ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

Top posting users this week
ayyasamy ram
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10 
heezulia
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10 
VENKUSADAS
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10 
heezulia
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10 
VENKUSADAS
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

+3
கா.ந.கல்யாணசுந்தரம்
பூவன்
சதாசிவம்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by சதாசிவம் Thu 22 Nov 2012 - 12:12

First topic message reminder :

புதுக்கவிதைக்கு இலக்கணம் என்ன என்ற தேடுதலில் இறங்கும் போது, ரசிக்கப்படும் அனைத்தும் சிறந்த கவிதைகளே என்ற விடையே மேலோங்கி இருக்கிறது. ஆயினும் கவிதை எழுத வேண்டும் என்று கற்பனையுடன் கற்க நினைக்கும் மாணவனுக்கு இது நிறைவில்லாத பதில் தான்.

புதுக்கவிதை சென்ற நுற்றாண்டின் மத்தியில் தழைத்து, செழித்து, படர்ந்து, வளர்ந்து வந்த போதிலும் ஆரம்ப காலக் கவிதைகளில் ஓர் ஒழுங்கு இருந்ததாகத் தெரிகிறது. தளை இலக்கணத்துக்கு கட்டுப்படாமல் இருப்பினும் அடி, சீர் எண்ணிகையில் ஒழுங்கு, மொழிப்புலமை, கற்பனைவளம் ஆகியவை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர முடிந்தது.

புலமை பெற்றவரை புலவர் என்று அழைக்கும் போது, கவிதை எழுதுபவரை கவிஞர் என்று அழைப்பதும் சரி என்ற நிலையில் இன்று நாம் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்நிலையில், கருத்து மட்டும் இருந்தால், அது கவிதை ஆகிவிடுமா? சரியான அல்லது சிறப்பான கவிதை எது என்ற கேள்விக்கு விடை, கைக்கெட்டா கனியாகவே உள்ளது.

தமிழ் இணையதளங்கள் பெருகி, கவிதைகளும் பெருகிவிட்டது. தினசரி செய்திகளைப் போல், கவிதைகளும் புற்றீசல் போல் வந்துகொண்டே இருக்கிறது. ஈசல்கள் போல் குறைந்த ஆயுளை கொண்டுள்ளது. உரைநடைகளை மடக்கி எழுதி கவிதையாய் செய்யும் வித்தையே காலூன்றி நிற்கிறது.

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும், உறவுகள் தங்களின் மேலான கருத்தை தெரிவித்தால் கவிதை கற்க நினைப்பவனுக்கு மேலும் தெளிவு பிறக்கும்.

ஆவலுடன்....



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down


சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty Re: சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by சதாசிவம் Thu 22 Nov 2012 - 21:29

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:கவிதை என்பது என்ன?
கவிதை எழுதுதல் சிறப்பு யாது?
கவிதை எப்படி அமையவேண்டும்?


கண்ணதாசனின் திரைப்பட பாடல் வரிகள் அனைத்துமே கவித்துவம் வாய்ந்தவை.
சின்ன சின்ன எளிய சொற்களால் நமது மனதை ஆட்டிப் படைக்கும் தன்மை வாய்ந்தவை.

பல நவீன கவிதைகள் சிறப்பாக இருந்தாலும் அனைவராலும் புரிந்துகொள்ள முடியாமல் போனதுண்டு.

எளிய அடுக்கு மொழிகளைக் கொண்டு எழுதும் கவிதைகள் சிறப்பிடம் பெறுகின்றன.

' தொட்டால் பூ மலரும் ....
தொடமால் நான் மலர்ந்தேன்....
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ...... '

இலக்கணத்தோடு புனையும் கவிதைகளை விட மேற்கண்ட கவிதை இசைப்பாடலாகவும் அமைகிறது. அனைவரது எண்ணங்களையும் ஈர்க்கிறது.

மேலும் சில கவிதைகள் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புரட்சியை தூண்டுகிறது.

பாரதியாரின் கவிதைகள் இப்படித்தான் அமைந்தன. ' என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? ' என்னும் வரிகள்.

பின்பு எழுதப்பட்ட ஒரு கல்லூரி மாணவனின் கவிதை:
' இரவில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை ' என்று சுதந்திரத்தைப் பற்றி எழுதிய வரிகள் அனைவர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எனவே கவிதை என்பது கருப்பொருளோடு எளிய வகையில் ஒரு மாற்றத்தை தர வேண்டும் . காதல், களவு, வீரம், கொடை, சமூகம் என எந்த கருப்பொருளிலும் எளிய சொற்களோடு அமைந்த கவிதைகளே தற்கால மன மேடையில் உலா வருகின்றன.

நன்றி நல்லதொரு திரியின் அறிமுகத்திற்கு சதாசிவம் அவர்களே.




அழகான விளக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா. தங்களின் கூற்று இன்றைய கவிதைகளை படம் பிடித்து காட்டுகிறது. இருப்பினும் திரைப்பட பாடல் வரிகள் பலதும் இசையில்லாமல் படித்து பார்க்கும் போது, உரைநடை போன்ற மாயையும் ஏற்படுத்துகிறது. பாரதி, பாரதிதாசன் கவிதைகள் கற்பனை வளமும், சிறப்பான சொல்லாச்சியும், எளிமையும், ஓசை நயத்துடனும் இருந்தது. ஆகையால் தான் அவை காலம் கடந்து வாழ்கிறது.

அதுமட்டுமல்லாமல், சென்ற தலைமுறையில் மொழியின் கூறுகளான எதுகை, மோனை, இயைபு என்ற ஓசை நயம் மிகுத்து காணப்பட்டது. அப்படி எழுதுவதே கவிதை என்று கருதப்பட்டது. இன்றைக்கு நாளுக்கு நாற்பது கவிதைகள் இணையத்தில் இடம்பெறுகிறது. புதிய தலைமுறைக் கவிஞருக்கு மொழியின் சிறப்பு பண்புகள் தெரியாமலே போய்விடுகிறது, அல்லது அவசியம் இல்லை என்ற எண்ணம் தலைதூக்கி இருக்கிறது. இச்சிறப்புகள் மெல்ல அழிந்து விடுமோ என்ற அச்சமும் மேலோங்குகிறது.
கவிதை வடிவமாக இருப்பினும், வார்த்தைகள், கருத்துகள், உவமைகள் பெரும்பாலும் சுழன்று சுழன்று வருகிறது. தாய்மை, காதல், ஈழம், ஊழல், நட்பு, தாய்மொழி, சமூக அவலங்கள் என்ற வட்டத்துக்குள் வலம் வருகிறது. இயற்கை வெகு அபூர்வமாகவே போற்றப்படுகிறது.

இதைத்தாண்டி என்ன எழுதலாம் என்று கவிஞர்களை கவிதைகளை வைத்து பட்டியலிட ஆரம்பித்தால் அப்பட்டியல் ஒரு கை விரலுக்குள் அடங்கி விடுகிறது.

இரவு சுதந்திரச் சிந்தனை, சிந்தையில் நிற்கிறது. இரவல் சிந்தனைச் சுதந்திரம் சிந்திய நீராய் சிதறி மறைகிறது.













சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty Re: சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by சதாசிவம் Thu 22 Nov 2012 - 21:56

கே. பாலா wrote:கவிதையில் கவித்துவம் இருக்கவேண்டும்

வெற்று வார்த்தைகளும் எதுகை மோனைகளும் ,,சிலர் நினைப்பதுபோல் தளை, சீர் போன்ற இலக்கண அளவுகோல்கள் சரியாக இருந்து கவிதை நயம் இல்லை என்றால் என்ன பயன் !

கவிகோ அப்துல் ரஹ்மான் படைத்த கவிவரியை உதாரணம் சொல்லலாம்
புகையை காற்று மேலே கொண்டுபோர்யிற்று .புகைக்கு தலைகால் புரியவில்லை அது சூரியனையும் சந்திரனையும் கர்வத்தோடு பார்த்தது நானும் உங்களோடு ராஜா வீதியில் பவனிவருகிறேன் என்று பெருமை பேசியது
மேகத்தை பார்த்து புகை சொன்னது உன்னை போலவே நிறம் உன்னை போலவே உருவம் உன்னை போலவேஉயரத்தில் இருக்கிறேன் நானும் மேகம்தான் என்றது
சில முட்டாள் மயில்கள் தோகை விரித்து ஆடின

மேகம்
கடகடவென்று சிரித்து விட்டு
மழையாய் இறங்கியது
நனைந்து சிலிர்த்த
பூமி சொன்னது
பெருமை மேலே ஏறுவதில் இல்லை
கீழே இறங்குவதில் இருக்கிறது


நன்றி பாலா சார்.

என்னுடைய சந்தேகம் இங்கு தான் ஆரம்பமாகிறது. நீங்கள் எடுத்துக்காட்டிய கவிதை சிறப்பான சிந்தனை, இச்சிந்தனை பேச்சாகப் பேசினாலும் கைதட்டு பெரும் சிறப்பு வாய்ந்தது. கவிதைக்கு தளை, இலக்கணச் சிறப்பு இல்லாமல் போகலாம். இந்த கவித்துவம் மட்டுமே இருந்தால் அது கவிதை ஆகிவிடுமா ? ஆங்கிலத்தின் quotes என்று சொல்லப்படும் பலதும் இது போன்ற மாற்றுச் சிந்தனையில் மலர்கிறது. ஆனால் இவைகள் POEMS என்று அங்கீரிக்கப்படுவதில்லை.

உதாரணம்

"you need power when you want to something harmful , love is enough to get everything done " -சார்லி சாப்ளின்

இதை தமிழாக்கம் செய்தால் கவிதை ஆகிவுடுமா,

தமிழாக்கம் செய்யப்பட்ட மற்றொன்று

உனக்கென உலகத்தில்
யாருமே இல்லாமல்
இருக்கலாம், ஆனால்
யாரோ ஒருவருக்கு
நீங்கள் உலகமாகலாம்

கவிதை போல் தோன்றுகிறது, ஆனால் கவிதையா. இதை ஆங்கிலப் படுத்தினால் Quotes என்று தான் சொல்லப்படுகிறது.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty Re: சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by ரா.ரா3275 Thu 22 Nov 2012 - 22:41

கவிதை என்பது எழுதுவதில் இல்லை;ஈர்ப்பதில் இருக்கிறது என்பது என் தரப்பு வாதம்.இது சிலருக்கு வதமாகவும் இருக்கலாம்.நியாயமே.தவறில்லை.

மொழி ஆளுமை என்பது கவிதைக்கும்-கவர்ந்திழுக்கும் பேச்சுக்கும் கட்டாயம் முக்கியமான முதுகெலும்பு என்பதில்தான் எப்போதும் எனக்கு உடன்பாடு.

வார்த்தைகள் படை திரட்டி வரும் காட்டாறும் சரி - கட்டுக்குள் ஓடும் ஆறும் சரி எதுவானாலும் கரைகளை அரித்துவிட்டுப் போவதை விட உடைத்துவிட்டுப் போக வேண்டும்.அதில்தான் உணர்வும் உணர்ச்சியும் மிதந்து மிதந்து மேலே வரும்.மேன்மை காட்டும்.இல்லையேல் வெறும் மேனா மினுக்கி வித்தைகளாகி மிச்ச சொச்சம் இருப்பதும் குப்பைக்குப் போய்விடும்.

ஒன்றை மட்டும் ஒவ்வொருவரும் உரத்தக் குரலில் பேசி ஒப்புக்கொள்ள வேண்டும்.ஆம்.அது...காதல் மட்டுமே கவிதைக்குப் பாடுபொருள் என்பதாகவே இன்றைய கவிஞர் திருக்கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது.இது என்னைப் பொறுத்தவரை இன்றைய கவிஞர்கள் எல்லோருக்கும் பொருந்தும் ஏறக்குறைய.

'அருகில்'-'அருகாமையில்' இரண்டுக்கும் வேறுபாடு தெரியாத ஒரு பெருங்கூட்டமும்,'ஒரு'வுக்கும் 'ஓர்'க்கும் உரித்தான இடங்களாகட்டும் ஒற்று மிகும்-மிகா இடங்களாகட்டும் எதிலும் கவனம் கொள்ளாமல் அதைக் காற்றில் பறக்கவிடும் இன்றைய 'பிரபல' பாடலாசிரியர்கள் சிலரும் தாங்கள் எழுதுவதுதான் சிறந்த கவிதை என்பதாகச் சித்தரிக்கின்றனர்.இதைக் கேட்டுச் சித்தம் கலங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இலக்கணம் கற்றவர்கள் தான் எழுத வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான்.ஆனால் மொழியின் ஆழ-அகலங்களை
ஓரளவேனும் உள்ளிருத்திக்கொள்வது நல்லது என்ற கட்சியில்தான் நான் எப்போதும்.

மரபோ-புதிதோ எதில் எழுதினாலும் ஏதேனும் புதிதாக எழுதினால் உத்தமம்.

ஆனால் அதற்கு முன்பாக...

ஒரு வார்த்தை எழுத வேண்டுமானால் ஒரு நூறு வார்த்தைகளை வாசிக்க வேண்டும் என்று எங்கள் பேராசிரியர் ஒருவர் சொன்னது
எல்லோருக்கும் பொதுவானது என்பதாகவே நான் உணர்கிறேன்...

இந்த திரியில் என் கருத்தையும் பகிர வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த சதாசிவம் அவர்களுக்கு நன்றி...


Last edited by ரா.ரா3275 on Thu 22 Nov 2012 - 23:06; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty Re: சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by அச்சலா Thu 22 Nov 2012 - 23:00

அருமையான திரி ....நானும் தெரிந்துக்கொள்ள நிறைய இருக்குது....


[You must be registered and logged in to see this image.]
அச்சலா
என் தளம்:[You must be registered and logged in to see this link.]
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty Re: சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by கே. பாலா Thu 22 Nov 2012 - 23:01

கவிதை என்பது எழுதுவதில் இல்லை;ஈர்ப்பதில் இருக்கிறது
இதை நானும் வழிமொழிகிறேன்

எது ஈர்க்கும் என்பதில் தனி தனியான ரசனை உண்டு ...அது வாசிப்பு அனுபவத்தை பொறுத்தது .

மௌனி நகுலன் ஆகியோரின் கவிதைகள் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு பிடிபடாமேலேயே போகும்,, சிலருக்கு எளிமையாக சொல்வதுதே புரியும்

எது நல்ல சினிமா என்று கேட்டால் என்ன விடைவரும்

கண்டிப்பாக ஒரே விடைவராது என்பது மட்டும் நிச்சயம்

எனக்கு பிடித்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
உங்களுக்கு பிடித்த கவிதை எனக்கு பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty Re: சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by ரா.ரா3275 Thu 22 Nov 2012 - 23:14

கே. பாலா wrote:

எது ஈர்க்கும் என்பதில் தனி தனியான ரசனை உண்டு ...அது வாசிப்பு அனுபவத்தை பொறுத்தது .


உண்மைதான்...


எது நல்ல சினிமா என்று கேட்டால் என்ன விடைவரும்

கண்டிப்பாக ஒரே விடைவராது என்பது மட்டும் நிச்சயம்

இது சற்றே சர்ச்சைக்குரிய விவாதமே...இருந்தும் அப்பட்டமான உண்மை...

எனக்கு பிடித்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
உங்களுக்கு பிடித்த கவிதை எனக்கு பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை


இது எப்பேர்ப்பட்ட உண்மை முரண்...சூப்பர்...



எல்லாமே நிஜம் பாலா சார்...


Last edited by ரா.ரா3275 on Thu 22 Nov 2012 - 23:46; edited 2 times in total


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty Re: சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by றினா Thu 22 Nov 2012 - 23:27

நல்லது.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty Re: சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by சதாசிவம் Fri 23 Nov 2012 - 18:58

கருத்துகள் பகிர்தமைக்கு பாலா சாருக்கும், நண்பர் ரா ரா அவர்களுக்கும் மிக்க நன்றி.

ஒவ்வொரு பொருளுக்கும், திறமைக்கு தரக்கட்டுப்பாடு அவசியம். அப்போது தான் இருப்பதில் எது சிறந்தது என்று முடிவு செய்ய இயலும். 40 மார்க் எடுத்தவன் பாஸ், 60 மேல் உள்ளவவன் first கிளாஸ் என்று சொல்வது போல். உலக அளவில் ஒருவரின் ஆங்கிலப் புலமை அல்லது மொழித்திறமை பலவகை அடுக்குகளாக வகுக்கப்பட்டுள்ளது.

ரசனையில் மட்டும் ஒரு கவிதையின் சிறப்பு வெளிப்படுமா ? திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் ஒவ்வொருவருக்கும் ஒரு படம் பிடிக்கும். இதை வைத்து நாம் அத்திரைப்படத்தை மதிப்பீடு செய்கிறோம். இது சரியா என்று கேட்டால் உலகப் பார்வையில் இது பழைய சிந்தாந்தம். திரைப்பட கல்லூரியில் அனைத்து படங்களும் பாடங்களாக நடத்தப்படுவதில்லை.

ஆஸ்கர் விருந்து போன்றவைகளுக்கு, சில இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளது. எவர் நடுவராக இருக்கலாம், என்ன என்ன அம்சம்கள் பரீசிலிக்கப்பட வேண்டும், இதன் அளவுகோள் என்ன என்பது உட்பட. ஏன் இந்தியாவில் ஒவ்வொரு மாநில தணிக்கைத் துறை குழுவுக்கும் ஒரு வழிகாட்டி கையேடு அளிக்கப்படுகிறது. ஆதலால் தனக்கு பிடித்தது சிறந்தது என்று ஒரு வாசகன் முடிவு செய்யலாம், ஆனால் ஒரு நடுவரோ, விமர்சகரோ இப்படி முடிவு செய்யக்கூடாது. அதற்கு சில வரைமுறைகள் தேவைப்படுகிறது. இதனால் தான் தமிழை குரங்குடன் ஒப்பீடு செய்வதை அனுமதித்த தணிக்கை குழுவால் , ஒரு ஜாதியையோ, மதத்தையோ இப்படி ஒப்பீடு செய்வதை அனுமதிக்க முடியவில்லை. மும்பையில் அனுமதிக்கபட்ட காட்சி சென்னையில் ரத்து செய்யப்பட்டுகிறது.

கவிதை கற்பவனுக்கும், திரைப்படம் கற்பவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வெறும் ரசனையை மையமாக வைத்து திரைப்படக் கல்லூரிகள் பாடம் நடத்துவதில்லை.

இதுபோன்ற வரைமுறைகள் மரபுக்கவிதைகளில் இருந்ததால் நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்றும், தமிழ்ச் சங்கத்தில் மன்னனே நிராகரித்தாலும் இப்பாட்டில் என்ன குற்றம் என்றும் கேள்வி கேட்க முடிந்தது. ஆனால் இன்றைய போட்டிகளில் நடுவர் தீர்ப்பே இறுதியானது. தேர்வுக்கு என்ன என்ன அம்சங்கள் பரீசீலிக்கப்பட்டது என்று பெரும்பாலான நடுவர் குழுக்குள் வெளியிடுவதே இல்லை. சிற்பம், நாட்டியம், சினிமா, சங்கீதம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் ஓர் இலக்கணம் எதிர்பார்க்கப்படுகிறது. தப்பாங்குத்துக்கும் தாளக்கட்டு அவசியம்.. இக்கட்டுப்பாடுகள் அல்லது நெறிமுறைகள் கலையை கற்க விரும்பும் ஒருவனுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

சிறப்பான கவிதைக்கு பாடம் நடத்துவதானால் ரசனையைத் தாண்டி, நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். கவிதைக்கு ஈர்ப்பு என்பது உயிர், வார்த்தை அல்லது மொழிப் பிரயோகம் உடல் போன்றது. பல கவிதைகளில் உயிர் இருக்கிறது, உடல் இல்லை. மொழியின் சிறப்புகள் உதாசீனப் படுத்தப்படுகிறது.



ஆனால் இன்றைய கவிஞர்கள் சுலபமான வழியை ஆதரிக்கின்றனர்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty Re: சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by ரா.ரா3275 Fri 23 Nov 2012 - 22:31

///சிறப்பான கவிதைக்கு பாடம் நடத்துவதானால் ரசனையைத் தாண்டி, நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். கவிதைக்கு ஈர்ப்பு என்பது உயிர், வார்த்தை அல்லது மொழிப் பிரயோகம் உடல் போன்றது. பல கவிதைகளில் உயிர் இருக்கிறது, உடல் இல்லை. மொழியின் சிறப்புகள் உதாசீனப் படுத்தப்படுகிறது. ///

இதை நான் முழுக்க முழுக்க ஒப்புக்கொள்கிறேன்-உடன்படுகிறேன்...
நன்றி சதாசிவம் அவர்களே...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty Re: சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by சதாசிவம் Sat 24 Nov 2012 - 12:26

ரா.ரா3275 wrote:///சிறப்பான கவிதைக்கு பாடம் நடத்துவதானால் ரசனையைத் தாண்டி, நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். கவிதைக்கு ஈர்ப்பு என்பது உயிர், வார்த்தை அல்லது மொழிப் பிரயோகம் உடல் போன்றது. பல கவிதைகளில் உயிர் இருக்கிறது, உடல் இல்லை. மொழியின் சிறப்புகள் உதாசீனப் படுத்தப்படுகிறது. ///

இதை நான் முழுக்க முழுக்க ஒப்புக்கொள்கிறேன்-உடன்படுகிறேன்...
நன்றி சதாசிவம் அவர்களே...

தங்களின் ஒப்புதலுக்கு மிக்க நன்றி....

நன்றி


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் - Page 2 Empty Re: சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்!
» சோர்வு நீங்கி, முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
» எப்போதும் நாம் ஆண்டவனின் பக்கம் இருக்க என்ன செய்ய வேண்டும்?
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum