புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10 
366 Posts - 49%
heezulia
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 26, 2012 12:07 pm

First topic message reminder :

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்

1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.

abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||

अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥

*****

2. செல்வமும் மானமும்

செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.

adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||

अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥

*****



றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 5:38 pm

பல விடயங்கள் அறிந்துகொண்டேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Dec 12, 2012 11:25 am

34. கூட வருவன

உடைமைகள் செல்வம் உறையுளுடன் நிற்கும்
சுடுகாடு மீளுவர் சுற்றமும் மக்களும்
நல்வினை தீவினை மட்டுமே கூடவரும்
நல்லுயிர் நீங்கிடும் போது.
---நீதிசாரம் 40

arthAH gRuhE nivartantE shmashAnE putrabAndhavAH |
sukRutaM duShkRuta~jchaiva gachChantamanugachChati ||
---~nItisAraH 40

अर्थाः गृहॆ निवर्तन्तॆ श्मशानॆ पुत्रबान्धवाः ।
सुकृतं दुष्कृतञ्चैव गच्छन्तमनुगच्छति ॥
---~नीतिसारः 40

*****

35. பிள்ளை வளர்ப்பு

இளம்கோ இளவயதில் ஐந்துவரை -- பின்னர்
உளமறிந்து செய்பணியில் ஊழியனாம் பத்தாண்டு
பத்தாறு ஆண்டுகள் ஆனாலோ பிள்ளையை
மித்திரன் என்றே நடத்து.
---நீதிசாரம் 43

rAjavatpa~jchavarShANi dashavarShANi dAsavat |
prApte tu ShoDaShe varShe putraM mitravadAcharet ||
---~nItisAraH 40

राजवत्पञ्चवर्षाणि दशवर्षाणि दासवत् ।
प्राप्ते तु षोडषे वर्षे पुत्रं मित्रवदाचरेत् ॥
---~नीतिसारः 40

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Dec 13, 2012 10:49 am

36. பெயரளவில் பயன்

புத்தகத்தில் கட்டுண்(டு) கிடந்திடும் கல்வியும்
பத்திரமாய் வேறோர்கை யுள்ளநம் சொத்தும்
அயல்நாடு சென்றுவிட்ட அன்பு மகனும்
பெயரளவில் மட்டும் பயன்.
---நீதிசாரம் 50

pustakasthApitA vidyA parahastagataM dhanam |
deshAntaragataH putraH nAmamAtramupAcharet ||
---~nItisAraH 50

पुस्तकस्थापिता विद्या परहस्तगतं धनम् ।
देशान्तरगतः पुत्रः नाममात्रमुपाचरेत् ॥
---~नीतिसारः 50

*****

37. ஈயாதான் வள்ளல் ஈந்தவன் கஞ்சன்!

இறக்கும் சமயம் துறப்பதால் எல்லாம்
பிறர்க்கேதும் ஈயாதான் வள்ளல் -- இறப்பில்
வறியார்க் களித்த பலன்பெற்றுச் செல்வதால்
வள்ளல் உலோபியென லாம்.
---நீதிசாரம் 62

adAtA puruShastyAgI danaM saMtyajya gachChati |
dAtAraM kRupaNaM manye mRuto&pyarthaM na mu~jchati ||
---~nItisAraH 62

अदाता पुरुषस्त्यागी दनं संत्यज्य गच्छति ।
दातारं कृपणं मन्ये मृतोऽप्यर्थं न मुञ्चति ॥
---~नीतिसारः 62

*****


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 10:53 am

சிறப்பான பதிவு. தொடருங்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Dec 14, 2012 11:13 am

38. செல்வம் அழிவது...

தெய்வத் திருப்பணி தன்சுற்றம் சான்றோர்
சுயகார்யம் என்று செலவிடாச் செல்வமே
நீரால் பகையால் நிருபனால் கள்வரால் ... ... ... [நிருபன்=அரசன்]
சீர்கெட் டழிந்து விடும்.
---நீதிசாரம் 65

na devebhyo na viprebhyo na bandhubyo na chAtmanE |
jalArinRupachorebhyo nishchayaM dhananAshanam ||
---~nItisAraH 65

न देवेभ्यो न विप्रेभ्यो न बन्धुब्यो न चात्मनॆ ।
जलारिनृपचोरेभ्यो निश्चयं धननाशनम् ॥
---~नीतिसारः 65

*****

39. அறவோர் அருங்குணம்

குயிலின் அருங்குணம் கூவும் குரலே
மயிலன்ன மங்கையின் நற்பண்பு கற்பே
அறமொழுகும் சான்றோர் அருங்குணம் கல்வி
துறவிக்கு நோன்மையே பண்பு. ... ... ... [நோன்மை=பொறுமை, சகிப்புத்தன்மை]
---நீதிசாரஃ 68

kokilAnAm svaraM rUpaM nArIrUpaM pativratA |
vidyArUpashcha viprANAM kShamArUpaM tapasvinAm ||
---~nItisAraH 68

कोकिलानाम् स्वरं रूपं नारीरूपं पतिव्रता ।
विद्यारूपश्च विप्राणां क्षमारूपं तपस्विनाम् ॥
---~नीतिसारः 68

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 15, 2012 10:40 am

40. தீயோரின் மூன்று இலட்சணம்

தாமரைப் பூப்போல் திகழும் வதனமும்
சாமான்யப் பேச்சினில் சந்தனத் தண்மையும்
தீயாய் எரியும் திருட்டு இதயமும்
தீயோர் இலட்சணம் மூன்று.
---நீதிசாரம் 69

mukham padmadalAkAraM vachanashchandanashItalam |
hRudayaM vahnisantaptaM trividhaM duShTalakShaNam ||
---~nItisAraH 69

मुखम् पद्मदलाकारं वचनश्चन्दनशीतलम् ।
हृदयं वह्निसन्तप्तं त्रिविधं दुष्टलक्षणम् ॥
---~नीतिसारः 69

*****

41. தென்னைபோன்ற நல்மனத்தோர்
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

இளங்கன்றாய்த் தானுண்ட தண்ணீர் நினைந்து
வளர்ந்து தலைதாங்கும் காய்ச்சுமையின் தீஞ்சுவைநீர்
வாழ்நாள் முழுதும் வழங்கிடும் தென்னைபோல்
வாழ்வில் தமக்களித்த நன்றியை நல்மனத்தோர்
என்றும் இருப்பர் நினைத்து.
---நீதிசாரம் 70

prathamavayasi dattaM toyamalpaM smarantaH
shirasi nihitabhArA nALikerA narANAm |
salIlamamRutakalpaM dadyurAjIvanAntam
na hi kRutamupakAraM sAdhavo vismaranti ||
---~nItisAraH 70

प्रथमवयसि दत्तं तोयमल्पं स्मरन्तः
शिरसि निहितभारा नाळिकेरा नराणाम् ।
सलीलममृतकल्पं दद्युराजीवनान्तम्
न हि कृतमुपकारं साधवो विस्मरन्ति ॥
---~नीतिसारः 70

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 16, 2012 11:04 am

42. ஒளிரும் இயல்புகள்
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

மதத்தால் ஒளிருமே யானை முகில்நீர்ப்
பதத்தாலே வானம் முழுமையால் வெண்ணிலவு
நற்குணத்தால் நங்கை விரைவால் குதிரையே
உற்சவத்தால் கோவில் இலக்கணத்தால் சொல்வன்மை
நன்மகனால் தன்குலம் மன்னனால் தன்நாடு
அன்னத்தால் ஆறுகளும் ஆன்றோரால் பேரவையே
மூவுலகம் மின்னிட பானு.
---நீதிசாரம் 74
[பானு=சூரியன்]

nAgo bhAti madena khaM jaladharaiH pUrnendunA sharvarI
shIlena pramadA javena turago nityotsavairmandiram |
vANI vyAkaraNanena haMsAmithunainadyaH sabhA paNDitaiH
satputreNa kulaM nRupeNa vasudhA lokatrayaM bhAnunA ||
---~nItisAraH 74

नागो भाति मदेन खं जलधरैः पूर्नेन्दुना शर्वरी
शीलेन प्रमदा जवेन तुरगो नित्योत्सवैर्मन्दिरम् ।
वाणी व्याकरणनेन हंसामिथुनैनद्यः सभा पण्डितैः
सत्पुत्रेण कुलं नृपेण वसुधा लोकत्रयं भानुना ॥
---~नीतिसारः 74

*****

43. தீயோர் நல்லோர் செயல்கள்

கல்வியெனில் வீண்வாதம் செல்வமெனில் கேளிக்கை
அல்லல் விளைத்திடத் தம்வலிமை தீயோர்க்கு;
நல்லோர்க்கோ கல்விஞானம் செல்வதானம் அத்துடன்
வல்லமை காப்பதற் கே.
---நீதிசாரம் 79

vidyA vivAdAya dhanaM madAya shaktiH paralokanipIDanAya |
khalasya sAdhOrviparItametad j~jAnam dAnAya cha rakShaNAya ||
---~nItisAraH 79

विद्या विवादाय धनं मदाय शक्तिः परलोकनिपीडनाय ।
खलस्य साधॊर्विपरीतमेतद् ज्ञानम् दानाय च रक्षणाय ॥
---~नीतिसारः 79

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 17, 2012 6:21 pm

44. மாணவன் இலட்சணம்

காக்கையின் பார்வையும் நாயின் நலிவுற்ற
தூக்கமும் கொக்கின் கவனமும் அத்துடன்
சொற்ப உணவு எளிய உடையிவை
கற்றிடும் மாணவன் சான்று.
---நீதிசாரம் 112

kAkadRShTirbakadhyAnaM shvAnanidrA tathaiva cha |
alpAhAraM jIrNavastraM etadvidyArthilakShaNam ||
---~nItisAraH 112

काकद्ष्टिर्बकध्यानं श्वाननिद्रा तथैव च ।
अल्पाहारं जीर्णवस्त्रं एतद्विद्यार्थिलक्षणम् ॥
---~नीतिसारः 112

*****

44. அணிகலன்

நற்குணமே தோற்றத்தின் நல்லிழையாம் -- நன்னடத்தை
உற்ற குடும்பத்தின் நல்லிழை -- வெற்றியே
கற்றறிந்த கல்விக்கு நல்லிழை -- துய்த்தலே
பெற்ற பொருளுக்(கு) அணி.
---நீதிசாரம் 115

guNo bhUShyate rUpaM shIlaM bhUShyate kulam |
siddhirbhUShyate vidyAM bhogo bhUShyate dhanam ||
---~nItisAraH 115

गुणो भूष्यते रूपं शीलं भूष्यते कुलम् ।
सिद्धिर्भूष्यते विद्यां भोगो भूष्यते धनम् ॥
---~नीतिसारः 115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 17, 2012 10:00 pm

45. பழமையும் புதுமையும்

தொன்மை யுடையதெல்லாம் நன்மையென் றில்லையே
அண்மையென் றாவதால் அற்பமென் றில்லையே
கற்றோர்தம் கூர்மதியால் சீர்தூக்கித் தேர்ந்தெடுப்பர்
அற்பருக்கோ மற்றவர் சொல்.
---மஹாகவி காளிதாசர், மாளவிகாக்னிமித்ரம்

purANamiyeva na sAdhu sarvam
na chApi kAvyaM navamityavadhyam |
santaH parIkShayAtanyatarat bhajantE
mUDhaH para pratyeya neya buddhiH ||
---mahAkavi kAlidAsa, mAlavikAgnimitram

पुराणमियेव न साधु सर्वम्
न चापि काव्यं नवमित्यवध्यम् ।
सन्तः परीक्षयातन्यतरत् भजन्तॆ
मूढः पर प्रत्येय नेय बुद्धिः ॥
---महाकवि कालिदास, मालविकाग्निमित्रम्

Everything is not good, merely because it is ancient.
New innovations should not be looked down upon, because they are new.
Wise persons accept ideas after due examination and consideration.
Only the fool has his intellect influenced by others.
---Translation by V.K.Subramanian, 'Wondrous Wispers of Wisdom from Ancient India'

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Dec 20, 2012 10:08 am

46. மனித உருவில் விலங்கு

கல்வியோ தானமோ ஞானம் தவமுயல்வோ
நல்லொழுக்கம் நற்குணம் அன்றி அறவாழ்வோ
இல்லாதான் மாளுபுவி பாரமெனச் சஞ்சரிக்கும்
மானிடம் போர்த்த விலங்கு.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம், 13

yeShAM na vidyA na tapo na dAnaM
j~jAnaM na shIlaM na guNaH na dharmaH |
te martyaloke bhuvi bhArabhUtAH
manushhyarUpeNa mRugAH charanti ||
---bhartRuhari, nIti shatakam, 13

येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणः न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूताः
मनुश्ह्यरूपेण मृगाश्चरन्ति ॥
---भर्तृहरि, नीति शतकम्, 13

*****

47. கற்றோர் சிறப்பு
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

சாத்திரங்கள் சாற்றிடும் சொற்களின் நாத்திறமும்
கற்போர்கொள் நல்லறிவும் கொண்டுள்ள விற்பன்னர்
ஏழ்மையில் வாழ்வது வேந்தனின் பேதமையே
ஏழ்மையிலும் கற்றறிந்தோர் கொற்றவரே -- நீலமணிக்
கல்லின் குறைவிலை கொல்லன் குறையன்றிக்
கல்லின் குறைபாடோ சொல்.
---பர்த்றுஹரி, னீதி ஶதகம், 15

shAstropaskRutashabdasundaragiraH shiShyapradeyagamA
vikhyAtAH kavayoH vasanti viShaye yasya prabhornirdhanAH |
tajjADyaM vasudhAdhipasya kavayastvarthaM vinApIshvarAH
kutsyAH syuH kuparIkShakA ki maNayo yairghataH pAtitAH ||
---பர்த்றுஹரி, னீதி ஶதகம், 15

शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयगमा
विख्याताः कवयोः वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।
तज्जाड्यं वसुधाधिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका कि मणयो यैर्घतः पातिताः ॥
---भर्तृहरि, नीति शतकम्, 15

*****


Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக