Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
2012 டிசம்பர் 21, 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!
+6
ரா.ரா3275
அச்சலா
யினியவன்
பூவன்
அசுரன்
Aathira
10 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
2012 டிசம்பர் 21, 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!
198 days
4758 hours
285503 minutes
17130227 seconds
இது என்ன என்று கண்களை அகல விரிப்பது புரிகிறது. எனக்கும் கூட அச்சம் கலந்த ஆச்சரியம்தான். இந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய போது, உலகம் அழிய இன்னும் இருக்கக் கூடியதாக காட்டிய காலம் இது. 198 நாட்கள் 4758 மணிகள் 285503 நிமிடங்கள் 17130227 நொடிகள். டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் 11 மணி 11 நிமிடம் 11 நொடிகளில் உலகம் அழிய இருப்பதாக மாயன் காலண்டர் அறிவித்த செய்தி 4758 hours
285503 minutes
17130227 seconds
அன்று இரவு கடந்து, பொழுது விடியாது. கதிரவன் வானில் உதிக்காது. உலகம் தன் முடிவைச் சந்தித்தே தீரும்; பூமியில் மரண ஒலியும் அழுகையும் கேட்கும், என்று இன்று உள்ள கிரேக்க புராதன கலாச்சார அடையாளங்களில் சில குறிப்புகள் பதிவு செய்யப் பெற்றுள்ளன என்கின்றனர்.
இவை பரவலாக, தொலைக்காட்சியில், இதழ்களில் எல்லாம் வலம் வந்து கொண்டுஇருக்கின்றது. இது எந்த அளவு உண்மை என்பதை அறிய என்னோடு உங்களுக்கும் ஆவலாக இருக்கும்.
காலச்சக்கரம் தன் சுழற்சியை நிறுத்திக் கொள்ளுமா? நாட்கள் முடிந்து நாமும் முடிந்து விடுவோமா? அப்படியென்றால் அழிவு எப்படி நிகழும்? இப்படிப்பட்ட வினாக்கள் அடுக்கடுக்காக நம்மில் எழுந்து சற்று அச்சுறுத்துகின்றன.
உலகம் அழியப் போகிறது என்று கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும், அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரர் கூறினர். அப்போது அந்த அச்சத்தால், பீதியால் அழிந்தவர்கள் பலர்.
இதே போலத்தான் 2000ம் ஆண்டிலும் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும்; அதன் மூலம் உலகம் அழிந்து விடும் என்று கிளம்பிய புரளியால் இருக்கும்போதே அனுபவித்து விடுவோம் என்று பலரும், அதற்கு முன் நானே அழிந்து விடுகிறேன் என்று பலரும், பீதி முகத்தோடு பலரும் அலைந்ததை நாம் கண்கூடாகக் கண்டோம். இப்போதும் சற்றேறக்குறைய அதே நிலைதான்.
அறிவியலாரும் சில பிரச்சனைகளுக்கு விடை தேடி, அது கிடைக்காத வேளையில் பண்டைய அல்லது புராதனத்தில் என்ன இருக்கிறது என்று தேட ஆரம்பிக்கின்றனர்.
இப்போது உலகம் அழிவதாக பீதியைக் கிளப்பி விட்டது மாயன் காலண்டர். நமக்குத் தெரிந்ததெல்லாம் ஆங்கில நாளிதழ் விட்டால் பாம்பு பஞ்சாங்கம். அது என்ன மாயன் காலண்டர். இந்த காலண்டரைக் கணித்தவர் யார்? பிரிண்ட் பண்ணியவர் யார்? எங்கு விற்கப்படுகின்றன? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் மாயா (மாயன்) என்ற ஓர் இனம் இருந்தது. சுமார் 3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனம் 15-ம் நூற்றாண்டில் அழிந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த இனத்தினர் விஞ்ஞானிகளைவிடவும் புத்திசாலியாக வாழ்ந்ததாகச் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மாயன் இனத்தவர் கட்டிடக் கலை, வான சாஸ்திரம், ஜோதிடம், அமானுஷ்யம், கணித சூத்திரம் போன்ற அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக இருந்திருக்கின்றனர் என்கிறது வராலாறு.
நம் மகாபாரதத்திலும் மயன் என்று கட்டடக்கலை வல்லுநன் இருந்ததாகவும் அவனே பாண்டவர்களின் மாளிகையைக் கட்டியதாகவும் கேட்டிருக்கிறோம். மாயன் இனத்தாருக்கும் இந்த மகாபாரத மயனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது ஆராயத்தக்கது. இது ஒருபுறம் இருக்கட்டும்.
மாயன் நாகரிகம நம் ஆதிவாசிகள் என்றழைக்கப்பெறும் பழங்குடியினரின் நாகரிகம் போன்றது எனலாம். ஆனால் இவர்களது நாகரிகத்தில் மனிதனைப் பலிகொடுக்கும் முறை இருந்து வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. அறிவியல் தொலைநோக்குப் பார்வையும் அதே வேளையில் காட்டுமிராண்டித் தனமும் நிறைந்தவர்கள் இந்த மாயன்கள். கி.மு.2600 ல் தோன்றி உச்சத்தை அடைந்த இவர்களின் நாகரிகம் ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றத்தாலும், சில மூட நம்பிக்கைகளாலும் அங்காளி பங்காளி சண்டைகளாலும் முறையற்ற விவசாயம் முதலிய காரணிகளாலும் அழிந்து இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் இன்றும் சுமார் 6 இலட்சத்திற்கும் மேல் மாயன்கள் மெக்சிகோ, குவாத்திமாலா ஆகிய நாடுகளில் வசிப்பதாக கூறப்படுகின்றது.
இந்த மாயன் இனத்தினர் முக்காலமும் காட்டக்கூடிய நாட்காட்டியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மாயன் காலண்டர் என்றழைக்கப்படும் இந்த நாட்காட்டி இன்றும் மெக்ஸிகோவில் உள்ள அருங்காட்சியகத்தில் (MUSEO NATIONAL DE ANTROPOLOGIA) பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
மிகவும் வியக்கத்தக்க விஷயம் இந்த நாட்காட்டியில் ஒவ்வொரு வருடமும் நாட்காட்டியில் வராத நாட்கள் என்று சில நாட்களை, வாழ்க்கையைச் சுதந்திரமாக ரசிக்க, கொண்டாட என்று ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். மாயன் நாட்காட்டியில் சூரிய வருடத்தின் கடைசி 5 நாட்கள் அடுத்த வருடத்திற்கான மாற்றத்திற்கும் அதற்காகத் தயார் படுத்துவதற்காகவும் என்று கணக்கிடப் பட்டு அவை “பெயரில்லாத நாட்கள்” என்று பெயரிடப்பட்டுள்ளன. பூமியின் அசைவைக் கணக்கிட்டு இந்தக் காலண்டரைக் கணித்துள்ளனர் என்பதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கானது இக்காலண்டர் என்பதும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அதிசயத் தகவல்.
கி.மு. 313 ல் தொடங்கிய இந்நாட்காட்டி டிசம்பர் 2012ஆம் ஆண்டு 21ம் தேதியுடன் முடிவடைவதாக உள்ளது. உடனே நம் நாட்காட்டியும் ஒரு ஆண்டு முடிந்ததும் முடிவடைகிறதே. அப்போது ஒவ்வொரு ஆண்டும் உலகம் அழிகிறது என்று கூறலாமா என்றெல்லாம் அறிவார்ந்த கேள்விகளைக் கேட்கக் கூடாது.
ஆண்டுக்கொருமுறை அச்சடிக்கும் காலண்டர் போல அல்ல மாயன் காலண்டர். தேர்ந்த ஞானத்தால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்காலத்தைக் கண்டு சொன்னது. அதனால் அன்றோடு உலகமும் முடிந்துவிடும் என்கின்றனர். இதையும் அவர்கள் சும்மா ஏனோ தானோ என்று கூறவில்லை. கணக்குப் போட்டே கூறியுள்ளனர் என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
அதாவது சூரிய மண்டலத்திற்கு ஒரு வாரம் என்பது பூமியைப் பொறுத்தவரை 25,625 வருடங்களாம்.. கிருத யுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நம்மவர்கள் நான்காகப் பிரித்துள்ளது போல மாயன் காலண்டரும் சூரியனின் ஒரு வாரத்தின் அல்லது பூமியின் 25,625 வருடங்களை ஐந்து காலக் கட்டங்களாகப் பிரிக்கிறது. நம்மவர்களின் கணக்குப் படி தற்போது கலியுகம் நடைபெறுகிறது. கலியுகம் முடிந்து மீண்டும் கிருத யுகம் தோன்றும் என்கிறது.
இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்று மடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.என்றும் கூறப்படுகின்றது. (நன்றி விக்கிபீடியா)
நாம் இப்போது இறுதி யுகமாகிய கலியுகம் நடைபெறுகின்றது என்று கூறுவது போலவே, மாயன் காலண்டரும் இப்போது அவர்கள் கணக்குப்படி இறுதி யுகமான ஐந்தாவது யுகம் நடைபெறுகின்றது என்கின்றனர். அந்த ஐந்தாவது யுகத்தின் முடிவு நாள் தான் மேற்கூறிய 21.12.2012, 11.11.11.
(கலியுகம் அடுத்த இதழில் தொடரும்)
(இந்தக் கட்டுரை சோழ நாடு ஜுலை மாத இதழில் இடம்பெற்றது. நன்றி சோழநாடு)
Re: 2012 டிசம்பர் 21, 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!
சென்ற இதழில் மாயன் காலண்டர் பற்றி அறிந்தோம். மாயன் காலண்டர் போலவே உலக அழிவைப் பற்றி கணித்துள்ள மற்றொரு தீர்க்கத் தரிசியின் கருத்துகளையும் இப்போது பார்க்கலாம்.
சுமார் நான்கரை நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படுபவர் நாஸ்டர்டாமஸ். இவர் உலகம் முழுவதும் உள்ளவர்களால் தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்ளப்பெற்றவர். இவரின் கருத்துகள் வரலாற்றுப் பதிவுகளாகத் திகழ்கின்றன. கருத்துகள் பல சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவரது கருத்துகளின் மீது இன்றளவும் நம்பிக்கைத் தொடர்கிறது. இவரது தொலைந்து போன புத்தகம் ஒன்று சமீபத்தில் கிடைத்துள்ளதாம். ’நாஸ்டர்டாமஸ் குவார்டெரெயின்ஸ்’ (NOSTRADAMUS QUATRAINS) என்னும் அவரது முந்தைய நூலில் குறிப்பிட்டுள்ள தீர்க்க தரிசனம் போல இந்நூலிலும் பல திர்க்க தரிசனங்கள் வரைபடங்களாக உள்ளன என்கின்றனர். அவற்றுள் சில வரைபடங்கள் உலக அழிவைப் பிரதிபளிப்பதாக உள்ளன என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அதாவது நாஸ்டர்டாமஸின் நூலில் காணப்படும் ஏழு வரைபடங்கள் உலக அழிவைக் குறிப்பனவாக உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
1. சூரியன், அதனடியில் ஒரு சிங்கம், .
2. நட்சத்திர மண்டலத்தைக் குறிவைத்தபடி கையில் வில்லை ஏந்திய ஒரு மனிதன்.
3. மூன்று தேய்பிறைகள் (கிரகனத்தைச் சந்தித்திருக்கின்ற நிலா).
4. ஒரு தேளும் அதன் தலைப்பகுதியில் வளைந்த வடிவமான கோடுகளும். இதனைத்தான் மில்கிவேயின் வடிவம் என்கின்றனர்
5. கையில் வாளை ஏந்திய ஒரு மனிதன். வாளை நேராகப் பிடித்திருக்கிறான். அதில் S என்னும் ஆங்கில எழுத்தைக் குறிப்பது போல ஒரு துணி சுற்றப்பட்டிருக்கிறது. (மில்கிவேயின் நட்சத்திர மண்டலம் ஆங்கில எழுத்து S போலக் காட்சியளிக்கும்).
6. வில்வீரன் ஒருவன் தனது வில்லில் அம்பைப் பூட்டி ஒரு பெண்ணைக் குறி பார்ப்பது போன்ற வரைபடம்.
7. இதில் உள்ள ஒரு சக்கரம் காலச்சக்கரத்துடன் இணைக்கப் பட்டுள்ளதாம்.
1992 முதல் 2012 வரையான காலகட்டத்திற்கு நாஸ்டர்டாமஸ் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக அந்த வரைபடங்கள் காட்டுவதாகக் கூறுகின்றனர்.
வரைபடத்துடன் நான்கடி செய்யுட்களாக உள்ள பகுதியிலும்கூட இந்தக் காலக் கட்டம்தான் அதிகம் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது. ஆதலால் தற்காப்புக்கான எச்சரிக்கை கொடுத்துள்ளதாக அந்த ஏழு வரைபடங்களைக் கொள்ளவேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதே செய்திக்கான குறிப்புகள் எகிப்தின் பிரமிடுகளிலும், மர்மமான ஒரு ஹெண்டே சிலுவையிலும் யூதர்களின் நாட்காட்டியிலும் காணலாகின்றன. இவை எல்லாவற்றிற்கும் சான்றாக நாஸ்டர்டாமஸின் எழுத்துகளும் விடை கூறுவது போல இருக்கின்றன என்கின்றனர்.
பூமியில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய சூரிய கிரகனம் ஏற்படும். அது பூமி தன் இயல்பான புவியீர்ப்பு சக்தியை இழந்துவிட்டதோ என்று எண்ண வைக்கும். பூமி இருள் சூழ்ந்த இந்தக் கடலில் புதைந்துவிடுமோ என்றும் அஞ்சும் அளவு அபாயகரமானதாக அது இருக்கும். விண்ணிலிருந்து எரிகற்கள் பூமியில் விழும். தகவல் தொடர்பு முறை பாதிக்கப்படும். மின்சாரம் தொடர்பான எந்தப் பொருளும் வேலை செய்யாது. எண்ணெய் வளத் தட்டுப்பாடு, உயிரின அழிவுகள், பயங்கரமான சுனாமிகள், அணு ஆயுத ஆபத்துகள் இவையெல்லாம் ஏற்படும் என்கின்றன.
இவற்றைப் பார்க்கும் போது இதுவரை ஏற்பட்ட இது போன்ற பேரழிவுகள் தற்செயலானவையா? இல்லை எல்லாமே இவற்றோடு தொடர்புடையவையா என்று நம்மிடம் பல வினாக்கள் எழுகின்றன. இந்த புராதன கணிப்புகளுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவற்றிலும் ஏதோ உண்மை இருப்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே கூறுகின்றனர் அறிஞர்கள்
பூமியில் இருக்கும் எனர்ஜி என்று கூறப்படும் சக்தி அமைப்புகளின் எல்லை, வானிலை அமைப்புகளின் எல்லை அதாவது ஐம்பூதங்களின் எல்லை, பொருளாதார வீழ்ச்சி, உணவு உற்பத்தி, நீர் மேலாண்மை என்று எல்லா வகையிலும் விளிம்பில் இருக்கிறோம் என்பது நமக்கு கண்கூடு.
“எதிர்காலத்தில்
தங்கத்தை கொடுத்து தண்ணீர்
வாங்க வேண்டிவரலாம்...
அரசாங்கத்தால்
சம்பளத்துக்கு பதிலாய்
ஆளுக்கொரு போத்தல்(பாட்டில்)
தண்ணீர் வழங்கப்படலாம்....
ஒருபோத்தல் தண்ணீர்
வைத்துள்ளவனுக்கே
திருமணம் நடக்கலாம்...
நாளை எந்த நேரமும்
எதுவும் நடக்கலாம்...
தண்ணீருக்காய் நாம் கொல்லப்படலாம்..”
என்று ஒரு புதுக்கவிஞர் (இலங்கை கவிஞர் அஸ்மின்) சொல்லுவார். அதுபோல இச்சூழலில் அன்று உலகம் முழுவதும் அழியலாம் அல்லது பகுதி அழியலாம் அல்லது உருமாறலாம். இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்றனர் அறிவியலார்.
அழிவு என்றால் எப்படி நிகழும்? அந்த நாளில் கேலக்டிக் அலைன்மெண்ட் (GLACTIC ALINMENT) என்றொரு விண்வெளி நிகழ்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.
சரி, கேலேக்டிக் அலைன்மெண்ட் என்றால் என்ன? சூரியன் நட்சத்திர மண்டலத்தில் உள்ள மில்கிவேயில் இணைவதை கேலக்டிக் அலைன்மெண்ட் என்கிறது விண்ணியல் ஆய்வு.
நாஸ்டர்டாமஸ் வரைபடத்தில் ஒரு சூரியன், அதன் கீழ் ஒரு சிங்கம் உள்ளது. இந்த சிங்கம் என்பது சிம்ம ராசி. சூரியன் சிம்ம ராசியில் அல்லது கும்ப ராசியில் வரும்போது கேலக்டிக் அலைன்மெண்ட் நிகழும் என்பதாக அந்த வரைபடம் குறிக்கிறதாம். இருபத்தாறாயிரம் வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய ஒரு அற்புதமான அதே வேளையில் ஆபத்தான நிகழ்வு இது.
இது போன்ற கேலக்டிக் அலைன்மெண்ட் முன்னர் நிகழ்ந்ததை மாயன்கள் கண்டு அறிந்ததாகக் குறிப்பு மாயன் காலண்டரில் காணலாகின்றது. மற்றும் அவர்களின் கோயில்களில், ஒரு கல் துவாரத்துக்குள் ஒரு பந்து நுழைவதாகப் பொறித்து வைத்துள்ளனர். இது கேலக்டிக் அலைன்மெண்ட் என்னும் விண்வெளி நிகழ்வை அடிப்படையாகக் கொண்டதே என்கின்றனர் ஆய்வாளர்கள். அதுமட்டுமல்ல அவர்கள் விளையாடிய பந்து விளையாட்டு கூட இத்துடன் தொடர்புடையது என்றும் கூறுகின்றனர். நாம் கூடைக்குள் பந்தைப் போடும் பேஸ்கட் பால் போல ஒரு பாறைத் துவாரத்துக்குள் இரும்புப் பந்தைப் போட வேண்டும். அப்படி போடாத அணித் தலைவனின் தலை துண்டிக்கப் படும். இதில் என்ன விந்தையென்றால் காட்டு மிராண்டிகளின் இவ்விளையாட்டு கேலக்டிக் அலைன்மெண்ட்டுடன் தொடர்பு உடையது என்பதுதான்.
எது எப்படியோ, இந்தக் கேலக்டிக் அலைன்மெண்டை உலகம் வெப்பமயமாதலுடன் இணைத்துப் பார்க்கலாம். முன்னர் உலகலாவிய வெப்பமயமாதலால் பனி மலைகள் உருகத் தொடங்கியதையும் இதனோடு சேர்த்துப் பார்க்கின்றனர் ஆய்வர்கள். கடற்கரைப் பகுதிகளில் புயல், வெள்ளமும் உருவாகும்; கடலில் இருக்கும் மீன்கள் நெருப்பால் வெந்துவிடும்; பயங்கரமான பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். விண்வெளிப் புயல் ஏற்படும்.
இது போன்ற தாக்கங்கள் நாம் எப்போதோ எதிர் நோக்க ஆரம்பித்ததே. 2004 சுனாமி, 2011ல் ஜப்பான் சுனாமி, 2012 கத்ரினா புயல், தானே புயல், அமெரிக்காவின் இப்போது ஒரு வார காலமாக எரிந்து கொண்டிருக்கும் மலைக்காடுகள் இவையெல்லாம் உலக அழிவின் தொடக்கமாக இருக்கலாமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தவில்லையா?
உலகம் அழியப்போகிறது என்னும் கூற்றை நூறு விழுக்காடு நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் நாம் இயற்கையை அழித்து நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டுள்ள எதிர்கால ஆபத்தை அவதானிக்காமல் இருக்க முடியாது. புறக்கணிக்கவும் இயலாது.
ஆக்கமும் அழிவும் இயற்கையால்தான் என்ற போதும் இயற்கையை அப்பாதையில் இட்டுச் சென்றது அல்லது செல்வது யார்? நம் சுயநலமே. பேராசையே. இயற்கையைக் காத்து உலக அழிவிலிருந்து நம்மையும் காத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது என்பதை நாம் மறந்தோம். அதனை நினைவு படுத்தும் இயற்கை சீற்றங்களே இந்த கேலக்டிக் அலைன்மெண்ட். அல்லது இந்த உலக அழிவு குறித்த அச்சுறுத்தல் என்று நாம் கொள்ள இடமுள்ளது.
சரி. உலக அழிவில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன? இந்த அச்சுறுத்தலின் வழியாக மாயன் காலண்டர் எச்சரிப்பது எதனை? நாஸ்டர்டாமஸ் மற்றும் அறிவியலார் எச்சரிப்பது என்னவாக இருக்கும்.
“புவிவெப்பமாதல் – உலகமயமாதல் என்ற இரண்டு விஞ்ஞானப் போர்களும், முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர்; இதுவரை மனித குலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; இந்தப் போரில் இயற்கையை எதிர்த்து மனிதன் வென்றாலும் மனிதனை எதிர்த்து இயற்கை வென்றாலும் தோற்கப் போவதென்னவோ மனிதன்தான்” என்று நம் கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்து அச்சுறுத்துவதையும் நாம் நினைத்துப் பார்க்கும் நேரமிது.
ஆகவே, இப்பெரும் விஞ்ஞானப் போரிலிருந்து காத்துக் கொள்ள, டிசம்பர் 21 சவாலை எதிர்கொள்ள, உலக அழிவில் இருந்து ஓரளவாவது தப்பித்துக் கொள்ள, உடனடியாக நாம் செய்ய வேண்டியவை பின்வரும் இவை.
கடல் மட்டம் உயர்வதைத் தடுக்க வேண்டும். வானிலைக் கட்டுப்பாட்டை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இயற்கையைப் பாதுக்காக்க வேண்டும். காடு, கழனிகளை அழிப்பதை நிறுத்தி புதியதாக உருவாக்க வேண்டும். வெப்ப மயமாக்கும் செயற்பாடுகளைக் குறைத்து உலகை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். இவற்றையெல்லாம் இந்தியா மட்டும் செய்தால் போதாது. அதிக அணு உலைகளையும் ஆலைகளையும் கொண்டுள்ள, பிற நாடுகளுக்கு அறிவுரை கூறுவதையே எப்போதும் தம் வாடிக்கையாகக் கொண்டுள்ள வல்லரசுகளான வளர்ந்த நாடுகளும் கடைபிடிக்க முன் வரவேண்டும். அப்போது இயற்கையின் சீற்றத்தில் இருந்து ஓரளவு நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
(இக்கட்டுரை ஆகஸ்ட் மாத சோழநாடு இதழில் வெளியானது.
நன்றி சோழநாடு)
சுமார் நான்கரை நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படுபவர் நாஸ்டர்டாமஸ். இவர் உலகம் முழுவதும் உள்ளவர்களால் தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்ளப்பெற்றவர். இவரின் கருத்துகள் வரலாற்றுப் பதிவுகளாகத் திகழ்கின்றன. கருத்துகள் பல சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவரது கருத்துகளின் மீது இன்றளவும் நம்பிக்கைத் தொடர்கிறது. இவரது தொலைந்து போன புத்தகம் ஒன்று சமீபத்தில் கிடைத்துள்ளதாம். ’நாஸ்டர்டாமஸ் குவார்டெரெயின்ஸ்’ (NOSTRADAMUS QUATRAINS) என்னும் அவரது முந்தைய நூலில் குறிப்பிட்டுள்ள தீர்க்க தரிசனம் போல இந்நூலிலும் பல திர்க்க தரிசனங்கள் வரைபடங்களாக உள்ளன என்கின்றனர். அவற்றுள் சில வரைபடங்கள் உலக அழிவைப் பிரதிபளிப்பதாக உள்ளன என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அதாவது நாஸ்டர்டாமஸின் நூலில் காணப்படும் ஏழு வரைபடங்கள் உலக அழிவைக் குறிப்பனவாக உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
1. சூரியன், அதனடியில் ஒரு சிங்கம், .
2. நட்சத்திர மண்டலத்தைக் குறிவைத்தபடி கையில் வில்லை ஏந்திய ஒரு மனிதன்.
3. மூன்று தேய்பிறைகள் (கிரகனத்தைச் சந்தித்திருக்கின்ற நிலா).
4. ஒரு தேளும் அதன் தலைப்பகுதியில் வளைந்த வடிவமான கோடுகளும். இதனைத்தான் மில்கிவேயின் வடிவம் என்கின்றனர்
5. கையில் வாளை ஏந்திய ஒரு மனிதன். வாளை நேராகப் பிடித்திருக்கிறான். அதில் S என்னும் ஆங்கில எழுத்தைக் குறிப்பது போல ஒரு துணி சுற்றப்பட்டிருக்கிறது. (மில்கிவேயின் நட்சத்திர மண்டலம் ஆங்கில எழுத்து S போலக் காட்சியளிக்கும்).
6. வில்வீரன் ஒருவன் தனது வில்லில் அம்பைப் பூட்டி ஒரு பெண்ணைக் குறி பார்ப்பது போன்ற வரைபடம்.
7. இதில் உள்ள ஒரு சக்கரம் காலச்சக்கரத்துடன் இணைக்கப் பட்டுள்ளதாம்.
1992 முதல் 2012 வரையான காலகட்டத்திற்கு நாஸ்டர்டாமஸ் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக அந்த வரைபடங்கள் காட்டுவதாகக் கூறுகின்றனர்.
வரைபடத்துடன் நான்கடி செய்யுட்களாக உள்ள பகுதியிலும்கூட இந்தக் காலக் கட்டம்தான் அதிகம் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது. ஆதலால் தற்காப்புக்கான எச்சரிக்கை கொடுத்துள்ளதாக அந்த ஏழு வரைபடங்களைக் கொள்ளவேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதே செய்திக்கான குறிப்புகள் எகிப்தின் பிரமிடுகளிலும், மர்மமான ஒரு ஹெண்டே சிலுவையிலும் யூதர்களின் நாட்காட்டியிலும் காணலாகின்றன. இவை எல்லாவற்றிற்கும் சான்றாக நாஸ்டர்டாமஸின் எழுத்துகளும் விடை கூறுவது போல இருக்கின்றன என்கின்றனர்.
பூமியில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய சூரிய கிரகனம் ஏற்படும். அது பூமி தன் இயல்பான புவியீர்ப்பு சக்தியை இழந்துவிட்டதோ என்று எண்ண வைக்கும். பூமி இருள் சூழ்ந்த இந்தக் கடலில் புதைந்துவிடுமோ என்றும் அஞ்சும் அளவு அபாயகரமானதாக அது இருக்கும். விண்ணிலிருந்து எரிகற்கள் பூமியில் விழும். தகவல் தொடர்பு முறை பாதிக்கப்படும். மின்சாரம் தொடர்பான எந்தப் பொருளும் வேலை செய்யாது. எண்ணெய் வளத் தட்டுப்பாடு, உயிரின அழிவுகள், பயங்கரமான சுனாமிகள், அணு ஆயுத ஆபத்துகள் இவையெல்லாம் ஏற்படும் என்கின்றன.
இவற்றைப் பார்க்கும் போது இதுவரை ஏற்பட்ட இது போன்ற பேரழிவுகள் தற்செயலானவையா? இல்லை எல்லாமே இவற்றோடு தொடர்புடையவையா என்று நம்மிடம் பல வினாக்கள் எழுகின்றன. இந்த புராதன கணிப்புகளுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவற்றிலும் ஏதோ உண்மை இருப்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே கூறுகின்றனர் அறிஞர்கள்
பூமியில் இருக்கும் எனர்ஜி என்று கூறப்படும் சக்தி அமைப்புகளின் எல்லை, வானிலை அமைப்புகளின் எல்லை அதாவது ஐம்பூதங்களின் எல்லை, பொருளாதார வீழ்ச்சி, உணவு உற்பத்தி, நீர் மேலாண்மை என்று எல்லா வகையிலும் விளிம்பில் இருக்கிறோம் என்பது நமக்கு கண்கூடு.
“எதிர்காலத்தில்
தங்கத்தை கொடுத்து தண்ணீர்
வாங்க வேண்டிவரலாம்...
அரசாங்கத்தால்
சம்பளத்துக்கு பதிலாய்
ஆளுக்கொரு போத்தல்(பாட்டில்)
தண்ணீர் வழங்கப்படலாம்....
ஒருபோத்தல் தண்ணீர்
வைத்துள்ளவனுக்கே
திருமணம் நடக்கலாம்...
நாளை எந்த நேரமும்
எதுவும் நடக்கலாம்...
தண்ணீருக்காய் நாம் கொல்லப்படலாம்..”
என்று ஒரு புதுக்கவிஞர் (இலங்கை கவிஞர் அஸ்மின்) சொல்லுவார். அதுபோல இச்சூழலில் அன்று உலகம் முழுவதும் அழியலாம் அல்லது பகுதி அழியலாம் அல்லது உருமாறலாம். இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்றனர் அறிவியலார்.
அழிவு என்றால் எப்படி நிகழும்? அந்த நாளில் கேலக்டிக் அலைன்மெண்ட் (GLACTIC ALINMENT) என்றொரு விண்வெளி நிகழ்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.
சரி, கேலேக்டிக் அலைன்மெண்ட் என்றால் என்ன? சூரியன் நட்சத்திர மண்டலத்தில் உள்ள மில்கிவேயில் இணைவதை கேலக்டிக் அலைன்மெண்ட் என்கிறது விண்ணியல் ஆய்வு.
நாஸ்டர்டாமஸ் வரைபடத்தில் ஒரு சூரியன், அதன் கீழ் ஒரு சிங்கம் உள்ளது. இந்த சிங்கம் என்பது சிம்ம ராசி. சூரியன் சிம்ம ராசியில் அல்லது கும்ப ராசியில் வரும்போது கேலக்டிக் அலைன்மெண்ட் நிகழும் என்பதாக அந்த வரைபடம் குறிக்கிறதாம். இருபத்தாறாயிரம் வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய ஒரு அற்புதமான அதே வேளையில் ஆபத்தான நிகழ்வு இது.
இது போன்ற கேலக்டிக் அலைன்மெண்ட் முன்னர் நிகழ்ந்ததை மாயன்கள் கண்டு அறிந்ததாகக் குறிப்பு மாயன் காலண்டரில் காணலாகின்றது. மற்றும் அவர்களின் கோயில்களில், ஒரு கல் துவாரத்துக்குள் ஒரு பந்து நுழைவதாகப் பொறித்து வைத்துள்ளனர். இது கேலக்டிக் அலைன்மெண்ட் என்னும் விண்வெளி நிகழ்வை அடிப்படையாகக் கொண்டதே என்கின்றனர் ஆய்வாளர்கள். அதுமட்டுமல்ல அவர்கள் விளையாடிய பந்து விளையாட்டு கூட இத்துடன் தொடர்புடையது என்றும் கூறுகின்றனர். நாம் கூடைக்குள் பந்தைப் போடும் பேஸ்கட் பால் போல ஒரு பாறைத் துவாரத்துக்குள் இரும்புப் பந்தைப் போட வேண்டும். அப்படி போடாத அணித் தலைவனின் தலை துண்டிக்கப் படும். இதில் என்ன விந்தையென்றால் காட்டு மிராண்டிகளின் இவ்விளையாட்டு கேலக்டிக் அலைன்மெண்ட்டுடன் தொடர்பு உடையது என்பதுதான்.
எது எப்படியோ, இந்தக் கேலக்டிக் அலைன்மெண்டை உலகம் வெப்பமயமாதலுடன் இணைத்துப் பார்க்கலாம். முன்னர் உலகலாவிய வெப்பமயமாதலால் பனி மலைகள் உருகத் தொடங்கியதையும் இதனோடு சேர்த்துப் பார்க்கின்றனர் ஆய்வர்கள். கடற்கரைப் பகுதிகளில் புயல், வெள்ளமும் உருவாகும்; கடலில் இருக்கும் மீன்கள் நெருப்பால் வெந்துவிடும்; பயங்கரமான பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். விண்வெளிப் புயல் ஏற்படும்.
இது போன்ற தாக்கங்கள் நாம் எப்போதோ எதிர் நோக்க ஆரம்பித்ததே. 2004 சுனாமி, 2011ல் ஜப்பான் சுனாமி, 2012 கத்ரினா புயல், தானே புயல், அமெரிக்காவின் இப்போது ஒரு வார காலமாக எரிந்து கொண்டிருக்கும் மலைக்காடுகள் இவையெல்லாம் உலக அழிவின் தொடக்கமாக இருக்கலாமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தவில்லையா?
உலகம் அழியப்போகிறது என்னும் கூற்றை நூறு விழுக்காடு நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் நாம் இயற்கையை அழித்து நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டுள்ள எதிர்கால ஆபத்தை அவதானிக்காமல் இருக்க முடியாது. புறக்கணிக்கவும் இயலாது.
ஆக்கமும் அழிவும் இயற்கையால்தான் என்ற போதும் இயற்கையை அப்பாதையில் இட்டுச் சென்றது அல்லது செல்வது யார்? நம் சுயநலமே. பேராசையே. இயற்கையைக் காத்து உலக அழிவிலிருந்து நம்மையும் காத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது என்பதை நாம் மறந்தோம். அதனை நினைவு படுத்தும் இயற்கை சீற்றங்களே இந்த கேலக்டிக் அலைன்மெண்ட். அல்லது இந்த உலக அழிவு குறித்த அச்சுறுத்தல் என்று நாம் கொள்ள இடமுள்ளது.
சரி. உலக அழிவில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன? இந்த அச்சுறுத்தலின் வழியாக மாயன் காலண்டர் எச்சரிப்பது எதனை? நாஸ்டர்டாமஸ் மற்றும் அறிவியலார் எச்சரிப்பது என்னவாக இருக்கும்.
“புவிவெப்பமாதல் – உலகமயமாதல் என்ற இரண்டு விஞ்ஞானப் போர்களும், முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர்; இதுவரை மனித குலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; இந்தப் போரில் இயற்கையை எதிர்த்து மனிதன் வென்றாலும் மனிதனை எதிர்த்து இயற்கை வென்றாலும் தோற்கப் போவதென்னவோ மனிதன்தான்” என்று நம் கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்து அச்சுறுத்துவதையும் நாம் நினைத்துப் பார்க்கும் நேரமிது.
ஆகவே, இப்பெரும் விஞ்ஞானப் போரிலிருந்து காத்துக் கொள்ள, டிசம்பர் 21 சவாலை எதிர்கொள்ள, உலக அழிவில் இருந்து ஓரளவாவது தப்பித்துக் கொள்ள, உடனடியாக நாம் செய்ய வேண்டியவை பின்வரும் இவை.
கடல் மட்டம் உயர்வதைத் தடுக்க வேண்டும். வானிலைக் கட்டுப்பாட்டை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இயற்கையைப் பாதுக்காக்க வேண்டும். காடு, கழனிகளை அழிப்பதை நிறுத்தி புதியதாக உருவாக்க வேண்டும். வெப்ப மயமாக்கும் செயற்பாடுகளைக் குறைத்து உலகை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். இவற்றையெல்லாம் இந்தியா மட்டும் செய்தால் போதாது. அதிக அணு உலைகளையும் ஆலைகளையும் கொண்டுள்ள, பிற நாடுகளுக்கு அறிவுரை கூறுவதையே எப்போதும் தம் வாடிக்கையாகக் கொண்டுள்ள வல்லரசுகளான வளர்ந்த நாடுகளும் கடைபிடிக்க முன் வரவேண்டும். அப்போது இயற்கையின் சீற்றத்தில் இருந்து ஓரளவு நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
(இக்கட்டுரை ஆகஸ்ட் மாத சோழநாடு இதழில் வெளியானது.
நன்றி சோழநாடு)
Re: 2012 டிசம்பர் 21, 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!
கட்டுரையை படிக்க பயமாக உள்ளது. மேற்கூறிய அந்த 21.12.2012, 11.11.11. அன்றைக்கு நான் வெளியவே வரமாட்டேன்...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 2012 டிசம்பர் 21, 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!
மக்கா.. அடுத்த கட்டுரையையும் படித்து விட்டு உள்ளேயே உக்காருங்க..அசுரன் wrote:கட்டுரையை படிக்க பயமாக உள்ளது. மேற்கூறிய அந்த 21.12.2012, 11.11.11. அன்றைக்கு நான் வெளியவே வரமாட்டேன்...
Re: 2012 டிசம்பர் 21, 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!
அசுரன் wrote:கட்டுரையை படிக்க பயமாக உள்ளது. மேற்கூறிய அந்த 21.12.2012, 11.11.11. அன்றைக்கு நான் வெளியவே வரமாட்டேன்...
விதி என்றால் மாற்ற முடியாது அண்ணா , நல்லதே நடக்கும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: 2012 டிசம்பர் 21, 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!
இப்ப என்ன சொல்றீங்க ஆதிரா நான் 22 ந் தேதி அலாரம் வைக்கவா வேண்டாமா காலையில் எழுந்திருக்க?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 2012 டிசம்பர் 21, 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!
யினியவன் wrote:இப்ப என்ன சொல்றீங்க ஆதிரா நான் 22 ந் தேதி அலாரம் வைக்கவா வேண்டாமா காலையில் எழுந்திருக்க?
அலராம அலராம் வையுங்க அப்படின்னு சொல்றாங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: 2012 டிசம்பர் 21, 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!
அடடா...இப்பவே பயமும் ,பீதியும் உருவாகுதே!!
நான் நிலவுக்கு போக போறேன்..
அப்ப நான் எஸ்கேப் ஆகலாம் போல...
நான் நிலவுக்கு போக போறேன்..
அப்ப நான் எஸ்கேப் ஆகலாம் போல...
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: 2012 டிசம்பர் 21, 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!
நாங்கல்லாம் தமிழ் நாட்டுல இருக்கோம். நல்லா தூங்கி நல்லா எழுந்திருப்போம். புழல் சிறையில் இருப்பவங்களப் பத்தி சொல்ல முடியாது. கொஞ்சம் தான்
Re: 2012 டிசம்பர் 21, 11 மணி 11 நிமிடம் 11 நொடிகள் ???!!!
ஆராய்ச்சிக் கட்டுரை அசத்தல் ஆரம்பம்...2012 படம் மாதிரி பயமால்ல இருக்கு உங்க கட்டுரை...
நிறைமதியாளர் என்றால் சும்மாவா...பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...
நிறைமதியாளர் என்றால் சும்மாவா...பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» டிசம்பர் இருபத்து ஒன்று 2012.......
» டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து
» 2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என்பது வெறும் கட்டுக்கதை!
» ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க மட்டுமே!
» நட்சத்திர பலன்கள் - 31.3.2012 முதல் 6.4.2012 வரை
» டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து
» 2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என்பது வெறும் கட்டுக்கதை!
» ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க மட்டுமே!
» நட்சத்திர பலன்கள் - 31.3.2012 முதல் 6.4.2012 வரை
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|