ஆனந்தி.

"டீச்சர், எல்லாருக்கும் முன் கண்டிச்சதை தாங்க முடியாம, ஆனந்தி தூக்கு மாட்டி செத்து போயிட்டாளாம்...' என்று, ஊரே பரபரப்பாக பேசியது.

பெற்றவர்கள், மகளைப் பறிக் கொடுத்து கதறி அழ, அவர்களை அனைவரும் பரிதாபமாக பார்த்தனர். ஊர்க்காரர்கள் ஒன்று திரண்டு, ஆனந்தியின் சாவுக்குக் காரணமான, மீனா டீச்சரை கைது செய்யச் சொல்லி, போலீஸ் ஸ்டேஷன் முன் மறியல் செய்ய, மீனா டீச்சர் கைது செய்யப்பட்டாள்.

""சார்... தூக்கு மாட்டி செத்துப் போச்சே... அந்தப் பொண்ணோட அம்மா வந்திருக்காங்க.''

அழுது சிவந்த கண்கள், பெற்ற மகளை பறிகொடுத்த சோகம் முகத்தில் தெரிய, தன் முன் நிற்பவளை பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

""அம்மா... நீங்க ஏன் போலீஸ் ஸ்டேஷன் வந்தீங்க. உங்க சொந்தக்காரங்க, ஊர்காரங்க புகார் கொடுத்ததின் பேரில், உங்க மகளோட சாவுக்குக் காரணமான அந்த டீச்சரை கைது செய்து விட்டோம். விசாரணை நடத்தி, தக்க தண்டனை வாங்கித் தருவோம். நீங்க கவலைப்படாம போங்க.''

புடவைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்தவள், இன்ஸ்பெக்டரை ஏறிட்டாள்.

""சார்... தயவு செய்து அந்த டீச்சரம்மா மேல் எங்க வீட்டுக்காரரும், ஊர்காரங்களும் கொடுத்த புகாரை வாபஸ் பண்ணிடுங்க. அவங்களை விடுதலை செய்திடுங்க. அவங்க மேலே எந்த விசாரணையும் வேண்டாம். எதிலே கையெழுத்து போடணும்ன்னு சொல்லுங்க. பெண்ணை பெத்த நானு தயாரா இருக்கேன்.''

""என்னமா சொல்ற... உன் மகளோட சாவுக்கு அவங்கதான் காரணம்ன்னு எல்லாரும் சொல்றாங்க. நீ என்னடான்னா புகாரை வாபஸ் வாங்க வந்திருக்கே. உனக்கு என்ன ஆச்சு?''

""ஐயா... தயவு செய்து நான் சொல்றதைப் புரிஞ்சுக்குங்க. என் பொண்ணு தூக்கு மாட்டி செத்துப் போனதுக்கு, இந்த டீச்சர் காரணமில்லை. எதையும் எதிர்நோக்க தைரியமில்லாத கோழைத்தனமான என் பொண்ணோட மனசு தான் காரணம்.''

தன்னையே பார்க்கும் இன்ஸ்பெக்டரை கண்கலங்கப் பார்த்தாள்.

""ஐயா... மாதா, பிதா, குரு, தெய்வம்ன்னு சொல்வாங்க. அப்படி தெய்வத்தோட இடத்தில் வச்சு மதிக்க வேண்டியவங்க, பாடம் சொல்லித்தர்ற ஆசிரியர். அவங்க என் மகள் செய்த தப்பை கண்டிச்சாங்க. முதல் மார்க் வாங்கற மாணவி, புத்தகத்தைப் பார்த்து எழுதினதை அவங்களால ஏத்துக்க முடியலை. அவள் செய்த தப்பை சுட்டிக் காட்டினாங்க.

""எதுக்காக, இனி இது மாதிரி தப்பு நடக்கக் கூடாதுங்கறதுக்காக. இதிலே அவமானப்படவோ, வேதனைப்படவோ என்ன இருக்கு. தப்பு செய்தவ என் மகள். அதை தட்டி கேட்க உரிமையுள்ள ஆசிரியர், தப்பை சுட்டிக்காட்டிக் கண்டிச்சிருக்காங்க.

""என் மக என்ன செய்திருக்கணும்... "நல்லா படிக்கிற நான் செய்தது தப்பு. இனிமேல் நல்லபடியா படிச்சு நல்ல மார்க் வாங்கி, என் தகுதியை உயர்த்தி, நாலுபேர் கிட்டே வெளிச்சம் போட்டுக் காட்டணும். அப்பதான் நான் செஞ்ச தப்பு மறையும்...'ன்னு நல்லவிதமாக யோசித்து, முடிவெடுத்திருக்கணும்.

""ஆனா... அவ அப்படி செய்யாம, ஒரு கோழையா, தன் தப்பு நாலு பேருக்குத் தெரிஞ்சு போச்சேன்னு, எதிர்நோக்க தைரியமில்லாம, உசுரை மாய்ச்சுக்கிட்டா. இதிலே அந்த டீச்ரோட தப்பு என்னங்க இருக்கு?

""நாலு பேருக்கு பாடங்களை போதித்து, அவங்க அறிவை வளர்த்து, அவங்க வாழ்க்கையை முன்னேற்ற பாடுபடறவங்களை, இப்படி படிக்கிற பிள்ளைங்க, தங்களோட தப்பான முடிவால, அதல பாதாளத்துக்கு தள்ளிடறாங்க...

""அவங்க படிப்பு நாலு பேருக்கு பயன்படணும். என் மக செஞ்ச தப்புக்கு, அந்த டீச்சரை தண்டிச்சுடாதீங்க. தயவு செய்து, அவங்க மேலே கொடுத்த புகாரை தள்ளுபடி செய்து, அவங்களை அனுப்பிடுங்க. உங்களுக்கு புண்ணியமாக போகும்.''

தன் மகளைப் பறிகொடுத்த துக்கத்தை மறந்து, அந்த ஆசிரியருக்காக, கையெடுத்து கும்பிடும் அந்த தாயின் மனதைப் புரிந்து கொண்டவர், மவுனமாக அவளைப் பார்த்தபடி நின்றார்.

***

கீ. பரிமளா ராஜேந்திரன்



குரு தெய்வம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 5:27 pm

வாவ்...உடன் உடன் கதை...
அருமையான பதிவுகள்.... அன்பு மலர் நன்றி



குரு தெய்வம்! Paard105xzகுரு தெய்வம்! Paard105xzகுரு தெய்வம்! Paard105xzகுரு தெய்வம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 8:31 pm

முக்கியமான பதிவாகவே நான் இதை கருதுகிறேன் . மிக்க நன்றி அண்ணா.

இன்றைய சூழலில் மாணவர்களுக்கு பாடம் புகட்டுவதை விட நடைமுறையை எதிர்கொள்ளும் தன்மையை புகட்டுவதே மிக முக்கியமாக நான் கருதுகிறேன். இதற்க்கோ சான்றாக பல நிகழ்வினை நாம் கண்டிருக்கிறோம்.இதில் பெற்றோர்களின் பங்கும் மிக குறிப்பிடத்தக்கது.

இன்றைய தருணத்தில் குழந்தைகளை கவனிக்கும் பெற்றோர்கள் குறைந்து விட்டார்கள். வருத்தமான செய்தி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Nov 27, 2012 8:02 pm

குருவின் முக்கியத்துவம் விளக்கும் கதை.
சிந்தித்து செயற்படுங்கள் மாணவர்களே.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 9:50 pm

குரு கிடைப்பது அரிது..
நல்ல மாணவர்கள் கிடைப்பது அதை விட அரிது...



குரு தெய்வம்! Paard105xzகுரு தெய்வம்! Paard105xzகுரு தெய்வம்! Paard105xzகுரு தெய்வம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக